Saturday, January 30, 2010

இரும்புக் கோட்டை திரைப்பட விமர்சனம்




அறிவாலயம் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் புதிதாக வெளி வந்திருக்கும் திரைப்படம்தான் இரும்புக் கோட்டை கிழட்டுச் சிங்கம்.

படத்தின் தலைப்பிற்கேற்றார்போல், கதாநாயகன் சிறு வயது தொடங்கி, தள்ளாத வயது வரை, எவ்வளவு வயதானாலும் விடாப்பிடியாக நான்தான் கதாநாயகனாக இருப்பேன் என்று பிடிவாதமாக நடித்துள்ளார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் வரும் முதல் கௌபாய் படம் இது. ஆங்கிலத்தில் வெளிவந்து மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற 100 Rifles, The Good, The Bad, The Ugly, McKenna’s Gold போன்ற படங்களை விஞ்சும் விதத்தில் எடுக்கப் பட்டுள்ளது.

கதாநாயகநாக நடித்திருக்கும் கருணாநிதி பாத்திரத்தை உணர்ந்து மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். கருணாநிதியே தேர்ந்தெடுப்பதால், அநேகமாக இவ்வாண்டின் சிறந்த நடிப்புக்கான மாநில அரசின் விருது கருணாநிதிக்கே வழங்கப் படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கௌபாய் படத்தை எதிர்ப்பார்த்து செல்லும் ரசிகர்களை திருப்திபடுத்தும் அளவுக்கு காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு நிறைந்து எடுக்கப் பட்டிருக்கிறது இரும்புக் கோட்டை கிழட்டுச் சிங்கம்.

சாதாரணமாக தன் வாழ்க்கையை தொடங்கும் ஒருவன் எப்படி மிகச்சிறந்த துப்பாக்கி வீரனாகி தமிழ்நாட்டை கொள்ளையடிப்பதில் முதலிடத்தைப் பிடிக்கிறான் என்பதுதான் படத்தின் “ஒன் லைன்“.

கதாநாயகம் கருணாநிதி குழந்தையாக ஒரு சாதாரண குடும்பத்தில் பிறக்கிறான். சிறிது விபரம் தெரிந்தவுடன் அண்ணாதுரை என்ற ஒருவர் துவக்கும் கொள்ளைக் கூட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறான். அண்ணாத்துரை தான் துவக்கும் “கேங்“ மிகப்பெரிய அளவில் வளரப் போகிறது என்பது தெரியாமலே கேங்கை துவக்குகிறார். தமிழ்நாட்டில் அது வரை இருந்து வந்த காங்கிரஸ் கேங்கை தனது சாமர்த்தியத்தால் விரட்டி அடிக்கிறார்.
அன்று அண்ணாத்துரையால் விரட்டியடிக்கப் பட்ட காங்கிரஸ் கேங், படத்தின் இறுதி வரை பலம் பெறாமலேயே இருப்பதாக கதை அமைக்கப் பட்டிருப்பதால் இப்படத்தில் வில்லனாக இருப்பதற்கு காங்கிரஸ் கேங்குக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகிறது.

காங்கிரஸ் கேங்கை விரட்டியடித்து மொத்த தமிழ்நாட்டையும் தன் ஆளுகையின் கீழ் கொண்டு வரும் அண்ணாத்துரை நீண்ட நாள் தன் கொள்ளைக் கூட்டத்தை வழிநடத்தாமல் உடல் நலிவடைந்து இறந்து போகிறார்.



கொள்ளைக் கூட்டத்தை உருவாக்கிய அண்ணாத்துரை


அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு ரசிகர்கள் கொள்ளைக் கூட்டத்தின் இரண்டாம் கட்ட தலைவராக, அண்ணாதுரைக்கு நெருக்கமாக இருக்கும் நெடுஞ்செழியன் தலைவராக ஆகப் போகிறார் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு ட்விஸ்ட் வைக்கிறார் இயக்குநர்.

கருணாநிதி கொள்ளைக் கூட்டத்தில் சேரும் முன்பே இரண்டாம் கட்ட தலைவர்களாக அக்கூட்டத்தில் இருக்கும் சீனியர்களையெல்லாம் ஓரங்கட்டி விட்டு கொள்ளைக் கூட்டத்தின் தலைமைப் பொறுப்பை பிடிப்பது, ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. இருந்தாலும் இந்த இடத்தில் திரைக்கதை விறுவிறுப்பை அடைகிறது.

கொள்ளைக் கூட்டத்தின் உறுப்பினர்களின் மத்தியில் தன் சாகசங்களால் பாப்புலராக உள்ள எம்ஜிஆரின் துணையுடன் கருணாநிதி தலைவர் பொறுப்பை பிடிக்கிறார். நெடுஞ்செழியனை ஓரங்கட்டிவிட்டு அநாயசமாக, தலைமை பொறுப்பை பிடித்து விட்டு, கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு கருணாநிதி ஒரு அலட்சியச் சிரிப்பு சிரிக்கும் காட்சியில் தியேட்டரில் விசில் பறக்கிறது.



கதாநாயகன் வாழ்வில் ஹீரோயின்களுக்கு பஞ்சமே இல்லை. மூன்று ஹீரோயின்களுடன் டூயட் பாடிக்கொண்டே ஆனந்தமாக கதாநாயகன் பொழுதைக் கழிக்கையில் திடீரென்று நண்பனாக இருந்த எம்ஜிஆர் உருவில் பிரச்சினை உதிக்கிறது. எம்ஜிஆர் கொள்ளைக் கூட்ட உறுப்பினர்களிடையே மிகவும் பிரபலமாகி வருவதை கண்டு பொறுக்காத கதாநாயகன், குரங்கு ஆப்பசைத்த கதையாக, கொள்ளைக் கூட்டத்தில் மொத்தம் எத்தனை துப்பாக்கிகள் என்று எம்ஜிஆரைப் பார்த்து கணக்கு கேட்கிறார்.

துப்பாக்கி கணக்கு கேட்டதால் கடும் கோபம் அடையும் எம்ஜிஆர் கதாநாயகக் கருணாநிதியிடம் இருந்து பிரிந்து தனியே ஒரு கொள்ளைக் கூட்டத்தை தொடங்குகிறார்.

எம்ஜிஆர் தொடங்கிய கொள்ளைக் கூட்டம் மிகவும் பிரபலமாகி தமிழ்நாட்டின் நம்பர் கூட்டமாகிறது. இதனால் கதாநாயகன் கருணாநிதி மிகப் பெரிய பின்னடைவை சந்திக்கிறார். அவருக்கு தேவையான ஆயுதங்கள் குறைந்து கொள்ளைக் கூட்டத்தை நடத்த முடியாமல் திணறுகிறார். தினந்தோறும் கொள்ளையடித்துப் பழகி, கொள்ளையடிக்க வாய்ப்பே இல்லாமல் கதாநாயகன் ஏறக்குறைய பைத்தியம் பிடித்த நிலைக்கு தள்ளப் படும்போது, கொள்ளைக் கூட்ட தலைவன் எம்ஜிஆர் நோய்வாய்ப்பட்டு இறக்கிறார்.

எம்ஜிஆர் இறந்ததும் ஏற்பட்ட மகிழ்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல், எம்ஜிஆர் என் நண்பர், அவர் இல்லையென்றால் நான் கொள்ளைக் கூட்டத் தலைவன் ஆகியிருக்க முடியாது என்று மழுப்புகிறார்.

எம்ஜிஆர் இறந்ததும் போட்டிக்கு ஆளே இல்லாமல் தமிழ்நாட்டின் நம்பர் ஒன் கொள்ளைக் கூட்டத் தலைவனாக ஆகிறார் கதாநாயகன் கருணாநிதி. நிம்மதியாக கொள்ளையடித்து பொழுதை ஓட்டலாம் என்று இருக்கையில் களத்தில் குதிக்கிறார் ரிவால்வர் ரீட்டா.

எம்ஜிஆரின் கொள்ளைக் கூட்டத்தில் நீண்ட காலம் இருந்த ரிவால்வர் ரீட்டா நலிவடைந்திருந்த எம்ஜிஆரின் கேங்குக்கு புத்துணர்ச்சி ஊட்டி, கேங்குக்கு தலைமை ஏற்கிறார்.

இதைக் கண்டு கதாநாயகன் கருணாநிதி அதிர்ச்சி அடைந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இதனால் தனக்கு எவ்வித அச்சமும் இல்லை என்பது போல இருக்கிறார். இந்நிலையில் டெல்லியில் உள்ள அகில இந்திய கொள்ளைக் கூட்டத் தலைவர்கள் சம்மேளனத்தில் புகார் செய்து கருணாநிதியின் தலைவர் பதவியை பறிக்கிறார் ரிவால்வர் ரீட்டா. செய்வதறியாது திகைக்கும் கருணாநிதி மீண்டும் எப்படியாவது தலைவர் ஆகி விடலாம் என்று நினைக்கையில் அகில இந்திய கொள்ளைக் கூட்டத் தலைவன் ராஜீவ் காந்தி ஒரு வெடி விபத்தில் மரணமடைகிறார்.

இதனால் ரிவால்வர் ரீட்டாவுக்கு அடிக்கிறது யோகம். உடனடியாக தலைமைப் பதவியை பிடித்து தமிழ்நாட்டின் நம்பர் ஒன் கொள்ளைக் கூட்டத்தின் தலைவியாகிறார். இவர் கொள்ளைக் கூட்ட தலைவியானதும், தன் கூட்டத்தில் உள்ள ஒருவரை வளர்ப்பு மகனாக தத்தெடுக்கிறார்.

தத்தெடுத்ததோடு நில்லாமல் கொள்ளைக் கூட்ட வரலாறிலேயே இல்லாத அளவுக்கு தான் தத்தெடுத்த வளர்ப்பு மகனுக்கு மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்கிறார். இதைக் கண்ட கதாநாயகன் கருணாநிதி வயிற்றெரிச்சலில் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு புலம்பும் காட்சி காண்போர் நெஞ்சை உருக்குகிறது.

ரிவால்வர் ரீட்டா நெம்பர் ஒன் பொசிஷனில் ஐந்தாண்டு இருந்த பிறகு மீண்டும் கருணாநிதி தன் சாதுர்யத்தால் நெம்பர் ஒன் பொசிஷனை தட்டிப் பறிக்கிறார். நெம்பர் ஒன் பொசிஷனுக்கு வந்த பிறகு ரிவால்வர் ரீட்டாவை சிறையில் அடைக்கிறார் கருணாநிதி. ஆனால் ரிவால்வர் ரீட்டாவுக்கு இருக்கும் ஆதரவை குறைத்து மதிப்பிட்டு விடுகிறார் கருணாநிதி. சில ஆண்டுகள் கழித்து மீண்டும் நெம்பர் ஒன் பொசிஷனுக்கு ரிவால்வர் ரீட்டா வருகிறார்.

ரிவால்வர் ரீட்டா நம்பர் ஒன் பொசிஷனில் வந்தவுடன், தான் ஒரு காலத்தில் கொள்ளைக் கூட்டத்திற்கே தகுதியில்லாத பண்டாரங்கள் என்று விமர்சித்த அகில இந்திய கொள்ளைக் கூட்டத்தோடு கூட்டணி வைத்து சில நிர்வாகிப் பதவிகளை கைப்பற்றுகிறார் கருணாநிதி.

வந்ததும் கருணாநிதியை பழிவாங்கும் விதமாக அவரை கைது செய்து சிறையில் அடைக்கிறார் கருணாநிதி. கைது செய்யப் படுகையில் “அய்யோ கொலை பண்றாங்க“ என்று அலறுகிறார் கருணாநிதி. ஆனாலும் கருணாநிதியால் ஐந்தாண்டுகளுக்கு நம்பர் ஒன் பொசிஷனை பிடிக்க முடியவில்லை.




அய்யோ கொலை பண்றாங்க


கருணாநிதியின் கொள்ளைக் கூட்டம் நலிவுற்றிருந்தாலும், அகில இந்திய கொள்ளைக் கூட்டத்தில் கருணாநிதியின் கூட்டத்தைச் சேர்ந்த 7 பேர் நிர்வாகிப் பதவியில் இருப்பதால் சிறிது காலம் சமாளிக்கிறார் கருணாநிதி.

சிறிது காலம் போராடிய பிறகு, தமிழ்நாட்டில் உள்ள உதிரி கொள்ளைக் கூட்டம் அனைத்தையும் ஒன்று சேர்த்து கூட்டணி அமைத்து மீண்டும் நம்பர் ஒன் பொசிஷனுக்கு வருகிறார் கருணாநிதி.




கருணாநிதியிடம் நம்பர் ஒன் பொசிஷனை தவற விட்ட ரிவால்வர் ரீட்டா செய்வதறியாமல் திகைக்கிறார். எப்படியாவது மீண்டும் நம்பர் ஒன் பொசிஷனை பிடிக்க வேண்டும் என்று பகீரதப் பிரயத்தனம் செய்கிறார் ரீட்டா. கருணாநிதிக்கு வயதாகி விட்டதால் அவரை எப்படியாவது துப்பாக்கிச் சண்டையில் ஜெயித்து விட வேண்டும் என்று திட்டமிடுகிறார் ரீட்டா.

துப்பாக்கிச் சண்டையில் கருணாநிதியை எப்படியாவது வெற்றிப் பெற வேண்டும் என்று ரீட்டா தொடர்ந்து முயற்சிக்கிறார். ஆனால் கருணாநிதிக்கோ வயதாகி, தள்ளு வண்டியில் போகும் நிலைக்கு ஆளாகிறார். இதனால் தைரியம் அடைந்த ஜெயலலிதா, துப்பாக்கிச் சண்டையில் ஜெயிக்கலாம் என்று தன்னை தயார் செய்து கொண்டு வரும் வேளையில் கருணாநிதி புதிய தந்திரத்தை கையாளுவதை கண்டு அதிர்ச்சி அடைகிறார்.



துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு, குண்டடிப்பட்டு அனைவரும் செத்து விழுவார்கள் என்று எதிர்ப்பார்க்கையில், சண்டையில் ஈடுபடுபவர்கள் அனைவருக்கும் 5000, 10,000 என்று கவரில் கருணாநிதி பணத்தை வழங்குகிறார். கவரில் பணத்தை பெற்றுக் கொண்ட அனைவரும், குண்டடி படாமலேயே செத்து விழுந்தது போல் நடிக்கிறார்கள்.

இதைக் கண்ட ரிவால்வர் ரீட்டா செய்வதறியாமல் திகைத்து அவரும் கவரில் பணம் வழங்கும் தந்திரத்தை கையாண்டாலும் அவரின் தந்திரம் எடுபடவில்லை. கருணாநிதி வழங்கும் கவரைத்தான் அனைவரும் விரும்பி குண்டடி பட்டது போல செத்து விழுகிறார்கள்.

இதற்கு நடுவே, கருணாநிதியின் கொள்ளைக் கூட்டத்தில் குடும்பத்தினரின் ஆதிக்கம் அதிகரிக்கிறது. தன் கொள்ளைக் கூட்டத்தின் நெருக்கடி தாளாமல், தன் மகனை கொள்ளைக் கூட்டத்தின் துணைத் தலைவராக்கி நம்பர் 2 பொசிஷனுக்கு கொண்டு வருகிறார். இதைக் கண்ட இன்னொரு மகன் தான்தான் நம்பர் 2 பொசிஷனுக்கு வர வேண்டும் என்று சண்டை போடுகிறார்.



கருணாநிதியின் மகள்


இன்னொரு மகள், தனக்கு நம்பர் 3 பொசிஷன் வேண்டும் என்று வரிந்து கட்டுகிறார். ஆனால் நம்பர் 3 பொசிஷனை மகளுக்கு தர முடியாத வண்ணம், மருமகனின் பேரன்கள் சண்டை போடுகின்றனர்.

இதனால் கருணாநிதியின் கொள்ளைக் கூட்டத்தில் பெரும் கலவரம் உண்டாகிறது. தள்ளு வண்டியில் உள்ள வயது முதிர்ந்த கதாநாயகன், வயது முதிர்ந்தாலும் உடல் தளர்ந்தாலும், தன் நம்பர் ஒன் பொசிஷனை விட்டுத் தராமல் இறுதி வரை போராடுகிறார்.



தள்ளுவண்டியில் வயது முதிர்ந்த கதாநாயகன்


இறுதிக் காட்சி 2011ல் நடைபெறுகிறது. நம்பர் ஒன் பொசிஷனுக்காக தொடர்ந்து போராடும் ரிவால்வர் ரீட்டா ஜெயிக்கிறாரா, தள்ளுவண்டியில் உள்ள கருணாநிதி ஜெயிக்கிறாரா, அல்லது அவரது மகனோ அல்லது மகளோ ஜெயிக்கிறார்களா என்பதுதான் க்ளைமாக்ஸ்.
விறுவிறுப்பான திரைக்கதையும், சுறுசுறுப்பான எடிட்டிங்கும் படத்துக்கு சுவை கூட்டுகின்றன.

தேவையான இடத்தில் தேவைப்படாத காட்சிகளை வெட்டியெறிந்து, படத்துக்கு விறுவிறுப்பு கூட்டும் வகையில் படத்தை எடிட்டிங் செய்திருப்பவர் அந்தோனியோ மொய்னோ சோனியா காந்தி. இவர் இத்தாலியில் எடிட்டிங் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

ஒளிப்பதிவு பேராசிரியர் அன்பழகன். கேமரா பாய்ந்து பாய்ந்து ஒளிப்பதிவு செய்ய வேண்டிய இடங்களிலெல்லாம் மங்குணி போல நகராமல் உட்கார்ந்திருப்பது ரசிகர்களை எரிச்சலாக்குகிறது.


