Wednesday, June 30, 2010

அனாதையாக 560 பேர் .. .. ..




தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்ற புகார் எழுந்தபோது, டக்ளஸ் தேவானந்தா சொன்ன பதில், 1987ல் ராஜீவ் காந்தியும் ஜெயவர்த்தனேவும் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் படி, அனைத்துக் குற்றவாளிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கப் பட்டு விட்டது என்பதுதான்.

இவரின் கூற்றுப் படி அனைத்துக் குற்றவாளிகளும் மன்னிக்கப் பட்டு விட்டார்களா ?

560 இலங்கைத் தமிழர்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக இலங்கைச் சிறைகளில் விசாரணைச் சிறையாளிகளாக இருந்து வருகிறார்கள் என்று சவுக்குக்கு பிரத்யேகமாக தகவல்கள் வந்துள்ளது.

இலங்கையில் மட்டக்களப்பு, திரிகோணமலை, யாழ்ப்பாணம், அனுராதபுரம், பபுல்லா, கண்டி போகாம்பரா ஆகிய இடங்களில் சிறைச்சாலைகள் உள்ளன. இது தவிர, கொழும்பு நகரில் மட்டும், வெளிக்கடை, நியூ மேகசின் மற்றும், விசாரணைச் சிறை என்று மூன்று சிறைகள் உள்ளன.

இந்தச் சிறைச்சாலைகளில் 560 தமிழர்கள், விசாரணைச் சிறையாளிகளாக எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப் பட்டுள்ளனர். இந்த 560 தமிழர்களைப் பற்றியும், வெளியுலகம் அறியாது. இவர்கள், சமாதான காலங்களில் கைது செய்யப் பட்டவர்கள். விடுதலைப் புலிகளாகவோ, போராளிக் குழுக்களைச் சேர்ந்தவர்களாகவோ இருந்தால், இவர்கள் எப்போதோ இலங்கை ராணுவத்தாலும், உளவுப் படையாலும் கொன்றழிக்கப் பட்டிருப்பார்கள்.




இவர்கள் அனைவரும், தேநீர்க் கடைகளிலும், உணவு விடுதிகளிலும், தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் போதும், கைது செய்யப் பட்டவர்கள். “ஆள் பாக்க கடினமாக இருந்தால் கூட பிடித்துக் கொண்டு போவான்“ என்று கூறுகிறார்கள். ஒரு நபரின் தோற்றம் சற்று கரடு முரடாக இருந்தால் கூட பிடித்துக் கொண்டு போய் விடுவார்களாம். சிங்களம் பேசத் தெரியவில்லை என்பதற்கெல்லாம் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

கொழும்பில் உள்ள நியூ மேகசின் சிறையில் 100 கைதிகள் உள்ளனர். இவர்களைத் தவிர 51 பெண்கள் இந்தச் சிறையில் உள்ளனர். இந்த பெண்களில் ஆறு பேருக்கு குழந்தைகள் உள்ளன. இவற்றுள் 6 மாதக் குழந்தையும், ஒரு வயதுக் குழந்தையும் உண்டு. இந்தப் பெண்களுள் குண்டு வீச்சில் கால்களை இழந்தவர்களும், கைகளை இழந்தவர்களும் உள்ளனர்.


எட்டு ஆண்டுகளாய் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருக்கும் இவர்கள் மீது, இலங்கை காவல்துறை இது வரை எந்தக் குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்ய வில்லை. 14 நாட்களுக்கு ஒரு முறை நீதிமன்றம் சென்று நீதிபதி முன்பு இவர்களின் காவல் நீட்டிக்கப் படுகிறது.



ஒவ்வொரு முறையும் காவல் நீட்டிப்பு செய்யப் படும் போதும், காவல்துறை, வழக்கின் புலனாய்வு இன்னும் முடியவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிப்பதை, நீதிபதியும் ஏற்றுக் கொண்டு, விசாரணை நீட்டிப்புச் செய்து வருகிறார். இந்தக் கைதிகள், நீதிபதியிடம் எட்டு ஆண்டுகளாய் புலனாய்வு முடியவில்லை என்று காவல்துறை வேண்டுமென்றே சிறையில் அடைத்து தங்களை அலைக்கழிப்பதாக இவர்கள் கூறும் புகார்களுக்கு, உங்களை விடுவிக்க எனக்கு அதிகாரம் இல்லை என்பதையே காரணமாக கூறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



மே 2009ல் போர் முடிந்தவுடன், இலங்கை அதிபர் ராஜபக்ஷே சிறையில் உள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு என்றும், பிணையில் விடுவிக்கப் படுவார்கள் என்றும் கூறுவது, இந்த 560 நபர்களுக்கு பொருந்தாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த 560 பேரின் உறவினர்கள், பெரும்பாலும் போரில் இறந்து விட்டதாலும், மீதம் உள்ளவர்கள் முள்வேலி முகாமுக்குள் அடைக்கப் பட்டு விட்டதாலும், சிறையில் உள்ள இவர்களைப் பார்ப்பதற்கு யாருமே வருவதில்லை. பார்க்க யாரும் வராததால், இரண்டு ஆண்டுகளாய் ஒரே துணியை உடுத்தியுள்ளனர்.


31 வயதான ஒரு இளைஞரின் தந்தை ஒரு காலை இழந்தவர். இவரின் தாயார், இறந்த போது இறுதிச் சடங்கு செய்வதற்கு கூட இவர் அனுமதிக்கப் படவில்லை. நான்கு ஆண்டுகளாய் இச்சிறையில் இருக்கும் ஒருவரின் மனைவி இறந்த போது, அவரும் இறுதிச் சடங்குகள் செய்ய அனுமதிக்கப் படவில்லை. இவரின் ஒரு மகன் முள்வேலி முகாமில் அடைக்கப் பட்டுள்ளார். மகள், உறவினர் ஒருவரின் பராமரிப்பில் ஒரு ஹாஸ்டலில் தங்கியுள்ளார்.



லண்டனைச் சேர்ந்த புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் ஒருவர் தங்களது உறவினரை பார்ப்பதற்காக இலங்கைக்கு வந்துள்ளார். இவரையும் சந்தேகப் பட்டு, இந்த நியூ மேகசின் சிறையில் அடைத்து வைத்துள்ளது இலங்கை காவல்துறை. பிரித்தானிய குடிமனான இவரை சிறையில் இருந்து மீட்டெடுக்க இங்கிலாந்து தூதரகமும் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்பதுதான் சோகம்.


தங்கள் குடும்ப உறுப்பினர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்ற விபரமும் தெரியாமல், சிறையை விட்டு வெளியே வருவோமா இல்லையா என்ற விபரமும் தெரியாமல் அலைக்கழிக்கப் பட்டு, மிகுந்த மனவேதனையில் இருக்கிறார்கள்.
இலங்கை காவல்துறை இந்தச் சிறையாளிகளின் வழக்கை விசாரித்து முடிக்காமல் தொடர்ந்து இழுத்தடிப்பதற்கான நோக்கம், காவல்துறையிடம் எவ்வித ஆதாரங்களும் இல்லை என்பதுதான் என்று கூறுகிறார்கள்.


இவர்களுக்காக புலம் பெயர்ந்த தமிழர்கள், ஏதாவது செய்ய வேண்டும் என்பதே இவர்களின் வேண்டுகோள்.


இந்த பதிவை படிக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள், தங்கள் நாடுகளில் உள்ள வழக்கறிஞர்கள் மூலமாகவோ, ஏதாவது அமைப்பு மூலமாகவோ, இந்த 560 அனாதைகளுக்காக குரல் கொடுக்கவும், சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு இந்த அப்பட்டமான மனித உரிமை மீறலை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே சவுக்கின் வேண்டுகோள்.



சவுக்கு

அனாதையாக 560 பேர் .. .. ..




தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்ற புகார் எழுந்தபோது, டக்ளஸ் தேவானந்தா சொன்ன பதில், 1987ல் ராஜீவ் காந்தியும் ஜெயவர்த்தனேவும் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் படி, அனைத்துக் குற்றவாளிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கப் பட்டு விட்டது என்பதுதான்.

இவரின் கூற்றுப் படி அனைத்துக் குற்றவாளிகளும் மன்னிக்கப் பட்டு விட்டார்களா ?

560 இலங்கைத் தமிழர்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக இலங்கைச் சிறைகளில் விசாரணைச் சிறையாளிகளாக இருந்து வருகிறார்கள் என்று சவுக்குக்கு பிரத்யேகமாக தகவல்கள் வந்துள்ளது.

இலங்கையில் மட்டக்களப்பு, திரிகோணமலை, யாழ்ப்பாணம், அனுராதபுரம், பபுல்லா, கண்டி போகாம்பரா ஆகிய இடங்களில் சிறைச்சாலைகள் உள்ளன. இது தவிர, கொழும்பு நகரில் மட்டும், வெளிக்கடை, நியூ மேகசின் மற்றும், விசாரணைச் சிறை என்று மூன்று சிறைகள் உள்ளன.

இந்தச் சிறைச்சாலைகளில் 560 தமிழர்கள், விசாரணைச் சிறையாளிகளாக எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப் பட்டுள்ளனர். இந்த 560 தமிழர்களைப் பற்றியும், வெளியுலகம் அறியாது. இவர்கள், சமாதான காலங்களில் கைது செய்யப் பட்டவர்கள். விடுதலைப் புலிகளாகவோ, போராளிக் குழுக்களைச் சேர்ந்தவர்களாகவோ இருந்தால், இவர்கள் எப்போதோ இலங்கை ராணுவத்தாலும், உளவுப் படையாலும் கொன்றழிக்கப் பட்டிருப்பார்கள்.




இவர்கள் அனைவரும், தேநீர்க் கடைகளிலும், உணவு விடுதிகளிலும், தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் போதும், கைது செய்யப் பட்டவர்கள். “ஆள் பாக்க கடினமாக இருந்தால் கூட பிடித்துக் கொண்டு போவான்“ என்று கூறுகிறார்கள். ஒரு நபரின் தோற்றம் சற்று கரடு முரடாக இருந்தால் கூட பிடித்துக் கொண்டு போய் விடுவார்களாம். சிங்களம் பேசத் தெரியவில்லை என்பதற்கெல்லாம் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

கொழும்பில் உள்ள நியூ மேகசின் சிறையில் 100 கைதிகள் உள்ளனர். இவர்களைத் தவிர 51 பெண்கள் இந்தச் சிறையில் உள்ளனர். இந்த பெண்களில் ஆறு பேருக்கு குழந்தைகள் உள்ளன. இவற்றுள் 6 மாதக் குழந்தையும், ஒரு வயதுக் குழந்தையும் உண்டு. இந்தப் பெண்களுள் குண்டு வீச்சில் கால்களை இழந்தவர்களும், கைகளை இழந்தவர்களும் உள்ளனர்.


