Monday, May 31, 2010

திமுக: துரோகங்களின் காலம் ?



திராவிட இயக்க வரலாற்றின் மிக முக்கியமான விழுதாக இருக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தில், இது துரோகங்களின் காலமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ராஜ்ய சபைக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு, ஏராளமான பேர், திராவிட முன்னேற்றக் கழகத்திலேயே தகுதி உடையவர்களாக இருக்கும் சூழலில், தற்போது, திமுக உயர்நிலைக் குழு அறிவித்திருக்கும் வேட்பாளர்கள், திமுகவில் விசுவாசத்துக்கு இடம் இல்லையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

தற்போது, திமுகவில் வேட்பாளர்களாக அறிவிக்கப் பட்டிருப்பவர்கள் யார் ?
முதலில் கே.பி.இராமலிங்கம்.

யார் இந்த கே.பி.இராமலிங்கம் ?



சேலம் ராசிபுரம் தொகுதியில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சட்டமன்ற வேட்பாளராக நின்று, 1980ம் ஆண்டு வெற்றி பெற்று, அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர்.

1984 நடைபெற்ற தேர்தலில் மீண்டும் அதே ராசிபுரம் தொகுதியில் எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர்.

1987ல் எம்ஜி.ராமச்சந்திரன் திடீரென்று இறந்ததும், அவரின் இறுதி ஊர்வலம் பெரும் கலவரத்திற்கிடையில் நடந்தது. அப்போ, ராணுவ வாகனத்தில், எம்ஜிஆரின் உடல் ஏற்றி வைக்கப் பட்டிருந்த பொழுது, அந்த ராணுவ வாகனத்தில் ஏற, பலர் முண்டியடித்துக் கொண்டு முயற்சி செய்தனர்.

செல்வி.ஜெயலலிதா, எம்ஜிஆர், ப்ரூக்ளின் மருத்துவ மனையில் சிசிச்சை பெற்ற காலத்திலேயே இன்று கருணாநிதியின் அன்பு உடன் பிறப்பாக உருவெடுத்துள்ள, ஆர்.எம்.வீரப்பனால், ஓரங்கட்டப் பட்டு ஒதுக்கி விடப்பட்டிருந்தார்.
எம்.ஜி.ஆர் இறந்தவுடன் அவரது உடலைப் பார்க்க வந்த ஜெயலலிதா, பின்னாளில் ஒரு நாள் நாம், அதிமுகவின் தலைவராக ஆவோம், பிறகு முதலமைச்சராக ஆவோம், அதனால், இப்போது, எம்ஜிஆரின் இறுதி ஊர்வலம் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த ராணுவ வண்டியில் ஏறி செல்லலாம் என்று திட்டமிட்டு செயல்பட்டார் என்று கருத முடியாது.


எத்தனையோ அரசியல் தலைவர்கள் அதிமுகவில் இருந்த போதும், ஜெயலலிதாவுக்குத் தான், எம்ஜிஆர் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியை வழங்கினார். ஜெயலலிதாவைத் தான் ராஜ்ய சபை உறுப்பினராக்கி, டெல்லிக்கு அனுப்பினார். அதனால், எம்ஜிஆரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும், எம்ஜிஆர் உடல் வைக்கப் பட்டிருந்த ராணுவ வாகனத்தில் ஏறிச் செல்வதற்கும், செல்வி.ஜெயலலிதாவுக்கு, தகுதி உண்டா என்றால், கண்டிப்பாக உண்டு.


அந்தத் தகுதியின் அடிப்படையில், ஜெயலலிதா, ராணுவ வண்டியில் ஏறிய பொழுது, அந்த வண்டியில் ஏற முயற்சித்த ஜெயலலிதாவை வண்டியில் இருந்து, அன்றைய தூர்தர்ஷனில் நேரடி ஒளிபரப்பு நடந்து கொண்டிருந்த போதே, பிடித்துத் தள்ளிவயவர்தான் இந்த கே.பி.ராமலிங்கம். இப்படிப்பட்ட கே.பி.ராமலிங்கம், மற்றவர்கள் எல்லாரையும் போலவே, ஜெயலலிதா ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு செல்வாக்குப் பெறுவார் என்பதை எதிர்ப்பார்க்க வில்லை. நீதிபதியின் மருமகனெல்லாம் கஞ்சா வழக்கில் ஜெயிலுக்குச் சென்ற காலம் அது.

அப்போது அமலில் இருந்த தடா சட்டத்தின் கீழ், ஜெயலலிதாவுக்கு, யார் யாரையெல்லாம் பிடிக்காதோ, அவர்கள் அனைவரையும் கைது செய்து கொண்டிருந்தார். இதற்குப் பயந்துதான், இன்று, கருணாநிதியின் அடிவருடியாக இருக்கும், கி.வீரமணி, அன்று, ஜெயலலிதாவுக்கு, தஞ்சையில், “சமூக நீதி காத்த வீராங்கனை“ என்று பட்டம் கொடுத்து, வீர வாள் பரிசளித்தார்.

இன்றும் பெரியார் திடலில் நடக்கக் கூடிய கூட்டங்களில் “பாம்பையும் பார்பனரையும் கண்டால், பாம்பை விட்டு விட்டு, பார்ப்பனரை அடி“ என்றுதானே பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அன்று, கி.வீரமணிக்கு, ஜெயலலிதா பார்ப்பனராக தோன்றவில்லை.
அப்படி ஒரு நெருக்கடியான காலகட்டம். அந்தக் காலகட்டத்தில் தான், கே.பி.ராமலிங்கம், திமுகவுக்கு தாவுகிறார்.

தாவிய உடனேயே, அவருக்கு அடித்தது யோகம். உடனடியாக மக்களவைத் தேர்தலில் திமுகவின் சார்பாக சீட் வழங்கப் பட்டு, ஜெயித்தும் விட்டார். இதுதான் கே.பி.ராமலிங்கத்தின் வரலாறு.

அடுத்ததாக நாம் எடுத்துக் கொள்வது தங்கவேலு.




தங்கவேலு தங்கவேலு ஒரு தலித். தலித் எனறால் தலித் சமுகத்துக்காக இவர் உழைத்வர் என்றால் இல்லை. சரி யாருக்காக உழைத்திருக்கிறார் ? அவர் தனக்காக உழைத்திருக்கிறார்.
அப்படிப்பட்ட தலித் போராளிதான் இந்த தங்கவேல்.

இந்த தங்கவேலுவுக்கு ராஜ்ய சபா சீட் கிடைத்ததற்கு ஒரு சுவையான வரலாறு உண்டு. இந்த தங்கவேலு வைகோ திமுகவை விட்டு பிரிந்து மதிமுகவை ஆரம்பித்த பொழுது, இவர் தன்னை மதிமுகவின் ஒரு முக்கியமான தொண்டராக நினைத்து திமுகவை விட்டு விலகி, மதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.


இணைத்துக் கொண்டவர், மதிமுகவுக்கு விசுவாசமாக இருந்தாரென்றால் அதுவும் இல்லை. இந்த தங்கவேல், தன்னைத் தவிர யாருக்குமே விசுவாசமாக இல்லை.


சரி, இப்படிப்பட, விசுவாசமற்ற துரோகிக்கு, திமுகவில், எப்படி ராஜ்ய சபா சீட் கிடைத்தது என்றால் அது ஒரு சுவையான மற்றொரு கதை.

தமிழ்நாட்டில்,”பள்ளர்” என்றொரு சமூகம் இருக்கிறது. இந்தச் சமூகம் ஒரு பலம் வாய்ந்த சமூகம். ஆனால், இந்தச் சமூகத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப் படவில்லை என்பது இந்தச் சமூகத்தவரின் குமுறல்.

இந்தச் சமூகம் பெரும்பான்மையாக உள்ள நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில், டாக்டர்.கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி போட்டியிட்டு, இந்தச் சமூகத்தவரின் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று, திமுக அல்லது அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பல முறை தடுத்திருக்கிறது.

அப்படிப்பட்ட ”பள்ளர்” சமூகத்தைச் சேர்ந்தவர்தான் இந்த தங்கவேல். எதற்காக தங்கவேலுக்கு ராஜ்ய சபா பதவி ? எதற்காக என்றால், பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட, இதுவரை திமுக அமைச்சரவையில் இடம் பெறவில்லை என்பதுதான்.

பள்ளர் சமூகம், தங்களை ஒரு பெரிய பலம் பொருந்திய ஒரு அரசியல் சக்தியாக கருதி வந்தாலும், அவர்கள் ஒரு வெறும் ”கருவேப்பிலை கொத்தாகவே” பயன் பட்டு வந்திருக்கிறார்கள் என்பது, பள்ளர் சமூகத்தினரின் கருத்து. இதனால், தாங்கள் புறக்கணிக்கப் பட்டே இது வரை வந்ததாகவும், இனிமேல் தங்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்காத,திமுகவை கடுமையாக எதிர்ப்பதாகவும் திமுக தலைமைக்கு தகவல் வந்தது இதையடுத்தே, பள்ளர் சமூகத்தை சமாதனப்படுத்தவும், அவர்களை குளிர்விக்கவும், தங்கவேலுவை ராஜ்ய சபா எம்பியாக திமுக தலைமை அறிவித்திருப்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆனால், திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் உள்ள பள்ளர் சமூகத்தினரிடம் பேசிய போது, திமுக, மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளுமே, தங்களை பகடைக் காய்களாகவும், வாக்கு வங்கிகளாகவும் பயன் படுத்திக் கொள்வதாகவும், தங்கவேலுவை ராஜ்ய சபா எம்பியாக நியமித்திருப்பதால், எந்த ஒரு பயனும் ஏற்படாது என்றும், தங்கள் சாதியைச் சேர்ந்தவர்கள் ஒட்டு மொத்தமாக அதிமுகவுக்கே வாக்களிக்கப் போவதாகவும் தகவல் தெரிவித்ததனர்.


செல்வகணபதி பற்றிய விரிவான செய்திகள் நாளை தொடரும்.
சவுக்கு

திமுக: துரோகங்களின் காலம் ?



திராவிட இயக்க வரலாற்றின் மிக முக்கியமான விழுதாக இருக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தில், இது துரோகங்களின் காலமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ராஜ்ய சபைக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு, ஏராளமான பேர், திராவிட முன்னேற்றக் கழகத்திலேயே தகுதி உடையவர்களாக இருக்கும் சூழலில், தற்போது, திமுக உயர்நிலைக் குழு அறிவித்திருக்கும் வேட்பாளர்கள், திமுகவில் விசுவாசத்துக்கு இடம் இல்லையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

தற்போது, திமுகவில் வேட்பாளர்களாக அறிவிக்கப் பட்டிருப்பவர்கள் யார் ?
முதலில் கே.பி.இராமலிங்கம்.

யார் இந்த கே.பி.இராமலிங்கம் ?



சேலம் ராசிபுரம் தொகுதியில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சட்டமன்ற வேட்பாளராக நின்று, 1980ம் ஆண்டு வெற்றி பெற்று, அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர்.

1984 நடைபெற்ற தேர்தலில் மீண்டும் அதே ராசிபுரம் தொகுதியில் எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர்.

1987ல் எம்ஜி.ராமச்சந்திரன் திடீரென்று இறந்ததும், அவரின் இறுதி ஊர்வலம் பெரும் கலவரத்திற்கிடையில் நடந்தது. அப்போ, ராணுவ வாகனத்தில், எம்ஜிஆரின் உடல் ஏற்றி வைக்கப் பட்டிருந்த பொழுது, அந்த ராணுவ வாகனத்தில் ஏற, பலர் முண்டியடித்துக் கொண்டு முயற்சி செய்தனர்.

செல்வி.ஜெயலலிதா, எம்ஜிஆர், ப்ரூக்ளின் மருத்துவ மனையில் சிசிச்சை பெற்ற காலத்திலேயே இன்று கருணாநிதியின் அன்பு உடன் பிறப்பாக உருவெடுத்துள்ள, ஆர்.எம்.வீரப்பனால், ஓரங்கட்டப் பட்டு ஒதுக்கி விடப்பட்டிருந்தார்.
எம்.ஜி.ஆர் இறந்தவுடன் அவரது உடலைப் பார்க்க வந்த ஜெயலலிதா, பின்னாளில் ஒரு நாள் நாம், அதிமுகவின் தலைவராக ஆவோம், பிறகு முதலமைச்சராக ஆவோம், அதனால், இப்போது, எம்ஜிஆரின் இறுதி ஊர்வலம் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த ராணுவ வண்டியில் ஏறி செல்லலாம் என்று திட்டமிட்டு செயல்பட்டார் என்று கருத முடியாது.


எத்தனையோ அரசியல் தலைவர்கள் அதிமுகவில் இருந்த போதும், ஜெயலலிதாவுக்குத் தான், எம்ஜிஆர் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியை வழங்கினார். ஜெயலலிதாவைத் தான் ராஜ்ய சபை உறுப்பினராக்கி, டெல்லிக்கு அனுப்பினார். அதனால், எம்ஜிஆரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும், எம்ஜிஆர் உடல் வைக்கப் பட்டிருந்த ராணுவ வாகனத்தில் ஏறிச் செல்வதற்கும், செல்வி.ஜெயலலிதாவுக்கு, தகுதி உண்டா என்றால், கண்டிப்பாக உண்டு.


அந்தத் தகுதியின் அடிப்படையில், ஜெயலலிதா, ராணுவ வண்டியில் ஏறிய பொழுது, அந்த வண்டியில் ஏற முயற்சித்த ஜெயலலிதாவை வண்டியில் இருந்து, அன்றைய தூர்தர்ஷனில் நேரடி ஒளிபரப்பு நடந்து கொண்டிருந்த போதே, பிடித்துத் தள்ளிவயவர்தான் இந்த கே.பி.ராமலிங்கம். இப்படிப்பட்ட கே.பி.ராமலிங்கம், மற்றவர்கள் எல்லாரையும் போலவே, ஜெயலலிதா ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு செல்வாக்குப் பெறுவார் என்பதை எதிர்ப்பார்க்க வில்லை. நீதிபதியின் மருமகனெல்லாம் கஞ்சா வழக்கில் ஜெயிலுக்குச் சென்ற காலம் அது.

அப்போது அமலில் இருந்த தடா சட்டத்தின் கீழ், ஜெயலலிதாவுக்கு, யார் யாரையெல்லாம் பிடிக்காதோ, அவர்கள் அனைவரையும் கைது செய்து கொண்டிருந்தார். இதற்குப் பயந்துதான், இன்று, கருணாநிதியின் அடிவருடியாக இருக்கும், கி.வீரமணி, அன்று, ஜெயலலிதாவுக்கு, தஞ்சையில், “சமூக நீதி காத்த வீராங்கனை“ என்று பட்டம் கொடுத்து, வீர வாள் பரிசளித்தார்.

இன்றும் பெரியார் திடலில் நடக்கக் கூடிய கூட்டங்களில் “பாம்பையும் பார்பனரையும் கண்டால், பாம்பை விட்டு விட்டு, பார்ப்பனரை அடி“ என்றுதானே பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அன்று, கி.வீரமணிக்கு, ஜெயலலிதா பார்ப்பனராக தோன்றவில்லை.
அப்படி ஒரு நெருக்கடியான காலகட்டம். அந்தக் காலகட்டத்தில் தான், கே.பி.ராமலிங்கம், திமுகவுக்கு தாவுகிறார்.

தாவிய உடனேயே, அவருக்கு அடித்தது யோகம். உடனடியாக மக்களவைத் தேர்தலில் திமுகவின் சார்பாக சீட் வழங்கப் பட்டு, ஜெயித்தும் விட்டார். இதுதான் கே.பி.ராமலிங்கத்தின் வரலாறு.

அடுத்ததாக நாம் எடுத்துக் கொள்வது தங்கவேலு.




தங்கவேலு தங்கவேலு ஒரு தலித். தலித் எனறால் தலித் சமுகத்துக்காக இவர் உழைத்வர் என்றால் இல்லை. சரி யாருக்காக உழைத்திருக்கிறார் ? அவர் தனக்காக உழைத்திருக்கிறார்.
அப்படிப்பட்ட தலித் போராளிதான் இந்த தங்கவேல்.

இந்த தங்கவேலுவுக்கு ராஜ்ய சபா சீட் கிடைத்ததற்கு ஒரு சுவையான வரலாறு உண்டு. இந்த தங்கவேலு வைகோ திமுகவை விட்டு பிரிந்து மதிமுகவை ஆரம்பித்த பொழுது, இவர் தன்னை மதிமுகவின் ஒரு முக்கியமான தொண்டராக நினைத்து திமுகவை விட்டு விலகி, மதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.


இணைத்துக் கொண்டவர், மதிமுகவுக்கு விசுவாசமாக இருந்தாரென்றால் அதுவும் இல்லை. இந்த தங்கவேல், தன்னைத் தவிர யாருக்குமே விசுவாசமாக இல்லை.


சரி, இப்படிப்பட, விசுவாசமற்ற துரோகிக்கு, திமுகவில், எப்படி ராஜ்ய சபா சீட் கிடைத்தது என்றால் அது ஒரு சுவையான மற்றொரு கதை.

தமிழ்நாட்டில்,”பள்ளர்” என்றொரு சமூகம் இருக்கிறது. இந்தச் சமூகம் ஒரு பலம் வாய்ந்த சமூகம். ஆனால், இந்தச் சமூகத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப் படவில்லை என்பது இந்தச் சமூகத்தவரின் குமுறல்.