ப்ரொடக்ஷன் மேனேஜர் ஆ.ராசா. வசனங்களை கதாநாயகன் கருணாநிதியே எழுதியிருக்கிறார். சட்டமன்ற வளாகத்தில் கருணாநிதி ரிவால்வர் ரீட்டாவைப் பார்த்து “நீங்கள் கௌபாய் ஆக முடியாது, ஏனென்றால் பெயரிலேயே “பாய்“ இருக்கிறது, நீங்கள் பெண்“ என்று சொல்லுவதும் அதற்கு ரிவால்வர் ரீட்டா, அந்தச் சொல்லின் முதல் எழுத்தே “கௌ“ தான். கௌ என்றால் பசு என்று பொருள், பசு பெண்பால் ஆகையால் நான்தான் உண்மையான கௌபாய்“ என்ற வசனங்களுக்கு தியேட்டரே அதிர்கிறது.


பல இடங்களில் துப்பாக்கிச் சண்டை துவங்கும் முன்பே, எனக்கு, எனக்கு என்று போட்டி போட்டுக் கொண்டு கவரை வாங்கி, குண்டடி பட்டது போல மக்கள் செத்து விழும் காட்சி இந்திய சினிமா வரலாற்றில் புதுமையான காட்சி.


சண்டைக் காட்சிகள் துரை முருகன். அதிரடியாக சண்டை காட்சிகள் அமைப்பார் என்று எதிர்ப்பார்த்தால் ரிவால்வர் ரீட்டாவின் சேலையை பிடித்து இழுப்பது போல் காட்சி அமைத்திருக்கிறார். தியேட்டரில் பெண்கள் துரை முருகனை வெளிப்படையாக திட்டுவது நன்கு கேட்கிறது. இனி துரை முருகன் இது போன்ற காட்சிகளை அமைப்பதை தவிர்ப்பது நல்லது.


சவுண்ட் ஆற்காடு வீராசாமி. பல இடங்களில் ஒலி மந்தமாக இருக்கிறது ஒலிப்பதிவாளரின் கோளாறே. உடைகள் தமிழச்சி தங்க பாண்டியன். இசை அருட்தந்தை ஜெகத் கஸ்பர். இவர் இசையில் பல பாடல்கள் போலியானதாகவும், காப்பியடித்தது போலவும் இருக்றது. இவர் இசையமைப்பதை விட்டு விட்டு பேசாமல் போதகர் தொழிலுக்கே போகலாம் என்று பலர் கருத்து தெரிவித்தனர்.

வைரமுத்து, வாலியின் பாடல் வரிகள் கருணாநிதியை புகழ்வதை மட்டுமே கருத்தில் கொண்டு எழுதப் பட்டது போல் இருக்கிறது.

மக்கள் தொடர்பை கருணாநிதி மகன் அழகிரியே கவனித்துக் கொள்கிறார். நகைச்சுவைக்கு ஆவுடையப்பன் என்ற புதிய கதாபாத்திரத்தை அறிமுகப் படுத்தியுள்ளனர். இவர் நடுநிலையோடு நடந்து கொள்வது போல் நடித்து பல நேரங்களில் சிரிப்பை ஏற்படுத்துகிறார். ஆவுடையப்பன் தவிர்த்து கதாநாயகன் கருணாநிதியே பிரமாதமான காமெடி செய்வதால் தனி காமெடி ட்ராக் தேவையே இல்லை.


எவ்வளவு பெரிய கொள்ளைக் கூட்டத்தின் தலைவனாக இருந்தாலும், கொள்ளைக் கூட்டத்தை விட குடும்பமே பெரிது என்ற மெசேஜை படம் பார்க்கும் எவ்வளவு பேர் புரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை.


மொத்தத்தில் நீண்ட நாட்கள் கழித்து வந்திருந்தாலும், ஒரு சிறந்த கௌபாய் படம் பார்த்த திருப்தி படம் பார்த்து விட்டு தியேட்டரை விட்டு வெளியே வரும் அனைவர் முகத்திலும் தெரிந்தது.



சவுக்கு

இரும்புக் கோட்டை திரைப்பட விமர்சனம்




அறிவாலயம் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் புதிதாக வெளி வந்திருக்கும் திரைப்படம்தான் இரும்புக் கோட்டை கிழட்டுச் சிங்கம்.

படத்தின் தலைப்பிற்கேற்றார்போல், கதாநாயகன் சிறு வயது தொடங்கி, தள்ளாத வயது வரை, எவ்வளவு வயதானாலும் விடாப்பிடியாக நான்தான் கதாநாயகனாக இருப்பேன் என்று பிடிவாதமாக நடித்துள்ளார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் வரும் முதல் கௌபாய் படம் இது. ஆங்கிலத்தில் வெளிவந்து மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற 100 Rifles, The Good, The Bad, The Ugly, McKenna’s Gold போன்ற படங்களை விஞ்சும் விதத்தில் எடுக்கப் பட்டுள்ளது.

கதாநாயகநாக நடித்திருக்கும் கருணாநிதி பாத்திரத்தை உணர்ந்து மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். கருணாநிதியே தேர்ந்தெடுப்பதால், அநேகமாக இவ்வாண்டின் சிறந்த நடிப்புக்கான மாநில அரசின் விருது கருணாநிதிக்கே வழங்கப் படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கௌபாய் படத்தை எதிர்ப்பார்த்து செல்லும் ரசிகர்களை திருப்திபடுத்தும் அளவுக்கு காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு நிறைந்து எடுக்கப் பட்டிருக்கிறது இரும்புக் கோட்டை கிழட்டுச் சிங்கம்.

சாதாரணமாக தன் வாழ்க்கையை தொடங்கும் ஒருவன் எப்படி மிகச்சிறந்த துப்பாக்கி வீரனாகி தமிழ்நாட்டை கொள்ளையடிப்பதில் முதலிடத்தைப் பிடிக்கிறான் என்பதுதான் படத்தின் “ஒன் லைன்“.

கதாநாயகம் கருணாநிதி குழந்தையாக ஒரு சாதாரண குடும்பத்தில் பிறக்கிறான். சிறிது விபரம் தெரிந்தவுடன் அண்ணாதுரை என்ற ஒருவர் துவக்கும் கொள்ளைக் கூட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறான். அண்ணாத்துரை தான் துவக்கும் “கேங்“ மிகப்பெரிய அளவில் வளரப் போகிறது என்பது தெரியாமலே கேங்கை துவக்குகிறார். தமிழ்நாட்டில் அது வரை இருந்து வந்த காங்கிரஸ் கேங்கை தனது சாமர்த்தியத்தால் விரட்டி அடிக்கிறார்.
அன்று அண்ணாத்துரையால் விரட்டியடிக்கப் பட்ட காங்கிரஸ் கேங், படத்தின் இறுதி வரை பலம் பெறாமலேயே இருப்பதாக கதை அமைக்கப் பட்டிருப்பதால் இப்படத்தில் வில்லனாக இருப்பதற்கு காங்கிரஸ் கேங்குக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகிறது.

காங்கிரஸ் கேங்கை விரட்டியடித்து மொத்த தமிழ்நாட்டையும் தன் ஆளுகையின் கீழ் கொண்டு வரும் அண்ணாத்துரை நீண்ட நாள் தன் கொள்ளைக் கூட்டத்தை வழிநடத்தாமல் உடல் நலிவடைந்து இறந்து போகிறார்.



கொள்ளைக் கூட்டத்தை உருவாக்கிய அண்ணாத்துரை


அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு ரசிகர்கள் கொள்ளைக் கூட்டத்தின் இரண்டாம் கட்ட தலைவராக, அண்ணாதுரைக்கு நெருக்கமாக இருக்கும் நெடுஞ்செழியன் தலைவராக ஆகப் போகிறார் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு ட்விஸ்ட் வைக்கிறார் இயக்குநர்.

கருணாநிதி கொள்ளைக் கூட்டத்தில் சேரும் முன்பே இரண்டாம் கட்ட தலைவர்களாக அக்கூட்டத்தில் இருக்கும் சீனியர்களையெல்லாம் ஓரங்கட்டி விட்டு கொள்ளைக் கூட்டத்தின் தலைமைப் பொறுப்பை பிடிப்பது, ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. இருந்தாலும் இந்த இடத்தில் திரைக்கதை விறுவிறுப்பை அடைகிறது.

கொள்ளைக் கூட்டத்தின் உறுப்பினர்களின் மத்தியில் தன் சாகசங்களால் பாப்புலராக உள்ள எம்ஜிஆரின் துணையுடன் கருணாநிதி தலைவர் பொறுப்பை பிடிக்கிறார். நெடுஞ்செழியனை ஓரங்கட்டிவிட்டு அநாயசமாக, தலைமை பொறுப்பை பிடித்து விட்டு, கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு கருணாநிதி ஒரு அலட்சியச் சிரிப்பு சிரிக்கும் காட்சியில் தியேட்டரில் விசில் பறக்கிறது.



கதாநாயகன் வாழ்வில் ஹீரோயின்களுக்கு பஞ்சமே இல்லை. மூன்று ஹீரோயின்களுடன் டூயட் பாடிக்கொண்டே ஆனந்தமாக கதாநாயகன் பொழுதைக் கழிக்கையில் திடீரென்று நண்பனாக இருந்த எம்ஜிஆர் உருவில் பிரச்சினை உதிக்கிறது. எம்ஜிஆர் கொள்ளைக் கூட்ட உறுப்பினர்களிடையே மிகவும் பிரபலமாகி வருவதை கண்டு பொறுக்காத கதாநாயகன், குரங்கு ஆப்பசைத்த கதையாக, கொள்ளைக் கூட்டத்தில் மொத்தம் எத்தனை துப்பாக்கிகள் என்று எம்ஜிஆரைப் பார்த்து கணக்கு கேட்கிறார்.

துப்பாக்கி கணக்கு கேட்டதால் கடும் கோபம் அடையும் எம்ஜிஆர் கதாநாயகக் கருணாநிதியிடம் இருந்து பிரிந்து தனியே ஒரு கொள்ளைக் கூட்டத்தை தொடங்குகிறார்.

எம்ஜிஆர் தொடங்கிய கொள்ளைக் கூட்டம் மிகவும் பிரபலமாகி தமிழ்நாட்டின் நம்பர் கூட்டமாகிறது. இதனால் கதாநாயகன் கருணாநிதி மிகப் பெரிய பின்னடைவை சந்திக்கிறார். அவருக்கு தேவையான ஆயுதங்கள் குறைந்து கொள்ளைக் கூட்டத்தை நடத்த முடியாமல் திணறுகிறார். தினந்தோறும் கொள்ளையடித்துப் பழகி, கொள்ளையடிக்க வாய்ப்பே இல்லாமல் கதாநாயகன் ஏறக்குறைய பைத்தியம் பிடித்த நிலைக்கு தள்ளப் படும்போது, கொள்ளைக் கூட்ட தலைவன் எம்ஜிஆர் நோய்வாய்ப்பட்டு இறக்கிறார்.

எம்ஜிஆர் இறந்ததும் ஏற்பட்ட மகிழ்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல், எம்ஜிஆர் என் நண்பர், அவர் இல்லையென்றால் நான் கொள்ளைக் கூட்டத் தலைவன் ஆகியிருக்க முடியாது என்று மழுப்புகிறார்.

எம்ஜிஆர் இறந்ததும் போட்டிக்கு ஆளே இல்லாமல் தமிழ்நாட்டின் நம்பர் ஒன் கொள்ளைக் கூட்டத் தலைவனாக ஆகிறார் கதாநாயகன் கருணாநிதி. நிம்மதியாக கொள்ளையடித்து பொழுதை ஓட்டலாம் என்று இருக்கையில் களத்தில் குதிக்கிறார் ரிவால்வர் ரீட்டா.

எம்ஜிஆரின் கொள்ளைக் கூட்டத்தில் நீண்ட காலம் இருந்த ரிவால்வர் ரீட்டா நலிவடைந்திருந்த எம்ஜிஆரின் கேங்குக்கு புத்துணர்ச்சி ஊட்டி, கேங்குக்கு தலைமை ஏற்கிறார்.

இதைக் கண்டு கதாநாயகன் கருணாநிதி அதிர்ச்சி அடைந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இதனால் தனக்கு எவ்வித அச்சமும் இல்லை என்பது போல இருக்கிறார். இந்நிலையில் டெல்லியில் உள்ள அகில இந்திய கொள்ளைக் கூட்டத் தலைவர்கள் சம்மேளனத்தில் புகார் செய்து கருணாநிதியின் தலைவர் பதவியை பறிக்கிறார் ரிவால்வர் ரீட்டா. செய்வதறியாது திகைக்கும் கருணாநிதி மீண்டும் எப்படியாவது தலைவர் ஆகி விடலாம் என்று நினைக்கையில் அகில இந்திய கொள்ளைக் கூட்டத் தலைவன் ராஜீவ் காந்தி ஒரு வெடி விபத்தில் மரணமடைகிறார்.

இதனால் ரிவால்வர் ரீட்டாவுக்கு அடிக்கிறது யோகம். உடனடியாக தலைமைப் பதவியை பிடித்து தமிழ்நாட்டின் நம்பர் ஒன் கொள்ளைக் கூட்டத்தின் தலைவியாகிறார். இவர் கொள்ளைக் கூட்ட தலைவியானதும், தன் கூட்டத்தில் உள்ள ஒருவரை வளர்ப்பு மகனாக தத்தெடுக்கிறார்.

தத்தெடுத்ததோடு நில்லாமல் கொள்ளைக் கூட்ட வரலாறிலேயே இல்லாத அளவுக்கு தான் தத்தெடுத்த வளர்ப்பு மகனுக்கு மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்கிறார். இதைக் கண்ட கதாநாயகன் கருணாநிதி வயிற்றெரிச்சலில் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு புலம்பும் காட்சி காண்போர் நெஞ்சை உருக்குகிறது.

ரிவால்வர் ரீட்டா நெம்பர் ஒன் பொசிஷனில் ஐந்தாண்டு இருந்த பிறகு மீண்டும் கருணாநிதி தன் சாதுர்யத்தால் நெம்பர் ஒன் பொசிஷனை தட்டிப் பறிக்கிறார். நெம்பர் ஒன் பொசிஷனுக்கு வந்த பிறகு ரிவால்வர் ரீட்டாவை சிறையில் அடைக்கிறார் கருணாநிதி. ஆனால் ரிவால்வர் ரீட்டாவுக்கு இருக்கும் ஆதரவை குறைத்து மதிப்பிட்டு விடுகிறார் கருணாநிதி. சில ஆண்டுகள் கழித்து மீண்டும் நெம்பர் ஒன் பொசிஷனுக்கு ரிவால்வர் ரீட்டா வருகிறார்.

ரிவால்வர் ரீட்டா நம்பர் ஒன் பொசிஷனில் வந்தவுடன், தான் ஒரு காலத்தில் கொள்ளைக் கூட்டத்திற்கே தகுதியில்லாத பண்டாரங்கள் என்று விமர்சித்த அகில இந்திய கொள்ளைக் கூட்டத்தோடு கூட்டணி வைத்து சில நிர்வாகிப் பதவிகளை கைப்பற்றுகிறார் கருணாநிதி.

வந்ததும் கருணாநிதியை பழிவாங்கும் விதமாக அவரை கைது செய்து சிறையில் அடைக்கிறார் கருணாநிதி. கைது செய்யப் படுகையில் “அய்யோ கொலை பண்றாங்க“ என்று அலறுகிறார் கருணாநிதி. ஆனாலும் கருணாநிதியால் ஐந்தாண்டுகளுக்கு நம்பர் ஒன் பொசிஷனை பிடிக்க முடியவில்லை.




அய்யோ கொலை பண்றாங்க


கருணாநிதியின் கொள்ளைக் கூட்டம் நலிவுற்றிருந்தாலும், அகில இந்திய கொள்ளைக் கூட்டத்தில் கருணாநிதியின் கூட்டத்தைச் சேர்ந்த 7 பேர் நிர்வாகிப் பதவியில் இருப்பதால் சிறிது காலம் சமாளிக்கிறார் கருணாநிதி.

சிறிது காலம் போராடிய பிறகு, தமிழ்நாட்டில் உள்ள உதிரி கொள்ளைக் கூட்டம் அனைத்தையும் ஒன்று சேர்த்து கூட்டணி அமைத்து மீண்டும் நம்பர் ஒன் பொசிஷனுக்கு வருகிறார் கருணாநிதி.




கருணாநிதியிடம் நம்பர் ஒன் பொசிஷனை தவற விட்ட ரிவால்வர் ரீட்டா செய்வதறியாமல் திகைக்கிறார். எப்படியாவது மீண்டும் நம்பர் ஒன் பொசிஷனை பிடிக்க வேண்டும் என்று பகீரதப் பிரயத்தனம் செய்கிறார் ரீட்டா. கருணாநிதிக்கு வயதாகி விட்டதால் அவரை எப்படியாவது துப்பாக்கிச் சண்டையில் ஜெயித்து விட வேண்டும் என்று திட்டமிடுகிறார் ரீட்டா.

துப்பாக்கிச் சண்டையில் கருணாநிதியை எப்படியாவது வெற்றிப் பெற வேண்டும் என்று ரீட்டா தொடர்ந்து முயற்சிக்கிறார். ஆனால் கருணாநிதிக்கோ வயதாகி, தள்ளு வண்டியில் போகும் நிலைக்கு ஆளாகிறார். இதனால் தைரியம் அடைந்த ஜெயலலிதா, துப்பாக்கிச் சண்டையில் ஜெயிக்கலாம் என்று தன்னை தயார் செய்து கொண்டு வரும் வேளையில் கருணாநிதி புதிய தந்திரத்தை கையாளுவதை கண்டு அதிர்ச்சி அடைகிறார்.



துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு, குண்டடிப்பட்டு அனைவரும் செத்து விழுவார்கள் என்று எதிர்ப்பார்க்கையில், சண்டையில் ஈடுபடுபவர்கள் அனைவருக்கும் 5000, 10,000 என்று கவரில் கருணாநிதி பணத்தை வழங்குகிறார். கவரில் பணத்தை பெற்றுக் கொண்ட அனைவரும், குண்டடி படாமலேயே செத்து விழுந்தது போல் நடிக்கிறார்கள்.

இதைக் கண்ட ரிவால்வர் ரீட்டா செய்வதறியாமல் திகைத்து அவரும் கவரில் பணம் வழங்கும் தந்திரத்தை கையாண்டாலும் அவரின் தந்திரம் எடுபடவில்லை. கருணாநிதி வழங்கும் கவரைத்தான் அனைவரும் விரும்பி குண்டடி பட்டது போல செத்து விழுகிறார்கள்.

இதற்கு நடுவே, கருணாநிதியின் கொள்ளைக் கூட்டத்தில் குடும்பத்தினரின் ஆதிக்கம் அதிகரிக்கிறது. தன் கொள்ளைக் கூட்டத்தின் நெருக்கடி தாளாமல், தன் மகனை கொள்ளைக் கூட்டத்தின் துணைத் தலைவராக்கி நம்பர் 2 பொசிஷனுக்கு கொண்டு வருகிறார். இதைக் கண்ட இன்னொரு மகன் தான்தான் நம்பர் 2 பொசிஷனுக்கு வர வேண்டும் என்று சண்டை போடுகிறார்.



கருணாநிதியின் மகள்


இன்னொரு மகள், தனக்கு நம்பர் 3 பொசிஷன் வேண்டும் என்று வரிந்து கட்டுகிறார். ஆனால் நம்பர் 3 பொசிஷனை மகளுக்கு தர முடியாத வண்ணம், மருமகனின் பேரன்கள் சண்டை போடுகின்றனர்.

இதனால் கருணாநிதியின் கொள்ளைக் கூட்டத்தில் பெரும் கலவரம் உண்டாகிறது. தள்ளு வண்டியில் உள்ள வயது முதிர்ந்த கதாநாயகன், வயது முதிர்ந்தாலும் உடல் தளர்ந்தாலும், தன் நம்பர் ஒன் பொசிஷனை விட்டுத் தராமல் இறுதி வரை போராடுகிறார்.



தள்ளுவண்டியில் வயது முதிர்ந்த கதாநாயகன்


இறுதிக் காட்சி 2011ல் நடைபெறுகிறது. நம்பர் ஒன் பொசிஷனுக்காக தொடர்ந்து போராடும் ரிவால்வர் ரீட்டா ஜெயிக்கிறாரா, தள்ளுவண்டியில் உள்ள கருணாநிதி ஜெயிக்கிறாரா, அல்லது அவரது மகனோ அல்லது மகளோ ஜெயிக்கிறார்களா என்பதுதான் க்ளைமாக்ஸ்.
விறுவிறுப்பான திரைக்கதையும், சுறுசுறுப்பான எடிட்டிங்கும் படத்துக்கு சுவை கூட்டுகின்றன.

தேவையான இடத்தில் தேவைப்படாத காட்சிகளை வெட்டியெறிந்து, படத்துக்கு விறுவிறுப்பு கூட்டும் வகையில் படத்தை எடிட்டிங் செய்திருப்பவர் அந்தோனியோ மொய்னோ சோனியா காந்தி. இவர் இத்தாலியில் எடிட்டிங் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

ஒளிப்பதிவு பேராசிரியர் அன்பழகன். கேமரா பாய்ந்து பாய்ந்து ஒளிப்பதிவு செய்ய வேண்டிய இடங்களிலெல்லாம் மங்குணி போல நகராமல் உட்கார்ந்திருப்பது ரசிகர்களை எரிச்சலாக்குகிறது.


ப்ரொடக்ஷன் மேனேஜர் ஆ.ராசா. வசனங்களை கதாநாயகன் கருணாநிதியே எழுதியிருக்கிறார். சட்டமன்ற வளாகத்தில் கருணாநிதி ரிவால்வர் ரீட்டாவைப் பார்த்து “நீங்கள் கௌபாய் ஆக முடியாது, ஏனென்றால் பெயரிலேயே “பாய்“ இருக்கிறது, நீங்கள் பெண்“ என்று சொல்லுவதும் அதற்கு ரிவால்வர் ரீட்டா, அந்தச் சொல்லின் முதல் எழுத்தே “கௌ“ தான். கௌ என்றால் பசு என்று பொருள், பசு பெண்பால் ஆகையால் நான்தான் உண்மையான கௌபாய்“ என்ற வசனங்களுக்கு தியேட்டரே அதிர்கிறது.


பல இடங்களில் துப்பாக்கிச் சண்டை துவங்கும் முன்பே, எனக்கு, எனக்கு என்று போட்டி போட்டுக் கொண்டு கவரை வாங்கி, குண்டடி பட்டது போல மக்கள் செத்து விழும் காட்சி இந்திய சினிமா வரலாற்றில் புதுமையான காட்சி.


சண்டைக் காட்சிகள் துரை முருகன். அதிரடியாக சண்டை காட்சிகள் அமைப்பார் என்று எதிர்ப்பார்த்தால் ரிவால்வர் ரீட்டாவின் சேலையை பிடித்து இழுப்பது போல் காட்சி அமைத்திருக்கிறார். தியேட்டரில் பெண்கள் துரை முருகனை வெளிப்படையாக திட்டுவது நன்கு கேட்கிறது. இனி துரை முருகன் இது போன்ற காட்சிகளை அமைப்பதை தவிர்ப்பது நல்லது.


சவுண்ட் ஆற்காடு வீராசாமி. பல இடங்களில் ஒலி மந்தமாக இருக்கிறது ஒலிப்பதிவாளரின் கோளாறே. உடைகள் தமிழச்சி தங்க பாண்டியன். இசை அருட்தந்தை ஜெகத் கஸ்பர். இவர் இசையில் பல பாடல்கள் போலியானதாகவும், காப்பியடித்தது போலவும் இருக்றது. இவர் இசையமைப்பதை விட்டு விட்டு பேசாமல் போதகர் தொழிலுக்கே போகலாம் என்று பலர் கருத்து தெரிவித்தனர்.

வைரமுத்து, வாலியின் பாடல் வரிகள் கருணாநிதியை புகழ்வதை மட்டுமே கருத்தில் கொண்டு எழுதப் பட்டது போல் இருக்கிறது.

மக்கள் தொடர்பை கருணாநிதி மகன் அழகிரியே கவனித்துக் கொள்கிறார். நகைச்சுவைக்கு ஆவுடையப்பன் என்ற புதிய கதாபாத்திரத்தை அறிமுகப் படுத்தியுள்ளனர். இவர் நடுநிலையோடு நடந்து கொள்வது போல் நடித்து பல நேரங்களில் சிரிப்பை ஏற்படுத்துகிறார். ஆவுடையப்பன் தவிர்த்து கதாநாயகன் கருணாநிதியே பிரமாதமான காமெடி செய்வதால் தனி காமெடி ட்ராக் தேவையே இல்லை.


எவ்வளவு பெரிய கொள்ளைக் கூட்டத்தின் தலைவனாக இருந்தாலும், கொள்ளைக் கூட்டத்தை விட குடும்பமே பெரிது என்ற மெசேஜை படம் பார்க்கும் எவ்வளவு பேர் புரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை.


மொத்தத்தில் நீண்ட நாட்கள் கழித்து வந்திருந்தாலும், ஒரு சிறந்த கௌபாய் படம் பார்த்த திருப்தி படம் பார்த்து விட்டு தியேட்டரை விட்டு வெளியே வரும் அனைவர் முகத்திலும் தெரிந்தது.



சவுக்கு

Wednesday, January 27, 2010

சிபிஐ வானத்தில் இருந்து குதித்து வந்ததா ?




இப்போதைய திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது, சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. அப்போது முதலமைச்சராக இருந்த செல்வி.ஜெ.ஜெயலலிதா, சட்டமன்றத்தில் “சிபிஐ என்ன வானத்தில் இருந்து குதித்து வந்ததா ?

ஜெயலலிதா கேட்டது எந்த தொனியில் என்றால் சிபிஐ வசம் ஒரு விசாரணையை ஒப்படைத்தால், அவர்கள் மட்டும் என்ன நேர்மையாகவா விசாரிக்கப் போகிறார்கள் என்ற தொனிதான் அது.

அந்தத் தொனி உண்மை என்பது இன்று தெள்ளத் தெளிவாக நிரூபணம் ஆயிருக்கிறது.

2005ல் ஹரியானா மாநிலத்தில் கோஹானா என்ற தலித் குடியிருப்பு சக்தி வாய்ந்த ஜாட் வகுப்பு மக்களால் தீக்கிரையாக்கப் பட்டது. ஹரியானாவில் ஜாட் வகுப்பு மக்களுக்கும் தலித் மக்களான வால்மீகி இன மக்களுக்கும் நடந்த மோதலில் 60க்கும் மேற்பட்ட வால்மீகி இன மக்களின் குடிசைகள் தீ வைத்து கொளுத்தப் பட்டன. 1000 முதல் 1500க்கும் மேற்பட்ட ஜாட் இன மக்கள் கூட்டமாக வந்து பட்டப் பகலில் குடிசைகளை தீ வைத்துக் கொளுத்தியதை செய்தி ஊடகங்கள் ஒளிபரப்பின. அதன் பிறகு அங்கு சென்ற எழுத்தாளர்கள், நடுநிலையாளர்களை உள்ளடக்கிய உண்மை அறியும் குழுவும், இத்தகவலை உறுதி செய்தது.

செப்டம்பர் 2009ல் இவ்வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்த சிபிஐ என்ன சொல்லியது தெரியுமா ?


நஷ்ட ஈடு கிடைக்க வேண்டும் என்பதற்காக தலித்துகளே தங்கள் குடிசைகளை கொளுத்திக் கொண்டார்களாம். எப்படி இருக்கிறது ?


இதுதான் சிபிஐன் லட்சணம்.


மதுரையில் தினகரன் அலுவலகத்தில் பங்காளிச் சண்டையில் தினகரன் ஊழியர்கள் 3 பேர் தங்கள் உயிரை விட்டதை அனைத்து ஊடகங்களுமே ஒளிபரப்பின. உடனடியாக கருணாநிதி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். கருணாநிதி உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுகிறார் என்றாலே சிபிஐ ன் லட்சணம் என்னவென்பது புரியும். சிபிஐ உண்மையை கண்டுபிடித்து விடும் என்பது தெரிந்தால் கருணாநிதி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவாரா ? தன் மகன் அல்லவா சிறைக்குப் போக வேண்டியிருக்கும்.


கருணாநிதி நினைத்தது போலவே, இவ்வழக்கில் சிபிஐ சேர்த்த மொத்தம் உள்ள 88 சாட்சிகளில் 87 சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறின. வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட அனைவரும் விடுதலை செய்யப் பட்டனர். யார் மீதும் குற்றம் நிரூபிக்கப் படவில்லை.


அப்போ தினகரன் அலுவலக ஊழியர்கள் தாங்களாகவே தீக்குளித்து இறந்தார்களா ?


போபர்ஸ் வழக்கை சிபிஐ கையாண்ட விதம் குறித்து நாடே அறியும்.


இப்போது, கடந்த ஆண்டு பிப்ரவரி 19 அன்று நடந்த வழக்கறிஞர் காவல்துறை மோதல் தொடர்பாக சிபிஐ “புலனாய்வு“ நடத்தி தனது குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.


சென்னை உயர்நீதிமன்றத்தால் நீண்ட நாட்கள் விசாரணை செய்தபிறகு குற்றவாளிகள் என்று அடையாளம் காணப்பட்ட ராதாகிருஷ்ணன், ஏ.கே.விஸ்வநாதன், ராமசுப்ரமணியம் மற்றும் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகிய நால்வர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் 31 வழக்கறிஞர்கள் மேல் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கிறது சிபிஐ.


வக்கீல்கள் மட்டும் தவறு செய்யவில்லையா ? அவர்கள் மட்டும் என்ன யோக்கியமா ? என்று கேள்வி எழுப்புபவர்கள் சற்றே பொறுக்கவும்.


வக்கீல்கள் தவறு செய்திருக்கலாம். யாரும் மறுக்கவில்லை. அதற்காக அவர்கள் மீது சட்டப் படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.


ஆனால் வழக்கறிஞர்களை கண் மூடித்தனமாக வெறிப்பிடித்தது போலத் தாக்கியது யார் என்பதை சென்னை உயர்நீதிமன்றம் நீண்ட நெடிய விசாரணைக்குப் பிறகு தான் தெளிவாக ஒரு தீர்ப்பை அளித்திருக்கிறதே ? பிறகு வேறு என்ன ஆதாரம் வேண்டும் ?


4 உயர் அதிகாரிகள் மேல் இப்போது குற்றம் சுமத்தாமல், இந்த 4 அதிகாரிகளும் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யுமா சிபிஐ ?


இதில் மிகப்பெரிய கூத்து எதுவென்றால், வழக்கறிஞர்களோடு சேர்ந்து சதித்திட்டத்தில் ஈடுபட்டார் என்று மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு மேல் தாக்கல் செய்திருக்கும் குற்றப் பத்திரிக்கை தான். மூத்த வழக்கறிஞரான அவர், காவல்நிலையத்தை எரிக்க சதித்திட்டத்தில் ஈடுபட்டார் என்பதை விட ஒரு மிகப் பெரிய கட்டுக்கதையும், விஷமத் தனமும் வேறு எங்கும் பார்க்க முடியாது.

சிபிஐ ன் குற்றப் பத்திரிக்கை பத்தி vii ல் பார்த்தசாரதி என்ற வழக்கறிஞர்இ 1545 மணிக்கு கைது செய்யப் பட்டு, போலீஸ் வேனில் ஏற்றப் பட்டு அழைத்துச் செல்லப் பட்டார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பத்தி ixல் பார்த்தசாரதி என்ற வழக்கறிஞர் மாலை 1714 மணி வரை காவல்துறையினர் மீது மற்ற வழக்கறிஞர்களோடு சேர்ந்து கல்லெறிந்தார் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.



சிபிஐ குற்றப் பத்திரிக்கையில் பத்தி vii



சிபிஐ குற்றப் பத்திரிக்கையில் பத்தி ix



எப்படி இருக்கிறது சிபிஐ ன் திறமை ?


சங்கரசுப்பு சதித்திட்டத்தில் ஈடுபட்டார் என்றால், முதல் நாளே திட்டமிட்டு, ஏராளமான ஆயுதம் தாங்கிய காவலர்களை நீதிமன்ற வளாகத்திற்குள் கூட்டியதற்கு பெயர் என்ன ? வழக்கறிஞர்களையும், நீதிபதிகளையும் வளைத்து வளைத்து அடித்ததற்கு பெயர் என்ன ?


சிபிஐ சொல்லும் ஒரே ஒரு சாக்கு என்ன தெரியுமா ? உச்ச நீதிமன்றம், இந்த நான்கு அதிகாரிகள் மேல் எடுக்கும் நடவடிக்கைக்கு தடை விதித்துள்ளது என்பது தான்.


இது ஒரு அப்பட்டமான புளுகு. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன தெரியுமா ?
In the meanwhile, operation of Clauses (b) and (c) of direction No. 3 under the heading 'Direction to the Government' shall remain stayed till further consideration. However, it is made clear that this order shall not prevent State Government from
taking appropriate action in accordance of law.

உச்சநீதிமன்றம் தடை விதித்த Clause (b) மற்றும் (c) என்ன தெரியுமா ?

(c) நீதிமன்றத்தால் நடந்த சம்பவங்களுக்கு பொறுப்பு என்று கண்டறியப்பட்ட நான்கு உயர் அதிகாரிகளின் மீதும் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(d) துறை நடவடிக்கை எடுக்க ஏதுவாக நான்கு அதிகாரிகளும் பணி இடை நீக்கம் செய்யப் பட வேண்டும்.

இந்தத் தீர்ப்பில் சிபிஐ விசாரிக்கக் கூடாது என்று எங்கே இருக்கிறது. மேலும், சட்டப் படி, இந்த நான்கு அதிகாரிகளின் மீதும் மாநில அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றுதான் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் Directions to CBI என்ற தலைப்பின் கீழ்,

In so far as, R.C.No.2(S)/2009/CBI/SCB /Chennai, registered against the Police, CBI is directed to proceed with the investigation in accordance with law

என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க வில்லையே ?

எவன் அடி வாங்கிக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கம்ப்ளெயின்ட் கொடுக்க வருகிறானோ, அவன் மேலேயே கேஸ் போடும் தமிழ்நாட்டு போலீசுக்கு எந்த விதத்திலும் சளைத்ததில்லை என்று சிபிஐ நிரூபித்து உள்ளது.

சிபிஐல் இப்போது இணை இயக்குநராக பணியாற்றி வரும், அசோக் குமாரும், வழக்கறிஞர் தாக்குதலில் முக்கிய பங்கு வகித்த ராதாகிருஷ்ணனும் லஞ்ச ஒழிப்புத் துறையில் 3 வருடங்கள் ஒன்றாகப் பணியாற்றியவர்கள் என்பதும், இருவருக்கும் நெருங்கிய நட்பு உண்டு என்பதும், தற்செயலாக நடந்த விஷயங்களாக எடுத்துக் கொள்ள முடியவில்லையே ?