எட்டு ஆண்டுகளாய் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருக்கும் இவர்கள் மீது, இலங்கை காவல்துறை இது வரை எந்தக் குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்ய வில்லை. 14 நாட்களுக்கு ஒரு முறை நீதிமன்றம் சென்று நீதிபதி முன்பு இவர்களின் காவல் நீட்டிக்கப் படுகிறது.



ஒவ்வொரு முறையும் காவல் நீட்டிப்பு செய்யப் படும் போதும், காவல்துறை, வழக்கின் புலனாய்வு இன்னும் முடியவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிப்பதை, நீதிபதியும் ஏற்றுக் கொண்டு, விசாரணை நீட்டிப்புச் செய்து வருகிறார். இந்தக் கைதிகள், நீதிபதியிடம் எட்டு ஆண்டுகளாய் புலனாய்வு முடியவில்லை என்று காவல்துறை வேண்டுமென்றே சிறையில் அடைத்து தங்களை அலைக்கழிப்பதாக இவர்கள் கூறும் புகார்களுக்கு, உங்களை விடுவிக்க எனக்கு அதிகாரம் இல்லை என்பதையே காரணமாக கூறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



மே 2009ல் போர் முடிந்தவுடன், இலங்கை அதிபர் ராஜபக்ஷே சிறையில் உள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு என்றும், பிணையில் விடுவிக்கப் படுவார்கள் என்றும் கூறுவது, இந்த 560 நபர்களுக்கு பொருந்தாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த 560 பேரின் உறவினர்கள், பெரும்பாலும் போரில் இறந்து விட்டதாலும், மீதம் உள்ளவர்கள் முள்வேலி முகாமுக்குள் அடைக்கப் பட்டு விட்டதாலும், சிறையில் உள்ள இவர்களைப் பார்ப்பதற்கு யாருமே வருவதில்லை. பார்க்க யாரும் வராததால், இரண்டு ஆண்டுகளாய் ஒரே துணியை உடுத்தியுள்ளனர்.


31 வயதான ஒரு இளைஞரின் தந்தை ஒரு காலை இழந்தவர். இவரின் தாயார், இறந்த போது இறுதிச் சடங்கு செய்வதற்கு கூட இவர் அனுமதிக்கப் படவில்லை. நான்கு ஆண்டுகளாய் இச்சிறையில் இருக்கும் ஒருவரின் மனைவி இறந்த போது, அவரும் இறுதிச் சடங்குகள் செய்ய அனுமதிக்கப் படவில்லை. இவரின் ஒரு மகன் முள்வேலி முகாமில் அடைக்கப் பட்டுள்ளார். மகள், உறவினர் ஒருவரின் பராமரிப்பில் ஒரு ஹாஸ்டலில் தங்கியுள்ளார்.



லண்டனைச் சேர்ந்த புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் ஒருவர் தங்களது உறவினரை பார்ப்பதற்காக இலங்கைக்கு வந்துள்ளார். இவரையும் சந்தேகப் பட்டு, இந்த நியூ மேகசின் சிறையில் அடைத்து வைத்துள்ளது இலங்கை காவல்துறை. பிரித்தானிய குடிமனான இவரை சிறையில் இருந்து மீட்டெடுக்க இங்கிலாந்து தூதரகமும் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்பதுதான் சோகம்.


தங்கள் குடும்ப உறுப்பினர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்ற விபரமும் தெரியாமல், சிறையை விட்டு வெளியே வருவோமா இல்லையா என்ற விபரமும் தெரியாமல் அலைக்கழிக்கப் பட்டு, மிகுந்த மனவேதனையில் இருக்கிறார்கள்.
இலங்கை காவல்துறை இந்தச் சிறையாளிகளின் வழக்கை விசாரித்து முடிக்காமல் தொடர்ந்து இழுத்தடிப்பதற்கான நோக்கம், காவல்துறையிடம் எவ்வித ஆதாரங்களும் இல்லை என்பதுதான் என்று கூறுகிறார்கள்.


இவர்களுக்காக புலம் பெயர்ந்த தமிழர்கள், ஏதாவது செய்ய வேண்டும் என்பதே இவர்களின் வேண்டுகோள்.


இந்த பதிவை படிக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள், தங்கள் நாடுகளில் உள்ள வழக்கறிஞர்கள் மூலமாகவோ, ஏதாவது அமைப்பு மூலமாகவோ, இந்த 560 அனாதைகளுக்காக குரல் கொடுக்கவும், சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு இந்த அப்பட்டமான மனித உரிமை மீறலை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே சவுக்கின் வேண்டுகோள்.



சவுக்கு

Sunday, June 27, 2010

பழ.கருப்பையா வீட்டின் மீது தாக்குதல். காட்டுமிராண்டிகளின் காலம்.




பழ.கருப்பையா….

தமிழகத்தின் மிகச் சிறந்த கட்டுரையாளர். வீரியமான எழுத்துக்குச் சொந்தக் காரர். இவர் கட்டுரைகள் படிப்பவர்களின் ரத்தத்தை சூடேற்றும் தன்மை படைத்தன. இவர் எழுத்தில் சத்திய ஆவேசம் உண்டு. இவரின் கட்டுரைகள் தினமணி நாளேட்டில் வந்து மிகப் பிரபலமான வரவேற்பை பெற்றது. குறிப்பாக இலங்கைக்கு எம்பிக்கள் குழு சென்றதில், திருமாவளவன் பங்கேற்று, ராஜபக்ஷேவுடன் சிரித்து, குலாவி வந்தது குறித்து, பழ.கருப்பையா எழுதிய கட்டுரை, திருமாவளவனை நெளியச் செய்தது.

இந்தக் கட்டுரைக்குப் பிறகே, திருமாவளவன் வேறு வழியின்றி, ராஜபக்ஷே சகோதரர்களை கைது செய் என்று ஒப்புக்கு ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தினார்.


இன்று, மாலை பழ.கருப்பையாவின் வீட்டில் திமுக ரவுடிக் கும்பல் புகுந்து, அவர் வீட்டை சேதப்படுத்தி, காரை உடைத்து, பெண்களை தாக்கி, அவருக்கும் காயம் ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு காரணம் என்ன ? பழ.கருப்பையா அதிமுகவின் இலக்கிய அணித் தலைவராக உள்ளார்.

கடந்த வாரம் ஜெயா டிவி நேர்முகம் நிகழ்ச்சியில், பேட்டியளித்த பழ.கருப்பையா கருணாநிதியை விமர்சித்து பேசினார். முள்வேளி முகாமில் தமிழர்களை அடைத்து வைத்து விட்டு, கோவையில் என்ன கொண்டாட்டம் என்று கேட்டார். முக்கிய தமிழறிஞர்களை அழைக்காமல், சினிமாக் காரர்களை அழைத்து, கூத்தடித்துக் கொண்டிருக்கிறார் கருணாநிதி என்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் பழ.கருப்பையா பேசிய அனைத்துமே துக்ளக் இதழில் கட்டுரையாக வந்தவைதான்.


கருணாநிதி நடத்தும் குடும்ப மாநாட்டிற்கு, உணர்ச்சியற்ற சிவத்தம்பிகள் வருவார்கள், ஆனால் தமிழ்த்தாய் வரமாட்டாள் என்று எழுதினார்.


இந்தக் கட்டுரை திமுக உடன்பிறப்புகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்காக, திமுக உடன் பிறப்புகள், கோவை மாநாட்டிலிருந்து பிரத்யேகமாக சென்னைக்கு அனுப்பப் பட்டு, செம்மொழி மாநாடு முடிவதற்குள் பழ.கருப்பையா மீது இந்தத் தாக்குதலை நடத்த வேண்டும் என்ற திமுக மேலிட உத்தரவின் அடிப்படையிலேயே இத்தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


இந்த வன்முறைக் கலாச்சாரம் திமுகவுக்கும் புதிதில்லை, அதிமுகவுக்கும் புதிதில்லை.
1991 முதல் 1996 வரை நடைபெற்ற செல்வி.ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தின் போது, சுப்ரமணியன் சுவாமி மீதும், வழக்கறிஞர்கள் விஜயன், சண்முகசுந்தரம், தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன், ஆகியோர் மீது நடத்தப் பட்ட தாக்குதலை மறக்க முடியாது.

அப்போது, பரவலாக பத்திரிக்கைகளில் வந்த செய்தி, ஆட்சியை விமர்சித்தால், வீட்டுக்கு ஆட்டோ வரும் என்பது. இந்த தாக்குதல்களை முன்னின்று நடத்தியவர்கள், அப்போது அதிமுகவில் இருந்த எஸ்டி.சோமசுந்தரம் மற்றும், இப்போதும் அதிமுகவில் இருக்கும் மதுசூதனன் ஆகியோர்.


ஆங்கிலத்தில் ஒரு வழக்கு உண்டு. Paying back with their own coin என்று. அது போல, அதிமுக நடத்திய வன்முறை வெறியாட்டம், இப்போது அவர்கள் பக்கம் திரும்புகிறது. அதிமுக திமுகவிலிருந்து வந்ததுதானே….. ?


வன்முறை திமுகவிற்கு புதிதா என்ன ? ஒரே ஒரு கருத்துக் கணிப்பு நடத்தி அழகிரி கருணாநிதியின் வாரிசாக வேண்டும் என்று ஒரு சதவிகித மக்கள் மட்டுமே விரும்புகிறார்கள் என்ற ஒரே காரணதிற்காக, அந்த தினகரன் நாளிதழை நடத்தும், மாறன் சகோதரர்களை அடிக்காமல், அந்நாளிதழின் அப்பாவி ஊழியர்கள் மூவரை எரித்துக் கொன்றவர்கள் திமுகவினர்தானே ?


கட்சியில் மூத்தவராக இருப்பதால், தன்னை மதிக்க மாட்டேன்கிறார், கட்சிக்காரர்களை தன் பக்கம் இழுத்துக் கொள்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக, திமுக மாவட்டச் செயலரை வெட்டிக் கொன்று விட்டு, இவர்களே சென்று மலர்வளையமும் வைத்தது இதே திமுகவினர் தானே ?


ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், கருணாநிதிக்கு எதிராகவும் பேசிவிட்டார் என்பதற்காக, இயக்குநர் பாரதிராஜாவின் அலுவலகத்திற்குள் புகுந்து, கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்களை சூறையாடியது, இதே திமுகவினர் தானே ?


சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை திறப்பு நிகழ்ச்சியின் போது, கருணாநிதி பேசிக் கொண்டிருக்கும் போது, அமைதியான முறையில் கருப்புக் கொடி காட்டிய நான்கு வழக்கறிஞர்களை திமுக ரவுடிகள் சூழ்ந்து கொண்டு தாக்கியதையும், அதை படமெடுத்த ஊடகவியலாளர்களை திமுக ரவுடிகள் கடுமையாக தாக்கியதையும், தொலைக்காட்சிகள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பியதே ? தாக்கிய ரவுடிகளை கைது செய்வதை விட்டு விட்டு, தாக்கப் பட்ட வழக்கறிஞர்கள் மீதே வழக்கு போட்டு, கைது செய்யும்,

கருணாநிதியின் காட்டாட்சியில், பழ.கருப்பையாவை உயிரோடு விட்டு வைத்தார்களே என்று சந்தோஷப் படுகிறது, சவுக்கு. ஏனென்றால், இது காட்டுமிராண்டிகளின் காலம் அல்லவோ ?


இன்று பழ.கருப்பையாவை கொலை செய்திருந்தால் நம்மால் என்ன செய்திருக்க முடியும் ? இரண்டு நாள் துக்கம் கடைபிடிப்போம். கண்ணீர் அஞ்சலி என்று போஸ்டர் ஒட்டுவோம்.

செல்வி.ஜெயலலிதா கண்டித்து அறிக்கை விடுவார். உயர்நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று யாராவது பொது நல வழக்கு தொடர்வார்கள்.

ஒரு வாரம் கழித்து, அவரவர் அவரவர் வேலையை பார்க்க போய் விடுவோம்.
தேர்தல் வரும் நேரத்தில் இது எல்லாவற்றையும் வசதியாக மறந்து விட்டு, கவரில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று வாங்கி எண்ணிப் பார்த்து விட்டு, மீண்டும் கருணாநிதியை முதலமைச்சர் ஆக்குவோம்.

அதற்காக எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல், கருணாநிதியின் ஜால்ராக் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு, சொம்படிக்கலாமா ? இதைத் தவிர வேறு வழியேயில்லையா ? உயிர் வாழவே முடியாதா ?

வரலாறு நெடுக, அதிகாரத்தை எதிர்த்த கலகக் குரல்கள் ஒலித்தே வந்திருக்கின்றன.
அறிவியலின் தந்தை என்று அழைக்கப் படும், கலிலியோ 1500களில் நேரடியாக பைபிளுக்கும், சர்ச்சுக்கும் எதிராக கலகக் குரல் கொடுக்கவில்லையா ?




விஷத்தை அருந்திவிட்டு இறந்தாலும் இறப்பேன், ஆனால், வளைந்து கொடுக்க மாட்டேன் என்று சாக்ரட்டீஸ் உறுதியாக இல்லையா ?




கிறித்தவ மதத்தின் எதிர்ப்பையும் மீறி, சூரியனைச் சுற்றியே இவ்வுலகம் சுழல்கிறது என்று குரல் கொடுக்கவில்லையா கோப்பர்நிக்கஸ் ?





உலகை படைத்தவர் ஏசுகிறிஸ்து என்று பைபிள் கூவிக் கொண்டிருந்தாலும், உயிரிவளர்ச்சியைப் பற்றி நூல் எழுதவில்லையா சார்லஸ் டார்வின் ?



ஆகையால், ஆயிரம் கருணாநிதிகளும், ஆயிரம் அழகிரிகளும் வந்தாலும், நியாயத்தைப் பேசும் கலகக் குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்.


இல்லாத கடவுள் இறங்கி வந்தாலும், நியாயத்தைப் பேசுபவனின் குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்.


இந்தக் கருணாநிதிக்கும், அவரின் ரவுடிக் கூட்டத்திற்காகவும் தானே பாடி வைத்திருக்கிறான் பாரதி….



அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்றபோதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

பிச்சை வாங்கி உண்ணு, வாழ்க்கை பெற்று விட்ட போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சை கொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

நச்சை வாயிலே கொணர்ந்து நண்ப ரூட்டு போதனும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

பச்சை யூனினையந்த வேற்படைகள் வந்த போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே


சவுக்கு

பழ.கருப்பையா வீட்டின் மீது தாக்குதல். காட்டுமிராண்டிகளின் காலம்.




பழ.கருப்பையா….

தமிழகத்தின் மிகச் சிறந்த கட்டுரையாளர். வீரியமான எழுத்துக்குச் சொந்தக் காரர். இவர் கட்டுரைகள் படிப்பவர்களின் ரத்தத்தை சூடேற்றும் தன்மை படைத்தன. இவர் எழுத்தில் சத்திய ஆவேசம் உண்டு. இவரின் கட்டுரைகள் தினமணி நாளேட்டில் வந்து மிகப் பிரபலமான வரவேற்பை பெற்றது. குறிப்பாக இலங்கைக்கு எம்பிக்கள் குழு சென்றதில், திருமாவளவன் பங்கேற்று, ராஜபக்ஷேவுடன் சிரித்து, குலாவி வந்தது குறித்து, பழ.கருப்பையா எழுதிய கட்டுரை, திருமாவளவனை நெளியச் செய்தது.

இந்தக் கட்டுரைக்குப் பிறகே, திருமாவளவன் வேறு வழியின்றி, ராஜபக்ஷே சகோதரர்களை கைது செய் என்று ஒப்புக்கு ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தினார்.


இன்று, மாலை பழ.கருப்பையாவின் வீட்டில் திமுக ரவுடிக் கும்பல் புகுந்து, அவர் வீட்டை சேதப்படுத்தி, காரை உடைத்து, பெண்களை தாக்கி, அவருக்கும் காயம் ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு காரணம் என்ன ? பழ.கருப்பையா அதிமுகவின் இலக்கிய அணித் தலைவராக உள்ளார்.

கடந்த வாரம் ஜெயா டிவி நேர்முகம் நிகழ்ச்சியில், பேட்டியளித்த பழ.கருப்பையா கருணாநிதியை விமர்சித்து பேசினார். முள்வேளி முகாமில் தமிழர்களை அடைத்து வைத்து விட்டு, கோவையில் என்ன கொண்டாட்டம் என்று கேட்டார். முக்கிய தமிழறிஞர்களை அழைக்காமல், சினிமாக் காரர்களை அழைத்து, கூத்தடித்துக் கொண்டிருக்கிறார் கருணாநிதி என்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் பழ.கருப்பையா பேசிய அனைத்துமே துக்ளக் இதழில் கட்டுரையாக வந்தவைதான்.


கருணாநிதி நடத்தும் குடும்ப மாநாட்டிற்கு, உணர்ச்சியற்ற சிவத்தம்பிகள் வருவார்கள், ஆனால் தமிழ்த்தாய் வரமாட்டாள் என்று எழுதினார்.


இந்தக் கட்டுரை திமுக உடன்பிறப்புகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்காக, திமுக உடன் பிறப்புகள், கோவை மாநாட்டிலிருந்து பிரத்யேகமாக சென்னைக்கு அனுப்பப் பட்டு, செம்மொழி மாநாடு முடிவதற்குள் பழ.கருப்பையா மீது இந்தத் தாக்குதலை நடத்த வேண்டும் என்ற திமுக மேலிட உத்தரவின் அடிப்படையிலேயே இத்தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


இந்த வன்முறைக் கலாச்சாரம் திமுகவுக்கும் புதிதில்லை, அதிமுகவுக்கும் புதிதில்லை.
1991 முதல் 1996 வரை நடைபெற்ற செல்வி.ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தின் போது, சுப்ரமணியன் சுவாமி மீதும், வழக்கறிஞர்கள் விஜயன், சண்முகசுந்தரம், தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன், ஆகியோர் மீது நடத்தப் பட்ட தாக்குதலை மறக்க முடியாது.

அப்போது, பரவலாக பத்திரிக்கைகளில் வந்த செய்தி, ஆட்சியை விமர்சித்தால், வீட்டுக்கு ஆட்டோ வரும் என்பது. இந்த தாக்குதல்களை முன்னின்று நடத்தியவர்கள், அப்போது அதிமுகவில் இருந்த எஸ்டி.சோமசுந்தரம் மற்றும், இப்போதும் அதிமுகவில் இருக்கும் மதுசூதனன் ஆகியோர்.


ஆங்கிலத்தில் ஒரு வழக்கு உண்டு. Paying back with their own coin என்று. அது போல, அதிமுக நடத்திய வன்முறை வெறியாட்டம், இப்போது அவர்கள் பக்கம் திரும்புகிறது. அதிமுக திமுகவிலிருந்து வந்ததுதானே….. ?


வன்முறை திமுகவிற்கு புதிதா என்ன ? ஒரே ஒரு கருத்துக் கணிப்பு நடத்தி அழகிரி கருணாநிதியின் வாரிசாக வேண்டும் என்று ஒரு சதவிகித மக்கள் மட்டுமே விரும்புகிறார்கள் என்ற ஒரே காரணதிற்காக, அந்த தினகரன் நாளிதழை நடத்தும், மாறன் சகோதரர்களை அடிக்காமல், அந்நாளிதழின் அப்பாவி ஊழியர்கள் மூவரை எரித்துக் கொன்றவர்கள் திமுகவினர்தானே ?


கட்சியில் மூத்தவராக இருப்பதால், தன்னை மதிக்க மாட்டேன்கிறார், கட்சிக்காரர்களை தன் பக்கம் இழுத்துக் கொள்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக, திமுக மாவட்டச் செயலரை வெட்டிக் கொன்று விட்டு, இவர்களே சென்று மலர்வளையமும் வைத்தது இதே திமுகவினர் தானே ?


ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், கருணாநிதிக்கு எதிராகவும் பேசிவிட்டார் என்பதற்காக, இயக்குநர் பாரதிராஜாவின் அலுவலகத்திற்குள் புகுந்து, கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்களை சூறையாடியது, இதே திமுகவினர் தானே ?


சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை திறப்பு நிகழ்ச்சியின் போது, கருணாநிதி பேசிக் கொண்டிருக்கும் போது, அமைதியான முறையில் கருப்புக் கொடி காட்டிய நான்கு வழக்கறிஞர்களை திமுக ரவுடிகள் சூழ்ந்து கொண்டு தாக்கியதையும், அதை படமெடுத்த ஊடகவியலாளர்களை திமுக ரவுடிகள் கடுமையாக தாக்கியதையும், தொலைக்காட்சிகள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பியதே ? தாக்கிய ரவுடிகளை கைது செய்வதை விட்டு விட்டு, தாக்கப் பட்ட வழக்கறிஞர்கள் மீதே வழக்கு போட்டு, கைது செய்யும்,

கருணாநிதியின் காட்டாட்சியில், பழ.கருப்பையாவை உயிரோடு விட்டு வைத்தார்களே என்று சந்தோஷப் படுகிறது, சவுக்கு. ஏனென்றால், இது காட்டுமிராண்டிகளின் காலம் அல்லவோ ?


இன்று பழ.கருப்பையாவை கொலை செய்திருந்தால் நம்மால் என்ன செய்திருக்க முடியும் ? இரண்டு நாள் துக்கம் கடைபிடிப்போம். கண்ணீர் அஞ்சலி என்று போஸ்டர் ஒட்டுவோம்.

செல்வி.ஜெயலலிதா கண்டித்து அறிக்கை விடுவார். உயர்நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று யாராவது பொது நல வழக்கு தொடர்வார்கள்.

ஒரு வாரம் கழித்து, அவரவர் அவரவர் வேலையை பார்க்க போய் விடுவோம்.
தேர்தல் வரும் நேரத்தில் இது எல்லாவற்றையும் வசதியாக மறந்து விட்டு, கவரில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று வாங்கி எண்ணிப் பார்த்து விட்டு, மீண்டும் கருணாநிதியை முதலமைச்சர் ஆக்குவோம்.

அதற்காக எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல், கருணாநிதியின் ஜால்ராக் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு, சொம்படிக்கலாமா ? இதைத் தவிர வேறு வழியேயில்லையா ? உயிர் வாழவே முடியாதா ?

வரலாறு நெடுக, அதிகாரத்தை எதிர்த்த கலகக் குரல்கள் ஒலித்தே வந்திருக்கின்றன.
அறிவியலின் தந்தை என்று அழைக்கப் படும், கலிலியோ 1500களில் நேரடியாக பைபிளுக்கும், சர்ச்சுக்கும் எதிராக கலகக் குரல் கொடுக்கவில்லையா ?




விஷத்தை அருந்திவிட்டு இறந்தாலும் இறப்பேன், ஆனால், வளைந்து கொடுக்க மாட்டேன் என்று சாக்ரட்டீஸ் உறுதியாக இல்லையா ?




கிறித்தவ மதத்தின் எதிர்ப்பையும் மீறி, சூரியனைச் சுற்றியே இவ்வுலகம் சுழல்கிறது என்று குரல் கொடுக்கவில்லையா கோப்பர்நிக்கஸ் ?





உலகை படைத்தவர் ஏசுகிறிஸ்து என்று பைபிள் கூவிக் கொண்டிருந்தாலும், உயிரிவளர்ச்சியைப் பற்றி நூல் எழுதவில்லையா சார்லஸ் டார்வின் ?



ஆகையால், ஆயிரம் கருணாநிதிகளும், ஆயிரம் அழகிரிகளும் வந்தாலும், நியாயத்தைப் பேசும் கலகக் குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்.


இல்லாத கடவுள் இறங்கி வந்தாலும், நியாயத்தைப் பேசுபவனின் குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்.


இந்தக் கருணாநிதிக்கும், அவரின் ரவுடிக் கூட்டத்திற்காகவும் தானே பாடி வைத்திருக்கிறான் பாரதி….



அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்றபோதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

பிச்சை வாங்கி உண்ணு, வாழ்க்கை பெற்று விட்ட போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சை கொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

நச்சை வாயிலே கொணர்ந்து நண்ப ரூட்டு போதனும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

பச்சை யூனினையந்த வேற்படைகள் வந்த போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே


சவுக்கு

Saturday, June 26, 2010

ஏழைப் பங்காளர் டி.சுதர்சனம்.



நேற்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், காங்கிரஸில் முக்கியப் புள்ளியுமான திரு.டி.சுதர்சனம் அவர்கள், கோவையில் மாரடைப்பால் காலமானார் என்று செய்தி வந்துள்ளது.

பொதுவாக இறந்தவர்களை விமர்சனம் செய்யக் கூடாது என்ற ஒரு கிறுக்குத்தனமான அரசியல் மரபு இந்தியாவில் கடைபிடிக்கப் பட்டு வருகிறது.

“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்“

என்றுதானே கண்ணதாசன் சொல்லியிருக்கிறார் ?

ராஜீவ் காந்தி இறந்தவுடன், அவர் புனிதராகி விடுகிறார். போபர்ஸ் ஊழல், 4000 சீக்கியர்கள் வெட்டிப் படுகொலை செய்யப் பட்ட போது, ஆலமரத்தின் கீழே விழுந்தால் பூமி அதிரத்தான் செய்யும் என்ற ஆணவம், 20,000 பேரின் உயிர் போகக் காரணமாக இருந்த வாரன் ஆண்டர்சனை தப்ப விட்டது, ஈழத்தில் ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் பட்டது, அதற்கு, ராணுவம் ஒரு இடத்திற்கு சென்றால் “அப்படி இப்படித்தான்“ இருக்கும் என்ற வியாக்கியானம் வேறு, இப்படி ராஜீவ் காந்தியைப் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால் ராஜீவ் இறந்து போனவுடன் அவர் புனிதராகிறார். அவர் மனைவிக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப் படுகிறது. அவர் அந்த வேலையை நிராகரித்து, வேறொருவரை நியமிக்கிறார். இந்த கேலிக்கூத்துக்கள், இந்தியாவுக்கே பிரத்யேகமானவை.


இப்பொழுது இறந்துள்ள டி.சுதர்சனத்தைப் பற்றி பேசுகையில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைச் சொல்லலாம்.

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் “மக்களுக்காகவே உழைத்து உழைத்து ஓடாகத் தேய்ந்து போன எம்.எல்.ஏக்கள்“ அனைவரும் ஏழைகளாக இருப்பதால் அவர்களுக்கு வீட்டு மனை ஒதுக்கித் தருமாறு கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை முன்னெடுத்தது, இருப்பதிலேயே மிகவும் ஏழைக் கட்சியான காங்கிரஸ்தான்.

காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன்தான் இந்த கோரிக்கையை வைக்கிறார்.


நவீன கர்ணணும், வாரி வழங்கும் வள்ளலுமான கருணாநிதி, “ஊரான் வீட்டு நெய்யே… என் பொண்டாட்டி கையே“ என்ற தத்துவத்தின் அடிப்படையில் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் சென்னை மகாபலிபுரம் அருகே 2400 சதுர அடி வீட்டு மனை என்று அறிவிக்கிறார்.


கொஞ்சூன்டு மான ரோஷத்தோடு இருக்கும் கம்யூனிஸ்ட்டுகள் இதை எதிர்த்தனர். குறிப்பாக எம்எல்ஏ பாலபாரதி, மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்காக அவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறோம், இங்கு வந்து எங்களுக்கு வீட்டு மனை ஒதுக்குங்கள் என்று கேட்டால் மக்கள் என்ன நினைப்பார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்தார்.




உடனடியாக பேச எழுந்த டி.சுதர்சனம் என்ன சொன்னார் தெரியுமா ? “விருப்பம் இல்லாவிட்டால் இடது சாரிகள் வெளியேறலாம். அவர்கள் வீட்டு மனை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று யாரும் கட்டாயப் படுத்தவில்லை“ என்று கூறினார்.

இவ்வாறு, வெள்ள நிவாரணம் பெற வரிசையில் நிற்கும் கூட்டம் போல முண்டியடித்துக் கொண்டு பேசிய டி.சுதர்சனத்தின், சொத்துக்களின் விபரம் என்ன தெரியுமா ?


இந்த விபரங்கள் மே 2006 அன்று உள்ளபடி. இப்போது இதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்திருக்கும். மேலும், இந்த சொத்தக் கணக்கு “வெள்ளை“. கருப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை.


1. ரொக்கம் கையிருப்பு
38,966

15,83,627

3, வங்கியில் பாண்டுகள்,
37,200
டிபென்சர்கள்
4. கார் உள்ளிட்ட வாகனங்கள்
12,00,000

5. நகைகள்
11,66,000

6. செம்பரம்பாக்கம் விளை நிலம்
10,00,000

2 ஏக்கர்
7. புதுப்பாக்கம் கிராமம்
6,00,000
1.51 ஏக்கர்
8. பொன்னேரி இருளிப்பட்டி
6,00,000

11.51 ஏக்கர்.
9. விலை நிலம் 42.51 ஏக்கர்
10. பண்ருட்டி 2.507 மற்றும் 3.170 ஏக்கர்
9,00,000

11. மணப்பாக்கம் கிராமம் 8.843 ஏக்கர்
5,00,000

12. நொலம்பூர் கிராமம் 1.753 ஏக்கர்
50,00,000

13. அண்ணாநகரில் வணிக வளாகம்
1,50,00,000

4250 சதுர அடி
14. ஷெனாய் நகர் வீடு 3950 ச.அடி
51,00,000

15. ஷெனாய் நகர் வீடு 2800 ச.அடி
25,00,000


மொத்தம்
3,64,74,814



ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நண்பர்களிடம் விசாரித்ததில், மேற்கூறிய மதிப்புகள் பத்தில் ஒரு பங்குதான். அசல் சந்தை மதிப்பு இதை விட பல மடங்கு கூடுதல் என்று கூறுகின்றனர். குறிப்பாக மணப்பாக்கத்தில் எல்லாம் ஒரு ஏக்கர் ஒரு கோடி என்று கூறுகின்றனர்.

சுதர்சனத்தின் மரணம் கூட, சர்ச்சைகளில்லாமல் இல்லை. சுதர்சனம் காங்கிரசில் ஜி.கே.வாசன் கோஷ்டி. 24 அன்று காலை, செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜி.கே.வாசன் கோவை விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

அப்போது அவரை வரவேற்பதற்காக ஜி.கே.வாசன் குழுவைச் சேர்ந்த மாநில இளைஞர் அணித் தலைவர் வி.யுவராஜும், எம்.எல்.ஏ கோவைத் தங்கமும் நின்று கொண்டிருக்கின்றனர். அப்போது திடீரென்று வாசன் வந்து விட, வரிசையில் முன்னால் நின்று கொண்டிருந்த யுவராஜை பின்னுக்குத் தள்ளி விட்டு கோவைத் தங்கம் முந்திக் கொண்டு சென்று சால்வை போர்த்துகிறார்.