இந்தச் சமூகம் பெரும்பான்மையாக உள்ள நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில், டாக்டர்.கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி போட்டியிட்டு, இந்தச் சமூகத்தவரின் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று, திமுக அல்லது அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பல முறை தடுத்திருக்கிறது.

அப்படிப்பட்ட ”பள்ளர்” சமூகத்தைச் சேர்ந்தவர்தான் இந்த தங்கவேல். எதற்காக தங்கவேலுக்கு ராஜ்ய சபா பதவி ? எதற்காக என்றால், பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட, இதுவரை திமுக அமைச்சரவையில் இடம் பெறவில்லை என்பதுதான்.

பள்ளர் சமூகம், தங்களை ஒரு பெரிய பலம் பொருந்திய ஒரு அரசியல் சக்தியாக கருதி வந்தாலும், அவர்கள் ஒரு வெறும் ”கருவேப்பிலை கொத்தாகவே” பயன் பட்டு வந்திருக்கிறார்கள் என்பது, பள்ளர் சமூகத்தினரின் கருத்து. இதனால், தாங்கள் புறக்கணிக்கப் பட்டே இது வரை வந்ததாகவும், இனிமேல் தங்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்காத,திமுகவை கடுமையாக எதிர்ப்பதாகவும் திமுக தலைமைக்கு தகவல் வந்தது இதையடுத்தே, பள்ளர் சமூகத்தை சமாதனப்படுத்தவும், அவர்களை குளிர்விக்கவும், தங்கவேலுவை ராஜ்ய சபா எம்பியாக திமுக தலைமை அறிவித்திருப்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆனால், திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் உள்ள பள்ளர் சமூகத்தினரிடம் பேசிய போது, திமுக, மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளுமே, தங்களை பகடைக் காய்களாகவும், வாக்கு வங்கிகளாகவும் பயன் படுத்திக் கொள்வதாகவும், தங்கவேலுவை ராஜ்ய சபா எம்பியாக நியமித்திருப்பதால், எந்த ஒரு பயனும் ஏற்படாது என்றும், தங்கள் சாதியைச் சேர்ந்தவர்கள் ஒட்டு மொத்தமாக அதிமுகவுக்கே வாக்களிக்கப் போவதாகவும் தகவல் தெரிவித்ததனர்.


செல்வகணபதி பற்றிய விரிவான செய்திகள் நாளை தொடரும்.
சவுக்கு

Sunday, May 30, 2010

புதிய தலைமைச் செயலக கட்டிடமும், டாஸ்மாக் பாரும்




எதிர்க்கட்சித் தலைவர் செல்வி ஜெயலலிதா, புதிய தலைமைச் செயலக கட்டிடம் பார்த்தாலே அருவருப்பாக இருக்கிறது என்றும், 2011ல் அதிமுக ஆட்சி அமைத்ததும், பழைய புனித ஜார்ஜ் கோட்டையில் தான் ஆட்சி அமைப்பேன் என்றும், புதிய கட்டிடத்தை பயன் படுத்தப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.

ஒரு வேளை, 2011ல் அதிமுக ஆட்சி அமைக்கும் பட்சத்தில், இந்தப் புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது. இது தொடர்பாக சவுக்கு ஆராய்ச்சியில் இறங்கிய போது, கிடைத்த ஆலோசனைகள் இதோ.. … ….

தமிழகம் முழுக்க, அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருந்தாலும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இருப்பது போல சிறந்த பார்கள் எங்குமே இல்லை. புதிய தலைமைச் செயலக கட்டிடத்தில் உள்ள சட்டசபை வளாகம், குளிர் சாதன வசதியோடு, ஸ்பான்ஞ் வைத்த இருக்கைகளோடு, மேசைகளோடு இருப்பதால், இந்தப் புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை டாஸ்மாக் பார் என்று அறிவிக்கலாம்.




இப்போது சட்டசபை நடக்கும் நாட்களில் உறுப்பினர்கள் எப்படி உளறுகிறார்களோ, அதே போல “குடி“ மக்கள் அனைவரும் உளறுவது பொருத்தமாக இருக்கும். ஆனால் சட்டசபை போல அல்லாமல் ஆண்டில் சில நாட்கள் மட்டும் நடக்காமல், வருடம் முழுவதும், ஜே ஜே என்று கூட்டம் இருக்கும். காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி போன்ற நாட்களில் மட்டும் விடுமுறை விடலாம்.


ஓவராக குடித்து விட்டு, சளம்பும் குடிமக்களை, இப்போது உள்ள அவைக் காவலர்களை வைத்தே, தூக்கி வெளியே போடலாம். இப்போது நடுநாயகமாக சபாநாயகர் உட்கார்ந்திக்கும் இடத்தையே கிச்சனாக்கி, அங்கே சைடிஷ் ஐட்டங்களை சமைக்கலாம், இவ்வாறு சமைப்பதால், பார் முழுக்க, உணவுப் பொருட்களின் வாசனை பரவி சேல்ஸ் அதிகரிக்கும்.


இந்த பார் திறக்கப் பட்டால், உலகத்திலேயே பெரிய பார் என்று, பாரெல்லாம் புகழும் அளவுக்கு, தமிழகத்துக்கு பெருமை வந்து சேரும். இக்கட்டிடத்தை திறக்கும் முன்பு செட் போட்ட, தோட்டா தரணியையே வைத்து, உள் அலங்காரம் செய்யலாம்.


ஓவராக குடித்து விட்டு “மட்டை“ ஆகும், குடிமக்களை, புதிதாக கட்டப் பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியிலேயே குறைந்த கட்டணத்தில் தங்க வைக்கலாம். இப்போது சட்டமன்ற உறுப்பினர்களை ஏற்றிச் செல்வதற்காக, மாநகர போக்குவரத்து கழகம் இயக்கும் பேருந்தினை பெரும்பாலான உறுப்பினர்கள் பயன்படுத்துவதில்லை என்பதால், கோயம்பேடு முதல், சென்னை நகரின் பல்வேறு இடங்களிலும் இருந்து, இந்த பாருக்கு, பேருந்துகள் ஏற்பாடு செய்யலாம்.


பத்திரிக்கையாளர்கள் பல பேர், சென்னை நகரின் மோசமான டாஸ்மாக் பார்களிலும், ப்ரஸ் கிளப் அருகிலும், தண்ணியடித்து மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளாவதால், தற்போது உள்ள பத்திரிக்கையாளர் மாடத்தை, பத்திரிக்கையாளர்கள் தண்ணியடிப்பதற்கு மட்டும் என்று அறிவித்து விட்டால், பத்திரிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் பத்திரிக்கை சுதந்திரம் காக்கப் பட்டு விட்டது என்று சந்தோஷப் படுவார்கள்.

இந்தப் பகுதிக்கு “தண்ணீர் தேசம்“ என்று பெயர் வைக்கலாம்.


தற்போது, உயிரியல் பூங்கா, சென்னையை அடுத்த வண்டலூரில் அமைந்திருப்பதால், பொது மக்கள் அவ்வளவு தூரம் சென்று விலங்குகளை பார்க்க சிரமப் படுகிறார்கள்.




அதனால், புதிய தலைமைச் செயலக வளாகத்தை உயிரியல் சரணாலயமாக மாற்றி அறிவிக்கலாம். சபாநாயகர் அமரும் இருக்கையில், சிங்கத்தின் கூண்டை அமைப்பது மிகப் பொறுத்தமாக இருக்கும்.


திடீரென்று விலங்குகளுக்குள் சண்டை ஏற்பட்டு ஒன்றை ஒன்று அடித்துக் கொண்டால், சட்டசபை நடப்பது போன்ற உணர்வையே ஏற்படுத்தும். மேலும், விலங்குகள், தங்கள் பாஷையில், குய்யோ முறையோ என்று கத்துவது, சூடான விவாதம் நடப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும்.


பழக்கப் படுத்தப்பட்ட, சொன்னால் டைவ் அடிக்கும், குரங்கு, சைக்கிள் ஓட்டும் யானை, வளையத்தை தாண்டும் நாய் போன்ற விலங்குகளை, தற்போது, அரசுக்கு, ஜால்ரா அடிக்கும் விடுதலை சிறுத்தைகள் உறுப்பினர்கள், மற்றும், காங்கிரஸ் உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் இடங்களில் வைக்கலாம்.




உலகிலேயே முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி செய்யப் பட்ட விலங்குகள் சரணாலயம் தமிழகத்தில்தான் உள்ளது என்ற பெருமை நம்மை வந்து சேரும்.


தற்போது சட்டசபை காட்சிகளை தொகுத்து இரவு தொலைக்காட்சிகளில் காட்டுவது போல, டிஸ்கவரி சேனல், அனிமல் ப்ளானெட் போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களோடு, லைவ் டெலிகாஸ்ட் செய்ய ஒப்பந்தம் போடலாம். இந்நிறுவனங்கள், இந்த விலங்குகளை படம் பிடிப்பதை விட, தற்போது நடக்கும் சட்டசபையை படம் பிடிப்பதில் ஆர்வம் காட்டக் கூடும். ஆனால், விலங்குகளின் நலன் மிக முக்கியம் என்பதால் விலங்குகள் பற்றிய ஒளிபரப்புக்கே அனுமதி அளிக்க வேண்டும்.


புலி, சிங்கம் போன்ற அரிய வகை விலங்குகள், அழிந்து வருவது குறித்து, பல்வேறு திட்டங்களை மத்திய அரசு இயற்றி வரும் சூழலில், இது போன்ற அரிய வகை விலங்குகளை, இந்த சட்டசபை வளாகத்துக்குள் பராமரித்தால், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, இந்த விலங்குகள், பல்கிப் பெருகி, பெரிய அளவு வளர்ச்சி அடைந்திருப்பதை காண முடியும். இந்த இடத்தை இது போல பயன் படுத்தவதன் மூலம், மிக மிக அரிதான அத்தனை உயிரினங்களையும் ஐந்து ஆண்டுகளுக்குள் ஏராளமாய் பெருக்கி விடலாம்.
பத்திரிக்கையாளர் மாடத்தில், விலங்கியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகளுக்கு ஒதுக்கி விடலாம்.

இந்த இடத்துக்கு “மாக்கள் மன்றம்“ என்று பெயரிட்டு அழைத்தால் மிகச் சிறப்பாக இருக்கும்

நன்றி. நம்தினமதி நாளேடு
சவுக்கு

புதிய தலைமைச் செயலக கட்டிடமும், டாஸ்மாக் பாரும்




எதிர்க்கட்சித் தலைவர் செல்வி ஜெயலலிதா, புதிய தலைமைச் செயலக கட்டிடம் பார்த்தாலே அருவருப்பாக இருக்கிறது என்றும், 2011ல் அதிமுக ஆட்சி அமைத்ததும், பழைய புனித ஜார்ஜ் கோட்டையில் தான் ஆட்சி அமைப்பேன் என்றும், புதிய கட்டிடத்தை பயன் படுத்தப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.

ஒரு வேளை, 2011ல் அதிமுக ஆட்சி அமைக்கும் பட்சத்தில், இந்தப் புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது. இது தொடர்பாக சவுக்கு ஆராய்ச்சியில் இறங்கிய போது, கிடைத்த ஆலோசனைகள் இதோ.. … ….

தமிழகம் முழுக்க, அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருந்தாலும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இருப்பது போல சிறந்த பார்கள் எங்குமே இல்லை. புதிய தலைமைச் செயலக கட்டிடத்தில் உள்ள சட்டசபை வளாகம், குளிர் சாதன வசதியோடு, ஸ்பான்ஞ் வைத்த இருக்கைகளோடு, மேசைகளோடு இருப்பதால், இந்தப் புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை டாஸ்மாக் பார் என்று அறிவிக்கலாம்.




இப்போது சட்டசபை நடக்கும் நாட்களில் உறுப்பினர்கள் எப்படி உளறுகிறார்களோ, அதே போல “குடி“ மக்கள் அனைவரும் உளறுவது பொருத்தமாக இருக்கும். ஆனால் சட்டசபை போல அல்லாமல் ஆண்டில் சில நாட்கள் மட்டும் நடக்காமல், வருடம் முழுவதும், ஜே ஜே என்று கூட்டம் இருக்கும். காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி போன்ற நாட்களில் மட்டும் விடுமுறை விடலாம்.


ஓவராக குடித்து விட்டு, சளம்பும் குடிமக்களை, இப்போது உள்ள அவைக் காவலர்களை வைத்தே, தூக்கி வெளியே போடலாம். இப்போது நடுநாயகமாக சபாநாயகர் உட்கார்ந்திக்கும் இடத்தையே கிச்சனாக்கி, அங்கே சைடிஷ் ஐட்டங்களை சமைக்கலாம், இவ்வாறு சமைப்பதால், பார் முழுக்க, உணவுப் பொருட்களின் வாசனை பரவி சேல்ஸ் அதிகரிக்கும்.


இந்த பார் திறக்கப் பட்டால், உலகத்திலேயே பெரிய பார் என்று, பாரெல்லாம் புகழும் அளவுக்கு, தமிழகத்துக்கு பெருமை வந்து சேரும். இக்கட்டிடத்தை திறக்கும் முன்பு செட் போட்ட, தோட்டா தரணியையே வைத்து, உள் அலங்காரம் செய்யலாம்.


ஓவராக குடித்து விட்டு “மட்டை“ ஆகும், குடிமக்களை, புதிதாக கட்டப் பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியிலேயே குறைந்த கட்டணத்தில் தங்க வைக்கலாம். இப்போது சட்டமன்ற உறுப்பினர்களை ஏற்றிச் செல்வதற்காக, மாநகர போக்குவரத்து கழகம் இயக்கும் பேருந்தினை பெரும்பாலான உறுப்பினர்கள் பயன்படுத்துவதில்லை என்பதால், கோயம்பேடு முதல், சென்னை நகரின் பல்வேறு இடங்களிலும் இருந்து, இந்த பாருக்கு, பேருந்துகள் ஏற்பாடு செய்யலாம்.


பத்திரிக்கையாளர்கள் பல பேர், சென்னை நகரின் மோசமான டாஸ்மாக் பார்களிலும், ப்ரஸ் கிளப் அருகிலும், தண்ணியடித்து மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளாவதால், தற்போது உள்ள பத்திரிக்கையாளர் மாடத்தை, பத்திரிக்கையாளர்கள் தண்ணியடிப்பதற்கு மட்டும் என்று அறிவித்து விட்டால், பத்திரிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் பத்திரிக்கை சுதந்திரம் காக்கப் பட்டு விட்டது என்று சந்தோஷப் படுவார்கள்.

இந்தப் பகுதிக்கு “தண்ணீர் தேசம்“ என்று பெயர் வைக்கலாம்.


தற்போது, உயிரியல் பூங்கா, சென்னையை அடுத்த வண்டலூரில் அமைந்திருப்பதால், பொது மக்கள் அவ்வளவு தூரம் சென்று விலங்குகளை பார்க்க சிரமப் படுகிறார்கள்.




அதனால், புதிய தலைமைச் செயலக வளாகத்தை உயிரியல் சரணாலயமாக மாற்றி அறிவிக்கலாம். சபாநாயகர் அமரும் இருக்கையில், சிங்கத்தின் கூண்டை அமைப்பது மிகப் பொறுத்தமாக இருக்கும்.


திடீரென்று விலங்குகளுக்குள் சண்டை ஏற்பட்டு ஒன்றை ஒன்று அடித்துக் கொண்டால், சட்டசபை நடப்பது போன்ற உணர்வையே ஏற்படுத்தும். மேலும், விலங்குகள், தங்கள் பாஷையில், குய்யோ முறையோ என்று கத்துவது, சூடான விவாதம் நடப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும்.


பழக்கப் படுத்தப்பட்ட, சொன்னால் டைவ் அடிக்கும், குரங்கு, சைக்கிள் ஓட்டும் யானை, வளையத்தை தாண்டும் நாய் போன்ற விலங்குகளை, தற்போது, அரசுக்கு, ஜால்ரா அடிக்கும் விடுதலை சிறுத்தைகள் உறுப்பினர்கள், மற்றும், காங்கிரஸ் உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் இடங்களில் வைக்கலாம்.




உலகிலேயே முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி செய்யப் பட்ட விலங்குகள் சரணாலயம் தமிழகத்தில்தான் உள்ளது என்ற பெருமை நம்மை வந்து சேரும்.


தற்போது சட்டசபை காட்சிகளை தொகுத்து இரவு தொலைக்காட்சிகளில் காட்டுவது போல, டிஸ்கவரி சேனல், அனிமல் ப்ளானெட் போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களோடு, லைவ் டெலிகாஸ்ட் செய்ய ஒப்பந்தம் போடலாம். இந்நிறுவனங்கள், இந்த விலங்குகளை படம் பிடிப்பதை விட, தற்போது நடக்கும் சட்டசபையை படம் பிடிப்பதில் ஆர்வம் காட்டக் கூடும். ஆனால், விலங்குகளின் நலன் மிக முக்கியம் என்பதால் விலங்குகள் பற்றிய ஒளிபரப்புக்கே அனுமதி அளிக்க வேண்டும்.