சிபிஐ ல் வேலைப் பார்ப்பவர்களும் காவல்துறையினர் தானே ? மற்ற காவல்துறையினரிடம் உள்ள அதே கயமைத்தனம், அயோக்கியத்தனம், ஆளும் வர்க்கத்தை அண்டிப் பிழைக்கும் பிழைப்புவாதம், உழைப்பாளி மக்களுக்கெதிரான துரோகம், பச்சோந்தித்தனம், சிபிஐ யிடம் மட்டும் இல்லாமல் போய் விடுமா என்ன ?

இனிமேல் சிபிஐ Central Bureau of Investigation இல்லை. அதற்கு பதிலாக

Consortium of Bloody Idiots

அல்லது

Confederation of Bureaucrats with Incompetence

என்று அழைக்கலாம் அல்லவா ?

வழக்கறிஞர்களே, உங்களையே தாக்கிவிட்டு, உங்கள் மீதே குற்றம் சுமத்தி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கும் சிபிஐ குற்றப் பத்திரிக்கையை கொளுத்துங்கள்.

சவுக்கு

சிபிஐ வானத்தில் இருந்து குதித்து வந்ததா ?




இப்போதைய திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது, சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. அப்போது முதலமைச்சராக இருந்த செல்வி.ஜெ.ஜெயலலிதா, சட்டமன்றத்தில் “சிபிஐ என்ன வானத்தில் இருந்து குதித்து வந்ததா ?

ஜெயலலிதா கேட்டது எந்த தொனியில் என்றால் சிபிஐ வசம் ஒரு விசாரணையை ஒப்படைத்தால், அவர்கள் மட்டும் என்ன நேர்மையாகவா விசாரிக்கப் போகிறார்கள் என்ற தொனிதான் அது.

அந்தத் தொனி உண்மை என்பது இன்று தெள்ளத் தெளிவாக நிரூபணம் ஆயிருக்கிறது.

2005ல் ஹரியானா மாநிலத்தில் கோஹானா என்ற தலித் குடியிருப்பு சக்தி வாய்ந்த ஜாட் வகுப்பு மக்களால் தீக்கிரையாக்கப் பட்டது. ஹரியானாவில் ஜாட் வகுப்பு மக்களுக்கும் தலித் மக்களான வால்மீகி இன மக்களுக்கும் நடந்த மோதலில் 60க்கும் மேற்பட்ட வால்மீகி இன மக்களின் குடிசைகள் தீ வைத்து கொளுத்தப் பட்டன. 1000 முதல் 1500க்கும் மேற்பட்ட ஜாட் இன மக்கள் கூட்டமாக வந்து பட்டப் பகலில் குடிசைகளை தீ வைத்துக் கொளுத்தியதை செய்தி ஊடகங்கள் ஒளிபரப்பின. அதன் பிறகு அங்கு சென்ற எழுத்தாளர்கள், நடுநிலையாளர்களை உள்ளடக்கிய உண்மை அறியும் குழுவும், இத்தகவலை உறுதி செய்தது.

செப்டம்பர் 2009ல் இவ்வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்த சிபிஐ என்ன சொல்லியது தெரியுமா ?


நஷ்ட ஈடு கிடைக்க வேண்டும் என்பதற்காக தலித்துகளே தங்கள் குடிசைகளை கொளுத்திக் கொண்டார்களாம். எப்படி இருக்கிறது ?


இதுதான் சிபிஐன் லட்சணம்.


மதுரையில் தினகரன் அலுவலகத்தில் பங்காளிச் சண்டையில் தினகரன் ஊழியர்கள் 3 பேர் தங்கள் உயிரை விட்டதை அனைத்து ஊடகங்களுமே ஒளிபரப்பின. உடனடியாக கருணாநிதி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். கருணாநிதி உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுகிறார் என்றாலே சிபிஐ ன் லட்சணம் என்னவென்பது புரியும். சிபிஐ உண்மையை கண்டுபிடித்து விடும் என்பது தெரிந்தால் கருணாநிதி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவாரா ? தன் மகன் அல்லவா சிறைக்குப் போக வேண்டியிருக்கும்.


கருணாநிதி நினைத்தது போலவே, இவ்வழக்கில் சிபிஐ சேர்த்த மொத்தம் உள்ள 88 சாட்சிகளில் 87 சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறின. வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட அனைவரும் விடுதலை செய்யப் பட்டனர். யார் மீதும் குற்றம் நிரூபிக்கப் படவில்லை.


அப்போ தினகரன் அலுவலக ஊழியர்கள் தாங்களாகவே தீக்குளித்து இறந்தார்களா ?


போபர்ஸ் வழக்கை சிபிஐ கையாண்ட விதம் குறித்து நாடே அறியும்.


இப்போது, கடந்த ஆண்டு பிப்ரவரி 19 அன்று நடந்த வழக்கறிஞர் காவல்துறை மோதல் தொடர்பாக சிபிஐ “புலனாய்வு“ நடத்தி தனது குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.


சென்னை உயர்நீதிமன்றத்தால் நீண்ட நாட்கள் விசாரணை செய்தபிறகு குற்றவாளிகள் என்று அடையாளம் காணப்பட்ட ராதாகிருஷ்ணன், ஏ.கே.விஸ்வநாதன், ராமசுப்ரமணியம் மற்றும் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகிய நால்வர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் 31 வழக்கறிஞர்கள் மேல் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கிறது சிபிஐ.


வக்கீல்கள் மட்டும் தவறு செய்யவில்லையா ? அவர்கள் மட்டும் என்ன யோக்கியமா ? என்று கேள்வி எழுப்புபவர்கள் சற்றே பொறுக்கவும்.


வக்கீல்கள் தவறு செய்திருக்கலாம். யாரும் மறுக்கவில்லை. அதற்காக அவர்கள் மீது சட்டப் படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.


ஆனால் வழக்கறிஞர்களை கண் மூடித்தனமாக வெறிப்பிடித்தது போலத் தாக்கியது யார் என்பதை சென்னை உயர்நீதிமன்றம் நீண்ட நெடிய விசாரணைக்குப் பிறகு தான் தெளிவாக ஒரு தீர்ப்பை அளித்திருக்கிறதே ? பிறகு வேறு என்ன ஆதாரம் வேண்டும் ?


4 உயர் அதிகாரிகள் மேல் இப்போது குற்றம் சுமத்தாமல், இந்த 4 அதிகாரிகளும் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யுமா சிபிஐ ?


இதில் மிகப்பெரிய கூத்து எதுவென்றால், வழக்கறிஞர்களோடு சேர்ந்து சதித்திட்டத்தில் ஈடுபட்டார் என்று மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு மேல் தாக்கல் செய்திருக்கும் குற்றப் பத்திரிக்கை தான். மூத்த வழக்கறிஞரான அவர், காவல்நிலையத்தை எரிக்க சதித்திட்டத்தில் ஈடுபட்டார் என்பதை விட ஒரு மிகப் பெரிய கட்டுக்கதையும், விஷமத் தனமும் வேறு எங்கும் பார்க்க முடியாது.

சிபிஐ ன் குற்றப் பத்திரிக்கை பத்தி vii ல் பார்த்தசாரதி என்ற வழக்கறிஞர்இ 1545 மணிக்கு கைது செய்யப் பட்டு, போலீஸ் வேனில் ஏற்றப் பட்டு அழைத்துச் செல்லப் பட்டார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பத்தி ixல் பார்த்தசாரதி என்ற வழக்கறிஞர் மாலை 1714 மணி வரை காவல்துறையினர் மீது மற்ற வழக்கறிஞர்களோடு சேர்ந்து கல்லெறிந்தார் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.



சிபிஐ குற்றப் பத்திரிக்கையில் பத்தி vii



சிபிஐ குற்றப் பத்திரிக்கையில் பத்தி ix



எப்படி இருக்கிறது சிபிஐ ன் திறமை ?


சங்கரசுப்பு சதித்திட்டத்தில் ஈடுபட்டார் என்றால், முதல் நாளே திட்டமிட்டு, ஏராளமான ஆயுதம் தாங்கிய காவலர்களை நீதிமன்ற வளாகத்திற்குள் கூட்டியதற்கு பெயர் என்ன ? வழக்கறிஞர்களையும், நீதிபதிகளையும் வளைத்து வளைத்து அடித்ததற்கு பெயர் என்ன ?


சிபிஐ சொல்லும் ஒரே ஒரு சாக்கு என்ன தெரியுமா ? உச்ச நீதிமன்றம், இந்த நான்கு அதிகாரிகள் மேல் எடுக்கும் நடவடிக்கைக்கு தடை விதித்துள்ளது என்பது தான்.


இது ஒரு அப்பட்டமான புளுகு. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன தெரியுமா ?
In the meanwhile, operation of Clauses (b) and (c) of direction No. 3 under the heading 'Direction to the Government' shall remain stayed till further consideration. However, it is made clear that this order shall not prevent State Government from
taking appropriate action in accordance of law.

உச்சநீதிமன்றம் தடை விதித்த Clause (b) மற்றும் (c) என்ன தெரியுமா ?

(c) நீதிமன்றத்தால் நடந்த சம்பவங்களுக்கு பொறுப்பு என்று கண்டறியப்பட்ட நான்கு உயர் அதிகாரிகளின் மீதும் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(d) துறை நடவடிக்கை எடுக்க ஏதுவாக நான்கு அதிகாரிகளும் பணி இடை நீக்கம் செய்யப் பட வேண்டும்.

இந்தத் தீர்ப்பில் சிபிஐ விசாரிக்கக் கூடாது என்று எங்கே இருக்கிறது. மேலும், சட்டப் படி, இந்த நான்கு அதிகாரிகளின் மீதும் மாநில அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றுதான் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் Directions to CBI என்ற தலைப்பின் கீழ்,

In so far as, R.C.No.2(S)/2009/CBI/SCB /Chennai, registered against the Police, CBI is directed to proceed with the investigation in accordance with law

என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க வில்லையே ?

எவன் அடி வாங்கிக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கம்ப்ளெயின்ட் கொடுக்க வருகிறானோ, அவன் மேலேயே கேஸ் போடும் தமிழ்நாட்டு போலீசுக்கு எந்த விதத்திலும் சளைத்ததில்லை என்று சிபிஐ நிரூபித்து உள்ளது.

சிபிஐல் இப்போது இணை இயக்குநராக பணியாற்றி வரும், அசோக் குமாரும், வழக்கறிஞர் தாக்குதலில் முக்கிய பங்கு வகித்த ராதாகிருஷ்ணனும் லஞ்ச ஒழிப்புத் துறையில் 3 வருடங்கள் ஒன்றாகப் பணியாற்றியவர்கள் என்பதும், இருவருக்கும் நெருங்கிய நட்பு உண்டு என்பதும், தற்செயலாக நடந்த விஷயங்களாக எடுத்துக் கொள்ள முடியவில்லையே ?


சிபிஐ ல் வேலைப் பார்ப்பவர்களும் காவல்துறையினர் தானே ? மற்ற காவல்துறையினரிடம் உள்ள அதே கயமைத்தனம், அயோக்கியத்தனம், ஆளும் வர்க்கத்தை அண்டிப் பிழைக்கும் பிழைப்புவாதம், உழைப்பாளி மக்களுக்கெதிரான துரோகம், பச்சோந்தித்தனம், சிபிஐ யிடம் மட்டும் இல்லாமல் போய் விடுமா என்ன ?

இனிமேல் சிபிஐ Central Bureau of Investigation இல்லை. அதற்கு பதிலாக

Consortium of Bloody Idiots

அல்லது

Confederation of Bureaucrats with Incompetence

என்று அழைக்கலாம் அல்லவா ?

வழக்கறிஞர்களே, உங்களையே தாக்கிவிட்டு, உங்கள் மீதே குற்றம் சுமத்தி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கும் சிபிஐ குற்றப் பத்திரிக்கையை கொளுத்துங்கள்.

சவுக்கு

Monday, January 25, 2010

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டும் திமுக லிமிடெட்டும்







ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கும் அரசியல் கட்சிக்கும் என்ன தொடர்பு என்ற வினாக்களை சற்றே நிறுத்தி வையுங்கள்.

என்ன தொடர்பு என்று விளக்கமாகவே பார்ப்போம்.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனம்.


திருக்குவளை முத்துவேல் கருணாநிதி லிமிடெட் இந்தியாவின் மிகப் பெரிய அரசியல் நிறுவனம்.


ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதன் குடும்பத்தாரால் கட்டுப்படுத்தப்பட்டு நிர்வகிக்கப் பட்டு வருகிறது.


திமுக லிமிடெட் நிறுவனமும் அதன் குடும்பத்தாரால் கட்டுப்படுத்தப்பட்டு நிர்வகிக்கப் பட்டு வருகிறது.


ரிலையன்ஸ் நிறுவனத்தில் அதன் குடும்ப உறுப்பினர்கள், பெரும்பான்மையான பங்குதாரர்களாக இருந்து வருகின்றனர்.


திமுக லிமிடெட் நிறுவனத்திலும் அதன் குடும்ப உறுப்பினர்கள், பெரும்பான்மையான பங்குதாரர்களாக இருந்து வருகின்றனர்.


திருபாய் அம்பானி குஜராத் மாநிலத்தில் ஜுனாகாந்தி மாவட்டத்தில் கூக்காஸ்வாடா என்ற கிராமத்தில் ஹிராசந்த் கோர்தன்தாஸ் அம்பானி மற்றும் ஜம்னாபேன் என்ற பெற்றோருக்கு பிறந்தார். அம்பானியின் பெற்றோர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள்.


முத்துவேல் கருணாநிதி தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை கிராமத்தில் முத்துவேல் மற்றும் அஞ்சுகம் அம்மையாருக்கு பிறந்தார். கருணாநிதியின் பெற்றோரும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள் தான்.


அம்பானிக்கு ஒரு மனைவி, இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள்.
கருணாநிதிக்கு மூன்று மனைவிகள். மகன்கள், அவருக்கே கணக்கு தெரியாது.

திருபாய் அம்பானி தன் ஆரம்பகால வாழ்க்கையில் பல தகிடுத்தத்தங்களை செய்து ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை கட்டினார்.
கருணாநிதியும் தன் ஆரம்ப காலத்தில் பல தகிடுதத்தங்களை செய்து திமுக லிமிடெட் நிறுவனத்தை கைப்பற்றினார்.


திருபாய் அம்பானி தன் சாமர்த்தியத்தின் மூலமாக பங்குச் சந்தையையே தன் கட்டுக்குள் வந்தார்.


கருணாநிதி தன் சாமர்த்தியத்தின் மூலமாக தமிழ்நாட்டையே தன் கட்டுக்குள் கொண்டு வந்தார்.


ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய சக்தி


திமுக நிறுவனமும் இந்தியாவின் மிகப்பெரிய சக்தி


ரிலையன்ஸ் நிறுவனம் தன் பங்குதாரர்கள் கூட்டத்தை மிகப்பெரிய ஸ்டேடியத்தில் நடத்தி வரலாறு படைத்தது

திமுக தனது மாநாடுகளை மிகப்பெரிய அளவில் நடத்தி வரலாறு படைத்தது.


ரிலையன்ஸ் நிறுவனம் காங்கிரஸ் மற்றும் தேசியக் கட்சிகளின் தொடர்பால் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டது

திமுக நிறுவனமும் காங்கிரஸ் மற்றும் தேசியக் கட்சிகளின் தொடர்பால் தனகு செல்வாக்கை வளர்த்துக் கொண்டது.


அரசியலில் திருபாய் அம்பானிக்கு மிகப்பெரிய எதிரி வி.பி.சிங்.


அரசியலில் கருணாநிதிக்கு மிகப்பெரிய நண்பன் வி.பி.சிங்

திருபாய் அம்பானி மிகப்பெரிய வியாபாரி.

கருணாநிதி வியாபாரி மட்டுமல்லாமல் மிகப்பெரிய நடிகர்

அம்பானிக்கு அவரின் பிள்ளைகள்தான் சொத்து

கருணாநிதிக்கு அவரின் பிள்ளைகள்தான் சத்ரு

ரிலையன்ஸ் நிறுவனம், முதலில் ஜவுளித் துறையில் கால்பதித்து பல்வேறு துறைகளில் ஆக்டோபஸ் போல் பரவியது.


கருணாநிதி முதலில் ஆட்சியைப் பிடித்து ஆக்டோபஸ் போல பல்வேறு துறைகளிலும் பரவினார்.

பங்குச் சந்தையில் தரகர்களால் ஏற்பட்ட கடும் நெருக்கடியை திருபாய் அம்பானி திறமையாக சமாளித்தார்.

கட்சியில் ஏற்பட்ட முக்கியமான பிளவுகளை கருணாநிதி திறமையாக சமாளித்தார்.


வியாபாரத்தை திறமையாக நடத்தி தனது நிறுவனத்தின் பங்குதாரர்களை கவர்தார் திருபாய் அம்பானி.


தன் திறமையான நடிப்பின் மூலம் கட்சியை நடத்தி தொண்டர்களை கவர்ந்தார் கருணாநிதி.


ரிலையன்ஸ் நிறுவனம், திருபாய் மறைவுக்குப் பின் இரண்டாக உடைந்தது

திமுக நிறுவனம் கருணாநிதி மறைவுக்குப் பின் பல்வேறு துண்டுகளாக உடைய இருக்கிறது.


திருபாய் அம்பானி உயிரோடு இருக்கையிலேயே அவரது இரண்டு மகன்களுக்கும் இடையில் பூசல் ஏற்பட்டது.