இதைக் கண்டு கடும் கோபம் அடைந்த யுவராஜ், அவரை முறைக்கிறார். ஆனால் வாசன் அங்கே இருந்ததால், அமைதியாக இருந்தவர்களுக்குள், வாசன் சென்றவுடன் மோதல் தொடங்கி அது தள்ளுமுள்ளில் சென்று முடிகிறது. அருகில் இருந்த சுதர்சனம், பெரிய மனிதர் அல்லவா ? எப்படி அமைதியாக இருக்க முடியும் ? அதனால் இவர்கள் இருவருக்கிடையில் நுழைந்து சமாதானம் செய்ய முயற்சிக்கிறார்.

அப்போது மோதிக் கொண்ட கோஷ்டிகள் விட்ட “குத்து“ ஒன்று சுதர்சனம் நெஞ்சில் விழுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்தான் சுதர்சனத்திற்கு, வயிற்றின் கீழே அறுவை சிகிச்சை நடைபெற்றிருக்கிறது. இந்த குத்தை வாங்கிய சுதர்சனம், அன்று மாலையே ரத்த வாந்தி எடுக்கிறார்.

உடல்நிலை மிகவும் மோசமாக, உடனடியாக கோவையில் உள்ள கல்பனா மருத்தவமனையில் அனுமதிக்கப் படுகிறார். மறுநாள் 25 காலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் படுகிறார். 25 காலையிலேயே, சுதர்சனத்தின் உயிர் பிரிந்து விட்டது என்று கூறுகிறார்கள்.

சுதர்சனத்தின் உயிர் பிரிந்தாலும், செம்மொழி மாநாடு நடக்கும் நேரத்தில் அமங்கலமான இந்தச் செய்தி வெளியானால், மாநாட்டின் சிறப்பு கெட்டு விடுமல்லவா ? இதனால், இறந்த செய்தியை வெளியே சொல்லாமல் His condition is critical and he is under intensive treatment என்ற “அல்வாவை“ எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இறந்த பிறகும், வெளியில் தகவல் சொல்லாமல் இரண்டு நாட்கள் தள்ளிப் போடச் சொல்லி, அவர் குடும்பத்தை ஒத்துக் கொள்ளச் செய்தவர், ஆற்காடு வீராசாமி என்று சுதர்சனம் குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுதர்சனத்தின் குடும்பத்தினர் கொடுத்த நெருக்கடியினால்தான், நேற்று இரவு அவர் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப் பட்டது.

சுதர்சனத்தின் சொத்துப் பட்டியலை பார்த்தீர்கள். இவ்வளவு சொத்துக்களை வைத்துக் கொண்டு, அரசு தரும் ஒரு க்ரவுண்ட் நிலத்துக்கு அலையும் டி.சுதர்சனம், இப்போது அவரோடு என்ன கொண்டு செல்லுகிறார் ?

“காதற்ற ஊசியும் வாராது கண் கடை வழிக்கே“ என்ற சித்தரின் பாடலை படித்திருக்க மாட்டாரோ ?



சவுக்கு

ஏழைப் பங்காளர் டி.சுதர்சனம்.



நேற்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், காங்கிரஸில் முக்கியப் புள்ளியுமான திரு.டி.சுதர்சனம் அவர்கள், கோவையில் மாரடைப்பால் காலமானார் என்று செய்தி வந்துள்ளது.

பொதுவாக இறந்தவர்களை விமர்சனம் செய்யக் கூடாது என்ற ஒரு கிறுக்குத்தனமான அரசியல் மரபு இந்தியாவில் கடைபிடிக்கப் பட்டு வருகிறது.

“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்“

என்றுதானே கண்ணதாசன் சொல்லியிருக்கிறார் ?

ராஜீவ் காந்தி இறந்தவுடன், அவர் புனிதராகி விடுகிறார். போபர்ஸ் ஊழல், 4000 சீக்கியர்கள் வெட்டிப் படுகொலை செய்யப் பட்ட போது, ஆலமரத்தின் கீழே விழுந்தால் பூமி அதிரத்தான் செய்யும் என்ற ஆணவம், 20,000 பேரின் உயிர் போகக் காரணமாக இருந்த வாரன் ஆண்டர்சனை தப்ப விட்டது, ஈழத்தில் ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் பட்டது, அதற்கு, ராணுவம் ஒரு இடத்திற்கு சென்றால் “அப்படி இப்படித்தான்“ இருக்கும் என்ற வியாக்கியானம் வேறு, இப்படி ராஜீவ் காந்தியைப் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால் ராஜீவ் இறந்து போனவுடன் அவர் புனிதராகிறார். அவர் மனைவிக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப் படுகிறது. அவர் அந்த வேலையை நிராகரித்து, வேறொருவரை நியமிக்கிறார். இந்த கேலிக்கூத்துக்கள், இந்தியாவுக்கே பிரத்யேகமானவை.


இப்பொழுது இறந்துள்ள டி.சுதர்சனத்தைப் பற்றி பேசுகையில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைச் சொல்லலாம்.

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் “மக்களுக்காகவே உழைத்து உழைத்து ஓடாகத் தேய்ந்து போன எம்.எல்.ஏக்கள்“ அனைவரும் ஏழைகளாக இருப்பதால் அவர்களுக்கு வீட்டு மனை ஒதுக்கித் தருமாறு கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை முன்னெடுத்தது, இருப்பதிலேயே மிகவும் ஏழைக் கட்சியான காங்கிரஸ்தான்.

காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன்தான் இந்த கோரிக்கையை வைக்கிறார்.


நவீன கர்ணணும், வாரி வழங்கும் வள்ளலுமான கருணாநிதி, “ஊரான் வீட்டு நெய்யே… என் பொண்டாட்டி கையே“ என்ற தத்துவத்தின் அடிப்படையில் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் சென்னை மகாபலிபுரம் அருகே 2400 சதுர அடி வீட்டு மனை என்று அறிவிக்கிறார்.


கொஞ்சூன்டு மான ரோஷத்தோடு இருக்கும் கம்யூனிஸ்ட்டுகள் இதை எதிர்த்தனர். குறிப்பாக எம்எல்ஏ பாலபாரதி, மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்காக அவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறோம், இங்கு வந்து எங்களுக்கு வீட்டு மனை ஒதுக்குங்கள் என்று கேட்டால் மக்கள் என்ன நினைப்பார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்தார்.




உடனடியாக பேச எழுந்த டி.சுதர்சனம் என்ன சொன்னார் தெரியுமா ? “விருப்பம் இல்லாவிட்டால் இடது சாரிகள் வெளியேறலாம். அவர்கள் வீட்டு மனை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று யாரும் கட்டாயப் படுத்தவில்லை“ என்று கூறினார்.

இவ்வாறு, வெள்ள நிவாரணம் பெற வரிசையில் நிற்கும் கூட்டம் போல முண்டியடித்துக் கொண்டு பேசிய டி.சுதர்சனத்தின், சொத்துக்களின் விபரம் என்ன தெரியுமா ?


இந்த விபரங்கள் மே 2006 அன்று உள்ளபடி. இப்போது இதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்திருக்கும். மேலும், இந்த சொத்தக் கணக்கு “வெள்ளை“. கருப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை.


1. ரொக்கம் கையிருப்பு
38,966

15,83,627

3, வங்கியில் பாண்டுகள்,
37,200
டிபென்சர்கள்
4. கார் உள்ளிட்ட வாகனங்கள்
12,00,000

5. நகைகள்
11,66,000

6. செம்பரம்பாக்கம் விளை நிலம்
10,00,000

2 ஏக்கர்
7. புதுப்பாக்கம் கிராமம்
6,00,000
1.51 ஏக்கர்
8. பொன்னேரி இருளிப்பட்டி
6,00,000

11.51 ஏக்கர்.
9. விலை நிலம் 42.51 ஏக்கர்
10. பண்ருட்டி 2.507 மற்றும் 3.170 ஏக்கர்
9,00,000

11. மணப்பாக்கம் கிராமம் 8.843 ஏக்கர்
5,00,000

12. நொலம்பூர் கிராமம் 1.753 ஏக்கர்
50,00,000

13. அண்ணாநகரில் வணிக வளாகம்
1,50,00,000

4250 சதுர அடி
14. ஷெனாய் நகர் வீடு 3950 ச.அடி
51,00,000

15. ஷெனாய் நகர் வீடு 2800 ச.அடி
25,00,000


மொத்தம்
3,64,74,814



ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நண்பர்களிடம் விசாரித்ததில், மேற்கூறிய மதிப்புகள் பத்தில் ஒரு பங்குதான். அசல் சந்தை மதிப்பு இதை விட பல மடங்கு கூடுதல் என்று கூறுகின்றனர். குறிப்பாக மணப்பாக்கத்தில் எல்லாம் ஒரு ஏக்கர் ஒரு கோடி என்று கூறுகின்றனர்.

சுதர்சனத்தின் மரணம் கூட, சர்ச்சைகளில்லாமல் இல்லை. சுதர்சனம் காங்கிரசில் ஜி.கே.வாசன் கோஷ்டி. 24 அன்று காலை, செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜி.கே.வாசன் கோவை விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

அப்போது அவரை வரவேற்பதற்காக ஜி.கே.வாசன் குழுவைச் சேர்ந்த மாநில இளைஞர் அணித் தலைவர் வி.யுவராஜும், எம்.எல்.ஏ கோவைத் தங்கமும் நின்று கொண்டிருக்கின்றனர். அப்போது திடீரென்று வாசன் வந்து விட, வரிசையில் முன்னால் நின்று கொண்டிருந்த யுவராஜை பின்னுக்குத் தள்ளி விட்டு கோவைத் தங்கம் முந்திக் கொண்டு சென்று சால்வை போர்த்துகிறார்.

இதைக் கண்டு கடும் கோபம் அடைந்த யுவராஜ், அவரை முறைக்கிறார். ஆனால் வாசன் அங்கே இருந்ததால், அமைதியாக இருந்தவர்களுக்குள், வாசன் சென்றவுடன் மோதல் தொடங்கி அது தள்ளுமுள்ளில் சென்று முடிகிறது. அருகில் இருந்த சுதர்சனம், பெரிய மனிதர் அல்லவா ? எப்படி அமைதியாக இருக்க முடியும் ? அதனால் இவர்கள் இருவருக்கிடையில் நுழைந்து சமாதானம் செய்ய முயற்சிக்கிறார்.