புலி, சிங்கம் போன்ற அரிய வகை விலங்குகள், அழிந்து வருவது குறித்து, பல்வேறு திட்டங்களை மத்திய அரசு இயற்றி வரும் சூழலில், இது போன்ற அரிய வகை விலங்குகளை, இந்த சட்டசபை வளாகத்துக்குள் பராமரித்தால், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, இந்த விலங்குகள், பல்கிப் பெருகி, பெரிய அளவு வளர்ச்சி அடைந்திருப்பதை காண முடியும். இந்த இடத்தை இது போல பயன் படுத்தவதன் மூலம், மிக மிக அரிதான அத்தனை உயிரினங்களையும் ஐந்து ஆண்டுகளுக்குள் ஏராளமாய் பெருக்கி விடலாம்.
பத்திரிக்கையாளர் மாடத்தில், விலங்கியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகளுக்கு ஒதுக்கி விடலாம்.

இந்த இடத்துக்கு “மாக்கள் மன்றம்“ என்று பெயரிட்டு அழைத்தால் மிகச் சிறப்பாக இருக்கும்

நன்றி. நம்தினமதி நாளேடு
சவுக்கு

Saturday, May 29, 2010

வித்தாரக் கள்ளி விறகொடிக்கப் போனாளாம்….





வித்தாரக் கள்ளி விறகொடிக்கப் போனாளாம்…. கத்தாழ முள்ளு கொத்தோட வந்துச்சாம் என்று எங்கள் ஊரில், பெண்கள், புடவையை தூக்கி சொருகிக் கொண்டு சண்டையிடும்போது சொல்வார்கள். இதற்கு பொருள் என்னவென்றால், “என்னடி கதை விடுற…. நீ சொல்ற கதை தெரியாதா ? “ என்பதுதான் அர்த்தம்.

சென்னை பாஷையில் சொல்வதானால், “எருமை மாடு ஏரோப்ளேன் ஓட்டுதுன்னா, கேக்கறவன் கேனப் பயலா“ என்பதுதான் அர்த்தம். தெற்கே, இன்னும் பிரபலமான பழமொழி, “கேழ்வரகுல நெய் வடியுதுன்னா, கேப்பாருக்கு மதியெங்கே போச்சு“ என்பது.
இது போல பழமொழிகளை இப்போது குறிப்பிடக் காரணம் எதுவும் இல்லாமல் இல்லை. இருக்கிறது.


கருணாநிதியைப் பற்றி பதிவுகள் எழுதி, எழுதி, சவுக்குக்கு கை வலித்ததுதான் மிச்சம். கருணாநிதியும் விடுவதாய் இல்லை. சவுக்கும் விடுவதாய் இல்லை.

மரம் ஓய்வை விரும்பினாலும், காற்று விடுவதில்லை
கரை ஓய்வை விரும்பினாலும், அலைகள் விடுவதில்லை
ஓடி ஓடி ஒளிந்த போதும், வாழ்க்கை விடுவதில்லை…. விடுவதில்லை
என்று ஒரு கவிஞன் சொன்னான்.

இதோடு, சவுக்கு, சுருட்டி வைக்கப் பட்டாலும், கருணாநிதி விடுவதில்லை என்பதை சேர்த்துக் கொள்ளுங்கள்.


சவுக்கும் என்னதான் செய்வது ? சரி, செவனேன்னு இருக்கலாம்னு பாத்தா, கருணாநிதி விடமாட்டேங்குறாரு….


நேத்து, ஆர்.எம்.வீரப்பன் பொண்ணு கல்யாணத்துல, கருணாநிதி பேசின பேச்ச கேட்டதுக்கப் புறம், “சவுக்கு“ எப்படி சும்மா இருக்க முடியும் ?

ஜெயலலிதா சும்மா இருக்கலாம். ஏன்னா… யாராவது, ஸ்டேட்மென்ட் எழுதி குடுத்து, அதப் படிச்சதுக்கப்புறம், அதுல கையெழுத்துப் போடலாமா, வேண்டாமான்னு முடிவு செய்யறதுக்கே, ரெண்டு வாரம் ஆயிடும். சவுக்கு நியாயத்தப் பேசுற ஆள் இல்லையா ? நியாயம்னா, சூட்டோட பேசுனாத்தானே ? லேட்டா பேசுனா, அது அரசியல் ஆயிடும் இல்லையா ?



அதுனாலத்தான், சவுக்கு, உடனடியா சுழற்றப் படுது.




கருணாநிதி பேசியது என்ன ?

“மறைந்தும் மறையாத என் ஆருயிர் நண்பர் எம்.ஜி.ஆரின் அணுக்கத் தொண்டர்களில் ஒருவராக விளங்கியவர் ஆர்.எம்.வீ. 1945ல் பெரியாரின் குடியரசு பத்திரிகையில் துணை ஆசிரியராக பணியாற்றச் சென்ற காலந்தொட்டு எனக்கும் ஆர்.எம்.வீ.க்கும் நட்பு தொடர்கின்றது. அவர் என்னை எதிர்ப்பதாக காட்டிக் கொண்ட காலத்திலேயும் என்னிடத்தில் கள்ளக் காதல் கொண்டவர். தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையில் சில பிரச்னைகள் தோன்றும் போதெல்லாம் ஆர்.எம்.வீ.யிடமிருந்து எனக்கு ரகசிய கடிதம் வரும்.

எங்களிடையே பிரிவு ஏற்படக்கூடிய சூழல் 1971ல் ஏற்பட்ட போது என் இல்லத்திற்கு வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசி, நீங்கள் பிரியக் கூடாது, ஒன்றாக இயங்கவேண்டும்; பிரிக்கிறவர்கள் யார் என்பது எங்களுக்கு தெரியும், நீங்கள் ஒன்றுபட்டு தமிழகத்திற்காக பணியாற்றுங்கள் என்று கவலை தெரிவித்தவர் ஆர்.எம்.வீ. எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் இடையில் பிணக்கு விளைந்த போதெல்லாம், அதை சரி செய்ய பாடுபட்டவர் ஆர்.எம்.வீ. ஏன் அவருக்கு அந்தக் கவலை என்றால், நாங்கள் இருவரும் இணைந்து உழைத்த இடம் பெரியாரின் குருகுலம். எவ்வளவுதான் அரசியல் மாறுபாடுகள், வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அடிப்படை உணர்விலிருந்து பதவிக்காக எங்களை நாங்கள் மாற்றிக் கொண்டதில்லை.

ஆர்.எம்.வீ.க்கு பதவி கொடுங்கள் என்று திருநாவுக்கரசு சொன்னார். பதவிகளை பல பேருக்கு கொடுக்கிற இடத்தில் இருந்தவர் ஆர்.எம்.வீ. அவருக்கு நான் பதவி கொடுப்பது என்பதல்ல. அவர் பதவிகளை பகிர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டியவரே தவிர கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டியவர் அல்ல. அந்த அளவிற்கு இந்த இயக்கத்தினுடைய ஆணிவேராக இருந்தார். இன்றைக்கும் இருப்பவர்.

கோவை மாநாட்டு பணிகளை ஆய்வு செய்ய செல்கிறோம், அங்கிருந்து உதகமண்டலம் சென்று ஓரிரு நாட்கள் ஓய்வு பெறலாமே என்று எண்ணினேன். ஆனால் இந்த திருமண நினைவு சாட்டையாக விழுந்தது.

ஆர்.எம்.வீ. இல்லத் திருமணத்திற்கு செல்லாமல் ஓய்வு ஒரு கேடா என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டு இங்கே வந்திருக்கிறேன் என்றால் அது நட்பின் ஆழத்தை உணர்த்தக் கூடிய ஒன்று. “

வரலாற்றை சற்றே திரும்பிப் பார்ப்போம். 1981ம் ஆண்டு. அப்போது எம்.ஜி.ஆர் முதலமைச்சர். இப்போது கலைஞரை ஆதரிக்கும் ஆர்.எம்.வீரப்பன் அற நிலைய அமைச்சர். திருச்செந்தூர் கோயில் விடுதியில் கோவில் அதிகாரி சுப்பிரமணியப்பிள்ளை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

உண்டியல் பணத்தை அவர் திருடி மாட்டிக் கொண்டதாகவும் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் ஆர்.எம்.வீ முதல் அ.தி.முகவினர் எல்லாரும் பிரசாரம் செய்தார்கள். கலைஞர் கருணாநிதியும் தி.முகவும் இதை மறுத்தார்கள். உண்டியலில் இருந்த வைர வேலைத் திருடிக் கொண்டது வீரப்பன்தான் என்றும் அதைத் தட்டிக் கேட்ட நேர்மையான அதிகாரி சுப்பிரமணியப்பிள்ளை கொலை செய்யப்பட்டதாகவும் தி.மு.க குற்றம் சாட்டியது.

உடனே விசாரணைக் கமிஷன் போட்டார் எம்.ஜி.ஆர். நீதிபதி சி.ஜெ.ஆர்.பால் அறிக்கையைக் கொடுத்துவிட்டு அடுத்த விமானத்தில் ஒரேயடியாக அமெரிக்கா சென்று செட்டிலாகிவிட்டார். கோவில் அதிகாரியின் மரணம் தற்கொலை அல்ல என்றும் கொலை என்றே சந்தேகிக்க இடமிருப்பதாகவும் அவர் அறிக்கை தெரிவித்தது. எம்.ஜி.ஆர் இந்த அறிக்கையை சட்டசபை முன்பு வைக்க மறுத்துவிட்டார். கலைஞர் கருணாநிதி அறிக்கையின் பிரதியைக் கைப்பற்றி 24.11.1981 அன்று நிருபர்களிடம் வெளியிட்டார்.

நீதி கேட்டு நெடிய பயணமாக மதுரையிலிருந்து திருச்செந்தூருக்கு 150 கிலோ மீட்டர் நடந்து சென்றார்.


அரசு ரகசியமான பால் கமிஷன் அறிக்கையை வெளியிட்டதாக எம்.ஜி.ஆர் குற்றம் சாட்டினார். அதற்காக அரசு அதிகாரிகள் சதாசிவம் (மொழி பெயர்ப்புத் துறை), இப்போதும் கலைஞரின் செயலாளராக இருக்கும் அன்றைய அரசு அதிகாரி சண்முக நாதன் இருவர் மீதும் எம்.ஜி.ஆர் அரசு கடும் நடவடிக்கை எடுத்தது.

இன்று கருணாநிதியால் பாராட்டப் படும் இந்த ஆர்.எம்.வீரப்பன் யார் தெரியுமா ?

எம்.ஜி.ஆர் நோய் வாய்பட்டு, ப்ரூக்ளின் மருத்துவமனையிலே சிகிச்சை பெற்று, திரும்பும் வரையில், தமிழ்நாட்டின், உளவுத்துறை ஐஜியாக இருந்தவர், மோகன்தாஸ். இவர் உட்பட, அனைவருக்கும், எம்ஜிஆருக்கு ஏற்பட்டிருக்கும் நோய், குணமாக்கக் கூடியதல்ல என்று ஒரு கருத்து. 1984ம் ஆண்டுகளிலேல்லாம், சிறுநீரகப் பழுது, இன்று போல, எளிதாக குணமாக்கும் ஒரு நோய் அல்ல. இந்நிலையில், ஆர் எம் வீரப்பன், தமிழ்நாட்டின் நிர்வாகத்தை கையில் எடுத்துக் கொண்டார். தமிழ்நாட்டில் தனக்கென்று ஒரு கோஷ்டியை வளர்த்து எடுத்தார்.


அப்போதெல்லாம் பெரிய அளவில் இன்று திருநாவுக்கரசர் ஆகியிருக்கும், திருநாவுக்கரசு அரசியல் ரீதியாக வளரவில்லை. ஆக, ஆர்.எம்.வீரப்பனுக்கு, அரசியல் ரீதியாக கட்சியில் எதிரி என்றால், அது ஜெயலலிதா தான்.

எம்.ஜி.ஆர், அமேரிக்காவில் சிகிச்சை முடிந்து திரும்பி வருகையில், அப்போது உளவுத்துறை ஐஜியாக இருந்த, மோகன்தாசிடம் சொல்லி, விமான நிலையத்தில், ஜெயலலிதா, எம்.ஜி.ஆரை பார்க்கக் கூடாது என்று ஆர்.எம்.வீரப்பன் உத்தரவு பிறப்பித்தார்.

அதன் அடிப்படையில், ஒரு டிஎஸ்பி, ஐந்து இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழு ஒன்று, ஜெயலலிதாவை, எம்ஜிஆர், இந்த நுழைவாயிலில் அல்ல, இன்னொரு நுழைவாயிலில் வழியாக வருகிறார் என்று நம்ப வைத்து, அழைத்துச் சென்றது. எம்.ஜி.ஆர். விமான நிலையத்திலிருந்து கிளம்பிச் சென்றதும், ஜெயலலிதாவை போயஸ் தோட்ட இல்லம் வரை பத்திரமாக கொண்டு சென்று விட்டு விட்டு வர வேண்டும் என்பது, இந்த ஆர்.எம்.வீரப்பன் அன்றைய போலீசாருக்கு வழங்கிய உத்தரவு.


அதன்படியே, போலீசார், ஜெயலலிதாவை, விமான நிலையத்தில், எம்ஜிஆரை பார்க்க விடாமல், பத்திரமாக வேறு வழி வழியாக ஏமாற்றி, போயஸ் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றனர். ஏமாற்றம் அடைந்த ஜெயலலிதா, கோபப் படாமல், அவரை ஏமாற்றி அழைத்துச் சென்ற போலீசார் அனைவருக்கும் காபி கொடுத்து, உபசரித்து, என்னை ஏமாற்றி விட்டீர்களே என்று வருத்தத்தோடு, சொல்லி விட்டு அறை உள்ளே சென்றதாக அப்போது, உளவுத் துறையில் பணியாற்றிய போலீசார் சொல்கின்றனர்.


இதுதான் இன்று கருணாநிதி பாராட்டும் இந்த ஆர்.எம்.வீரப்பன். இன்று கருணாநிதி, ஆர்.எம்.வீரப்பனை பாராட்டக் காரணம், நன்றி உணர்ச்சிதான்.





வேறு ஒன்றும் இல்லை. 1996ம் ஆண்டு, “பாட்சா“ பட, வெள்ளி விழாவில் பேசிய, ரஜினிகாந்த், தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் வளர்ந்து விட்டது என்று, எப்போதும் போல, வாய்க்கு வந்ததை பேசிச் செல்ல, அது தமிழ்நாட்டில் ஒரு பெரிய புயலை கிளப்ப, 1996ல் ஆட்சிக்கு வருவதற்கு, கருணாநிதிக்கு, ஆர்.எம்.வீரப்பன் நடத்திய அந்த விழா உதவியது என்பதற்கான நன்றிதான், இந்த பாராட்டும், அடுத்து, “மேலவை உறுப்பினர் பதவி“ என்ற வாக்குறுதியும்.
ஆனால், கருணாநிதி தெரிவித்தது போலவே, அவருக்கும், ஆர்.எம்.வீரப்பனுக்கும் இருப்பது, “கள்ளக் காதல்“ தான்.

ஏனென்றால், தன்னை வாழவைத்த, எம்.ஜி.ஆர் என்ற மனிதருக்கு விசுவாசமாக இல்லாமல், கருணாநிதிக்கு ரகசியமாக கடிதம் எழுதினார் என்ற செய்தியும், எம்ஜிஆர் உயிரோடு இருக்கையிலேயே, நிழல் முதலமைச்சராக செயல்பட்டார் என்பதிலும், அவர் எம்ஜிஆருக்கு விசுவாசமாக இல்லாமல், கருணாநிதியோடு, “கள்ளக் காதல்“ கொண்டிருந்தார் என்பதை, கருணாநிதியே இன்று, வெளிப்படையாக சொல்லி விட்டார்.

இந்த லட்சணத்தில், 2006ம் ஆண்டுக்கான அண்ணா விருது, ஆர்.எம்.வீரப்பனுக்கு வழங்கப் பட்டது. அண்ணாவுக்கு, கருணாநிதி போலவோ, வீரப்பன் போலவோ, கயமை தெரியாது என்றாலும், அண்ணா விருதை வீரப்பனுக்கு வழங்கியதன் மூலம், அண்ணாவின் தம்பி என்று சொல்லிக் கொள்ளும் கருணாநிதி, அண்ணாவை இதை விட பெரிய அவமானத்துக்கு எப்படி உள்ளாக்க முடியும் ?




இவ்வாறு, கணவருக்கு விசுவாசமாக இல்லாமல், கள்ளக் காதலனுக்கு விசுவாசமாக இருந்ததற்கான பரிசுதான், நாளைக்கு ஆர்.எம்.வீரப்பனுக்கு கிடைக்கப் போகும், “மேலவை உறுப்பினர்“ பரிசு.


இவ்வாறு, கருணாநிதியும், ஆர்.எம்.வீரப்பனும், இன்றைய தலைமுறைக்கு தெரியாது என்று வாய்க்கு வந்த பொய்யை அவிழ்த்து விடலாம். ஆனால், வரலாறு வரலாறுதானே. அதை மாற்ற முடியுமா என்ன ?


சவுக்கு

வித்தாரக் கள்ளி விறகொடிக்கப் போனாளாம்….





வித்தாரக் கள்ளி விறகொடிக்கப் போனாளாம்…. கத்தாழ முள்ளு கொத்தோட வந்துச்சாம் என்று எங்கள் ஊரில், பெண்கள், புடவையை தூக்கி சொருகிக் கொண்டு சண்டையிடும்போது சொல்வார்கள். இதற்கு பொருள் என்னவென்றால், “என்னடி கதை விடுற…. நீ சொல்ற கதை தெரியாதா ? “ என்பதுதான் அர்த்தம்.