கருணாநிதி உயிரோடு இருக்கையில் அவரது இரண்டு மகன்கள் மட்டுமல்லாமல் மகள்களுக்கு இடையிலும் கடும் பூசல் இருக்கிறது.


அம்பானி மறைவுக்குப் பிறகு குடும்பத்தில் உள்ள பூசலை சரி செய்தது அவரது மனைவி கோகிலோ பேன்.



கருணாநிதியின் மனைவிகளுக்குள்ளேயே கடும் பூசல். அதனால் பூசலை மனைவி சமரசம் செய்ய வாய்ப்பில்லை.


திருபாய் அம்பானியின் பெரும்பான்மையான சொத்துக்கள் இரண்டு மகன்களுக்குள் பங்கு பிரிக்கப் பட்டது.


கருணாநிதியின் பெரும்பான்மையான சொத்துக்களை இரண்டு மகன்களுக்கு மட்டும் பங்கு பிரிக்க முடியாது. ஏராளமான மகன்களும், மகள்களும் இருப்பதால் பங்கு பிரிப்பதில் கடும் சிக்கல் ஏற்படும்.




ரிலையன்சை பங்கு பிரிப்பதில் சிக்கல் அதன் மதிப்பு குறித்து இருந்தது.
திமுக நிறுவனத்தில், பிரித்தால் மதிப்பு குறையும் என்பதால், பங்கு பிரிப்பதில் கடும் சிக்கல் உள்ளது.



திருபாய் அம்பானியின் மூத்த மகன் ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாகவும், இளைய மகன் இன்னொரு கட்சிக்கு ஆதராவகவும் செயல்பட்டு வருகின்றனர்.


கருணாநிதியின் இரண்டு மகன்களும் ஒரே கட்சியில் இருந்து கொண்டு கட்சியை உடைக்க திட்டமிட்டு வருகின்றனர்.


அம்பானி மகன்களுக்கு வர்த்தக உலகத்தை யார் ஆளுவது என்ற போட்டி


கருணாநிதி மகன்களுக்கு தமிழகத்தையும் கட்சியையும் யார் ஆளுவது என்ற போட்டி

அம்பானியின் சொத்தில் சரி பாதி பணம் கருப்பிலும், சரி பாதி வெள்ளையாகவும் இருக்கிறது.

கருணாநிதியின் சொத்தில் கொஞ்சூண்டு வெள்ளையாகவும், மீதமெல்லாம் கருப்பாகவும் இருக்கிறது.

அம்பானியின் மகன்கள் மட்டும்தான் அதிகாரத்திற்காக போட்டி போடுகிறார்கள்.

கருணாநிதியின் மகள்களும் அதிகாரத்திற்காக போட்டி போடுகிறார்கள். மேலும், மனைவிகளும் அதிகாரத்திற்காக போட்டி போடுவது கூடுதல் சிறப்பு.

திருபாய் அம்பானிக்கு தன் நிறுவனத்திற்காக புதிய தொழிற்சாலைகள் நிறுவுவதில் மிகுந்த ஆர்வம்.

கருணாநிதிக்கு தன் குடும்பத்திற்காக புதிய சட்டமன்றம் கட்டுவதிலும், சொத்துக்களை கட்டுவதிலும் மிகுந்த ஆர்வம்.

திருபாய் அம்பானிக்கு தன் சொந்த குடும்பத்தை தவிர, இதர உறவினர்களால் பிரச்சினை ஏதும் இல்லை.


கருணாநிதிக்கோ மனைவி., மகன்கள் மற்றும் மகள்கள் தவிரவும், மருமகன், மருமகன் வயிற்றுப் பேரன்கள் என அதிகாரத்திற்காக போட்டியிடுவோர் எண்ணிக்கை பலப் பல.



திருபாய் அம்பானியின் மரணத்திற்குப் பின் அவரது மகன்கள் அடித்துக் கொண்டாலும், நன்கு தொழில் செய்து நிறுவனத்தின் சொத்துக்களை பன்மடங்கு பெருக்கவே செய்தனர்.

ஆனால் கருணாநிதியின் மரணத்திற்குப் பிறகு, இரண்டு மகன்களும் அடித்துக் கொண்டு, திமுக நிறுவனத்தையே திவாலாக்கப் போகிறார்கள்.



சவுக்கு

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டும் திமுக லிமிடெட்டும்







ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கும் அரசியல் கட்சிக்கும் என்ன தொடர்பு என்ற வினாக்களை சற்றே நிறுத்தி வையுங்கள்.

என்ன தொடர்பு என்று விளக்கமாகவே பார்ப்போம்.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனம்.


திருக்குவளை முத்துவேல் கருணாநிதி லிமிடெட் இந்தியாவின் மிகப் பெரிய அரசியல் நிறுவனம்.


ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதன் குடும்பத்தாரால் கட்டுப்படுத்தப்பட்டு நிர்வகிக்கப் பட்டு வருகிறது.


திமுக லிமிடெட் நிறுவனமும் அதன் குடும்பத்தாரால் கட்டுப்படுத்தப்பட்டு நிர்வகிக்கப் பட்டு வருகிறது.


ரிலையன்ஸ் நிறுவனத்தில் அதன் குடும்ப உறுப்பினர்கள், பெரும்பான்மையான பங்குதாரர்களாக இருந்து வருகின்றனர்.


திமுக லிமிடெட் நிறுவனத்திலும் அதன் குடும்ப உறுப்பினர்கள், பெரும்பான்மையான பங்குதாரர்களாக இருந்து வருகின்றனர்.


திருபாய் அம்பானி குஜராத் மாநிலத்தில் ஜுனாகாந்தி மாவட்டத்தில் கூக்காஸ்வாடா என்ற கிராமத்தில் ஹிராசந்த் கோர்தன்தாஸ் அம்பானி மற்றும் ஜம்னாபேன் என்ற பெற்றோருக்கு பிறந்தார். அம்பானியின் பெற்றோர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள்.


முத்துவேல் கருணாநிதி தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை கிராமத்தில் முத்துவேல் மற்றும் அஞ்சுகம் அம்மையாருக்கு பிறந்தார். கருணாநிதியின் பெற்றோரும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள் தான்.


அம்பானிக்கு ஒரு மனைவி, இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள்.
கருணாநிதிக்கு மூன்று மனைவிகள். மகன்கள், அவருக்கே கணக்கு தெரியாது.

திருபாய் அம்பானி தன் ஆரம்பகால வாழ்க்கையில் பல தகிடுத்தத்தங்களை செய்து ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை கட்டினார்.
கருணாநிதியும் தன் ஆரம்ப காலத்தில் பல தகிடுதத்தங்களை செய்து திமுக லிமிடெட் நிறுவனத்தை கைப்பற்றினார்.


திருபாய் அம்பானி தன் சாமர்த்தியத்தின் மூலமாக பங்குச் சந்தையையே தன் கட்டுக்குள் வந்தார்.


கருணாநிதி தன் சாமர்த்தியத்தின் மூலமாக தமிழ்நாட்டையே தன் கட்டுக்குள் கொண்டு வந்தார்.


ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய சக்தி


திமுக நிறுவனமும் இந்தியாவின் மிகப்பெரிய சக்தி


ரிலையன்ஸ் நிறுவனம் தன் பங்குதாரர்கள் கூட்டத்தை மிகப்பெரிய ஸ்டேடியத்தில் நடத்தி வரலாறு படைத்தது

திமுக தனது மாநாடுகளை மிகப்பெரிய அளவில் நடத்தி வரலாறு படைத்தது.


ரிலையன்ஸ் நிறுவனம் காங்கிரஸ் மற்றும் தேசியக் கட்சிகளின் தொடர்பால் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டது

திமுக நிறுவனமும் காங்கிரஸ் மற்றும் தேசியக் கட்சிகளின் தொடர்பால் தனகு செல்வாக்கை வளர்த்துக் கொண்டது.


அரசியலில் திருபாய் அம்பானிக்கு மிகப்பெரிய எதிரி வி.பி.சிங்.


அரசியலில் கருணாநிதிக்கு மிகப்பெரிய நண்பன் வி.பி.சிங்

திருபாய் அம்பானி மிகப்பெரிய வியாபாரி.

கருணாநிதி வியாபாரி மட்டுமல்லாமல் மிகப்பெரிய நடிகர்

அம்பானிக்கு அவரின் பிள்ளைகள்தான் சொத்து

கருணாநிதிக்கு அவரின் பிள்ளைகள்தான் சத்ரு

ரிலையன்ஸ் நிறுவனம், முதலில் ஜவுளித் துறையில் கால்பதித்து பல்வேறு துறைகளில் ஆக்டோபஸ் போல் பரவியது.


கருணாநிதி முதலில் ஆட்சியைப் பிடித்து ஆக்டோபஸ் போல பல்வேறு துறைகளிலும் பரவினார்.

பங்குச் சந்தையில் தரகர்களால் ஏற்பட்ட கடும் நெருக்கடியை திருபாய் அம்பானி திறமையாக சமாளித்தார்.

கட்சியில் ஏற்பட்ட முக்கியமான பிளவுகளை கருணாநிதி திறமையாக சமாளித்தார்.


வியாபாரத்தை திறமையாக நடத்தி தனது நிறுவனத்தின் பங்குதாரர்களை கவர்தார் திருபாய் அம்பானி.


தன் திறமையான நடிப்பின் மூலம் கட்சியை நடத்தி தொண்டர்களை கவர்ந்தார் கருணாநிதி.


ரிலையன்ஸ் நிறுவனம், திருபாய் மறைவுக்குப் பின் இரண்டாக உடைந்தது

திமுக நிறுவனம் கருணாநிதி மறைவுக்குப் பின் பல்வேறு துண்டுகளாக உடைய இருக்கிறது.


திருபாய் அம்பானி உயிரோடு இருக்கையிலேயே அவரது இரண்டு மகன்களுக்கும் இடையில் பூசல் ஏற்பட்டது.


கருணாநிதி உயிரோடு இருக்கையில் அவரது இரண்டு மகன்கள் மட்டுமல்லாமல் மகள்களுக்கு இடையிலும் கடும் பூசல் இருக்கிறது.


அம்பானி மறைவுக்குப் பிறகு குடும்பத்தில் உள்ள பூசலை சரி செய்தது அவரது மனைவி கோகிலோ பேன்.



கருணாநிதியின் மனைவிகளுக்குள்ளேயே கடும் பூசல். அதனால் பூசலை மனைவி சமரசம் செய்ய வாய்ப்பில்லை.


திருபாய் அம்பானியின் பெரும்பான்மையான சொத்துக்கள் இரண்டு மகன்களுக்குள் பங்கு பிரிக்கப் பட்டது.


கருணாநிதியின் பெரும்பான்மையான சொத்துக்களை இரண்டு மகன்களுக்கு மட்டும் பங்கு பிரிக்க முடியாது. ஏராளமான மகன்களும், மகள்களும் இருப்பதால் பங்கு பிரிப்பதில் கடும் சிக்கல் ஏற்படும்.




ரிலையன்சை பங்கு பிரிப்பதில் சிக்கல் அதன் மதிப்பு குறித்து இருந்தது.
திமுக நிறுவனத்தில், பிரித்தால் மதிப்பு குறையும் என்பதால், பங்கு பிரிப்பதில் கடும் சிக்கல் உள்ளது.



திருபாய் அம்பானியின் மூத்த மகன் ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாகவும், இளைய மகன் இன்னொரு கட்சிக்கு ஆதராவகவும் செயல்பட்டு வருகின்றனர்.


கருணாநிதியின் இரண்டு மகன்களும் ஒரே கட்சியில் இருந்து கொண்டு கட்சியை உடைக்க திட்டமிட்டு வருகின்றனர்.


அம்பானி மகன்களுக்கு வர்த்தக உலகத்தை யார் ஆளுவது என்ற போட்டி


கருணாநிதி மகன்களுக்கு தமிழகத்தையும் கட்சியையும் யார் ஆளுவது என்ற போட்டி

அம்பானியின் சொத்தில் சரி பாதி பணம் கருப்பிலும், சரி பாதி வெள்ளையாகவும் இருக்கிறது.

கருணாநிதியின் சொத்தில் கொஞ்சூண்டு வெள்ளையாகவும், மீதமெல்லாம் கருப்பாகவும் இருக்கிறது.

அம்பானியின் மகன்கள் மட்டும்தான் அதிகாரத்திற்காக போட்டி போடுகிறார்கள்.

கருணாநிதியின் மகள்களும் அதிகாரத்திற்காக போட்டி போடுகிறார்கள். மேலும், மனைவிகளும் அதிகாரத்திற்காக போட்டி போடுவது கூடுதல் சிறப்பு.

திருபாய் அம்பானிக்கு தன் நிறுவனத்திற்காக புதிய தொழிற்சாலைகள் நிறுவுவதில் மிகுந்த ஆர்வம்.

கருணாநிதிக்கு தன் குடும்பத்திற்காக புதிய சட்டமன்றம் கட்டுவதிலும், சொத்துக்களை கட்டுவதிலும் மிகுந்த ஆர்வம்.

திருபாய் அம்பானிக்கு தன் சொந்த குடும்பத்தை தவிர, இதர உறவினர்களால் பிரச்சினை ஏதும் இல்லை.


கருணாநிதிக்கோ மனைவி., மகன்கள் மற்றும் மகள்கள் தவிரவும், மருமகன், மருமகன் வயிற்றுப் பேரன்கள் என அதிகாரத்திற்காக போட்டியிடுவோர் எண்ணிக்கை பலப் பல.



திருபாய் அம்பானியின் மரணத்திற்குப் பின் அவரது மகன்கள் அடித்துக் கொண்டாலும், நன்கு தொழில் செய்து நிறுவனத்தின் சொத்துக்களை பன்மடங்கு பெருக்கவே செய்தனர்.

ஆனால் கருணாநிதியின் மரணத்திற்குப் பிறகு, இரண்டு மகன்களும் அடித்துக் கொண்டு, திமுக நிறுவனத்தையே திவாலாக்கப் போகிறார்கள்.



சவுக்கு

Saturday, January 23, 2010

நளினியை விடுதலை செய்யாதீர்கள்




நளினியை விடுதலை செய்யக் கூடாது என்று சவுக்கு சொல்லவில்லை. தமிழக மக்கள் சொல்லவில்லை.

ஈழத் தமிழர்கள் சொல்லவில்லை. சொல்வது யார் தெரியுமா ?


முத்துவேல் கருணாநிதிதான்.


(கருணாநிதியை விமர்சனம் செய்தால், அநானியாக வந்து கெட்ட வார்த்தையில் பின்னூட்டம் போடுபவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு)


கருணாநிதி எப்போது சொன்னார் என்று யோசிக்கிறீர்களா ? விளக்கமாகவே சொல்கிறேன்.
தமிழகத்தில் கைதிகளை விடுதலை செய்வதில் இரண்டு வகை உண்டு.

ஒரு வகை ஆலோசனைக் குழுமத்தின் பரிந்துரையில் விடுதலை செய்வது. மற்றொரு வகை அண்ணா பிறந்த நாள் போன்ற தலைவர்கள் பிறந்த நாள் அன்று செய்யப் படும் விடுதலை மற்றொரு வகை.


முதல் வகையைப் பார்ப்போம்.
ஒவ்வொரு ஆண்டும் 10 ஆண்டுகள் தண்டனை கழித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை முன் விடுதலைக்காக பரிசீலிக்க சிறை விதிகளின் படி ஆலோசனைக் குழுமத்தை கூட்ட வேண்டும்.

அக்குழுமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர், சிறைக் கண்காணிப்பாளர், மாவட்ட நீதிபதி, மருத்துவர், நன்னடத்தை அலுவலர், அரசு சாரா உறுப்பினர்கள் இருவர் ஆகியோர் அடங்கிய குழு கூடி 10 ஆண்டுகள் சிறை முடித்த கைதிகளைப் பற்றி பரிசீலிக்க வேண்டும். 2001ல் நளினி 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிக்கிறார். ஆனால், நளினிக்கான ஆலோசனைக் குழுமும் கூடவேயில்லை.

முதன் முறையாக 2007ம் ஆண்டுதான் ஆலோசனைக் குழுமம் டிசம்பர் மாதம் கூடி, நளினியின் வழக்கை பரிசீலித்தது. அந்தக் குழு கூடி “இலங்கையில் இப்போது போர் நடந்து கொண்டு இருக்கிறது. இறந்த ராஜீவ் காந்தி மிகப் பெரிய தலைவர். நளினியை விடுதலை செய்தால் இலங்கைக்குச் சென்று, புலிகளோடு சேர்ந்து கொள்வார்“ என்ற காரணத்தைக் கூறி நிராகரித்தது.


ஆனால் இவ்வாறு நிராகரித்த குழுமம் சரியான முறையில் கூடவில்லை, மொத்தம் உள்ள ஏழு உறுப்பினர்களில் மூன்றே பேர் கூடி இந்த முடிவை எடுத்துள்ளனர் ஆகையால், இந்தக் குழுமத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்று நளினி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து வெற்றி பெற்றார்.

இந்த ஆலோசனைக் குழுமம், கருணாநிதியின் கட்டுப்பாட்டின் கீழ் பணியாற்றுபவர்களால்தானே முடிவெடுக்கப் பட்டது ?

“தமிழினத்தின் தலைவர்“ நினைத்திருந்தால், அப்போது பரிந்துரை செய்திருக்க முடியாதா ?

நீதிமன்றம், ஆலோசனைக் குழுமத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்று உத்தரவிட்டும் கூட ஒன்றரை ஆண்டுகளாக கூட்டப் படவேயில்லை. இதை எதிர்த்து நளினி மீண்டும் நீதிமன்றத்தை அணுகினார்.