அப்போது மோதிக் கொண்ட கோஷ்டிகள் விட்ட “குத்து“ ஒன்று சுதர்சனம் நெஞ்சில் விழுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்தான் சுதர்சனத்திற்கு, வயிற்றின் கீழே அறுவை சிகிச்சை நடைபெற்றிருக்கிறது. இந்த குத்தை வாங்கிய சுதர்சனம், அன்று மாலையே ரத்த வாந்தி எடுக்கிறார்.

உடல்நிலை மிகவும் மோசமாக, உடனடியாக கோவையில் உள்ள கல்பனா மருத்தவமனையில் அனுமதிக்கப் படுகிறார். மறுநாள் 25 காலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் படுகிறார். 25 காலையிலேயே, சுதர்சனத்தின் உயிர் பிரிந்து விட்டது என்று கூறுகிறார்கள்.

சுதர்சனத்தின் உயிர் பிரிந்தாலும், செம்மொழி மாநாடு நடக்கும் நேரத்தில் அமங்கலமான இந்தச் செய்தி வெளியானால், மாநாட்டின் சிறப்பு கெட்டு விடுமல்லவா ? இதனால், இறந்த செய்தியை வெளியே சொல்லாமல் His condition is critical and he is under intensive treatment என்ற “அல்வாவை“ எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இறந்த பிறகும், வெளியில் தகவல் சொல்லாமல் இரண்டு நாட்கள் தள்ளிப் போடச் சொல்லி, அவர் குடும்பத்தை ஒத்துக் கொள்ளச் செய்தவர், ஆற்காடு வீராசாமி என்று சுதர்சனம் குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுதர்சனத்தின் குடும்பத்தினர் கொடுத்த நெருக்கடியினால்தான், நேற்று இரவு அவர் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப் பட்டது.

சுதர்சனத்தின் சொத்துப் பட்டியலை பார்த்தீர்கள். இவ்வளவு சொத்துக்களை வைத்துக் கொண்டு, அரசு தரும் ஒரு க்ரவுண்ட் நிலத்துக்கு அலையும் டி.சுதர்சனம், இப்போது அவரோடு என்ன கொண்டு செல்லுகிறார் ?

“காதற்ற ஊசியும் வாராது கண் கடை வழிக்கே“ என்ற சித்தரின் பாடலை படித்திருக்க மாட்டாரோ ?



சவுக்கு

Wednesday, June 23, 2010

”தண்டவாள தகர்ப்புக்கு காரணம் நானா?” மறுக்கிறார் மாறன்






இந்திய நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருப்பவர் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. அவர் சமீபத்தில் இந்திய அரசின் கவுரவ விருந்தினராக இந்தியாவுக்கு வந்து சென்றிருக்கிறார்.

அவருக்கு இந்திய அரசு சார்பில் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், அவரை ராஜ மரியாதையோடு எப்படி இந்தியாவுக்கு வரவழைக்கலாம் என்கிற கேள்வி பரபரப்பாக எழுந்து அடங்கி இருக்கிறது.



இப்படி இந்தியாவுக்கு வந்த டக்ளஸ் தேவானந்தாவை இந்தியாவிலேயே சிறை பிடிக்க வேண்டும் என்று சொல்லி, சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு நியாயம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும், அவர் எந்தவித இடையூறும் இல்லாமல் இலங்கைக்கு பத்திரமாகத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.



இது ஒருபுறமிருக்க, தமிழர் விடுதலைப் படை என்கிற இயக்கத்தை நடத்தி பரபரப்பாகப் பேசப்பட்ட பிரமுகர்களான மாஸ்டர் பிரைன் மாறனும் ரேடியோ வெங்கடேசனும் தங்களுடைய கடந்த கால செயல்பாடுகளுக்காக போலீஸாரிடம் சிக்கி, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டு, மொத்த சமூகத்திலிருந்தும் தற்போது தங்களுடைய சொந்த கிராமங்களில் ஒதுங்கி பிரச்னையில்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்களை திடுமென வெடிகுண்டு வழக்கில் நுழைக்க போலீஸார் படாதபாடுபட்டுக் கொண்டிருக்க, அவர்கள் சார்ந்திருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர்களும் உறவுக்காரர்களும் திடுக்கிட்டுப் போயிருக்கிறார்கள்.



கும்பகோணம் பக்கத்தில் இருக்கும் சொந்த கிராமம் ஒன்றில் செங்கல் சூளை அமைத்துக் கொண்டு தானுண்டு தன் பணியுண்டு என்று இருக்கும் மாறனும் அவருடைய இயக்கத்தைச் சேர்ந்தவருமான ரேடியோ வெங்கடேசனும்தான் சமீபத்தில் விழுப்புரம் அருகில் நடந்த ரயில் குண்டு வெடிப்புக்குக் காரணம் என்று சொல்லி, மொத்த பழியையும் தூக்கி அவர்கள் தலையில் திணிக்க முயன்று கொண்டிருக்கிறது போலீஸ். அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டதாகவும் தகவல்களைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள், கில்லாடியான தமிழகப் போலீஸார்.


காவல்துறையினரால் ‘தலைறைவாகி இருக்கிறார்கள்‘ என்று சொல்லப்படும் மாறனை எந்தவித சிக்கலும் சங்கடங்களும் இல்லாமல் நாம் தினமதி நாளிதழுக்காக சந்தித்தோம். அப்போது அவர் நமக்கு அளித்த பேட்டியிலிருந்து-

”சமீபத்தில் விழுப்புரத்திற்கு அருகில் ரயில்வே தண்டவாளத்தில் குண்டு வெடித்தது. அதில் அதிர்ஷ்டவசமாக ரயில் பயணிகள் தப்பினார்கள். அந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் தமிழ்த் தீவிரவாதிகள் உள்ளனர் என்று போலீஸார் தகவல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, இந்த குண்டு வெடிப்பில் உங்களுக்கும் உங்களோடு சிறையில் இருந்த ரேடியோ வெங்கடேசனுக்கும் சம்பந்தம் இருப்பதாகவும் போலீஸார் கூறுகிறார்கள்.

இது குறித்து உங்கள் கருத்து என்ன?”

”என் மீது போடப்பட்ட வழக்கு ஒன்றிற்காக பத்தாண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்து விட்டு கடந்த ஜனவரி 19-ம் தேதி நான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டேன். அந்த வழக்கு தவிர, என் மீது வேறு சில வழக்குகளும் உள்ளன. அந்த வழக்குகள் பூந்தமல்லி, சிதம்பரம், சத்தியமங்கலம், கோவை மற்றும் கர்நாடக மாநிலம் கொள்ளேகால் ஆகிய நீதிமன்றங்களில் இருக்கின்றன.





அங்கெல்லாம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்குகளுக்காக வாரம் இருமுறை நான் நீதிமன்றம் செல்ல வேண்டி இருக்கிறது. நீதிமன்ற நடவடிக்கைகளின் மீது அசைக்க முடியாத நல் எண்ணம் இருப்பதாலேயே தொடர்ந்து விசாரணைக்குச் சென்று வருகிறேன். இதில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை.

இது என் மீது வழக்கு மேல் வழக்குப் போட்டு விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் தமிழக போலீஸுக்கு மிக நன்றாகத் தெரியும். இருந்தும், என்ன காரணம் என்று புரியவில்லை... விழுப்புரம் ரயில் தண்டவாளத்தில் வெடிக்கப்பட்ட வெடிகுண்டு சம்பவத்துக்கு நான் காரணம் என்பது போல செய்தியை பரப்பி, நான் தலைமறைவாகி விட்டதாகவும் செய்தி பரப்புகிறது தமிழக போலீஸ். இதெல்லாம் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

என்னைப் போலவேதான் ரேடியோ வெங்கடேசனும் அவர் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளுக்காக தொடர்ந்து நீதிமன்றங்களுக்குச் சென்று வருகிறார். இந்நிலையில், துளியும் ஆதாரமற்ற செய்திகளை போலீஸ் எப்படி வெளியிட்டு வருகின்றது என்பது எனக்குப் புரியவில்லை. எல்லாமே எனக்குப் புதிராகத்தான் உள்ளது.

மொத்தத்தில், ஏதோ ஒரு சதி வலை எங்களை நோக்கிப் பின்னப்படுகின்றன என்பதை மட்டும் உணர்ந்து கொள்ள முடிகிறது. மன உறுதியின் துணை கொண்டு எதனையும் தைரியமாக எதிர்கொள்வோம்.”

”விழுப்புரம் ரயில் தண்டவாளத்தில் வெடித்த குண்டு வெடிப்புத் தொடர்பாக 33-க்கும் மேற்பட்ட நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்து வருகிறோம் என்று உளவுத்துறை ஐ.ஜி-யான ஜாபர் சேட், விழுப்புரத்தில் பேட்டியளித்துள்ளார்.

உங்களை இது தொடர்பான விசாரணைக்காக அழைத்து சென்றார்களா? உங்களை விசாரித்தார்களா?”

”குண்டுவெடிப்பு நிகழ்ந்த மறுநாள் க்யூ பிரிவு டி.எஸ்.பி. ஒருவர் எங்களை அழைத்து விசாரித்தார். நாங்கள் தொடர்ந்து குடும்பத்தினரோடு இருந்து வருகிறோம் என்றும் சம்பவம் நடந்த முதல் நாள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிற்காக ஆஜராகி விட்டு ஊர் திரும்பிய விவரங்களையெல்லாம் சொன்னோம்.

விழுப்புரம் குண்டுவெடிப்பு சம்பவ இடத்தில் இருந்த கடிதத்தின் கையெழுத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க மாதிரி கடிதம் ஒன்றை எழுதித் தரச் சொன்னார். அவ்வாறே எழுதிக் கொடுத்தோம். தேவைப்படும்போது விசாரணைக்கு வர வேண்டும் என்று சொன்னார். வருகிறோம் என்று சொன்னோம். இது தான் நடந்தது.

மற்றபடி, எங்களை அந்த வழக்கு தொடர்பாக யாரும் அழைக்கவுமில்லை. நாங்கள் போகவுமில்லை. அப்படி இருக்கும்போது நாங்கள் தலைமறைவாகி விட்டதாக எப்படிச் சொல்கிறார்கள் என்று புரியவில்லை.

”இதுபோன்ற தகவல்கள் அடிப்படை ஆதாரமே இல்லாமல் எப்படி வெளியாகும்?”

”ஆதாரம் பற்றியெல்லாம் எனக்கோ வெங்கடேசனுக்கோ எதுவும் தெரியாது. ஆனால், ஒரே ஒரு விஷயத்தை மட்டும்தான் நாங்கள் தெளிவுபடக் கூற முடியும். நாங்கள் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறோம்.