சென்னை பாஷையில் சொல்வதானால், “எருமை மாடு ஏரோப்ளேன் ஓட்டுதுன்னா, கேக்கறவன் கேனப் பயலா“ என்பதுதான் அர்த்தம். தெற்கே, இன்னும் பிரபலமான பழமொழி, “கேழ்வரகுல நெய் வடியுதுன்னா, கேப்பாருக்கு மதியெங்கே போச்சு“ என்பது.
இது போல பழமொழிகளை இப்போது குறிப்பிடக் காரணம் எதுவும் இல்லாமல் இல்லை. இருக்கிறது.


கருணாநிதியைப் பற்றி பதிவுகள் எழுதி, எழுதி, சவுக்குக்கு கை வலித்ததுதான் மிச்சம். கருணாநிதியும் விடுவதாய் இல்லை. சவுக்கும் விடுவதாய் இல்லை.

மரம் ஓய்வை விரும்பினாலும், காற்று விடுவதில்லை
கரை ஓய்வை விரும்பினாலும், அலைகள் விடுவதில்லை
ஓடி ஓடி ஒளிந்த போதும், வாழ்க்கை விடுவதில்லை…. விடுவதில்லை
என்று ஒரு கவிஞன் சொன்னான்.

இதோடு, சவுக்கு, சுருட்டி வைக்கப் பட்டாலும், கருணாநிதி விடுவதில்லை என்பதை சேர்த்துக் கொள்ளுங்கள்.


சவுக்கும் என்னதான் செய்வது ? சரி, செவனேன்னு இருக்கலாம்னு பாத்தா, கருணாநிதி விடமாட்டேங்குறாரு….


நேத்து, ஆர்.எம்.வீரப்பன் பொண்ணு கல்யாணத்துல, கருணாநிதி பேசின பேச்ச கேட்டதுக்கப் புறம், “சவுக்கு“ எப்படி சும்மா இருக்க முடியும் ?

ஜெயலலிதா சும்மா இருக்கலாம். ஏன்னா… யாராவது, ஸ்டேட்மென்ட் எழுதி குடுத்து, அதப் படிச்சதுக்கப்புறம், அதுல கையெழுத்துப் போடலாமா, வேண்டாமான்னு முடிவு செய்யறதுக்கே, ரெண்டு வாரம் ஆயிடும். சவுக்கு நியாயத்தப் பேசுற ஆள் இல்லையா ? நியாயம்னா, சூட்டோட பேசுனாத்தானே ? லேட்டா பேசுனா, அது அரசியல் ஆயிடும் இல்லையா ?



அதுனாலத்தான், சவுக்கு, உடனடியா சுழற்றப் படுது.




கருணாநிதி பேசியது என்ன ?

“மறைந்தும் மறையாத என் ஆருயிர் நண்பர் எம்.ஜி.ஆரின் அணுக்கத் தொண்டர்களில் ஒருவராக விளங்கியவர் ஆர்.எம்.வீ. 1945ல் பெரியாரின் குடியரசு பத்திரிகையில் துணை ஆசிரியராக பணியாற்றச் சென்ற காலந்தொட்டு எனக்கும் ஆர்.எம்.வீ.க்கும் நட்பு தொடர்கின்றது. அவர் என்னை எதிர்ப்பதாக காட்டிக் கொண்ட காலத்திலேயும் என்னிடத்தில் கள்ளக் காதல் கொண்டவர். தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையில் சில பிரச்னைகள் தோன்றும் போதெல்லாம் ஆர்.எம்.வீ.யிடமிருந்து எனக்கு ரகசிய கடிதம் வரும்.

எங்களிடையே பிரிவு ஏற்படக்கூடிய சூழல் 1971ல் ஏற்பட்ட போது என் இல்லத்திற்கு வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசி, நீங்கள் பிரியக் கூடாது, ஒன்றாக இயங்கவேண்டும்; பிரிக்கிறவர்கள் யார் என்பது எங்களுக்கு தெரியும், நீங்கள் ஒன்றுபட்டு தமிழகத்திற்காக பணியாற்றுங்கள் என்று கவலை தெரிவித்தவர் ஆர்.எம்.வீ. எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் இடையில் பிணக்கு விளைந்த போதெல்லாம், அதை சரி செய்ய பாடுபட்டவர் ஆர்.எம்.வீ. ஏன் அவருக்கு அந்தக் கவலை என்றால், நாங்கள் இருவரும் இணைந்து உழைத்த இடம் பெரியாரின் குருகுலம். எவ்வளவுதான் அரசியல் மாறுபாடுகள், வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அடிப்படை உணர்விலிருந்து பதவிக்காக எங்களை நாங்கள் மாற்றிக் கொண்டதில்லை.

ஆர்.எம்.வீ.க்கு பதவி கொடுங்கள் என்று திருநாவுக்கரசு சொன்னார். பதவிகளை பல பேருக்கு கொடுக்கிற இடத்தில் இருந்தவர் ஆர்.எம்.வீ. அவருக்கு நான் பதவி கொடுப்பது என்பதல்ல. அவர் பதவிகளை பகிர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டியவரே தவிர கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டியவர் அல்ல. அந்த அளவிற்கு இந்த இயக்கத்தினுடைய ஆணிவேராக இருந்தார். இன்றைக்கும் இருப்பவர்.

கோவை மாநாட்டு பணிகளை ஆய்வு செய்ய செல்கிறோம், அங்கிருந்து உதகமண்டலம் சென்று ஓரிரு நாட்கள் ஓய்வு பெறலாமே என்று எண்ணினேன். ஆனால் இந்த திருமண நினைவு சாட்டையாக விழுந்தது.

ஆர்.எம்.வீ. இல்லத் திருமணத்திற்கு செல்லாமல் ஓய்வு ஒரு கேடா என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டு இங்கே வந்திருக்கிறேன் என்றால் அது நட்பின் ஆழத்தை உணர்த்தக் கூடிய ஒன்று. “

வரலாற்றை சற்றே திரும்பிப் பார்ப்போம். 1981ம் ஆண்டு. அப்போது எம்.ஜி.ஆர் முதலமைச்சர். இப்போது கலைஞரை ஆதரிக்கும் ஆர்.எம்.வீரப்பன் அற நிலைய அமைச்சர். திருச்செந்தூர் கோயில் விடுதியில் கோவில் அதிகாரி சுப்பிரமணியப்பிள்ளை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

உண்டியல் பணத்தை அவர் திருடி மாட்டிக் கொண்டதாகவும் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் ஆர்.எம்.வீ முதல் அ.தி.முகவினர் எல்லாரும் பிரசாரம் செய்தார்கள். கலைஞர் கருணாநிதியும் தி.முகவும் இதை மறுத்தார்கள். உண்டியலில் இருந்த வைர வேலைத் திருடிக் கொண்டது வீரப்பன்தான் என்றும் அதைத் தட்டிக் கேட்ட நேர்மையான அதிகாரி சுப்பிரமணியப்பிள்ளை கொலை செய்யப்பட்டதாகவும் தி.மு.க குற்றம் சாட்டியது.

உடனே விசாரணைக் கமிஷன் போட்டார் எம்.ஜி.ஆர். நீதிபதி சி.ஜெ.ஆர்.பால் அறிக்கையைக் கொடுத்துவிட்டு அடுத்த விமானத்தில் ஒரேயடியாக அமெரிக்கா சென்று செட்டிலாகிவிட்டார். கோவில் அதிகாரியின் மரணம் தற்கொலை அல்ல என்றும் கொலை என்றே சந்தேகிக்க இடமிருப்பதாகவும் அவர் அறிக்கை தெரிவித்தது. எம்.ஜி.ஆர் இந்த அறிக்கையை சட்டசபை முன்பு வைக்க மறுத்துவிட்டார். கலைஞர் கருணாநிதி அறிக்கையின் பிரதியைக் கைப்பற்றி 24.11.1981 அன்று நிருபர்களிடம் வெளியிட்டார்.

நீதி கேட்டு நெடிய பயணமாக மதுரையிலிருந்து திருச்செந்தூருக்கு 150 கிலோ மீட்டர் நடந்து சென்றார்.


அரசு ரகசியமான பால் கமிஷன் அறிக்கையை வெளியிட்டதாக எம்.ஜி.ஆர் குற்றம் சாட்டினார். அதற்காக அரசு அதிகாரிகள் சதாசிவம் (மொழி பெயர்ப்புத் துறை), இப்போதும் கலைஞரின் செயலாளராக இருக்கும் அன்றைய அரசு அதிகாரி சண்முக நாதன் இருவர் மீதும் எம்.ஜி.ஆர் அரசு கடும் நடவடிக்கை எடுத்தது.

இன்று கருணாநிதியால் பாராட்டப் படும் இந்த ஆர்.எம்.வீரப்பன் யார் தெரியுமா ?

எம்.ஜி.ஆர் நோய் வாய்பட்டு, ப்ரூக்ளின் மருத்துவமனையிலே சிகிச்சை பெற்று, திரும்பும் வரையில், தமிழ்நாட்டின், உளவுத்துறை ஐஜியாக இருந்தவர், மோகன்தாஸ். இவர் உட்பட, அனைவருக்கும், எம்ஜிஆருக்கு ஏற்பட்டிருக்கும் நோய், குணமாக்கக் கூடியதல்ல என்று ஒரு கருத்து. 1984ம் ஆண்டுகளிலேல்லாம், சிறுநீரகப் பழுது, இன்று போல, எளிதாக குணமாக்கும் ஒரு நோய் அல்ல. இந்நிலையில், ஆர் எம் வீரப்பன், தமிழ்நாட்டின் நிர்வாகத்தை கையில் எடுத்துக் கொண்டார். தமிழ்நாட்டில் தனக்கென்று ஒரு கோஷ்டியை வளர்த்து எடுத்தார்.


அப்போதெல்லாம் பெரிய அளவில் இன்று திருநாவுக்கரசர் ஆகியிருக்கும், திருநாவுக்கரசு அரசியல் ரீதியாக வளரவில்லை. ஆக, ஆர்.எம்.வீரப்பனுக்கு, அரசியல் ரீதியாக கட்சியில் எதிரி என்றால், அது ஜெயலலிதா தான்.

எம்.ஜி.ஆர், அமேரிக்காவில் சிகிச்சை முடிந்து திரும்பி வருகையில், அப்போது உளவுத்துறை ஐஜியாக இருந்த, மோகன்தாசிடம் சொல்லி, விமான நிலையத்தில், ஜெயலலிதா, எம்.ஜி.ஆரை பார்க்கக் கூடாது என்று ஆர்.எம்.வீரப்பன் உத்தரவு பிறப்பித்தார்.

அதன் அடிப்படையில், ஒரு டிஎஸ்பி, ஐந்து இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழு ஒன்று, ஜெயலலிதாவை, எம்ஜிஆர், இந்த நுழைவாயிலில் அல்ல, இன்னொரு நுழைவாயிலில் வழியாக வருகிறார் என்று நம்ப வைத்து, அழைத்துச் சென்றது. எம்.ஜி.ஆர். விமான நிலையத்திலிருந்து கிளம்பிச் சென்றதும், ஜெயலலிதாவை போயஸ் தோட்ட இல்லம் வரை பத்திரமாக கொண்டு சென்று விட்டு விட்டு வர வேண்டும் என்பது, இந்த ஆர்.எம்.வீரப்பன் அன்றைய போலீசாருக்கு வழங்கிய உத்தரவு.


அதன்படியே, போலீசார், ஜெயலலிதாவை, விமான நிலையத்தில், எம்ஜிஆரை பார்க்க விடாமல், பத்திரமாக வேறு வழி வழியாக ஏமாற்றி, போயஸ் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றனர். ஏமாற்றம் அடைந்த ஜெயலலிதா, கோபப் படாமல், அவரை ஏமாற்றி அழைத்துச் சென்ற போலீசார் அனைவருக்கும் காபி கொடுத்து, உபசரித்து, என்னை ஏமாற்றி விட்டீர்களே என்று வருத்தத்தோடு, சொல்லி விட்டு அறை உள்ளே சென்றதாக அப்போது, உளவுத் துறையில் பணியாற்றிய போலீசார் சொல்கின்றனர்.


இதுதான் இன்று கருணாநிதி பாராட்டும் இந்த ஆர்.எம்.வீரப்பன். இன்று கருணாநிதி, ஆர்.எம்.வீரப்பனை பாராட்டக் காரணம், நன்றி உணர்ச்சிதான்.





வேறு ஒன்றும் இல்லை. 1996ம் ஆண்டு, “பாட்சா“ பட, வெள்ளி விழாவில் பேசிய, ரஜினிகாந்த், தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் வளர்ந்து விட்டது என்று, எப்போதும் போல, வாய்க்கு வந்ததை பேசிச் செல்ல, அது தமிழ்நாட்டில் ஒரு பெரிய புயலை கிளப்ப, 1996ல் ஆட்சிக்கு வருவதற்கு, கருணாநிதிக்கு, ஆர்.எம்.வீரப்பன் நடத்திய அந்த விழா உதவியது என்பதற்கான நன்றிதான், இந்த பாராட்டும், அடுத்து, “மேலவை உறுப்பினர் பதவி“ என்ற வாக்குறுதியும்.
ஆனால், கருணாநிதி தெரிவித்தது போலவே, அவருக்கும், ஆர்.எம்.வீரப்பனுக்கும் இருப்பது, “கள்ளக் காதல்“ தான்.

ஏனென்றால், தன்னை வாழவைத்த, எம்.ஜி.ஆர் என்ற மனிதருக்கு விசுவாசமாக இல்லாமல், கருணாநிதிக்கு ரகசியமாக கடிதம் எழுதினார் என்ற செய்தியும், எம்ஜிஆர் உயிரோடு இருக்கையிலேயே, நிழல் முதலமைச்சராக செயல்பட்டார் என்பதிலும், அவர் எம்ஜிஆருக்கு விசுவாசமாக இல்லாமல், கருணாநிதியோடு, “கள்ளக் காதல்“ கொண்டிருந்தார் என்பதை, கருணாநிதியே இன்று, வெளிப்படையாக சொல்லி விட்டார்.

இந்த லட்சணத்தில், 2006ம் ஆண்டுக்கான அண்ணா விருது, ஆர்.எம்.வீரப்பனுக்கு வழங்கப் பட்டது. அண்ணாவுக்கு, கருணாநிதி போலவோ, வீரப்பன் போலவோ, கயமை தெரியாது என்றாலும், அண்ணா விருதை வீரப்பனுக்கு வழங்கியதன் மூலம், அண்ணாவின் தம்பி என்று சொல்லிக் கொள்ளும் கருணாநிதி, அண்ணாவை இதை விட பெரிய அவமானத்துக்கு எப்படி உள்ளாக்க முடியும் ?




இவ்வாறு, கணவருக்கு விசுவாசமாக இல்லாமல், கள்ளக் காதலனுக்கு விசுவாசமாக இருந்ததற்கான பரிசுதான், நாளைக்கு ஆர்.எம்.வீரப்பனுக்கு கிடைக்கப் போகும், “மேலவை உறுப்பினர்“ பரிசு.


இவ்வாறு, கருணாநிதியும், ஆர்.எம்.வீரப்பனும், இன்றைய தலைமுறைக்கு தெரியாது என்று வாய்க்கு வந்த பொய்யை அவிழ்த்து விடலாம். ஆனால், வரலாறு வரலாறுதானே. அதை மாற்ற முடியுமா என்ன ?


சவுக்கு

Sunday, May 23, 2010

கருணாநிதியின் பல்வேறு பரிமாணங்கள்.




ஏதாவது ஒரு பிரிவோ, அல்லது அமைப்போ பாராட்டு விழா நடத்தினால், உடனே, அந்த அமைப்பில் தான் ஒரு அங்கம் என்று பேசுவது கருணாநிதிக்கு வழக்கம். விடுதலை (கழுதைகளின்) சிறுத்தைகளின் சார்பில் நடந்த பாராட்டு விழாவிலே பேசிய போது, என் வாழ்வே காலனியில் தான் துவங்கியது என்றார். நேற்று அரசு ஊழியர்களின் மாநாட்டில் பேசும் போது, நானும் ஒரு தொழிலாளி என்றார். பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினால், நானும் ஒரு பத்திரிக்கையாளர் என்பார். சினிமா பாராட்டு விழாவில் பேசினால் கேட்கவே வேண்டாம்.

இப்படிப் பேசும் கருணாநிதி, பல்வேறு அமைப்பினர் நடத்தும் விழாக்களுக்கு சென்று, அந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டால், தன்னை எப்படி அடையாளப் படுத்திக் கொள்வார் என்று சவுக்கு கற்பனை செய்த போது…..

மென்பொறியாளர்கள் சங்கத்தின் சார்பிலே பாராட்டு விழா


இந்த விழாவுக்கு, இவனை அழைத்தது எப்படிப் பொறுத்தம், இவனுக்கு என்ன தகுதி உண்டு, இவன்தான் பள்ளிப் படிப்பையை தாண்டாதவன் ஆயிற்றே, என்று சிலர் கேள்வி எழுப்பக் கூடும். ஆணவத்தோடு அறிக்கை விடக் கூடும்.

நானும் பொறியாளன்தான். அதனால் இந்த விழாவிலே, கலந்து கொள்ள எனக்குத் தகுதி உண்டு. எப்படி என்று எதிர்க் கேள்வி கேட்போருக்காக சொல்கிறேன்.
2003ம் ஆண்டு என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டிலே, அந்த அம்மையாரின் இருண்ட ஆட்சி நடந்து கொண்டு இருந்த நேரம். அப்போது விவசாயிகள் எலிக் கறி சாப்பிடுகிறார்கள் என்ற செய்தி, என் காதிலே ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல வந்து இறங்கியது.