அதன் பிறகு தான் ஆலோசனைக் குழுமம் கூட்டப் பட்டது.

இரண்டாவது வகை, அண்ணா பிறந்த நாளில் கைதிகளை முன் விடுதலை செய்வது.

2001ம் ஆண்டு பத்து ஆண்டுகள் தண்டனை முடித்த 63 கைதிகள் விடுதலை செய்யப் பட்டனர். நளினி அப்போது 10 ஆண்டுகள் முடித்திருந்தார்.

இதற்கு அடுத்து 2006ம் ஆண்டு அண்ணா பிறந்த நாளில் 472 கைதிகள் முன் விடுதலை செய்யப் பட்டனர். இவர்கள் கழித்த தண்டனை காலம் எவ்வளவு தெரியுமா ? 10 ஆண்டுகள். நளினி அப்போது 14 ஆண்டுகளை முடித்திருந்தார்.


2007ம் ஆண்டில், இரண்டு முறை கைதிகள் முன் விடுதலை செய்யப் பட்டனர். அண்ணா பிறந்த நாளின் போது பத்து ஆண்டுகள் முடித்த 190 பேர் விடுதலை செய்யப் பட்டனர். அடுத்து கருணாநிதியின் சட்டமன்ற பொன் விழா ஆண்டின் போது 14 ஆண்டுகள் முடித்த 27 பேர் விடுதலை செய்யப் பட்டனர். அப்போது நளினி 15 ஆண்டுகள் முடித்திருந்தார்.


2008 ஆண்டில் 1408 பேர் விடுதலை செய்யப் பட்டனர். 1408 பேரும் விடுதலை செய்யப் படுவதற்கான தகுதி 7 ஆண்டுகள் முடித்திருக்க வேண்டும். நளினி அப்போது 16 ஆண்டுகள் முடித்திருந்தார்.

நளினியை முன் விடுதலை செய்யாமல் இருப்பதற்கு அரசு சொல்லும் காரணம் ஒரு விதி. அவ்விதி என்ன சொல்கிறது என்றால், மத்திய அரசு புலனாய்வு நிறுவனங்கள் விசாரித்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட கைதிகளை முன் விடுதலைக்கு பரிசீலிக்கும் முன் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மத்திய அரசை கலந்தாலோசிக்க வேண்டும் என்பதுதான் அந்த விதி.

2006ல் ஆட்சிக்கு வந்தாரல்லவா “தமிழினத்தின் தலைவர்“ ? எத்தனை முறை மத்திய அரசை நளினி தொடர்பாக கருணாநிதி கலந்தாலோசித்தார் தெரியுமா ?

ஒரு முறை கூட இல்லை. இன்று வரை கலந்தாலோசிக்க வில்லை.


இப்போது நடந்து கொண்டிருக்கும் கூத்துக்காகத்தான் இந்தப் பதிவே.


கடந்த 4 நாட்களாக தேசிய ஊடகங்களிலும், மாநில ஊடகங்களிலும் நளினி விடுதலை, நளினி விடுதலை என்று பெரிய பெரிய செய்திகள் வருகிறதே. இதன் பின்னணி தெரியுமா ?


திடீரென்று நளினியை விடுதலை செய்ய ஆலோசனைக் குழுமம் பரிந்துரை என்ற செய்தி முளைத்தது.

யாருக்குமே எப்படி இச்செய்தி திடீரென என்று புரியவில்லை. ஆனால், திடீரென்று அனைத்து பத்திரிக்கைகளுக்கும் இச்செய்தி பரப்பப் பட்டது. இது கருணாநிதியின் உளவுத் துறை செய்த வேலை.


ஆனால் 20ந் தேதிதான் ஆலோசனைக் குழுமம் நளினியை சிறையில் சந்தித்தது. அதற்கு முன்பாகவே நளினி விடுதலை என்பது போல பல பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன.


RAJIV ASSASSIN NALINI TO BE RELEASED ? என்று தேசிய ஊடகங்கள் அலறின, ராஜீவ் இறந்த படத்தை அருகில் போட்டு நளினி விடுதலை ? என்று தமிழ் ஊடகங்கள் அலறின. தினத்தந்தி தலைப்புச் செய்தியாகவே போட்டது.


திடீரென்று சுப்ரமண்ய சாமி நீதிமன்றம் வந்தார். தலைமை நீதிபதியிடம் நளினியை முன் விடுதலை செய்யப் போகிறார்கள்.

அவ்வாறு செய்யக் கூடாது நான் போட்ட வழக்கை விரைந்து விசாரியுங்கள் என்று மனு அளித்தார்.

நளினியை விடுதலை செய்யக் கோரும் பரிந்துரையில் கையொப்பம் இடாதீர்கள் என்று கவர்னரிடம் மனு அளித்தார்.


ஆனால், ஆலோசனைக் குழுமம் கூடி, நளினியை விடுதலை செய்ய இது வரை பரிந்துரை அனுப்பவில்லை.

இந்நிலையில் எதற்காக இச்செய்தி ஊடகங்களில் கருணாநிதியால் பரப்பப்பட்டது ?


இங்கேதான் இருக்கிறது கருணாநிதியின் தந்திரம்.


ஆலோசனைக் குழுமம், இம்முறை நளினியை முன் விடுதலைக்கு தகுதியானவர் என்று சொல்லியே தீர வேண்டும்.

ஏனெனில் நளினி மீது சிறைக் குற்றங்கள் ஏதும் கிடையாது. அவ்வாறு பரிந்துரை செய்து குழு அறிக்கையை அரசிடம் அளித்தால் தமிழக அரசு அப்பரிந்துரையின் மீது தனது முடிவை எடுக்க வேண்டும்.

அவ்வாறு முடிவெடுத்தபின், மத்திய அரசிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். மத்திய அரசிடம் ஆலோசனை கேட்டு கடிதம் எழுதினால், சோனியாவுக்கு நெருக்கடி ஏற்படும். நளினியை விடுதலை செய்யலாம் என்று மத்திய அரசு முடிவெடுத்தால் அரசியல் ரீதியாக நன்றாக இருக்கும் என்றாலும், நளினி சிறையிலேயே சாக வேண்டும் என்ற சோனியாவின் விருப்பம் நிறைவேறாது.


இப்படி ஒரு நெருக்கடிக்கு சோனியா ஆளானால், அதனால் முதலில் பாதிக்கப் படப் போவது கருணாநிதி தான்.

அதற்கு பதில், ஆலோசனைக் குழுமத்தின் முடிவுக்கு எப்படியாவது நீதிமன்றத்தில் தடை வாங்கி விட்டால் ?


இதுதான் கருணாநிதியின் திட்டம். சுப்ரமண்ய சாமியின் வழக்கு விரைந்து விசாரிக்கப் படவில்லை என்றாலும் யாராவது ஒருவர் பொது நல வழக்கு திடீரென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.


எப்படி இருக்கிறது கருணாநிதியின் கயமை ?


இப்போது சொல்லுங்கள். நளினியை விடுதலை செய்யாதீர்கள் என்று சொல்லுவது யார் ?
முத்துவேல் கருணாநிதி தானே ?

இவர்தான் “தமிழினத்தின் தலைவர்“

வெட்கக்கேடு.

சவுக்கு

நளினியை விடுதலை செய்யாதீர்கள்




நளினியை விடுதலை செய்யக் கூடாது என்று சவுக்கு சொல்லவில்லை. தமிழக மக்கள் சொல்லவில்லை.

ஈழத் தமிழர்கள் சொல்லவில்லை. சொல்வது யார் தெரியுமா ?


முத்துவேல் கருணாநிதிதான்.


(கருணாநிதியை விமர்சனம் செய்தால், அநானியாக வந்து கெட்ட வார்த்தையில் பின்னூட்டம் போடுபவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு)


கருணாநிதி எப்போது சொன்னார் என்று யோசிக்கிறீர்களா ? விளக்கமாகவே சொல்கிறேன்.
தமிழகத்தில் கைதிகளை விடுதலை செய்வதில் இரண்டு வகை உண்டு.

ஒரு வகை ஆலோசனைக் குழுமத்தின் பரிந்துரையில் விடுதலை செய்வது. மற்றொரு வகை அண்ணா பிறந்த நாள் போன்ற தலைவர்கள் பிறந்த நாள் அன்று செய்யப் படும் விடுதலை மற்றொரு வகை.


முதல் வகையைப் பார்ப்போம்.
ஒவ்வொரு ஆண்டும் 10 ஆண்டுகள் தண்டனை கழித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை முன் விடுதலைக்காக பரிசீலிக்க சிறை விதிகளின் படி ஆலோசனைக் குழுமத்தை கூட்ட வேண்டும்.

அக்குழுமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர், சிறைக் கண்காணிப்பாளர், மாவட்ட நீதிபதி, மருத்துவர், நன்னடத்தை அலுவலர், அரசு சாரா உறுப்பினர்கள் இருவர் ஆகியோர் அடங்கிய குழு கூடி 10 ஆண்டுகள் சிறை முடித்த கைதிகளைப் பற்றி பரிசீலிக்க வேண்டும். 2001ல் நளினி 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிக்கிறார். ஆனால், நளினிக்கான ஆலோசனைக் குழுமும் கூடவேயில்லை.

முதன் முறையாக 2007ம் ஆண்டுதான் ஆலோசனைக் குழுமம் டிசம்பர் மாதம் கூடி, நளினியின் வழக்கை பரிசீலித்தது. அந்தக் குழு கூடி “இலங்கையில் இப்போது போர் நடந்து கொண்டு இருக்கிறது. இறந்த ராஜீவ் காந்தி மிகப் பெரிய தலைவர். நளினியை விடுதலை செய்தால் இலங்கைக்குச் சென்று, புலிகளோடு சேர்ந்து கொள்வார்“ என்ற காரணத்தைக் கூறி நிராகரித்தது.


ஆனால் இவ்வாறு நிராகரித்த குழுமம் சரியான முறையில் கூடவில்லை, மொத்தம் உள்ள ஏழு உறுப்பினர்களில் மூன்றே பேர் கூடி இந்த முடிவை எடுத்துள்ளனர் ஆகையால், இந்தக் குழுமத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்று நளினி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து வெற்றி பெற்றார்.

இந்த ஆலோசனைக் குழுமம், கருணாநிதியின் கட்டுப்பாட்டின் கீழ் பணியாற்றுபவர்களால்தானே முடிவெடுக்கப் பட்டது ?

“தமிழினத்தின் தலைவர்“ நினைத்திருந்தால், அப்போது பரிந்துரை செய்திருக்க முடியாதா ?

நீதிமன்றம், ஆலோசனைக் குழுமத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்று உத்தரவிட்டும் கூட ஒன்றரை ஆண்டுகளாக கூட்டப் படவேயில்லை. இதை எதிர்த்து நளினி மீண்டும் நீதிமன்றத்தை அணுகினார்.

அதன் பிறகு தான் ஆலோசனைக் குழுமம் கூட்டப் பட்டது.

இரண்டாவது வகை, அண்ணா பிறந்த நாளில் கைதிகளை முன் விடுதலை செய்வது.

2001ம் ஆண்டு பத்து ஆண்டுகள் தண்டனை முடித்த 63 கைதிகள் விடுதலை செய்யப் பட்டனர். நளினி அப்போது 10 ஆண்டுகள் முடித்திருந்தார்.

இதற்கு அடுத்து 2006ம் ஆண்டு அண்ணா பிறந்த நாளில் 472 கைதிகள் முன் விடுதலை செய்யப் பட்டனர். இவர்கள் கழித்த தண்டனை காலம் எவ்வளவு தெரியுமா ? 10 ஆண்டுகள். நளினி அப்போது 14 ஆண்டுகளை முடித்திருந்தார்.


2007ம் ஆண்டில், இரண்டு முறை கைதிகள் முன் விடுதலை செய்யப் பட்டனர். அண்ணா பிறந்த நாளின் போது பத்து ஆண்டுகள் முடித்த 190 பேர் விடுதலை செய்யப் பட்டனர். அடுத்து கருணாநிதியின் சட்டமன்ற பொன் விழா ஆண்டின் போது 14 ஆண்டுகள் முடித்த 27 பேர் விடுதலை செய்யப் பட்டனர். அப்போது நளினி 15 ஆண்டுகள் முடித்திருந்தார்.


2008 ஆண்டில் 1408 பேர் விடுதலை செய்யப் பட்டனர். 1408 பேரும் விடுதலை செய்யப் படுவதற்கான தகுதி 7 ஆண்டுகள் முடித்திருக்க வேண்டும். நளினி அப்போது 16 ஆண்டுகள் முடித்திருந்தார்.

நளினியை முன் விடுதலை செய்யாமல் இருப்பதற்கு அரசு சொல்லும் காரணம் ஒரு விதி. அவ்விதி என்ன சொல்கிறது என்றால், மத்திய அரசு புலனாய்வு நிறுவனங்கள் விசாரித்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட கைதிகளை முன் விடுதலைக்கு பரிசீலிக்கும் முன் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மத்திய அரசை கலந்தாலோசிக்க வேண்டும் என்பதுதான் அந்த விதி.

2006ல் ஆட்சிக்கு வந்தாரல்லவா “தமிழினத்தின் தலைவர்“ ? எத்தனை முறை மத்திய அரசை நளினி தொடர்பாக கருணாநிதி கலந்தாலோசித்தார் தெரியுமா ?

ஒரு முறை கூட இல்லை. இன்று வரை கலந்தாலோசிக்க வில்லை.


இப்போது நடந்து கொண்டிருக்கும் கூத்துக்காகத்தான் இந்தப் பதிவே.


கடந்த 4 நாட்களாக தேசிய ஊடகங்களிலும், மாநில ஊடகங்களிலும் நளினி விடுதலை, நளினி விடுதலை என்று பெரிய பெரிய செய்திகள் வருகிறதே. இதன் பின்னணி தெரியுமா ?


திடீரென்று நளினியை விடுதலை செய்ய ஆலோசனைக் குழுமம் பரிந்துரை என்ற செய்தி முளைத்தது.

யாருக்குமே எப்படி இச்செய்தி திடீரென என்று புரியவில்லை. ஆனால், திடீரென்று அனைத்து பத்திரிக்கைகளுக்கும் இச்செய்தி பரப்பப் பட்டது. இது கருணாநிதியின் உளவுத் துறை செய்த வேலை.


ஆனால் 20ந் தேதிதான் ஆலோசனைக் குழுமம் நளினியை சிறையில் சந்தித்தது. அதற்கு முன்பாகவே நளினி விடுதலை என்பது போல பல பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன.


RAJIV ASSASSIN NALINI TO BE RELEASED ? என்று தேசிய ஊடகங்கள் அலறின, ராஜீவ் இறந்த படத்தை அருகில் போட்டு நளினி விடுதலை ? என்று தமிழ் ஊடகங்கள் அலறின. தினத்தந்தி தலைப்புச் செய்தியாகவே போட்டது.


திடீரென்று சுப்ரமண்ய சாமி நீதிமன்றம் வந்தார். தலைமை நீதிபதியிடம் நளினியை முன் விடுதலை செய்யப் போகிறார்கள்.

அவ்வாறு செய்யக் கூடாது நான் போட்ட வழக்கை விரைந்து விசாரியுங்கள் என்று மனு அளித்தார்.

நளினியை விடுதலை செய்யக் கோரும் பரிந்துரையில் கையொப்பம் இடாதீர்கள் என்று கவர்னரிடம் மனு அளித்தார்.


ஆனால், ஆலோசனைக் குழுமம் கூடி, நளினியை விடுதலை செய்ய இது வரை பரிந்துரை அனுப்பவில்லை.

இந்நிலையில் எதற்காக இச்செய்தி ஊடகங்களில் கருணாநிதியால் பரப்பப்பட்டது ?


இங்கேதான் இருக்கிறது கருணாநிதியின் தந்திரம்.


ஆலோசனைக் குழுமம், இம்முறை நளினியை முன் விடுதலைக்கு தகுதியானவர் என்று சொல்லியே தீர வேண்டும்.

ஏனெனில் நளினி மீது சிறைக் குற்றங்கள் ஏதும் கிடையாது. அவ்வாறு பரிந்துரை செய்து குழு அறிக்கையை அரசிடம் அளித்தால் தமிழக அரசு அப்பரிந்துரையின் மீது தனது முடிவை எடுக்க வேண்டும்.

அவ்வாறு முடிவெடுத்தபின், மத்திய அரசிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். மத்திய அரசிடம் ஆலோசனை கேட்டு கடிதம் எழுதினால், சோனியாவுக்கு நெருக்கடி ஏற்படும். நளினியை விடுதலை செய்யலாம் என்று மத்திய அரசு முடிவெடுத்தால் அரசியல் ரீதியாக நன்றாக இருக்கும் என்றாலும், நளினி சிறையிலேயே சாக வேண்டும் என்ற சோனியாவின் விருப்பம் நிறைவேறாது.


இப்படி ஒரு நெருக்கடிக்கு சோனியா ஆளானால், அதனால் முதலில் பாதிக்கப் படப் போவது கருணாநிதி தான்.

அதற்கு பதில், ஆலோசனைக் குழுமத்தின் முடிவுக்கு எப்படியாவது நீதிமன்றத்தில் தடை வாங்கி விட்டால் ?


இதுதான் கருணாநிதியின் திட்டம். சுப்ரமண்ய சாமியின் வழக்கு விரைந்து விசாரிக்கப் படவில்லை என்றாலும் யாராவது ஒருவர் பொது நல வழக்கு திடீரென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.