ஒரு நாள் கூட தவறியதில்லை. மேலும், நாங்கள் எங்கு வசித்து வருகிறோம், யாருடன் வசித்து வருகிறோம் என்ற விவரங்களெல்லாம் க்யூ பிரிவு போலீஸ் உட்பட காவல் துறை அதிகாரிகளிடம் இருக்கும் ஆவணங்களில் தெளிவாக இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் அதனை எடுத்து அவர்கள் சோதித்துக் கொள்ளலாம்.

அப்படி, எங்களுடைய நடவடிக்கைகள் முழுவதும் போலீஸ் கண்காணிப்புக்குள் இருக்கும்போது, அவர்கள் கண்களை மறைத்துவிட்டு நாங்கள் என்ன செய்துவிட முடியும். தேவையில்லாத விஷயங்களில் எங்கள் பெயர் அடிபடுவதை நாங்கள் விரும்பவில்லை.

அப்படியிருக்கும்போது அடிப்படையில் துளியும் ஆதாரமில்லாத இந்த மாதிரியான செய்திகள் எங்கிருந்து கிளம்புகிறது என்பது தான் எங்களுக்கு புரியாத புதிராக இருக்கிறது. இந்த விஷயங்களின் நிஜமான பின்னணி குறித்து எங்களுக்கு யாராவது தகவல் சொன்னால், நாங்களும் அதனை அறிந்து கொள்வோம்.

”உங்களுடைய எதிரிகள் யாராவது இதன் பின்னணியில் இருப்பார்கள் என்று சந்தேகப்படுகிறீர்களா?”

”இப்படிப்பட்ட கேவலமான விஷயங்களில் ஈடுபடும் அளவுக்கு எங்களுக்கு எதிரிகள் யாரும் கிடையாது.

மேலும், பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்து விட்டு, விடுதலையாகி ஆறு மாதங்கள் ஆன நிலையில், திடீரென்று இப்படி ஒரு செய்தி ஏன் கிளம்புகிறது என்பதுதான் புரியவில்லை. வியப்பாக உள்ளது.

அப்படியே எங்களுக்கு எதிரி என்றாலும், அவர்கள் இதுபோன்ற மட்டரகமான காரியங்களில் ஈடுபடமாட்டார்கள். எங்களுக்கான எதிரிகள் கூட அப்படியொரு மேம்பட்ட மனநிலையில் இருப்பார்கள் என்பதுதான் எங்கள் கணிப்பு. கருத்து.”

”அப்படியென்றால், இந்த தகவலின் பின்னணியில் தமிழக உளவுத் துறை இருக்கும் என்று சந்தேகிக்கிறீர்களா?”

”அது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் மாறன் மற்றும் ரேடியோ வெங்கடேசன் தலைமறைவு என்ற செய்தியை வெளியிடும் முன், பத்திரிக்கைகள், என்னையோ, எனது வழக்கறிஞரையோ தொடர்பு கொண்டு உறுதிப் படுத்திக் கொண்ட பின்னர் செய்தியை வெளியிட்டிருக்கலாம்.

செய்தியை உறுதிப்படுத்தாமல், வதந்தியை செய்தியாக பத்திரிகைகள் வெளியிட்டுள்ளது, கண்டிக்கத்தக்கது. அதற்கு பின்னணியாக இருந்தாலும், அவர்களும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். மற்றபடி, உளவுத்துறை இதில் அத்தனை ஆர்வமெடுத்து செயல்பட்டிருக்குமா என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை...”

”அப்படியென்றால், உங்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?”

”நாங்கள் தலைமறைவாக இருக்கிறோம் என்று சொல்லி, தவறான செய்தி வெளியிட்ட பத்திரிகைகள் மீது, மான நஷ்ட வழக்கு தொடர்வது குறித்து, வழக்கறிஞருடன் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளோம்.

சட்டரீதியிலான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும். ஏனென்றால், யாரும் சொன்னார்கள் என்று சொல்லி தவறான செய்தியை வெளியிடுவதன் மூலம் குடும்பம் என்ன சிக்கலுக்கு ஆளாகும் என்பதை பத்திரிகையாளர்கள் உணர வேண்டும்”

”நீங்கள் தலைவராக இருந்த தமிழ்நாடு விடுதலைப் படை, இதற்கு முன்னர் பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளதே. இந்த சம்பவத்தில் நீங்கள் ஈடுபடவில்லை என்று சொன்னாலும், உங்கள் அமைப்பைச் சேர்ந்த வேறு யாராவது ஈடுபட்டிருக்கலாம் அல்லவா? அதன் பின்னணியில் நீங்கள் இருந்து செயல்பட்டிருக்கலாம் அல்லவா?”


”எங்கள் அமைப்புச் சேர்ந்தவர்கள் எந்தவொரு காரியத்தைச் செய்தாலும், அதனை நாங்கள் தான் செய்தோம் என்று சொல்லி, அதனை பகிரங்கமாக அறிவித்துவிடுவோம். அதுதான் எங்கள் பாணி. ஏற்கெனவே, நாங்கள் செய்த சில காரியங்களுக்கு ’தமிழ்நாடு விடுதலைப்படை’ பொறுப்பேற்கிறது என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறோம். அது தான் எங்களுடைய வழக்கம்.

எந்த வொரு செயலையும் செய்துவிட்டு அதற்கான பொறுப்பை இன்னொருத்தர் மேல் சுமத்த மாட்டோம். அதுமட்டுமல்ல, அப்பாவிகள் பாதிக்கும்படியாக ஒருபோதும் அசம்பாவித சம்பவங்களில் நாங்கள் ஈடுபட்டதில்லை. ஈடுபடவும் மாட்டோம்.

விழுப்புரம் ரயில் தண்டவாளம் பெயர்க்கும் படியாக வைக்கப்பட்ட வெடிகுண்டு சம்பவத்தால் ரயில் பாதிக்கப்பட்டிருந்தால், ரயிலில் பயணம் செய்த அப்பாவி பொதுமக்களும், பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அப்படியொரு காரியத்தை எங்கள் விடுதலைப்படை இயக்கம் ஒருபோதும் செய்யாது. இப்படிப்பட்ட காரியங்களில் எங்கள் இயக்கத்துக்கு ஒருபோதும் உடன்பாடு இருந்ததில்லை.

”தற்போது உங்களின் தமிழ்நாடு விடுதலைப்படையில் உறுப்பினராக உள்ள யாராவது இதை செய்திருக்க வாய்ப்பிருக்கிறதா?”

”2001-ம் ஆண்டு, தமிழ்நாடு விடுதலைப் படை இயக்கம் தடை செய்யப்பட்டது. இதையெதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நான் தொடுத்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இயக்கம் தடைசெய்யப்பட்ட பிறகு, இயக்கத்தின் நடவடிக்கைகள் முழுமையாக செயலிழந்து போனது. நானும் சிறையில் இருந்த காரணத்தால், இயக்கத்தின் செயல்பாடும் முற்றிலும் அற்றுப் போனது. இந்நிலையில், தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த யாராவது ஒருவர் செய்திருக்கக் கூடுமா என்ற கேள்விக்கே இடம் இல்லை.”

”தற்பொழுது சிறையில் இருந்து வெளியில் வந்திருக்கும் உங்களை, இதுபோன்ற பொய்ச் செய்திகளை வெளியிடுவதன் மூலம், மீண்டும் வன்முறைப் பாதையில் உங்களை திருப்புவதற்கான உத்தியா? நீங்கள் உங்கள் இயக்கத்தை புதுப்பிப்பதற்கான வேலைகள் எதிலும் இறங்கியுள்ளீர்களா?”

”பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அரசியல் பொருளாதார சூழல் இன்று இல்லை. புதிய பொருளாதாரக் கொள்கை வந்த பின்னால், சமூக பொருளாதார அரசியல் சூழல்கள் தலைகீழாக மாறியுள்ளன.

இந்த நிலையில், மீண்டும் வன்முறைப் பாதையை தேர்ந்தெடுப்பதோ, ஆயுதப் போராட்டத்தை கையிலெடுப்பது போன்ற எந்த உத்தேசமும் எங்களுக்கு இல்லை. மக்களுக்கான பிரச்னைகளை ஜனநாயக பூர்வமான வழியில் மக்களுடன் இணைந்து, தீர்வு காண்பது என்ற எண்ணத்தில் தான் நானும் எனது நண்பர்களும் இருக்கிறோம்.

அதனால் மீண்டும் வன்முறைப் பாதைக்குச் செல்வோம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஏதாவதொரு நெருக்கடி கொடுத்து, அரசோ, அல்லது விரும்பத்தகாத சக்திகளோ, எங்களை அவ்வாறு தள்ள முயற்சித்தாலும், நாங்கள் அதற்கு தயாராக இல்லை.”

”உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன? அடுத்து என்ன செய்வதாக உத்தேசித்துள்ளீர்கள்?”

”எங்கள் மீதான அனைத்து வழக்குகளையும் முடித்துக் கொள்வது மட்டுமே எங்களின் உடனடித் திட்டம். வழக்குகள் நிலுவையில் இருக்கும் வரை, வேறு எந்தத் திட்டமும் இல்லை. மக்கள் பிரச்னைகளை கையிலெடுத்து, மக்களுக்கான போராட்டங்கள் எதையும் நடத்தும் உத்தேசம் இருந்தாலும், அது ஒரு வெளிப்படையான ஜனநாயக ரீதியான இயக்கமாக இருக்குமே ஒழிய, நிச்சயமாக ஒரு தலைமறைவு இயக்கமாக இருக்காது.''

நன்றி: நம்தினமதி நாளேடு

சவுக்கு

”தண்டவாள தகர்ப்புக்கு காரணம் நானா?” மறுக்கிறார் மாறன்






இந்திய நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருப்பவர் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. அவர் சமீபத்தில் இந்திய அரசின் கவுரவ விருந்தினராக இந்தியாவுக்கு வந்து சென்றிருக்கிறார்.

அவருக்கு இந்திய அரசு சார்பில் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், அவரை ராஜ மரியாதையோடு எப்படி இந்தியாவுக்கு வரவழைக்கலாம் என்கிற கேள்வி பரபரப்பாக எழுந்து அடங்கி இருக்கிறது.



இப்படி இந்தியாவுக்கு வந்த டக்ளஸ் தேவானந்தாவை இந்தியாவிலேயே சிறை பிடிக்க வேண்டும் என்று சொல்லி, சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு நியாயம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும், அவர் எந்தவித இடையூறும் இல்லாமல் இலங்கைக்கு பத்திரமாகத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.