எலிக்கறி சாப்பிடும் விவசாயிகள், அந்த எலிகளை எப்படிப் பிடிப்பார்கள் ? வேகமாக ஓடும் எலியை பிடிப்பது விவசாயிகளுக்கு சிரமம் என்று, அப்போதே, கழக உடன் பிறப்புகளை அனைத்து விவசாயிகளுக்கும், அஞ்சுகம் அறக்கட்டளையின் சார்பாக, எலிப்பொறி வாங்கிக் கொடுக்க உத்தரவிட்டேன். அதனால் நானும் பொறியாளன் தான்.


முடிதிருத்துவோர் சங்கத்தின் சார்பிலே பாராட்டு விழா

திருக்குவளை கிராமத்திலே, ஒரு ஏழையின் குடும்பத்திலே பிறந்த, பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவனான இந்த கருணாநிதிக்கு, எப்படி, இந்த விழாவிலே கலந்த கொள்ளும் தகுதி என்று ஏளனக் கேள்வி எழுப்போருக்காகவே நான் இந்த விளக்கத்தை அளிக்கிறேன். ஏனென்றால், இது போல, பல விழாக்களிலே என்னோடு கலந்து கொண்டு, எனது இது போன்ற உரைகளை பல முறை கேட்டிருக்கும் அன்பழகன், நான் எது பேசினாலும் ஆமோதிப்பார்.

என்னை விட கட்சியிலும் வயதிலும், மூத்தவராக இருந்தாலும், இப்போது ஸ்டாலினை தனது தலைவர் என்று கூறும் அளவுக்கல்லவா அவரை நான் பக்குவப் படுத்தி வைத்திருக் கிறேன் ?


இவ்விழாவிலே எனக்கு கலந்து கொள்ள என்ன தகுதி என்று கேட்போரே… கேளுங்கள். ஐந்து முறை முடியேற்று, ஆட்சி புரிந்திருக்கிறேனல்லவா ? இதை விட என்ன தகுதி வேண்டும். குடி ஆட்சி என்று பெயருக்கு அரசியல் சட்டம் கூறினாலும், உண்மையில் முடியாட்சி போலல்லவா எனக்குப் பிறகு எனது மகனுக்கும் மகளுக்கும் பட்டம் சூட்டும் வேளையில் இறங்கியிருக்கிறேன் ?

இதை விட வேறு என்ன தகுதி வேண்டும் எனக்கு ?

என் தலையைப் பார்த்து விட்டு, என்னை “முடி சூடா மன்னன்“ என்றல்லவா கூறுகிறார்கள் ? இதை விட என்ன தகுதி வேண்டும் எனக்கு, முடி திருத்துவோர் சங்கம் நடத்தும் விழாவில் கலந்து கொள்ள ?



செருப்பு தயாரிப்போர் சங்கத்தின் சார்பிலே பாராட்டு விழா

இந்த விழாவிலே நான் எப்படிக் கலந்து கொள்ளலாம் என்று சிலர் ஐயப் பாட்டை எழுப்பக் கூடும். அவர்கள் அவ்வாறு ஐயப் பாட்டை எழுப்புவது, சில ஐயர்களும், ஐயங்கார்களும் சொல்லிக் கொடுத்ததனால் அன்றி, அவர்களாகவே இவ்வாறான ஐயங்களை எழுப்ப மாட்டார்கள். நான் செருப்பு போட்டுக் கொண்டிருக் கிறேனே .. இதை விட எனக்கு என்ன தகுதி வேண்டும் ?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் தம்பி திருமாவளவனின், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், எனக்கு, அம்பேத்கார் சுடர் விருது அளிக்கப் பட்டது. அந்த விழாவிலே நான் கலந்து கொண்டு பேசிய போது, நான் என் வாழ்க்கை தொடங்கியதே, “காலனியில்தான்“ என்று கூறினேன். அன்று நான் குறிப்பிட்டது, “காலணி“.

ஆனால், சில பார்ப்பன ஏடுகள் வேண்டுமென்றே விஷமத்தனத்தோடு, அச்செய்தியை திரித்து வெளியிட்டன.

திருமணப் பந்தியில் இலை எடுப்போர் சங்கத்தின் சார்பிலே பாராட்டு விழா

இந்த விழாவிலே, இந்த கருணாநிதி ஏன் கலந்து கொள்கிறான் என்று கேட்பார்கள் சிலர். நானும் இலை எடுப்பவன் தான். எப்படி என்கிறீர்களா ? தமிழ்நாட்டை திராவிட முன்னேற்றக் கழகம், கட்டிக் காத்து, பத்திரமாக பேணிப் பாதுகாத்துக் கொண்டிருந்த வேளையில், என் நண்பர் எம்.ஜி.ஆர், தெரியாத்தனமாக, சிலரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, தனியாக சென்று ஒரு கட்சியை தொடங்கினார். அந்தக் கட்சிக்கு அவர் வைத்த சின்னம், இரட்டை இலை.

1989லே, மீண்டும் கழக ஆட்சியை நிறுவியதன் மூலம், இலையை எடுத்து தமிழ்நாட்டை விட்டு வெளியே போட்டவன் நான்தானே ?

அதனால் நானும் இலை எடுப்பவன் தான்.


இப்போதும் அந்த அம்மையார், தமிழ்நாட்டினுள்ளே, எப்படியாவது, இலையைக் கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். நான்தான் இலை எடுப்பவன் என்று சொன்னேனே. அந்த அம்மையர் இலையை கொண்டு வந்தால் நான் எடுத்துப் போட்டு விடுவேன். அதனால் தமிழக மக்கள் கவலையில்லாமல் இருக்கலாம்.


துப்புறவு தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பிலே பாராட்டு விழா

எத்தனையோ, பாராட்டு விழாக்களுக்கான அழைப்புகள் எனக்கு வந்த வண்ணம் தான் இருக்கின்றன. அத்தனை விழாக்களிலும், எனக்கு கலந்து கொண்டு, அந்த விழாக்களை சிறப்பிக்க வேண்டும் என்ற ஆவலும், உந்துதலும் இருந்தாலும், இந்த விழாவிலே நான் ஏன் கலந்து கொண்டேன் என்பதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. ஏனென்றால், துப்புறவு தொழிலாளர்கள், ஊரிலே உள்ள குப்பைகளையும், கூளங்களையும் சுத்தம் செய்கிறார்கள். ஊரைச் சுத்தமாக வைத்திருக்கிறார்கள்.

நானும் அரசாங்க கஜானாவை சுத்தம் செய்து, அதில் இருக்கும், காசு பணம் என்ற கழிவுகளையெல்லாம், எனது வீட்டிலே வைத்து விட்டு, நாடும் மக்களும் நலன் பெற வேண்டும், நன்கு வாழ வேண்டும் என்ற ஒரே நோக்கில், சுத்தம் செய்து வைக்கிறேன். அதனால், நானும் ஒரு துப்புறவு தொழிலாளிதானே ? அதனால் தான் சொல்கிறேன், இந்த விழாவிற்கு நான் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தேன்.



சவுக்கு

கருணாநிதியின் பல்வேறு பரிமாணங்கள்.




ஏதாவது ஒரு பிரிவோ, அல்லது அமைப்போ பாராட்டு விழா நடத்தினால், உடனே, அந்த அமைப்பில் தான் ஒரு அங்கம் என்று பேசுவது கருணாநிதிக்கு வழக்கம். விடுதலை (கழுதைகளின்) சிறுத்தைகளின் சார்பில் நடந்த பாராட்டு விழாவிலே பேசிய போது, என் வாழ்வே காலனியில் தான் துவங்கியது என்றார். நேற்று அரசு ஊழியர்களின் மாநாட்டில் பேசும் போது, நானும் ஒரு தொழிலாளி என்றார். பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினால், நானும் ஒரு பத்திரிக்கையாளர் என்பார். சினிமா பாராட்டு விழாவில் பேசினால் கேட்கவே வேண்டாம்.

இப்படிப் பேசும் கருணாநிதி, பல்வேறு அமைப்பினர் நடத்தும் விழாக்களுக்கு சென்று, அந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டால், தன்னை எப்படி அடையாளப் படுத்திக் கொள்வார் என்று சவுக்கு கற்பனை செய்த போது…..

மென்பொறியாளர்கள் சங்கத்தின் சார்பிலே பாராட்டு விழா


இந்த விழாவுக்கு, இவனை அழைத்தது எப்படிப் பொறுத்தம், இவனுக்கு என்ன தகுதி உண்டு, இவன்தான் பள்ளிப் படிப்பையை தாண்டாதவன் ஆயிற்றே, என்று சிலர் கேள்வி எழுப்பக் கூடும். ஆணவத்தோடு அறிக்கை விடக் கூடும்.

நானும் பொறியாளன்தான். அதனால் இந்த விழாவிலே, கலந்து கொள்ள எனக்குத் தகுதி உண்டு. எப்படி என்று எதிர்க் கேள்வி கேட்போருக்காக சொல்கிறேன்.
2003ம் ஆண்டு என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டிலே, அந்த அம்மையாரின் இருண்ட ஆட்சி நடந்து கொண்டு இருந்த நேரம். அப்போது விவசாயிகள் எலிக் கறி சாப்பிடுகிறார்கள் என்ற செய்தி, என் காதிலே ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல வந்து இறங்கியது.

எலிக்கறி சாப்பிடும் விவசாயிகள், அந்த எலிகளை எப்படிப் பிடிப்பார்கள் ? வேகமாக ஓடும் எலியை பிடிப்பது விவசாயிகளுக்கு சிரமம் என்று, அப்போதே, கழக உடன் பிறப்புகளை அனைத்து விவசாயிகளுக்கும், அஞ்சுகம் அறக்கட்டளையின் சார்பாக, எலிப்பொறி வாங்கிக் கொடுக்க உத்தரவிட்டேன். அதனால் நானும் பொறியாளன் தான்.


முடிதிருத்துவோர் சங்கத்தின் சார்பிலே பாராட்டு விழா

திருக்குவளை கிராமத்திலே, ஒரு ஏழையின் குடும்பத்திலே பிறந்த, பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவனான இந்த கருணாநிதிக்கு, எப்படி, இந்த விழாவிலே கலந்த கொள்ளும் தகுதி என்று ஏளனக் கேள்வி எழுப்போருக்காகவே நான் இந்த விளக்கத்தை அளிக்கிறேன். ஏனென்றால், இது போல, பல விழாக்களிலே என்னோடு கலந்து கொண்டு, எனது இது போன்ற உரைகளை பல முறை கேட்டிருக்கும் அன்பழகன், நான் எது பேசினாலும் ஆமோதிப்பார்.

என்னை விட கட்சியிலும் வயதிலும், மூத்தவராக இருந்தாலும், இப்போது ஸ்டாலினை தனது தலைவர் என்று கூறும் அளவுக்கல்லவா அவரை நான் பக்குவப் படுத்தி வைத்திருக் கிறேன் ?


இவ்விழாவிலே எனக்கு கலந்து கொள்ள என்ன தகுதி என்று கேட்போரே… கேளுங்கள். ஐந்து முறை முடியேற்று, ஆட்சி புரிந்திருக்கிறேனல்லவா ? இதை விட என்ன தகுதி வேண்டும். குடி ஆட்சி என்று பெயருக்கு அரசியல் சட்டம் கூறினாலும், உண்மையில் முடியாட்சி போலல்லவா எனக்குப் பிறகு எனது மகனுக்கும் மகளுக்கும் பட்டம் சூட்டும் வேளையில் இறங்கியிருக்கிறேன் ?

இதை விட வேறு என்ன தகுதி வேண்டும் எனக்கு ?

என் தலையைப் பார்த்து விட்டு, என்னை “முடி சூடா மன்னன்“ என்றல்லவா கூறுகிறார்கள் ? இதை விட என்ன தகுதி வேண்டும் எனக்கு, முடி திருத்துவோர் சங்கம் நடத்தும் விழாவில் கலந்து கொள்ள ?



செருப்பு தயாரிப்போர் சங்கத்தின் சார்பிலே பாராட்டு விழா

இந்த விழாவிலே நான் எப்படிக் கலந்து கொள்ளலாம் என்று சிலர் ஐயப் பாட்டை எழுப்பக் கூடும். அவர்கள் அவ்வாறு ஐயப் பாட்டை எழுப்புவது, சில ஐயர்களும், ஐயங்கார்களும் சொல்லிக் கொடுத்ததனால் அன்றி, அவர்களாகவே இவ்வாறான ஐயங்களை எழுப்ப மாட்டார்கள். நான் செருப்பு போட்டுக் கொண்டிருக் கிறேனே .. இதை விட எனக்கு என்ன தகுதி வேண்டும் ?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் தம்பி திருமாவளவனின், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், எனக்கு, அம்பேத்கார் சுடர் விருது அளிக்கப் பட்டது. அந்த விழாவிலே நான் கலந்து கொண்டு பேசிய போது, நான் என் வாழ்க்கை தொடங்கியதே, “காலனியில்தான்“ என்று கூறினேன். அன்று நான் குறிப்பிட்டது, “காலணி“.

ஆனால், சில பார்ப்பன ஏடுகள் வேண்டுமென்றே விஷமத்தனத்தோடு, அச்செய்தியை திரித்து வெளியிட்டன.

திருமணப் பந்தியில் இலை எடுப்போர் சங்கத்தின் சார்பிலே பாராட்டு விழா

இந்த விழாவிலே, இந்த கருணாநிதி ஏன் கலந்து கொள்கிறான் என்று கேட்பார்கள் சிலர். நானும் இலை எடுப்பவன் தான். எப்படி என்கிறீர்களா ? தமிழ்நாட்டை திராவிட முன்னேற்றக் கழகம், கட்டிக் காத்து, பத்திரமாக பேணிப் பாதுகாத்துக் கொண்டிருந்த வேளையில், என் நண்பர் எம்.ஜி.ஆர், தெரியாத்தனமாக, சிலரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, தனியாக சென்று ஒரு கட்சியை தொடங்கினார். அந்தக் கட்சிக்கு அவர் வைத்த சின்னம், இரட்டை இலை.

1989லே, மீண்டும் கழக ஆட்சியை நிறுவியதன் மூலம், இலையை எடுத்து தமிழ்நாட்டை விட்டு வெளியே போட்டவன் நான்தானே ?

அதனால் நானும் இலை எடுப்பவன் தான்.


இப்போதும் அந்த அம்மையார், தமிழ்நாட்டினுள்ளே, எப்படியாவது, இலையைக் கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். நான்தான் இலை எடுப்பவன் என்று சொன்னேனே. அந்த அம்மையர் இலையை கொண்டு வந்தால் நான் எடுத்துப் போட்டு விடுவேன். அதனால் தமிழக மக்கள் கவலையில்லாமல் இருக்கலாம்.


துப்புறவு தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பிலே பாராட்டு விழா

எத்தனையோ, பாராட்டு விழாக்களுக்கான அழைப்புகள் எனக்கு வந்த வண்ணம் தான் இருக்கின்றன. அத்தனை விழாக்களிலும், எனக்கு கலந்து கொண்டு, அந்த விழாக்களை சிறப்பிக்க வேண்டும் என்ற ஆவலும், உந்துதலும் இருந்தாலும், இந்த விழாவிலே நான் ஏன் கலந்து கொண்டேன் என்பதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. ஏனென்றால், துப்புறவு தொழிலாளர்கள், ஊரிலே உள்ள குப்பைகளையும், கூளங்களையும் சுத்தம் செய்கிறார்கள். ஊரைச் சுத்தமாக வைத்திருக்கிறார்கள்.

நானும் அரசாங்க கஜானாவை சுத்தம் செய்து, அதில் இருக்கும், காசு பணம் என்ற கழிவுகளையெல்லாம், எனது வீட்டிலே வைத்து விட்டு, நாடும் மக்களும் நலன் பெற வேண்டும், நன்கு வாழ வேண்டும் என்ற ஒரே நோக்கில், சுத்தம் செய்து வைக்கிறேன். அதனால், நானும் ஒரு துப்புறவு தொழிலாளிதானே ? அதனால் தான் சொல்கிறேன், இந்த விழாவிற்கு நான் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தேன்.



சவுக்கு

Friday, May 21, 2010

லைலாவுக்கெல்லாம் லைலா




அது என்ன லைலாவுக்கெல்லாம் லைலா? கோடையின் கடும் வெம்மையில், காதலியின் குளிர்ச்சியான பார்வையும், வார்த்தைகளுமே வறண்டு போய் எரிச்சலை உண்டு பண்ணும் வேளையில், இனிய தென்றலாய், நமக்கெல்லாம், அரிதிலும், அரிதான மழையை தந்து, நம்மை ஒரு நாள் கட்டாய ஓய்வு எடுக்க வைத்ததற்கு லைலாவுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும். அட, அதாங்க லைலா புயல்!

இதுபோல பெயரிடுவதற்கு காரணம், புயலுக்கு இவ்வாறு பெயர் வைத்தால், எளிதாக தகவல் சொல்வதற்கும், அபாய எச்சரிக்கைகள் வழங்குவதற்கும் ஏற்ற வகையில் இருக்கும் என்பதால் தான் லைலா, பாண்டெல்லாம் புயலுக்கே பெயர் சூட்டும் கலாசாரம் வந்திருக்கிறது.

சரி, புயலுக்கு இப்படி பெயரிடும் வழக்கம் எப்போது வந்தது தெரியுமா? ஆரம்பத்தில், இவ்வாறு பெயரிடுவதை ஒழுங்குபடுத்தும் வரையில், அந்தந்த நாடுகள் அவர்களுக்கு தகுந்தாற்போல புயலுக்கும் பெயரிட்டு வந்தன.