எப்படி இருக்கிறது கருணாநிதியின் கயமை ?


இப்போது சொல்லுங்கள். நளினியை விடுதலை செய்யாதீர்கள் என்று சொல்லுவது யார் ?
முத்துவேல் கருணாநிதி தானே ?

இவர்தான் “தமிழினத்தின் தலைவர்“

வெட்கக்கேடு.

சவுக்கு

Friday, January 22, 2010

ஒரு துளி விஷம் கொடுங்களேன்... ... ...


உலகில் பாவப்பட்ட ஜென்மங்களான ஆதரவற்ற ஈழத் தமிழனாய்த் தான் நானும் பிறந்தேன். எனக்கு இரண்டு அக்கா மற்றும் ஒரு அண்ணன். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

மக்கட்செல்வத்தில் எனக்கு குறையே இல்லாமல் ஏழு குழந்தைகள். நான்கு மகன்கள், இரண்டு மகள்கள். இரண்டு மகன்களுக்கும், இரண்டு மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. அனைவரும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தோம்.

சமாதான காலத்தில் ஈழம் போன்றதொரு மகிழ்ச்சியான இடத்தை நீங்கள் எங்கேயும் காண முடியாது. புலிகளின் நிர்வாகத்தில் மக்கள் அனைவரும் குறையின்றி மகிழ்ச்சியாகவே இருந்தோம். எங்கள் தேசியத் தலைவர் இருக்கையில் எங்களுக்கென்ன குறை ?

2007 பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் எப்போதும் என்னை அழைப்பது போலவே சமையல் வேலைக்கு அழைத்தனர். இரணியத் தீவிலிருந்து, யாழ்ப்பாணம் வரை செல்ல வேண்டும், படகில் சமைக்க வேண்டும் என்று கூறினர். "அதுக்கென்ன, வாருங்கள் போவோம்" என்று சம்மதித்தேன்.

படகில் ஏறும்போது இரவு 9 மணி இருக்கும். படகில் ஏறியதும் எப்போதும் எங்களுடன் பயணிக்கும் மகிழ்ச்சியும் பயணிக்கத் தொடங்கியது. முதலில், ஈழத்தின் விளைந்த சிறப்பான தேயிலையில் அனைவருக்கும் தேநீர் தயாரித்துத் தந்தேன்.

"என்ன அண்ணே, இவ்வளவு சிறப்பாக தேநீர் போட எங்கே கற்றுக்கொண்டீர்கள் ? " என்றார் புருஷோத்தமன். "12 வயசுலேர்ந்து சமைத்துக் கொண்டுருக்கிறேன் அண்ணா" என்று கூறினேன். சகாயம் "அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் " என்று பாடத் தொடங்கினார். நாங்களும் அவருடன் சேர்ந்து கொண்டோம்.


திடீரென்று, எங்களை நோக்கி வந்த வெள்ளைப் படகு ஒன்று எங்கள் படகின் மீது வெளிச்சம் பாய்ததது. நாங்கள் படகை நிறுத்தினோம். "நீங்கள் இந்திய எல்லையில் இருக்கிறீர்கள்" என்று இரண்டு வெள்ளுடை தரித்த அதிகாரிகள் அதிகாரத் தொனியில் மிரட்டினர்.

"அய்யா இது சர்வதேச எல்லை, நாங்கள் இலங்கை எல்லைக்கு அருகில்தான் இருக்கிறோம்" என்று எங்களுடன் இருந்த புருஷோத்தமன் கூறினார். "உடனடியாக எங்கள் படகை பின் தொடருங்கள் " என்று கட்டளையிடப்பட்டது. அந்த அதிகாரிகளுள் ஒருவர் துப்பாக்கியை எடுத்து நீட்டினார்.

அமைதியாக இந்தியப் படகை பின்தொடர்ந்தோம்.


பிப்ரவரி 8ம் தேதி சென்னை வந்தடைந்தோம். சென்னை வந்தடைந்ததும் எங்களை சென்னை நகரில் உள்ள மிதக்கும் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கே ஒரு இருட்டறையில் அடைக்கப் பட்டோம்.


காவல் நிலையத்தில் அடைக்கப் பட்டாலும், தாய் தமிழகத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறோம் என்ற நிறைவு உணர்வே ஏற்பட்டது. இங்கே, தமிழனத் தலைவர் கலைஞர் இருக்கிறார். அய்யா நெடுமாறன் இருக்கிறார்.

ஈழத் தமிழருக்காக குரல் கொடுக்க தமிழகமே இருக்கிறது, பிறகென்ன கவலை நமக்கு என்ற எண்ணமே ஏற்பட்டது.


சீருடை அணிந்தும், அணியாமலும் பல அதிகாரிகள் எங்களை விசாரித்தனர். விசாரித்தவர்கள் அதிகாரிகள் என்பது காவலர்கள் அவர்களிடத்தில் காட்டிய பணிவிலும், அதிகாரிகளின் அதிகாரத் தோரணையிலும் தெரிந்தது.

ஏறக்குறைய 5 நாட்கள் எங்களை வைத்து விசாரித்தனர். கடைசியாக எங்களை நீதிமன்றத்தின் முன் ஆஜர் செய்யப் போகிறார்கள் என்று தெரிய வந்தது. அப்போதுதான் எங்களுடன் இருந்த புருஷோத்தமன் அங்கே இருந்த உயர் அதிகாரி ஒருவரைக் கூப்பிட்டார்.

"சார், ஒரு நிமிஷம்." "என்னடா ?" என்ற அதிகாரக் குரல்தான் பதிலாக வந்தது. "சார், ஒரு விஷயம் சொல்லணும்" "என்ன புதுசா சொல்லி புடுங்கப் போற ?" "ஐபி, ரா" "வெல்லாம் விசாரிச்சுட்டு போயிட்டாங்க, இப்போ என்ன சொல்லப் போற ?" என்றார்.

"நாங்க வந்த போட்ல..... "

"நீங்க வந்த போட்ல .. ... ?" "அந்த அரிசி மூட்டை, வெல்லம், சர்க்கரை எல்லாத்தையும் கோர்ட்ல காட்ட மாட்டோம்" அதத்தானே சொல்ல வந்த " என்றார் அந்த அதிகாரி.

"இல்ல சார். நாங்க வந்த போட்ல வெடிப்பொருளும், ஆயுதங்களும் இருக்கு" என்று புருஷோத்தமன் கூறினார்.

இதைக் கேட்ட அந்த அதிகாரியின் முகத்தில் அதிர்ச்சி பரவியது. அவநம்பிக்கை தெரிந்தாலும், அச்சம் அதைவிட அதிகம் தெரிந்தது.

அடுத்த அரை மணி நேரத்திற்கு அறை வெறிச்சோடிக் கிடந்தது. அது வரை, நாங்கள் வந்த படகில் ஏறி பேசிக்கொண்டிருந்த காவலர்கள் அனைவரும், படகை விட்டு “அய்யோ அம்மா“ என்று அலறி ஓடினர் என்று கேள்விப்பட்டோம்.

உடனடியாக அந்த அதிகாரி யார் யாரிடமோ பதட்டத்துடன் போனில் பேசினார். 10 நிமிடத்துக்குள் ஒரு பெரிய அதிகாரிகளின் பட்டாளமே வந்தது. வந்த அதிகாரிகள் பதட்டத்துடன் புருஷோத்தமனை அணுகி விசாரித்தார். புருஷோத்தமனும் ஆமாம் என்று அவரிடம் கூறினார்.

உடனடியாக பரபரப்படைந்த அதிகாரிகள் கூட்டம் ராணுவத்துக்கு போன் போட்டது போல் தெரிந்தது.

ஏற்கனவே கோர்ட்டுக்கு தகவல் சென்று விட்டதால், வேறு வழியின்றி எங்கள் அனைவரையும் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தினர்.

பிறகு 2 நாட்களுக்குப் பிறகு, அந்த வெடிப்பொருட்களையும், துப்பாக்கிகளையும், படகிலிருந்து அப்புறப்படுத்தினர் என்று கேள்விப்பட்டேன்.

புழல் சிறையில் அனைவரும் அடைக்கப் பட்டோம்.

புழல் சிறை புதிதாக கட்டப் பட்டதாம். அழகாகத்தான் இருந்தது. சிறை அதிகாரிகள் அதிக விரோதம் இல்லாமல் இருந்தனர். புழல் சிறைக்கு வந்த பிறகு தான் கைதிகளுக்குள் பாரபட்சம் என்பதை கண்டேன்.

சிறை விதிகளின்படி வெளிநாட்டைச் சேர்ந்த கைதிகளுக்கு, வாரம் இரு முறை முட்டையும், பாலும், ப்ரெட்டும் வழங்கப் பட வேண்டும். போதைப் பொருள் வழக்கில் கைதாகி புழல் சிறைக்குள் இருந்த நைஜீரியா, சீனா, கென்யா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த சலுகை வழங்கப் பட்டு வந்தது.

நாங்களும் வெளிநாட்டவர்கள் தான், எங்களுக்கும் இந்த சலுகைகளை வழங்குங்கள் என்று கேட்டபோது, நீதிமன்றத்தில் ஆணை பெறுங்கள் என்ற பதில்தான் வந்தது. ஆனால் கென்யா, நைஜீரியா நாட்டவர்களுக்கெல்லாம் நீதிமன்ற ஆணை இல்லாமலேயே இந்த சலுகை வழங்கப் பட்டது.


முதன் முறையாக தாய் தமிழகத்திலேயே அந்நியமாக உணர்தோம். சிறைக்குள் இருந்ததால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்தோம். ஆனாலும் தமிழகத்தில் நமக்கு பாதுகாப்பு உண்டு என்ற நம்பிக்கையோடு இருந்தோம்.


45 நாட்கள் கழிந்தது. “ஜெயிலர் கூப்டுறாரு“ என்று வார்டர் அழைத்தார். கைது செய்யப் பட்ட அனைவரையும் ஜெயிலர் ஏன் கூப்பிடுகிறார் என்ற சந்தேகத்தோடு சென்றோம்.
“இதில் கையெழுத்து போடுங்க“ என்று கூறினார் ஜெயிலர். “என்ன சார் இது“ என்று சகாயம் ஜெயிலரிடம் கேட்டார்.

“உங்களையெல்லாம் ஒரு வருஷம் தேசிய பாதுகாப்புச் சட்டத்துல கைது பண்ணியதுக்கான ஆணை இது, இதை படிச்சு தெரிஞ்சுக்கிட்டோம்னுதான் இப்போ கையெழுத்து போட்றீங்க“ என்று ஜெயிலர் கூறியது எங்கள் மனதில் ஆயிரம் ஈட்டிகளை ஒரே நேரத்தில் இறக்கியது. என்ன இது ?

நம் தாய் தமிழகத்தில் நமக்கு இந்த நிலையா ? மவுனமாக யாருடனும் பேசிக்கொள்ளாமல் செல்லுக்கு திரும்பினோம்.

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் கழித்து புகழேந்தி என்ற வழக்கறிஞர் பணம் ஏதும் பெறாமலேயே எங்களுக்காக மனிதாபிமானத்துடன் நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்தார்.

அதற்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு எனக்கு மட்டும் சிறையை விட்டு வெளியே வந்தேன். சென்னை என்னை வரவேற்க காத்திருக்கிறது என்றே நம்பி சிறையை விட்டு வெளியே வந்தேன்.


வெளியே வந்த எனக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. சிறைக்கு வெளியே இருந்த க்யூ பிரிவு போலீசார் உடனடியாக என்னை ஜீப்பில் ஏறச் சொன்னார்கள். “சார் எனக்கு பெயில் கிடைச்சுடுச்சு சார்“ “திருப்பி ஏன் சார் கைது பண்றீங்க ? “ என்று கேட்டதற்கு, “பேசாமல் வண்டியில உக்காரு“ என்ற பதில் வந்தது.


இலங்கையில், வெள்ளை வேனில் தமிழர்களை ஏற்றி நடக்கும் படுகொலைகளைப் பற்றி கேள்விப் பட்டிருந்த எனக்கு, மரண பயம் பிடித்து ஆட்டியது.


அமைதியாக அமர்ந்திருந்தேன். ஏறக்குறைய 2 மணிநேரம் கழித்து, செங்கல்பட்டு என்ற இடத்துக்கு கூட்டிச் சென்றார்கள். அது இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாம் என்று சொன்னார்கள்.


“அப்பாடி, ஒரு வழியா முகாமுக்கு வந்தாச்சு“ என்று நிம்மதி பெருமூச்சு விட்டேன். சிறிது நேரத்தில் அது முகாம் இல்லை, இதுவும் ஒரு சிறைச்சாலை என்று கூறினார்கள். அதிர்ச்சி மேல் அதிர்ச்சி என்னை நிலைகுலைய வைத்தது.


இதற்குள், ஈழத்தில் போர் கடுமையாகி ஆயிரக்கணக்கான தமிழர்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள் என்று தினந்தோறும் வரும் செய்திகள், என் குடும்பத்தைப் பற்றிய கவலையை அதிகரித்தது. ஊரில் உள்ள மனைவி மக்கள் என்ன கதிக்கு ஆளாகியிருப்பார்களோ என்ற கவலை தாங்க முடியவில்லை.


முகாமை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. உள்ளேயும் யாரையும் அனுமதிப்பதில்லை. மீண்டும் நம்மை ஏன் சிறை வைத்திருக்கிறார்கள் என்றே புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தேன்.


சில நாட்களில், முகாமில் இருந்த அனைவரும் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தனர். ஏறக்குறைய 15 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு, அனைவரும் விடுவிக்கப் படப் போகிறோம் என்ற செய்தி வந்தது.

மகிழ்ச்சியோடு, இருந்த எனக்கு அடுத்த அதிர்ச்சி வந்தது. “உன் பேர் விடுவிக்கப் படப் போறவங்க லிஸ்டுல இல்லப்பா“ என்று க்யூ ப்ரான்ச் அதிகாரி கூறினார்.
“என்ன செய்வது என்றே புரியவில்லை. ஈழத்திலாவது சுதந்திரமாக இருந்தோம். தாய் தமிழகத்தில் சிறையில் அடைத்துள்ளார்கள். “ “எதற்காக நமக்கு இந்த நிலை “ என்று புரியவேயில்லை.

திடீரென்று மூச்சு விட சிரமமாக இருந்தது. நெஞ்சில் வேறு வலி வந்து கொண்டே இருந்தது. “சார், மூச்சு விட கஷ்டமாக இருக்கிறது சார். மருத்துவமனைக்கு கூட்டிட்டு போங்க சார்“ என்று அதிகாரியிடம் கேட்டேன். “நாளைக்கு போகலாம்பா“ என்று கூறினார்.
சென்னை பொது மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள்.

ரத்தம், எக்ஸ்ரே என்று ஏராளமான பரிசோதனை எடுத்தார்கள். எனக்கு இருமலும், நெஞ்செரிச்சலும் அதிகமாகிக் கொண்டே இருந்தது.


இரண்டு நாள் பரிசோதனைக்குப் பிறகு, டாக்டர் வந்து “ஆறுமுகம், உனக்கு, நுரையீரலில் புற்றுநோய் வந்திருக்குப்பா“ என்றார். தலை சுற்றி மயக்கம் வந்து விட்டது எனக்கு. நினைவு திரும்பியபோது, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு என்னை மாற்றினார்கள்.
அங்கே, கைதிகள் வைக்கப் படும் ஒரு மோசமான பாழடைந்த வார்டில் என்னை அடைத்தார்கள். டாக்டர்களும் நர்சுகளும், அவ்வப்போது வந்து பார்த்தார்கள்.


மறுநாள் வந்த க்யூ ப்ரான்ச் அதிகாரி, “ஆறுமுகம், உன்னை முகாமிலிருந்து விடுவிச்சு அரசு உத்தரவு போட்டுடுச்சுப் பா“ இனிமே நீ முகாமுக்கு போக வேண்டியதில்லை“ என்று சொன்னார்.

“சார் எனக்கு யாருமே இல்லை சார்“ “நான் என்ன சார் பண்ணுவேன்“ என்றேன். “நாங்க என்னப்பா பண்றது“ “அரசாங்க உத்தரவு மதிச்சுத்தானே ஆகணும்“ “இப்போ பாரு, உனக்கு காவலுக்கு 5 பேரை ட்யூட்டி போட வேண்டியதா இருக்கு“ “முகாம விட்டு உன்னை வெளியே அனுப்பிட்டா நாங்க வரவேண்டியதில்லை பாரு“ “அதான் அரசாங்கம் இப்படி உத்தரவு போட்டிருக்கு “ என்றார்.


நுரையீரலில் புற்று நோய் என்பதால் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன். என் மரணம் அநாதை மரணம்தான் என்பது நன்றாகத் தெரிகிறது. பிறகு எதற்காக என்னை இன்னும் மருத்துவமனையில் வைத்து சித்திரவதை செய்கிறீர்கள். அதனால்தான் கேட்கிறேன்.


“எனக்கு ஒரு துளி விஷம் கொடுங்களேன்… … … “

இது கதை அல்ல. இப்போது போனாலும் இன்னும் ராயப்பேட்டை மருத்துவமனையில் இந்த ஆறுமுகத்தை பார்க்கலாம். ஈழத் தமிழருக்காக போராடும் தமிழினத் தலைவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை எப்படி இருக்கிறது பார்த்தீர்களா ?

ஈழத் தமிழர்களுக்காக தமிழினத்தின் ஒரே தலைவன் எப்படி பாடுபடுகிறார் பார்த்தீர்களா ?


ஆறுமுகம் அனாதையாகத்தான் சாவார்.
அவர் பெயரென்ன

அழகிரியா ?

ஸ்டாலினா ?

செல்வியா ?

கனிமொழியா ?

தமிழரசா ?

செல்வந்தராய் வாழ ?




சவுக்கு

ஒரு துளி விஷம் கொடுங்களேன்... ... ...


உலகில் பாவப்பட்ட ஜென்மங்களான ஆதரவற்ற ஈழத் தமிழனாய்த் தான் நானும் பிறந்தேன். எனக்கு இரண்டு அக்கா மற்றும் ஒரு அண்ணன். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

மக்கட்செல்வத்தில் எனக்கு குறையே இல்லாமல் ஏழு குழந்தைகள். நான்கு மகன்கள், இரண்டு மகள்கள். இரண்டு மகன்களுக்கும், இரண்டு மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. அனைவரும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தோம்.

சமாதான காலத்தில் ஈழம் போன்றதொரு மகிழ்ச்சியான இடத்தை நீங்கள் எங்கேயும் காண முடியாது. புலிகளின் நிர்வாகத்தில் மக்கள் அனைவரும் குறையின்றி மகிழ்ச்சியாகவே இருந்தோம். எங்கள் தேசியத் தலைவர் இருக்கையில் எங்களுக்கென்ன குறை ?

2007 பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் எப்போதும் என்னை அழைப்பது போலவே சமையல் வேலைக்கு அழைத்தனர். இரணியத் தீவிலிருந்து, யாழ்ப்பாணம் வரை செல்ல வேண்டும், படகில் சமைக்க வேண்டும் என்று கூறினர். "அதுக்கென்ன, வாருங்கள் போவோம்" என்று சம்மதித்தேன்.

படகில் ஏறும்போது இரவு 9 மணி இருக்கும். படகில் ஏறியதும் எப்போதும் எங்களுடன் பயணிக்கும் மகிழ்ச்சியும் பயணிக்கத் தொடங்கியது. முதலில், ஈழத்தின் விளைந்த சிறப்பான தேயிலையில் அனைவருக்கும் தேநீர் தயாரித்துத் தந்தேன்.

"என்ன அண்ணே, இவ்வளவு சிறப்பாக தேநீர் போட எங்கே கற்றுக்கொண்டீர்கள் ? " என்றார் புருஷோத்தமன். "12 வயசுலேர்ந்து சமைத்துக் கொண்டுருக்கிறேன் அண்ணா" என்று கூறினேன். சகாயம் "அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் " என்று பாடத் தொடங்கினார். நாங்களும் அவருடன் சேர்ந்து கொண்டோம்.


திடீரென்று, எங்களை நோக்கி வந்த வெள்ளைப் படகு ஒன்று எங்கள் படகின் மீது வெளிச்சம் பாய்ததது. நாங்கள் படகை நிறுத்தினோம். "நீங்கள் இந்திய எல்லையில் இருக்கிறீர்கள்" என்று இரண்டு வெள்ளுடை தரித்த அதிகாரிகள் அதிகாரத் தொனியில் மிரட்டினர்.

"அய்யா இது சர்வதேச எல்லை, நாங்கள் இலங்கை எல்லைக்கு அருகில்தான் இருக்கிறோம்" என்று எங்களுடன் இருந்த புருஷோத்தமன் கூறினார். "உடனடியாக எங்கள் படகை பின் தொடருங்கள் " என்று கட்டளையிடப்பட்டது. அந்த அதிகாரிகளுள் ஒருவர் துப்பாக்கியை எடுத்து நீட்டினார்.

அமைதியாக இந்தியப் படகை பின்தொடர்ந்தோம்.


பிப்ரவரி 8ம் தேதி சென்னை வந்தடைந்தோம். சென்னை வந்தடைந்ததும் எங்களை சென்னை நகரில் உள்ள மிதக்கும் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கே ஒரு இருட்டறையில் அடைக்கப் பட்டோம்.


காவல் நிலையத்தில் அடைக்கப் பட்டாலும், தாய் தமிழகத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறோம் என்ற நிறைவு உணர்வே ஏற்பட்டது. இங்கே, தமிழனத் தலைவர் கலைஞர் இருக்கிறார். அய்யா நெடுமாறன் இருக்கிறார்.

ஈழத் தமிழருக்காக குரல் கொடுக்க தமிழகமே இருக்கிறது, பிறகென்ன கவலை நமக்கு என்ற எண்ணமே ஏற்பட்டது.


சீருடை அணிந்தும், அணியாமலும் பல அதிகாரிகள் எங்களை விசாரித்தனர். விசாரித்தவர்கள் அதிகாரிகள் என்பது காவலர்கள் அவர்களிடத்தில் காட்டிய பணிவிலும், அதிகாரிகளின் அதிகாரத் தோரணையிலும் தெரிந்தது.

ஏறக்குறைய 5 நாட்கள் எங்களை வைத்து விசாரித்தனர். கடைசியாக எங்களை நீதிமன்றத்தின் முன் ஆஜர் செய்யப் போகிறார்கள் என்று தெரிய வந்தது. அப்போதுதான் எங்களுடன் இருந்த புருஷோத்தமன் அங்கே இருந்த உயர் அதிகாரி ஒருவரைக் கூப்பிட்டார்.

"சார், ஒரு நிமிஷம்." "என்னடா ?" என்ற அதிகாரக் குரல்தான் பதிலாக வந்தது. "சார், ஒரு விஷயம் சொல்லணும்" "என்ன புதுசா சொல்லி புடுங்கப் போற ?" "ஐபி, ரா" "வெல்லாம் விசாரிச்சுட்டு போயிட்டாங்க, இப்போ என்ன சொல்லப் போற ?" என்றார்.

"நாங்க வந்த போட்ல..... "

"நீங்க வந்த போட்ல .. ... ?" "அந்த அரிசி மூட்டை, வெல்லம், சர்க்கரை எல்லாத்தையும் கோர்ட்ல காட்ட மாட்டோம்" அதத்தானே சொல்ல வந்த " என்றார் அந்த அதிகாரி.

"இல்ல சார். நாங்க வந்த போட்ல வெடிப்பொருளும், ஆயுதங்களும் இருக்கு" என்று புருஷோத்தமன் கூறினார்.

இதைக் கேட்ட அந்த அதிகாரியின் முகத்தில் அதிர்ச்சி பரவியது. அவநம்பிக்கை தெரிந்தாலும், அச்சம் அதைவிட அதிகம் தெரிந்தது.

அடுத்த அரை மணி நேரத்திற்கு அறை வெறிச்சோடிக் கிடந்தது. அது வரை, நாங்கள் வந்த படகில் ஏறி பேசிக்கொண்டிருந்த காவலர்கள் அனைவரும், படகை விட்டு “அய்யோ அம்மா“ என்று அலறி ஓடினர் என்று கேள்விப்பட்டோம்.

உடனடியாக அந்த அதிகாரி யார் யாரிடமோ பதட்டத்துடன் போனில் பேசினார். 10 நிமிடத்துக்குள் ஒரு பெரிய அதிகாரிகளின் பட்டாளமே வந்தது. வந்த அதிகாரிகள் பதட்டத்துடன் புருஷோத்தமனை அணுகி விசாரித்தார். புருஷோத்தமனும் ஆமாம் என்று அவரிடம் கூறினார்.

உடனடியாக பரபரப்படைந்த அதிகாரிகள் கூட்டம் ராணுவத்துக்கு போன் போட்டது போல் தெரிந்தது.

ஏற்கனவே கோர்ட்டுக்கு தகவல் சென்று விட்டதால், வேறு வழியின்றி எங்கள் அனைவரையும் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தினர்.

பிறகு 2 நாட்களுக்குப் பிறகு, அந்த வெடிப்பொருட்களையும், துப்பாக்கிகளையும், படகிலிருந்து அப்புறப்படுத்தினர் என்று கேள்விப்பட்டேன்.

புழல் சிறையில் அனைவரும் அடைக்கப் பட்டோம்.

புழல் சிறை புதிதாக கட்டப் பட்டதாம். அழகாகத்தான் இருந்தது. சிறை அதிகாரிகள் அதிக விரோதம் இல்லாமல் இருந்தனர். புழல் சிறைக்கு வந்த பிறகு தான் கைதிகளுக்குள் பாரபட்சம் என்பதை கண்டேன்.

சிறை விதிகளின்படி வெளிநாட்டைச் சேர்ந்த கைதிகளுக்கு, வாரம் இரு முறை முட்டையும், பாலும், ப்ரெட்டும் வழங்கப் பட வேண்டும். போதைப் பொருள் வழக்கில் கைதாகி புழல் சிறைக்குள் இருந்த நைஜீரியா, சீனா, கென்யா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த சலுகை வழங்கப் பட்டு வந்தது.

நாங்களும் வெளிநாட்டவர்கள் தான், எங்களுக்கும் இந்த சலுகைகளை வழங்குங்கள் என்று கேட்டபோது, நீதிமன்றத்தில் ஆணை பெறுங்கள் என்ற பதில்தான் வந்தது. ஆனால் கென்யா, நைஜீரியா நாட்டவர்களுக்கெல்லாம் நீதிமன்ற ஆணை இல்லாமலேயே இந்த சலுகை வழங்கப் பட்டது.


முதன் முறையாக தாய் தமிழகத்திலேயே அந்நியமாக உணர்தோம். சிறைக்குள் இருந்ததால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்தோம். ஆனாலும் தமிழகத்தில் நமக்கு பாதுகாப்பு உண்டு என்ற நம்பிக்கையோடு இருந்தோம்.


45 நாட்கள் கழிந்தது. “ஜெயிலர் கூப்டுறாரு“ என்று வார்டர் அழைத்தார். கைது செய்யப் பட்ட அனைவரையும் ஜெயிலர் ஏன் கூப்பிடுகிறார் என்ற சந்தேகத்தோடு சென்றோம்.
“இதில் கையெழுத்து போடுங்க“ என்று கூறினார் ஜெயிலர். “என்ன சார் இது“ என்று சகாயம் ஜெயிலரிடம் கேட்டார்.

“உங்களையெல்லாம் ஒரு வருஷம் தேசிய பாதுகாப்புச் சட்டத்துல கைது பண்ணியதுக்கான ஆணை இது, இதை படிச்சு தெரிஞ்சுக்கிட்டோம்னுதான் இப்போ கையெழுத்து போட்றீங்க“ என்று ஜெயிலர் கூறியது எங்கள் மனதில் ஆயிரம் ஈட்டிகளை ஒரே நேரத்தில் இறக்கியது. என்ன இது ?

நம் தாய் தமிழகத்தில் நமக்கு இந்த நிலையா ? மவுனமாக யாருடனும் பேசிக்கொள்ளாமல் செல்லுக்கு திரும்பினோம்.

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் கழித்து புகழேந்தி என்ற வழக்கறிஞர் பணம் ஏதும் பெறாமலேயே எங்களுக்காக மனிதாபிமானத்துடன் நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்தார்.

அதற்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு எனக்கு மட்டும் சிறையை விட்டு வெளியே வந்தேன். சென்னை என்னை வரவேற்க காத்திருக்கிறது என்றே நம்பி சிறையை விட்டு வெளியே வந்தேன்.


வெளியே வந்த எனக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. சிறைக்கு வெளியே இருந்த க்யூ பிரிவு போலீசார் உடனடியாக என்னை ஜீப்பில் ஏறச் சொன்னார்கள். “சார் எனக்கு பெயில் கிடைச்சுடுச்சு சார்“ “திருப்பி ஏன் சார் கைது பண்றீங்க ? “ என்று கேட்டதற்கு, “பேசாமல் வண்டியில உக்காரு“ என்ற பதில் வந்தது.


இலங்கையில், வெள்ளை வேனில் தமிழர்களை ஏற்றி நடக்கும் படுகொலைகளைப் பற்றி கேள்விப் பட்டிருந்த எனக்கு, மரண பயம் பிடித்து ஆட்டியது.


அமைதியாக அமர்ந்திருந்தேன். ஏறக்குறைய 2 மணிநேரம் கழித்து, செங்கல்பட்டு என்ற இடத்துக்கு கூட்டிச் சென்றார்கள். அது இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாம் என்று சொன்னார்கள்.


“அப்பாடி, ஒரு வழியா முகாமுக்கு வந்தாச்சு“ என்று நிம்மதி பெருமூச்சு விட்டேன். சிறிது நேரத்தில் அது முகாம் இல்லை, இதுவும் ஒரு சிறைச்சாலை என்று கூறினார்கள். அதிர்ச்சி மேல் அதிர்ச்சி என்னை நிலைகுலைய வைத்தது.


இதற்குள், ஈழத்தில் போர் கடுமையாகி ஆயிரக்கணக்கான தமிழர்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள் என்று தினந்தோறும் வரும் செய்திகள், என் குடும்பத்தைப் பற்றிய கவலையை அதிகரித்தது. ஊரில் உள்ள மனைவி மக்கள் என்ன கதிக்கு ஆளாகியிருப்பார்களோ என்ற கவலை தாங்க முடியவில்லை.


முகாமை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. உள்ளேயும் யாரையும் அனுமதிப்பதில்லை. மீண்டும் நம்மை ஏன் சிறை வைத்திருக்கிறார்கள் என்றே புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தேன்.


சில நாட்களில், முகாமில் இருந்த அனைவரும் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தனர். ஏறக்குறைய 15 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு, அனைவரும் விடுவிக்கப் படப் போகிறோம் என்ற செய்தி வந்தது.

மகிழ்ச்சியோடு, இருந்த எனக்கு அடுத்த அதிர்ச்சி வந்தது. “உன் பேர் விடுவிக்கப் படப் போறவங்க லிஸ்டுல இல்லப்பா“ என்று க்யூ ப்ரான்ச் அதிகாரி கூறினார்.
“என்ன செய்வது என்றே புரியவில்லை. ஈழத்திலாவது சுதந்திரமாக இருந்தோம். தாய் தமிழகத்தில் சிறையில் அடைத்துள்ளார்கள். “ “எதற்காக நமக்கு இந்த நிலை “ என்று புரியவேயில்லை.

திடீரென்று மூச்சு விட சிரமமாக இருந்தது. நெஞ்சில் வேறு வலி வந்து கொண்டே இருந்தது. “சார், மூச்சு விட கஷ்டமாக இருக்கிறது சார். மருத்துவமனைக்கு கூட்டிட்டு போங்க சார்“ என்று அதிகாரியிடம் கேட்டேன். “நாளைக்கு போகலாம்பா“ என்று கூறினார்.
சென்னை பொது மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள்.

ரத்தம், எக்ஸ்ரே என்று ஏராளமான பரிசோதனை எடுத்தார்கள். எனக்கு இருமலும், நெஞ்செரிச்சலும் அதிகமாகிக் கொண்டே இருந்தது.


இரண்டு நாள் பரிசோதனைக்குப் பிறகு, டாக்டர் வந்து “ஆறுமுகம், உனக்கு, நுரையீரலில் புற்றுநோய் வந்திருக்குப்பா“ என்றார். தலை சுற்றி மயக்கம் வந்து விட்டது எனக்கு. நினைவு திரும்பியபோது, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு என்னை மாற்றினார்கள்.
அங்கே, கைதிகள் வைக்கப் படும் ஒரு மோசமான பாழடைந்த வார்டில் என்னை அடைத்தார்கள். டாக்டர்களும் நர்சுகளும், அவ்வப்போது வந்து பார்த்தார்கள்.


மறுநாள் வந்த க்யூ ப்ரான்ச் அதிகாரி, “ஆறுமுகம், உன்னை முகாமிலிருந்து விடுவிச்சு அரசு உத்தரவு போட்டுடுச்சுப் பா“ இனிமே நீ முகாமுக்கு போக வேண்டியதில்லை“ என்று சொன்னார்.

“சார் எனக்கு யாருமே இல்லை சார்“ “நான் என்ன சார் பண்ணுவேன்“ என்றேன். “நாங்க என்னப்பா பண்றது“ “அரசாங்க உத்தரவு மதிச்சுத்தானே ஆகணும்“ “இப்போ பாரு, உனக்கு காவலுக்கு 5 பேரை ட்யூட்டி போட வேண்டியதா இருக்கு“ “முகாம விட்டு உன்னை வெளியே அனுப்பிட்டா நாங்க வரவேண்டியதில்லை பாரு“ “அதான் அரசாங்கம் இப்படி உத்தரவு போட்டிருக்கு “ என்றார்.


நுரையீரலில் புற்று நோய் என்பதால் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன். என் மரணம் அநாதை மரணம்தான் என்பது நன்றாகத் தெரிகிறது. பிறகு எதற்காக என்னை இன்னும் மருத்துவமனையில் வைத்து சித்திரவதை செய்கிறீர்கள். அதனால்தான் கேட்கிறேன்.


“எனக்கு ஒரு துளி விஷம் கொடுங்களேன்… … … “

இது கதை அல்ல. இப்போது போனாலும் இன்னும் ராயப்பேட்டை மருத்துவமனையில் இந்த ஆறுமுகத்தை பார்க்கலாம். ஈழத் தமிழருக்காக போராடும் தமிழினத் தலைவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை எப்படி இருக்கிறது பார்த்தீர்களா ?

ஈழத் தமிழர்களுக்காக தமிழினத்தின் ஒரே தலைவன் எப்படி பாடுபடுகிறார் பார்த்தீர்களா ?


ஆறுமுகம் அனாதையாகத்தான் சாவார்.
அவர் பெயரென்ன

அழகிரியா ?

ஸ்டாலினா ?

செல்வியா ?

கனிமொழியா ?

தமிழரசா ?

செல்வந்தராய் வாழ ?




சவுக்கு