2000-ம் ஆண்டு மஸ்கட்டில் நடந்த வானியல் அமைப்புகளுக்கான மாநாட்டில் வங்காள விரிகுடா மற்றும் அரேபியக் கடலில் ஏற்படும் புயல்களுக்கு பெயரிடுவது என்று ஒத்தக் கருத்துக்களின் அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, செப்டம்பர் 2004-ம் ஆண்டு முதல் புயல்களுக்கு பெயரிடும் வழக்கம் தொடங்கி விட்டது.

இதற்காக, ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளெல்லாம் ஒருங்கிணைந்து ஒரு அட்டவணை தயாரித்து, புதிதாக உருவாகும், ஒவ்வொரு புயலுக்கும், இந்த அட்டவணையின் படி பெயரிட்டு வருவதை வாடிக்கையாக்கி இருக்கிறார்கள். இப்படி அட்டவனைப் பட்டியலில் வந்ததுதான் லைலா. அதான் நம்ம சென்னையை குளிர்வித்து சென்றிருக்கிறதே, அதே லைலாதான்..

சரி, லைலா தென்றலாய் வந்து கோடையின் சூட்டைத் தணித்து விட்டுப் போயிருப்பது ஒருபக்கம் இருக்கட்டும், தமிழ்நாட்டை தினசரியும் தாக்கும் புயல்களுக்கு தமிழக அரசியல் தலைவர்களின் பெயரைச் சூட்டினால், அந்தப் புயல்களின் தன்மை எப்படிப்பட்டதாக இருக்கும், இது குறித்த வானிலை எச்சரிக்கைகள் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து தமாஸாக சிந்தித்தன் விளைவு - மேலே படிங்க...

’ராமதாஸ்’ புயல்:


தமிழ்நாட்டின் வடமாவட்டங்களின் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வல்லமை பெற்றது என்று உத்தேசிக்கப்பட்ட இந்தப் புயல், குறுகிய இடமான தைலாபுரத்தில் மட்டுமே நீண்ட நெடுங்காலம் மையம் கொண்டதன் விளைவு, விரைவிலேயே வலுவிழந்து போனது. கடந்த 2009-ம் ஆண்டு இந்த ராமதாஸ் புயல், பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், அந்தப் புயலால் ஒரு குடிசையையும் பெயர்த்துப் போடமுடியவில்லை. வந்த சந்தடி தெரியாமல் போனது. இனிமேல், இந்த ராமதாஸ் புயல் வந்தால் எவ்விதமான பாதிப்பும் இருக்காது என்ற காரணத்தால், வானிலை நிலையத்தில் எச்சரிக்கை செய்வதையே விட்டுவிடப் போகிறார்களாம்.

அவ்வப்போது ராமதாஸ் புயல் மையம் கொண்டுள்ளது என்ற தகவல் மீனவர்களுக்கு தெரிவிக்கப்பட்டால், அது ஒரு ’டம்மி பீசு’ என்று மீனவர்கள் கண்டு கொள்ளாமல் வழக்கம் போல, கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுவிடுகிறார்கள் என்பதைக் கேட்டு, தைலாபுரம் கொதித்திக் கிடக்கிறதாம்.

’வைகோ’ புயல்:

முதன்முதலில் இந்தப் புயல் எச்சரிக்கை வந்தபோது, அது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வானிலை மையம் ஏகத்துக்கும் எச்சரிக்கை மணியை ஓங்கி ஒங்கி அடித்தது. அதற்கேற்பவே இந்தப் புயல், ’புரட்சிப் புயல்’ என்றும் அழைக்கப்பட்டது.

ஆனால், வந்த சில நாட்களிலேயே, இந்தப் புயல், பெரிய அளவு தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை. வெகு வேகமாக மையம் கொண்ட இந்தப் புயல், சில நாட்களாக, வேலூர் அருகே, ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் மையம் கொண்டிருந்தது. பிறகு, டெல்லியில் ஏற்பட்ட சில வானிலை மாற்றங்கள் காரணமாக, நெடுநாட்களாக மையம் கொண்டிருந்த வேலூரிலிருந்து வடக்கே நகர்ந்து, சென்னை போயஸ்தோட்டம் பகுதியில் மையம் கொண்டிருக்கிறது.

இப்போதைக்கு இந்தப் புயல், போயஸ்தோட்டம் பகுதியை விட்டு நகர வாய்ப்பில்லை என்றும், நகர்ந்தாலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதால், இந்தப் புயல் குறித்து பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை என்றும் வானியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

விஜயகாந்த் புயல்:

கோடம்பாக்கத்தில் வெகு நாட்களாக மையம் கொண்டிருந்த புயல், திடீரென்று அரசியல் அரங்குக்கு நகர்ந்து வந்தபோது, வானிலை ஆய்வாளர்களே அசந்து போனார்கள். இந்தப் புயலும், வந்த சில காலத்துக்கு, மற்ற புயல்களை வலுவிழக்கச் செய்யும் பணியை செய்து வந்தது. வானியல் ஆய்வர்களும் இந்தப் புயல்... அடுத்து எந்த திசையை நோக்கி நகரும் என்பதில் குழப்பத்தில்தான் இருந்தனர்.

அடுத்தடுத்து, இந்தப் புயல் தமிழ்நாட்டை தாக்கியபோதும், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தததால், இப்போது இந்தப் புயல் எந்த திசையை நோக்கி நகரும் என்று ஓரளவுக்கு அனுமானிக்க முடிகிறது என்று வானியல் ஆய்வர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக திடீரென்று ஏற்படும் புயல் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றாலும், இந்தப் புயல் குழப்பத்தை ஏற்படுத்தாமல், தானே குழம்பி நிற்பது தான் விந்தையிலும் விந்தை என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள். இதை புயல் என்று சொல்வதை விட, ஒரு வறண்ட வயல் என்பது பொருத்தமாக இருக்கும் என்றுச் சொல்லியும் சிரிக்கிறார்கள் அவர்கள்.

ஜி.கே.வாசன் புயல்:

இதைப் புயல் என்பதை விட, ஒரு சிறிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனேன்றால், இந்தப் புயல் வானியல் மாற்றங்களால் உருவானதல்ல. இதற்கு முன்பு, டெல்லியில் ஏற்பட்ட வானியல் மாற்றங்களால், தமிழ்நாட்டில் இருந்த ஒரு புயலின் பின்னால் உருவான ஒரு குட்டிப் புயல் இது. அந்தப் பெரிய புயல் இல்லாவிட்டால், இந்த குட்டிப் புயல் உருவாகியிருக்க வாய்ப்பே இல்லை என்று இந்தப் புயல் பற்றிய பூர்வீகத்தை வாசிக்கிறார்கள் வானியல் ஆய்வாளர்கள்.

அந்தப் பெரிய புயலைப் போலவே, இந்தப் புயலும், எப்போது வருகிறது, எங்கே நகருகிறது என்று யாராலும் புரிந்து கொள்ள முடியாது. இந்தப் புயல் உண்மையில் புயலா, இல்லை வெறும் பயலா என்று புரியாமல் பல வானியல் ஆய்வாளர்கள் இன்றளவ்விலும் குழம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், இந்த வகைப் புயல்கள், தமிழ்நாடு மட்டுமல்லாமல், தேசிய அளவிலும் நகர்வதால், இந்தப் புயல்களை தேசியப் புயல் என்று வானியல் ஆய்வாளர்கள் வகைப்படுத்துகின்றனர்.

இந்த தேசிய வகைப் புயல்கள், எப்போதுமே பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் சிறு சிறு புயல்களாக இருக்கும் தன்மை கொண்டவையாம். இந்த சிறு சிறு புயல்கள், ஒன்றோடு ஒன்று மோதி, எந்த வகையிலும் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் கடைசியில் வலுவிழந்து போகக்கூடிய தன்மை பெற்றவை.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் புயல்:

இந்தப் புயல், அவ்வப்போது, பெரும் காற்றை எழுப்பி சத்தமிடும். ஆனால், சத்தத்தை உண்டுபண்ணும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ஏன், இது ஒருபோதும் கடலை கடந்ததில்லை என்பது இதன் வரலாறு. அதனாலேயே இதனால் பாதிப்பு இல்லை என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.

இந்தப் புயல் அவ்வப்போது, தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய ‘காமராஜ் புயலை’ நினைவுபடுத்தும். ஆனால் காமராஜ் புயலுக்கும் இதற்கும் கடுகளவு கூட சம்பந்தம் கிடையாது என்பதை தன்னுடைய நடவடிக்கைகளில் இருந்து அப்பட்டமாக வெளிப்படுத்திவிடும்.

அவ்வப்போது, சூறைக் காற்றுடன் பெரும் ஓசை எழுப்பவில்லை என்றால், தன்னை வானிலை ஆய்வாளர்களும் பொதுமக்களும் கண்டுகொள்ளவில்லை என்கிற நினைப்பிலேயே இது, அவ்வப்போது பெரும் சத்தத்தை கிளப்பும். 2009-ல் இந்த ’ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்’ என்ற புயலை, ’முத்துக்குமார்’ என்ற ஒரு பெரும் புயல் இருந்த இடம் தெரியாமல் செய்ததும் அப்படியே சந்தடியில்லாமல் அடங்கிக்கிடக்கிறது.

ராஜ்யசபா என்ற சக்தியைக் கொண்டு தன்னை டெல்லியில் மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ளலாமா என்று, இந்தப் புயல் மீண்டும் லேசாக தலைதூக்கி இருக்கிறது. இருந்தாலும், கூடவே இருக்கும் மற்றப் புயல்கள் இதன் தலையில் கருணாநிதி புயல் மூலமாக கல்லைத் தூக்கிப் போட, சத்தமில்லாமல் மீண்டும் அடங்கி விட்டதாம் இந்தப் புயல்.

தமிழக சி.பி.எம். புயல்:

தமிழ்நாட்டின் மிக மிக பழமையான புயல்களில் இதுவும் ஒன்று. இது ஒரு பலமான புயல் என்று தோற்றத்திற்கு தோன்றினாலும், இந்தப் புயல், மேற்கு வங்கம் மற்றும் கேரள கரையோரமே பெரும்பாலான நேரங்களில் மையம் கொண்டிருக்கும். அவ்வப்போது இடியுடன் கூடிய மழையை வர வைத்தாலும், இந்தப் புயல் பெரும்பாலான நேரங்களில் தமிழ்நாட்டில் வலுவிழந்தே இருந்திருக்கிறது.

இந்தப் புயலால் அவ்வப்போது லேசான சாரலை வரவைக்க முடிந்திருக்கிறதே தவிர, வேறு கடுமையான பாதிப்புகளளை ஏற்படுத்தியதே இல்லை. இந்தப் புயல் வலுவாக மையம் கொண்டிருந்த மேற்கு வங்கத்தில் கூட, ’மம்தா’ என்ற புதிய புயல் சமீபத்தில் தாக்குதல் நடத்த, பெட்டிப் பாம்பாக கடலுக்குள்ளேயே அடங்கியிருக்கிறதாம் இந்தப் புயல். இனி இந்தப் புயல், மேலெழும்பி வர வேண்டும் என்றால், புதிய சக்தி ஏதேனும் தேவைப்படும் என்கிறார்கள் வானியல் ஆய்வாளர்கள்.

தமிழக சி.பி.ஐ. புயல்:

இதுவும், தமிழகத்தின் பழமையான புயல்களுள் ஒன்றுதான். இந்தப் புயல், மிகப் பழமையான புயல்களுள் ஒன்றாய் இருந்தாலும், ’தமிழக சி.பி.எம்’ என்ற புயலுக்கு எப்போதும் துணைப் புயலாகவே இருந்து வந்திருக்கிறது.

இந்தப் புயல், ’தமிழக சி.பி.எம்’ என்ற புயலுக்கு, துணைப் புயல் அல்ல என்று காட்டிக் கொள்வதற்காக, பெரும் பிரயத்தனம் செய்தாலும், இது சி.பி.எம்-மின் வால்ப் புயலாகவே, வானியல் ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.

கருணாநிதி புயல்:

தமிழகத்தை மிக மிக மோசமான பாதிப்புக்குள்ளாக்கியதில், இந்தப் புயல் மிக மிக முக்கியமான புயல். தஞ்சை அருகே, திருக்குவளை என்ற இடத்தில் இந்தப் புயல் உருவானதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். முதலில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, மெல்ல மெல்ல வலுவடைந்து, இன்று தமிழகம் முழுவதையும் இந்தப் புயல் ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பதாக வானியல் ஆய்வாளர்கள் போயஸ் தோட்டம் பகுதியிலிருந்து கருத்து தெரிவிக்கிறார்கள்.

திருக்குவளையில் உருவாகி, மெல்ல, மெல்ல வடக்கு நோக்கி நகர்ந்து, இன்று வங்காள விரிகுடாவின் அருகே, மையம் கொண்டிருக்கிறது. இந்தப் புயல், தன்னுடைய அசாத்திய வலிமையால், தமிழ்நாட்டில், ஜனநாயக சக்திகள் என்று அழைக்கப்படும் அனைத்தையும், அனைத்து பத்திரிகைகளையும்கூட எளிதாக வளைத்து, தன்னுள் போட்டுக் கொண்டதாக இதுகுறித்து புகார் பட்டியல் வாசிக்கிறது இதன் உடன்பிறவா இன்னொரு புயலான வைகோ புயல்.

இந்த ’கருணாநிதிப் புயல்’ சென்னையில் மையம் கொண்டிருந்த போதே, தன்னுடன் பலப் பல குட்டிப் புயல்களை உருவாக்கியது. இந்தக் குட்டிப் புயல்கள், ’கருணாநிதிப் புயலை’ விட, தமிழகத்துக்கு அதிக சேதம் விளைவித்தன என்று போயஸ் தோட்டத்துப் புயல் அவ்வபோது அழுது அரற்றுவதை தடுக்க முடியவில்லையாம். பல்வேறு குட்டிப் புயல்களும் சேர்ந்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியையும், அதிக சேதத்தையும் விளைவித்துள்ளன என்று இடியோசையாக முழங்குகிறார்கள் வானிலை ஆய்வார்கள், தாயகத்தில் ஒதுங்கியபடியே.

இந்தப் புயல் எப்போது கரையைக் கடக்கும், எப்போது நமக்கெல்லாம் விமோசனம் பிறக்கும் என்று, தமிழக மக்கள் வேண்டாத நாளில்லை என்கிறது ஜெயலலிதா புயல். ஆனாலும், இந்தப் புயல் இப்போதைக்கு கரையை கடக்காது என்று வானியல் ஆய்வர்கள் அடித்து ஆரூடம் சொல்கிறார்கள்..


மற்ற புயல்களுக்கு இல்லாத ஒரு குணம் இந்தப் புயலுக்கு உண்டு. மற்ற புயல்கள் வந்து, மையம் கொண்டு, போதுமான சேதாரங்களை விளைவித்து விட்டு நகர்ந்து விடும். ஆனால், இந்தப் புயல், தமிழகத்தில் உள்ள பல்வேறு வானியல் ஆய்வறிஞர்களான, ஜெகதரட்சகன், கமலஹாசன், ரஜினிகாந்த், வாலி, வைரமுத்து, போன்றவர்கள் எப்போதும் இந்தப் புயலைப் பற்றிப் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்பும் தன்மை கொண்டதாக இருப்பதால், இந்தப் புயலைச் சுற்றியே இந்த வானிலை ஆய்வாளர்கள் திரிந்து கொண்டிருப்பதை வாடிக்கையாக்கி இருக்கிறார்களாம்.


இப்படிப்பட்ட வானிலை ஆய்வாளர்களையெல்லாம் தொடர்ந்து தன்னகத்தே வைத்துக் கொள்வதற்காக மேலவை என்ற ஜால்ரா புயல் அரங்கத்தை விரைவில் அமைத்துக் கொள்ளவும், இந்த கருணாநிதி புயல் படாதபாடு படுவதாக தெரிவிக்கிறது போயஸ் தோட்டத்து வானிலை ஆய்வு மையம்.


இதனால் இந்தப் புயல், வாரத்தில் ஏழு நாட்களும் நேரு உள்விளையாட்டு அரங்கம், வள்ளுவர் கோட்டம், காமராஜர் அரங்கம், சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு கட்டிடம் போன்ற இடங்களில் மாலை நேரங்களிலும், காலையில், புதிய தலைமைச் செயலக கட்டிட வளாகத்திலும் மையம் கொண்டிருப்பதை வழக்கமாக்கி விட்டதாம்.

அடுத்த மாதம் இந்தப் புயல்... வடக்கு நோக்கி நகர்ந்து, கோவை கொடீசியா அரங்கில், ஒரு வார காலம் மையம் கொண்டிருக்கும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவரை இருந்தை விட, கடந்த 2006-ம் ஆண்டிலிருந்து இந்தப் புயலும், இதனுடன் இருக்கும் குட்டிப் புயல்களும் விளைவித்த சேதம் அதிகம் என்பதால், எப்போது இந்தப் புயல் கரையைக் கடக்கும் என்பதில் தமிழக மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு இருப்பதாக போயஸ் தோட்டம் பகுதியில் ஒதுங்கிய வானிலை ஆய்வாளர்கள் அங்கலாக்கின்றனர்.


ஜெயலலிதா புயல்:

இந்தப் புயல், 1991-ம் ஆண்டு, முதன் முதலில் தமிழகத்தை பலமாகத் தாக்கியது. இந்தத் தாக்குதலில் தமிழகம் அடைந்த சேதத்துக்கு அளவே இல்லை. 1991-ம் ஆண்டு, தமிகத்தில் மையம் கொண்டிருந்த இந்தப் புயல், ஐந்து ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டிற்கு பலத்த சேதத்தை உருவாக்கியது.


இந்தப் புயலின் சிறப்பம்சம், துணைப் புயல் இல்லாமல் கடலை விட்டு வெளியே வரவே வராது. 1991-ம் ஆண்டிலிருந்து, 1996-ம் ஆண்டு வரை, இந்தப் புயல் விளைவித்த சேதங்களை விட, இதன் உடன் இருக்கும் துணைப் புயலும், அந்தத் துணைப் புயலுக்கு, துணையான மற்ற புயல்களும் விளைவித்த சேதமே மிக அதிகம் என்று ஆய்வாளர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.


1996-ம் ஆண்டு, ’கருணாநிதிப் புயல்’ வந்து, இந்தப் புயலை வலுவிழக்கச் செய்தது. வலுவிழக்கச் செய்ததும், இந்தப் புயல், மீண்டும் தமிழகத்தை தாக்க வாய்ப்பே இல்லை என்று வானியல் ஆய்வர்கள் தெரிவித்த கருத்தை பொய்யாக்கும் விதமாக, மீண்டும் பலமாக தமிழகத்தை 2001-ம் ஆண்டு தாக்கியது. அந்தத் தாக்குதலில், ’கருணாநிதிப் புயல்’ நிலை குலைந்து போனது. 2001-ம் ஆண்டு மீண்டும் தமிழகத்தில் மையம் கொண்ட ஜெயலலிதா புயல், அரசு ஊழியர் குடியிருந்த பகுதிகளில் பலத்த சேதத்தை விளைவித்ததால், கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்க தொடங்கியது. 2006-ம் ஆண்டு, ’கருணாநிதிப் புயல்’ மீண்டும் இந்தப் புயலை வலுவிழக்கச் செய்து, தமிழகத்தில் இடியுடன் கூடிய பலத்த சேதத்தை ஏற்படுத்தத் தொடங்கி, இன்றுவரை இடியை கிளப்பிக் கொண்டே இருக்கிறது..


இந்த ’ஜெயலலிதா புயல்’ மீண்டும் தமிழகத்தில் மையம் கொள்ள வாய்ப்பு இருப்பதாக பெசண்ட் நகர் ஏரியாவிலிருந்து வானியல் ஆய்வாளர்கள் ஆசையை வெளிப்படுத்துகிறார்கள். 1996-ல், இந்தப் புயல் மீண்டும் தமிழகத்தை தாக்க வாய்ப்பே இல்லை என்ற அறிஞர்களின் கூற்றை பொய்யாக்கி, தமிழகத்தை 2001-ல் தாக்கியது போலவே மீண்டும் நடக்கக்கூடும் என்றும் நடராஜராக நர்த்தனமாடி தங்கள் கருத்தைத் தெரிவிக்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.


இந்தப் புயல்,பெரும்பாலான நாட்களில், கொடநாடு போன்ற மலைப் பிரதேசங்களில் மையம் கொண்டிருப்பதோடு, அவ்வபோது சிறுதாவூரிலும் மையம் கொள்வதால், சட்டென வலுவிழந்து தமிழகத்தை தாக்கும் வாய்ப்பு இல்லாமல் போகிறது என்றும் புவியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இந்தப் புயல், மீண்டும் பெரும் புயலாக வந்து, ’கருணாநிதிப் புயலை’ வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்றால், கூட இருக்கும் சக புயல்களை அனுசரிப்பதோடு, தாக்கவேண்டும் என்கிற ஒரே இலக்கோடு கடலிலிருந்து புறப்பட்டு வந்து கடலைக் கடக்க வேண்டும் என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள். அது நடந்தால், இந்தப் புயலுக்கு ‘லைலாவுக்கெல்லாம் லைலா...’ என்று பெயர் சூட்டுவோம் என்றும் சொல்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.



சவுக்கு

லைலாவுக்கெல்லாம் லைலா




அது என்ன லைலாவுக்கெல்லாம் லைலா? கோடையின் கடும் வெம்மையில், காதலியின் குளிர்ச்சியான பார்வையும், வார்த்தைகளுமே வறண்டு போய் எரிச்சலை உண்டு பண்ணும் வேளையில், இனிய தென்றலாய், நமக்கெல்லாம், அரிதிலும், அரிதான மழையை தந்து, நம்மை ஒரு நாள் கட்டாய ஓய்வு எடுக்க வைத்ததற்கு லைலாவுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும். அட, அதாங்க லைலா புயல்!

இதுபோல பெயரிடுவதற்கு காரணம், புயலுக்கு இவ்வாறு பெயர் வைத்தால், எளிதாக தகவல் சொல்வதற்கும், அபாய எச்சரிக்கைகள் வழங்குவதற்கும் ஏற்ற வகையில் இருக்கும் என்பதால் தான் லைலா, பாண்டெல்லாம் புயலுக்கே பெயர் சூட்டும் கலாசாரம் வந்திருக்கிறது.

சரி, புயலுக்கு இப்படி பெயரிடும் வழக்கம் எப்போது வந்தது தெரியுமா? ஆரம்பத்தில், இவ்வாறு பெயரிடுவதை ஒழுங்குபடுத்தும் வரையில், அந்தந்த நாடுகள் அவர்களுக்கு தகுந்தாற்போல புயலுக்கும் பெயரிட்டு வந்தன.

2000-ம் ஆண்டு மஸ்கட்டில் நடந்த வானியல் அமைப்புகளுக்கான மாநாட்டில் வங்காள விரிகுடா மற்றும் அரேபியக் கடலில் ஏற்படும் புயல்களுக்கு பெயரிடுவது என்று ஒத்தக் கருத்துக்களின் அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, செப்டம்பர் 2004-ம் ஆண்டு முதல் புயல்களுக்கு பெயரிடும் வழக்கம் தொடங்கி விட்டது.

இதற்காக, ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளெல்லாம் ஒருங்கிணைந்து ஒரு அட்டவணை தயாரித்து, புதிதாக உருவாகும், ஒவ்வொரு புயலுக்கும், இந்த அட்டவணையின் படி பெயரிட்டு வருவதை வாடிக்கையாக்கி இருக்கிறார்கள். இப்படி அட்டவனைப் பட்டியலில் வந்ததுதான் லைலா. அதான் நம்ம சென்னையை குளிர்வித்து சென்றிருக்கிறதே, அதே லைலாதான்..

சரி, லைலா தென்றலாய் வந்து கோடையின் சூட்டைத் தணித்து விட்டுப் போயிருப்பது ஒருபக்கம் இருக்கட்டும், தமிழ்நாட்டை தினசரியும் தாக்கும் புயல்களுக்கு தமிழக அரசியல் தலைவர்களின் பெயரைச் சூட்டினால், அந்தப் புயல்களின் தன்மை எப்படிப்பட்டதாக இருக்கும், இது குறித்த வானிலை எச்சரிக்கைகள் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து தமாஸாக சிந்தித்தன் விளைவு - மேலே படிங்க...

’ராமதாஸ்’ புயல்:


தமிழ்நாட்டின் வடமாவட்டங்களின் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வல்லமை பெற்றது என்று உத்தேசிக்கப்பட்ட இந்தப் புயல், குறுகிய இடமான தைலாபுரத்தில் மட்டுமே நீண்ட நெடுங்காலம் மையம் கொண்டதன் விளைவு, விரைவிலேயே வலுவிழந்து போனது. கடந்த 2009-ம் ஆண்டு இந்த ராமதாஸ் புயல், பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், அந்தப் புயலால் ஒரு குடிசையையும் பெயர்த்துப் போடமுடியவில்லை. வந்த சந்தடி தெரியாமல் போனது. இனிமேல், இந்த ராமதாஸ் புயல் வந்தால் எவ்விதமான பாதிப்பும் இருக்காது என்ற காரணத்தால், வானிலை நிலையத்தில் எச்சரிக்கை செய்வதையே விட்டுவிடப் போகிறார்களாம்.

அவ்வப்போது ராமதாஸ் புயல் மையம் கொண்டுள்ளது என்ற தகவல் மீனவர்களுக்கு தெரிவிக்கப்பட்டால், அது ஒரு ’டம்மி பீசு’ என்று மீனவர்கள் கண்டு கொள்ளாமல் வழக்கம் போல, கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுவிடுகிறார்கள் என்பதைக் கேட்டு, தைலாபுரம் கொதித்திக் கிடக்கிறதாம்.

’வைகோ’ புயல்:

முதன்முதலில் இந்தப் புயல் எச்சரிக்கை வந்தபோது, அது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வானிலை மையம் ஏகத்துக்கும் எச்சரிக்கை மணியை ஓங்கி ஒங்கி அடித்தது. அதற்கேற்பவே இந்தப் புயல், ’புரட்சிப் புயல்’ என்றும் அழைக்கப்பட்டது.

ஆனால், வந்த சில நாட்களிலேயே, இந்தப் புயல், பெரிய அளவு தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை. வெகு வேகமாக மையம் கொண்ட இந்தப் புயல், சில நாட்களாக, வேலூர் அருகே, ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் மையம் கொண்டிருந்தது. பிறகு, டெல்லியில் ஏற்பட்ட சில வானிலை மாற்றங்கள் காரணமாக, நெடுநாட்களாக மையம் கொண்டிருந்த வேலூரிலிருந்து வடக்கே நகர்ந்து, சென்னை போயஸ்தோட்டம் பகுதியில் மையம் கொண்டிருக்கிறது.

இப்போதைக்கு இந்தப் புயல், போயஸ்தோட்டம் பகுதியை விட்டு நகர வாய்ப்பில்லை என்றும், நகர்ந்தாலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதால், இந்தப் புயல் குறித்து பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை என்றும் வானியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

விஜயகாந்த் புயல்:

கோடம்பாக்கத்தில் வெகு நாட்களாக மையம் கொண்டிருந்த புயல், திடீரென்று அரசியல் அரங்குக்கு நகர்ந்து வந்தபோது, வானிலை ஆய்வாளர்களே அசந்து போனார்கள். இந்தப் புயலும், வந்த சில காலத்துக்கு, மற்ற புயல்களை வலுவிழக்கச் செய்யும் பணியை செய்து வந்தது. வானியல் ஆய்வர்களும் இந்தப் புயல்... அடுத்து எந்த திசையை நோக்கி நகரும் என்பதில் குழப்பத்தில்தான் இருந்தனர்.

அடுத்தடுத்து, இந்தப் புயல் தமிழ்நாட்டை தாக்கியபோதும், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தததால், இப்போது இந்தப் புயல் எந்த திசையை நோக்கி நகரும் என்று ஓரளவுக்கு அனுமானிக்க முடிகிறது என்று வானியல் ஆய்வர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக திடீரென்று ஏற்படும் புயல் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றாலும், இந்தப் புயல் குழப்பத்தை ஏற்படுத்தாமல், தானே குழம்பி நிற்பது தான் விந்தையிலும் விந்தை என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள். இதை புயல் என்று சொல்வதை விட, ஒரு வறண்ட வயல் என்பது பொருத்தமாக இருக்கும் என்றுச் சொல்லியும் சிரிக்கிறார்கள் அவர்கள்.

ஜி.கே.வாசன் புயல்:

இதைப் புயல் என்பதை விட, ஒரு சிறிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனேன்றால், இந்தப் புயல் வானியல் மாற்றங்களால் உருவானதல்ல. இதற்கு முன்பு, டெல்லியில் ஏற்பட்ட வானியல் மாற்றங்களால், தமிழ்நாட்டில் இருந்த ஒரு புயலின் பின்னால் உருவான ஒரு குட்டிப் புயல் இது. அந்தப் பெரிய புயல் இல்லாவிட்டால், இந்த குட்டிப் புயல் உருவாகியிருக்க வாய்ப்பே இல்லை என்று இந்தப் புயல் பற்றிய பூர்வீகத்தை வாசிக்கிறார்கள் வானியல் ஆய்வாளர்கள்.

அந்தப் பெரிய புயலைப் போலவே, இந்தப் புயலும், எப்போது வருகிறது, எங்கே நகருகிறது என்று யாராலும் புரிந்து கொள்ள முடியாது. இந்தப் புயல் உண்மையில் புயலா, இல்லை வெறும் பயலா என்று புரியாமல் பல வானியல் ஆய்வாளர்கள் இன்றளவ்விலும் குழம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், இந்த வகைப் புயல்கள், தமிழ்நாடு மட்டுமல்லாமல், தேசிய அளவிலும் நகர்வதால், இந்தப் புயல்களை தேசியப் புயல் என்று வானியல் ஆய்வாளர்கள் வகைப்படுத்துகின்றனர்.

இந்த தேசிய வகைப் புயல்கள், எப்போதுமே பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் சிறு சிறு புயல்களாக இருக்கும் தன்மை கொண்டவையாம். இந்த சிறு சிறு புயல்கள், ஒன்றோடு ஒன்று மோதி, எந்த வகையிலும் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் கடைசியில் வலுவிழந்து போகக்கூடிய தன்மை பெற்றவை.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் புயல்:

இந்தப் புயல், அவ்வப்போது, பெரும் காற்றை எழுப்பி சத்தமிடும். ஆனால், சத்தத்தை உண்டுபண்ணும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ஏன், இது ஒருபோதும் கடலை கடந்ததில்லை என்பது இதன் வரலாறு. அதனாலேயே இதனால் பாதிப்பு இல்லை என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.

இந்தப் புயல் அவ்வப்போது, தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய ‘காமராஜ் புயலை’ நினைவுபடுத்தும். ஆனால் காமராஜ் புயலுக்கும் இதற்கும் கடுகளவு கூட சம்பந்தம் கிடையாது என்பதை தன்னுடைய நடவடிக்கைகளில் இருந்து அப்பட்டமாக வெளிப்படுத்திவிடும்.

அவ்வப்போது, சூறைக் காற்றுடன் பெரும் ஓசை எழுப்பவில்லை என்றால், தன்னை வானிலை ஆய்வாளர்களும் பொதுமக்களும் கண்டுகொள்ளவில்லை என்கிற நினைப்பிலேயே இது, அவ்வப்போது பெரும் சத்தத்தை கிளப்பும். 2009-ல் இந்த ’ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்’ என்ற புயலை, ’முத்துக்குமார்’ என்ற ஒரு பெரும் புயல் இருந்த இடம் தெரியாமல் செய்ததும் அப்படியே சந்தடியில்லாமல் அடங்கிக்கிடக்கிறது.

ராஜ்யசபா என்ற சக்தியைக் கொண்டு தன்னை டெல்லியில் மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ளலாமா என்று, இந்தப் புயல் மீண்டும் லேசாக தலைதூக்கி இருக்கிறது. இருந்தாலும், கூடவே இருக்கும் மற்றப் புயல்கள் இதன் தலையில் கருணாநிதி புயல் மூலமாக கல்லைத் தூக்கிப் போட, சத்தமில்லாமல் மீண்டும் அடங்கி விட்டதாம் இந்தப் புயல்.

தமிழக சி.பி.எம். புயல்:

தமிழ்நாட்டின் மிக மிக பழமையான புயல்களில் இதுவும் ஒன்று. இது ஒரு பலமான புயல் என்று தோற்றத்திற்கு தோன்றினாலும், இந்தப் புயல், மேற்கு வங்கம் மற்றும் கேரள கரையோரமே பெரும்பாலான நேரங்களில் மையம் கொண்டிருக்கும். அவ்வப்போது இடியுடன் கூடிய மழையை வர வைத்தாலும், இந்தப் புயல் பெரும்பாலான நேரங்களில் தமிழ்நாட்டில் வலுவிழந்தே இருந்திருக்கிறது.

இந்தப் புயலால் அவ்வப்போது லேசான சாரலை வரவைக்க முடிந்திருக்கிறதே தவிர, வேறு கடுமையான பாதிப்புகளளை ஏற்படுத்தியதே இல்லை. இந்தப் புயல் வலுவாக மையம் கொண்டிருந்த மேற்கு வங்கத்தில் கூட, ’மம்தா’ என்ற புதிய புயல் சமீபத்தில் தாக்குதல் நடத்த, பெட்டிப் பாம்பாக கடலுக்குள்ளேயே அடங்கியிருக்கிறதாம் இந்தப் புயல். இனி இந்தப் புயல், மேலெழும்பி வர வேண்டும் என்றால், புதிய சக்தி ஏதேனும் தேவைப்படும் என்கிறார்கள் வானியல் ஆய்வாளர்கள்.

தமிழக சி.பி.ஐ. புயல்:

இதுவும், தமிழகத்தின் பழமையான புயல்களுள் ஒன்றுதான். இந்தப் புயல், மிகப் பழமையான புயல்களுள் ஒன்றாய் இருந்தாலும், ’தமிழக சி.பி.எம்’ என்ற புயலுக்கு எப்போதும் துணைப் புயலாகவே இருந்து வந்திருக்கிறது.

இந்தப் புயல், ’தமிழக சி.பி.எம்’ என்ற புயலுக்கு, துணைப் புயல் அல்ல என்று காட்டிக் கொள்வதற்காக, பெரும் பிரயத்தனம் செய்தாலும், இது சி.பி.எம்-மின் வால்ப் புயலாகவே, வானியல் ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.

கருணாநிதி புயல்:

தமிழகத்தை மிக மிக மோசமான பாதிப்புக்குள்ளாக்கியதில், இந்தப் புயல் மிக மிக முக்கியமான புயல். தஞ்சை அருகே, திருக்குவளை என்ற இடத்தில் இந்தப் புயல் உருவானதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். முதலில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, மெல்ல மெல்ல வலுவடைந்து, இன்று தமிழகம் முழுவதையும் இந்தப் புயல் ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பதாக வானியல் ஆய்வாளர்கள் போயஸ் தோட்டம் பகுதியிலிருந்து கருத்து தெரிவிக்கிறார்கள்.

திருக்குவளையில் உருவாகி, மெல்ல, மெல்ல வடக்கு நோக்கி நகர்ந்து, இன்று வங்காள விரிகுடாவின் அருகே, மையம் கொண்டிருக்கிறது. இந்தப் புயல், தன்னுடைய அசாத்திய வலிமையால், தமிழ்நாட்டில், ஜனநாயக சக்திகள் என்று அழைக்கப்படும் அனைத்தையும், அனைத்து பத்திரிகைகளையும்கூட எளிதாக வளைத்து, தன்னுள் போட்டுக் கொண்டதாக இதுகுறித்து புகார் பட்டியல் வாசிக்கிறது இதன் உடன்பிறவா இன்னொரு புயலான வைகோ புயல்.

இந்த ’கருணாநிதிப் புயல்’ சென்னையில் மையம் கொண்டிருந்த போதே, தன்னுடன் பலப் பல குட்டிப் புயல்களை உருவாக்கியது. இந்தக் குட்டிப் புயல்கள், ’கருணாநிதிப் புயலை’ விட, தமிழகத்துக்கு அதிக சேதம் விளைவித்தன என்று போயஸ் தோட்டத்துப் புயல் அவ்வபோது அழுது அரற்றுவதை தடுக்க முடியவில்லையாம். பல்வேறு குட்டிப் புயல்களும் சேர்ந்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியையும், அதிக சேதத்தையும் விளைவித்துள்ளன என்று இடியோசையாக முழங்குகிறார்கள் வானிலை ஆய்வார்கள், தாயகத்தில் ஒதுங்கியபடியே.

இந்தப் புயல் எப்போது கரையைக் கடக்கும், எப்போது நமக்கெல்லாம் விமோசனம் பிறக்கும் என்று, தமிழக மக்கள் வேண்டாத நாளில்லை என்கிறது ஜெயலலிதா புயல். ஆனாலும், இந்தப் புயல் இப்போதைக்கு கரையை கடக்காது என்று வானியல் ஆய்வர்கள் அடித்து ஆரூடம் சொல்கிறார்கள்..


மற்ற புயல்களுக்கு இல்லாத ஒரு குணம் இந்தப் புயலுக்கு உண்டு. மற்ற புயல்கள் வந்து, மையம் கொண்டு, போதுமான சேதாரங்களை விளைவித்து விட்டு நகர்ந்து விடும். ஆனால், இந்தப் புயல், தமிழகத்தில் உள்ள பல்வேறு வானியல் ஆய்வறிஞர்களான, ஜெகதரட்சகன், கமலஹாசன், ரஜினிகாந்த், வாலி, வைரமுத்து, போன்றவர்கள் எப்போதும் இந்தப் புயலைப் பற்றிப் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்பும் தன்மை கொண்டதாக இருப்பதால், இந்தப் புயலைச் சுற்றியே இந்த வானிலை ஆய்வாளர்கள் திரிந்து கொண்டிருப்பதை வாடிக்கையாக்கி இருக்கிறார்களாம்.


இப்படிப்பட்ட வானிலை ஆய்வாளர்களையெல்லாம் தொடர்ந்து தன்னகத்தே வைத்துக் கொள்வதற்காக மேலவை என்ற ஜால்ரா புயல் அரங்கத்தை விரைவில் அமைத்துக் கொள்ளவும், இந்த கருணாநிதி புயல் படாதபாடு படுவதாக தெரிவிக்கிறது போயஸ் தோட்டத்து வானிலை ஆய்வு மையம்.


இதனால் இந்தப் புயல், வாரத்தில் ஏழு நாட்களும் நேரு உள்விளையாட்டு அரங்கம், வள்ளுவர் கோட்டம், காமராஜர் அரங்கம், சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு கட்டிடம் போன்ற இடங்களில் மாலை நேரங்களிலும், காலையில், புதிய தலைமைச் செயலக கட்டிட வளாகத்திலும் மையம் கொண்டிருப்பதை வழக்கமாக்கி விட்டதாம்.

அடுத்த மாதம் இந்தப் புயல்... வடக்கு நோக்கி நகர்ந்து, கோவை கொடீசியா அரங்கில், ஒரு வார காலம் மையம் கொண்டிருக்கும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவரை இருந்தை விட, கடந்த 2006-ம் ஆண்டிலிருந்து இந்தப் புயலும், இதனுடன் இருக்கும் குட்டிப் புயல்களும் விளைவித்த சேதம் அதிகம் என்பதால், எப்போது இந்தப் புயல் கரையைக் கடக்கும் என்பதில் தமிழக மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு இருப்பதாக போயஸ் தோட்டம் பகுதியில் ஒதுங்கிய வானிலை ஆய்வாளர்கள் அங்கலாக்கின்றனர்.


ஜெயலலிதா புயல்:

இந்தப் புயல், 1991-ம் ஆண்டு, முதன் முதலில் தமிழகத்தை பலமாகத் தாக்கியது. இந்தத் தாக்குதலில் தமிழகம் அடைந்த சேதத்துக்கு அளவே இல்லை. 1991-ம் ஆண்டு, தமிகத்தில் மையம் கொண்டிருந்த இந்தப் புயல், ஐந்து ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டிற்கு பலத்த சேதத்தை உருவாக்கியது.


இந்தப் புயலின் சிறப்பம்சம், துணைப் புயல் இல்லாமல் கடலை விட்டு வெளியே வரவே வராது. 1991-ம் ஆண்டிலிருந்து, 1996-ம் ஆண்டு வரை, இந்தப் புயல் விளைவித்த சேதங்களை விட, இதன் உடன் இருக்கும் துணைப் புயலும், அந்தத் துணைப் புயலுக்கு, துணையான மற்ற புயல்களும் விளைவித்த சேதமே மிக அதிகம் என்று ஆய்வாளர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.


1996-ம் ஆண்டு, ’கருணாநிதிப் புயல்’ வந்து, இந்தப் புயலை வலுவிழக்கச் செய்தது. வலுவிழக்கச் செய்ததும், இந்தப் புயல், மீண்டும் தமிழகத்தை தாக்க வாய்ப்பே இல்லை என்று வானியல் ஆய்வர்கள் தெரிவித்த கருத்தை பொய்யாக்கும் விதமாக, மீண்டும் பலமாக தமிழகத்தை 2001-ம் ஆண்டு தாக்கியது. அந்தத் தாக்குதலில், ’கருணாநிதிப் புயல்’ நிலை குலைந்து போனது. 2001-ம் ஆண்டு மீண்டும் தமிழகத்தில் மையம் கொண்ட ஜெயலலிதா புயல், அரசு ஊழியர் குடியிருந்த பகுதிகளில் பலத்த சேதத்தை விளைவித்ததால், கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்க தொடங்கியது. 2006-ம் ஆண்டு, ’கருணாநிதிப் புயல்’ மீண்டும் இந்தப் புயலை வலுவிழக்கச் செய்து, தமிழகத்தில் இடியுடன் கூடிய பலத்த சேதத்தை ஏற்படுத்தத் தொடங்கி, இன்றுவரை இடியை கிளப்பிக் கொண்டே இருக்கிறது..


இந்த ’ஜெயலலிதா புயல்’ மீண்டும் தமிழகத்தில் மையம் கொள்ள வாய்ப்பு இருப்பதாக பெசண்ட் நகர் ஏரியாவிலிருந்து வானியல் ஆய்வாளர்கள் ஆசையை வெளிப்படுத்துகிறார்கள். 1996-ல், இந்தப் புயல் மீண்டும் தமிழகத்தை தாக்க வாய்ப்பே இல்லை என்ற அறிஞர்களின் கூற்றை பொய்யாக்கி, தமிழகத்தை 2001-ல் தாக்கியது போலவே மீண்டும் நடக்கக்கூடும் என்றும் நடராஜராக நர்த்தனமாடி தங்கள் கருத்தைத் தெரிவிக்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.


இந்தப் புயல்,பெரும்பாலான நாட்களில், கொடநாடு போன்ற மலைப் பிரதேசங்களில் மையம் கொண்டிருப்பதோடு, அவ்வபோது சிறுதாவூரிலும் மையம் கொள்வதால், சட்டென வலுவிழந்து தமிழகத்தை தாக்கும் வாய்ப்பு இல்லாமல் போகிறது என்றும் புவியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இந்தப் புயல், மீண்டும் பெரும் புயலாக வந்து, ’கருணாநிதிப் புயலை’ வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்றால், கூட இருக்கும் சக புயல்களை அனுசரிப்பதோடு, தாக்கவேண்டும் என்கிற ஒரே இலக்கோடு கடலிலிருந்து புறப்பட்டு வந்து கடலைக் கடக்க வேண்டும் என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள். அது நடந்தால், இந்தப் புயலுக்கு ‘லைலாவுக்கெல்லாம் லைலா...’ என்று பெயர் சூட்டுவோம் என்றும் சொல்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.



சவுக்கு

Tuesday, May 18, 2010

வாருங்கள் ஞானதேசிகன்.


அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ஞானதேசிகன் அவர்களே,
முதலில் உங்களுக்கு உள்துறை செயலாளராக நியமிக்கப் பட்டிருக்கும் உங்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்.

உங்களுக்கு சவுக்கின் அன்பு வணக்கங்கள். நீங்கள் யாரென்று சவுக்குக்கு தெரியாது. ஆனால் நீங்கள் ஒரு ஐஏஎஸ் ஆபீசர் என்பது தெரியும். ஐஏஎஸ் ஆபீசர்கள் என்றால் சவுக்குக்கு பிடிக்காதே என்று தயவு செய்து நினைக்காதீர்கள். சவுக்குக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் என்ற எந்த பாகுபாடும் கிடையாது.


சவுக்குக்கு தெரிந்ததெல்லாம் மனிதர்கள் தான். மனிதர்கள் என்றால், அத்தனை மனிதர்களும். இன்று தமிழக அரசில் இருக்கும் சில அதிகாரிகள், திராவிட முன்னேற்றக் கழக மக்களை மட்டும், மனிதர்கள் என்று கருதுகிறார்கள். மற்றவர்கள் எல்லாம், மாக்கள் என்று கருதுகிறார்கள். ஆனால் சவுக்குக்கு, அனைவரும் மனிதர்களே.

உங்களை குறிப்பாக வரவேற்க சவுக்குக்கு, பல்வேறு காரணங்கள் உண்டு. அதில் முக்கியமான காரணம், இது வரை உள் துறை செயலாளராக இருந்த மாலதி, ஐஏஎஸ் ஆபிசராக அல்ல, இது வரை ஒரு மனித ஜென்மமாக கூட செயல்பட்ட தில்லை என்பதே சவுக்கின் அனுபவம்.


மாலதி மட்டுமல்ல, தமிழகத்தில் பல்வேறு அதிகாரிகள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வட்டச் செயலாளர்கள் போலத்தான் இது வரை செயல்பட்டு வந்ததார்கள், இதற்கெல்லாம் காரணம், கருணாநிதியின் அடங்காத பிடிவாதம் என்று வறட்டுக் காரணம் கூறுவார்கள். ஆனால், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், இந்திய மக்களுக்கும், அரசியல் சட்டத்திற்கும், கருணாநிதியை விட கடமைப் பட்டவர்கள் அல்லவா ? தமிழக மக்களும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும், கருணாநிதியை விட பெரியவை அல்லவா ?

ஜெயலலிதா ஆட்சியில் இருந்தால், அதிமுக தொண்டர் போல செயல்படுவதும், கருணாநிதி ஆட்சியில் இருந்தால், திமுக உடன் பிறப்பு போல செயல்படுவதும், அகில இந்தியப் பணி அதிகாளிகளுக்கு அழகல்ல. ஆனாலும், மாலதி உள்துறை செயலாளராக இருந்த காலம் வரையில், அவர் கழக உடன் பிறப்பாக மட்டும் அல்ல, கருணாநிதி குடும்பத்தின் ஒரு அங்கமாகவும், கருணாநிதியின் நம்பிக்கைக்கு பாத்திரமான, அடியாள் போலவுமே செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

இவ்வாறான செயல்பாடுகள், மாலதிக்கு, தலைமைச் செயலாளர் பதவியையும், கருணாநிதியின் நம்பிக்கையையும் பெற்றுத் தந்திருக்கக் கூடும். ஆனால், இந்திய அரசியல் அமைப்பின் பாலும், இந்திய மக்களின் பாலும், உளமார்ந்த அன்போடும், நேர்மையோடும், பணியாற்றுவேன் என்ற உறுதியில் இருந்து மாலதி தவறி விட்டார் என்பதே உண்மை.

மாலதி போன்ற ஐஏஎஸ் அதிகாரிகள், தாங்கள் ஐஏஎஸ் அதிகாரிகள் என்பதை மறந்து, அன்றைய ஆட்சியாளர்களின் ஏவல் பணியாளர்களாக மாறிப் போவது, இந்த ஜனநாயகத்தின் மிகப் பெரிய சாபக் கேடு.

ஆனால், இதையும் தாண்டி, ஏதாவது ஒரு வகையில் ஒரு நம்பிக்கை கீற்று, ஒரு நம்பிக்கை ஒளி, இருந்து கொண்டுதான் இருக்கிறது. இது வரலாறு நெடுக இருந்தே வந்திருக்கிறது.
கிறித்துவ மதத்தின் ஆதிக்கத்தில் உலகமே இருந்த போதும், உலகத்தை படைத்தது, ஏசு கிறிஸ்து என்ற பொய்யை உலகத்தை நம்ப வைக்க, தேவாலயங்களும், மிக பலம் வாய்ந்த பாதிரியார்களும் முயற்சி செய்து, அதில் வெற்றி பெற்ற போதும், உலகம் உருண்டை என்று ஒரு கலகக் குரல் ஒலிக்கத் தான் செய்தது. அந்தக் குரல் வரலாறு நெடுக ஒலித்துக் கொண்டேதான் இருக்கும். அதை யார் நினைத்தாலும், தடுக்க இயலாது. சர்வ வல்லமை பொருந்திய கருணாநிதி நினைத்தால் கூட.

அதைப் போல, மாலதி, உள் துறையின் செயலாளராக, கடந்த நான்கு ஆண்டுகளாக இருந்து, எவ்வளவோ, நல்ல காரியங்களைச் செய்திருக்க முடியும். எத்தனையோ குடும்பங்களில் ஒளியேற்றி வைத்திருக்க முடியும். ஆனால், மாலதி செய்ததெல்லாம், கருணாநிதி என்ற கயவனின் கையாளாக, அடியாளாக, ஏவலாளாக, மனசாட்சி இல்லாத பதராக, கருணாநிதியை விட மிகவும் மோசமான ஒரு அரசியல்வாதியாகவே இத்தனை ஆண்டு காலம் செயல்பட்டு வந்தார்.

இப்போது உங்களை உள்துறை செயலாளரா நியமித்திருப்பதும், ஏதோ, நீங்கள் ஒரு திறமையான ஐஏஎஸ் ஆபீசர் என்பதால் அல்ல. நீங்கள் மாலதியை விட, மிகுந்த விசுவாசமான ஒரு ஏவலாளாக கருணாநிதிக்கு வேலை செய்வீர்கள் என்று, யாரோ, உங்கள் சார்பாக கருணாநிதிக்கு சொல்லியிருப்பதால் தான். ஆனாலும், உள் துறை செயலாளர் என்ற இந்த பதவி மிகுந்த முக்கியமான பதவி.

இப்பதவியை நல்ல முறையில் பயன் படுத்தி, உண்மையில் உங்களுக்கு தங்கள் வரிப் பணத்தில் இருந்து ஊதியம் வழங்கம் அந்த மக்களுக்கு விசுவாசமாக செயல்படலாம். இல்லை, ஊரை அடித்து உலையில் போட்டு, தன் குடும்பத்தை மட்டுமே நேசிக்கும் கருணாநிதிக்கு விசுவாசமாகவும் செயல்படலாம்.

இதில் எப்படிப் பட்ட உள்துறை செயலாளராக நீங்கள் வரலாற்றில் பதிவு செய்யப் படுவீர்கள் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் ஞானதேசிகன். உங்கள் மீது சவுக்கு மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறது. வீணாக்கி விடாதீர்கள். குறிப்பாக, உளவுத் துறையில் இருக்கும் ஜாபர் சேட்டை நம்பாதீர்கள். அவர் உங்களை மிரட்டக் கூடும். உங்கள் தொலைபேசியை ஒட்டுக் கேட்கக் கூடும். உங்களுக்கு ஏதேனும் பலவீனம் இருந்தால், அதை பயன்படுத்தி, உங்களை EXPLOIT செய்யக் கூடும்.

அதற்கெல்லாம் இடம் கொடுக்காதீர்கள் ஞானதேசிகன். ஜாபர் சேட், ஒரு, நயவஞ்சக நரி என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களை நம்ப வைத்துக் கழுத்தறுக்கக் கூடும்.

உங்கள் பணி சிறக்க சவுக்கின் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஏழை மக்களுக்கும், உழைப்பாளி மக்களுக்கும், குறிப்பாக, மக்களுக்காக பணியாற்றுங்கள். வாழ்த்துக்கள்.




சவுக்கு