இது ஒருபுறமிருக்க, தமிழர் விடுதலைப் படை என்கிற இயக்கத்தை நடத்தி பரபரப்பாகப் பேசப்பட்ட பிரமுகர்களான மாஸ்டர் பிரைன் மாறனும் ரேடியோ வெங்கடேசனும் தங்களுடைய கடந்த கால செயல்பாடுகளுக்காக போலீஸாரிடம் சிக்கி, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டு, மொத்த சமூகத்திலிருந்தும் தற்போது தங்களுடைய சொந்த கிராமங்களில் ஒதுங்கி பிரச்னையில்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்களை திடுமென வெடிகுண்டு வழக்கில் நுழைக்க போலீஸார் படாதபாடுபட்டுக் கொண்டிருக்க, அவர்கள் சார்ந்திருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர்களும் உறவுக்காரர்களும் திடுக்கிட்டுப் போயிருக்கிறார்கள்.



கும்பகோணம் பக்கத்தில் இருக்கும் சொந்த கிராமம் ஒன்றில் செங்கல் சூளை அமைத்துக் கொண்டு தானுண்டு தன் பணியுண்டு என்று இருக்கும் மாறனும் அவருடைய இயக்கத்தைச் சேர்ந்தவருமான ரேடியோ வெங்கடேசனும்தான் சமீபத்தில் விழுப்புரம் அருகில் நடந்த ரயில் குண்டு வெடிப்புக்குக் காரணம் என்று சொல்லி, மொத்த பழியையும் தூக்கி அவர்கள் தலையில் திணிக்க முயன்று கொண்டிருக்கிறது போலீஸ். அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டதாகவும் தகவல்களைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள், கில்லாடியான தமிழகப் போலீஸார்.


காவல்துறையினரால் ‘தலைறைவாகி இருக்கிறார்கள்‘ என்று சொல்லப்படும் மாறனை எந்தவித சிக்கலும் சங்கடங்களும் இல்லாமல் நாம் தினமதி நாளிதழுக்காக சந்தித்தோம். அப்போது அவர் நமக்கு அளித்த பேட்டியிலிருந்து-

”சமீபத்தில் விழுப்புரத்திற்கு அருகில் ரயில்வே தண்டவாளத்தில் குண்டு வெடித்தது. அதில் அதிர்ஷ்டவசமாக ரயில் பயணிகள் தப்பினார்கள். அந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் தமிழ்த் தீவிரவாதிகள் உள்ளனர் என்று போலீஸார் தகவல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, இந்த குண்டு வெடிப்பில் உங்களுக்கும் உங்களோடு சிறையில் இருந்த ரேடியோ வெங்கடேசனுக்கும் சம்பந்தம் இருப்பதாகவும் போலீஸார் கூறுகிறார்கள்.

இது குறித்து உங்கள் கருத்து என்ன?”

”என் மீது போடப்பட்ட வழக்கு ஒன்றிற்காக பத்தாண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்து விட்டு கடந்த ஜனவரி 19-ம் தேதி நான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டேன். அந்த வழக்கு தவிர, என் மீது வேறு சில வழக்குகளும் உள்ளன. அந்த வழக்குகள் பூந்தமல்லி, சிதம்பரம், சத்தியமங்கலம், கோவை மற்றும் கர்நாடக மாநிலம் கொள்ளேகால் ஆகிய நீதிமன்றங்களில் இருக்கின்றன.





அங்கெல்லாம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்குகளுக்காக வாரம் இருமுறை நான் நீதிமன்றம் செல்ல வேண்டி இருக்கிறது. நீதிமன்ற நடவடிக்கைகளின் மீது அசைக்க முடியாத நல் எண்ணம் இருப்பதாலேயே தொடர்ந்து விசாரணைக்குச் சென்று வருகிறேன். இதில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை.

இது என் மீது வழக்கு மேல் வழக்குப் போட்டு விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் தமிழக போலீஸுக்கு மிக நன்றாகத் தெரியும். இருந்தும், என்ன காரணம் என்று புரியவில்லை... விழுப்புரம் ரயில் தண்டவாளத்தில் வெடிக்கப்பட்ட வெடிகுண்டு சம்பவத்துக்கு நான் காரணம் என்பது போல செய்தியை பரப்பி, நான் தலைமறைவாகி விட்டதாகவும் செய்தி பரப்புகிறது தமிழக போலீஸ். இதெல்லாம் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

என்னைப் போலவேதான் ரேடியோ வெங்கடேசனும் அவர் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளுக்காக தொடர்ந்து நீதிமன்றங்களுக்குச் சென்று வருகிறார். இந்நிலையில், துளியும் ஆதாரமற்ற செய்திகளை போலீஸ் எப்படி வெளியிட்டு வருகின்றது என்பது எனக்குப் புரியவில்லை. எல்லாமே எனக்குப் புதிராகத்தான் உள்ளது.

மொத்தத்தில், ஏதோ ஒரு சதி வலை எங்களை நோக்கிப் பின்னப்படுகின்றன என்பதை மட்டும் உணர்ந்து கொள்ள முடிகிறது. மன உறுதியின் துணை கொண்டு எதனையும் தைரியமாக எதிர்கொள்வோம்.”

”விழுப்புரம் ரயில் தண்டவாளத்தில் வெடித்த குண்டு வெடிப்புத் தொடர்பாக 33-க்கும் மேற்பட்ட நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்து வருகிறோம் என்று உளவுத்துறை ஐ.ஜி-யான ஜாபர் சேட், விழுப்புரத்தில் பேட்டியளித்துள்ளார்.

உங்களை இது தொடர்பான விசாரணைக்காக அழைத்து சென்றார்களா? உங்களை விசாரித்தார்களா?”

”குண்டுவெடிப்பு நிகழ்ந்த மறுநாள் க்யூ பிரிவு டி.எஸ்.பி. ஒருவர் எங்களை அழைத்து விசாரித்தார். நாங்கள் தொடர்ந்து குடும்பத்தினரோடு இருந்து வருகிறோம் என்றும் சம்பவம் நடந்த முதல் நாள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிற்காக ஆஜராகி விட்டு ஊர் திரும்பிய விவரங்களையெல்லாம் சொன்னோம்.

விழுப்புரம் குண்டுவெடிப்பு சம்பவ இடத்தில் இருந்த கடிதத்தின் கையெழுத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க மாதிரி கடிதம் ஒன்றை எழுதித் தரச் சொன்னார். அவ்வாறே எழுதிக் கொடுத்தோம். தேவைப்படும்போது விசாரணைக்கு வர வேண்டும் என்று சொன்னார். வருகிறோம் என்று சொன்னோம். இது தான் நடந்தது.

மற்றபடி, எங்களை அந்த வழக்கு தொடர்பாக யாரும் அழைக்கவுமில்லை. நாங்கள் போகவுமில்லை. அப்படி இருக்கும்போது நாங்கள் தலைமறைவாகி விட்டதாக எப்படிச் சொல்கிறார்கள் என்று புரியவில்லை.

”இதுபோன்ற தகவல்கள் அடிப்படை ஆதாரமே இல்லாமல் எப்படி வெளியாகும்?”

”ஆதாரம் பற்றியெல்லாம் எனக்கோ வெங்கடேசனுக்கோ எதுவும் தெரியாது. ஆனால், ஒரே ஒரு விஷயத்தை மட்டும்தான் நாங்கள் தெளிவுபடக் கூற முடியும். நாங்கள் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறோம்.

ஒரு நாள் கூட தவறியதில்லை. மேலும், நாங்கள் எங்கு வசித்து வருகிறோம், யாருடன் வசித்து வருகிறோம் என்ற விவரங்களெல்லாம் க்யூ பிரிவு போலீஸ் உட்பட காவல் துறை அதிகாரிகளிடம் இருக்கும் ஆவணங்களில் தெளிவாக இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் அதனை எடுத்து அவர்கள் சோதித்துக் கொள்ளலாம்.

அப்படி, எங்களுடைய நடவடிக்கைகள் முழுவதும் போலீஸ் கண்காணிப்புக்குள் இருக்கும்போது, அவர்கள் கண்களை மறைத்துவிட்டு நாங்கள் என்ன செய்துவிட முடியும். தேவையில்லாத விஷயங்களில் எங்கள் பெயர் அடிபடுவதை நாங்கள் விரும்பவில்லை.

அப்படியிருக்கும்போது அடிப்படையில் துளியும் ஆதாரமில்லாத இந்த மாதிரியான செய்திகள் எங்கிருந்து கிளம்புகிறது என்பது தான் எங்களுக்கு புரியாத புதிராக இருக்கிறது. இந்த விஷயங்களின் நிஜமான பின்னணி குறித்து எங்களுக்கு யாராவது தகவல் சொன்னால், நாங்களும் அதனை அறிந்து கொள்வோம்.

”உங்களுடைய எதிரிகள் யாராவது இதன் பின்னணியில் இருப்பார்கள் என்று சந்தேகப்படுகிறீர்களா?”

”இப்படிப்பட்ட கேவலமான விஷயங்களில் ஈடுபடும் அளவுக்கு எங்களுக்கு எதிரிகள் யாரும் கிடையாது.

மேலும், பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்து விட்டு, விடுதலையாகி ஆறு மாதங்கள் ஆன நிலையில், திடீரென்று இப்படி ஒரு செய்தி ஏன் கிளம்புகிறது என்பதுதான் புரியவில்லை. வியப்பாக உள்ளது.

அப்படியே எங்களுக்கு எதிரி என்றாலும், அவர்கள் இதுபோன்ற மட்டரகமான காரியங்களில் ஈடுபடமாட்டார்கள். எங்களுக்கான எதிரிகள் கூட அப்படியொரு மேம்பட்ட மனநிலையில் இருப்பார்கள் என்பதுதான் எங்கள் கணிப்பு. கருத்து.”

”அப்படியென்றால், இந்த தகவலின் பின்னணியில் தமிழக உளவுத் துறை இருக்கும் என்று சந்தேகிக்கிறீர்களா?”

”அது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் மாறன் மற்றும் ரேடியோ வெங்கடேசன் தலைமறைவு என்ற செய்தியை வெளியிடும் முன், பத்திரிக்கைகள், என்னையோ, எனது வழக்கறிஞரையோ தொடர்பு கொண்டு உறுதிப் படுத்திக் கொண்ட பின்னர் செய்தியை வெளியிட்டிருக்கலாம்.

செய்தியை உறுதிப்படுத்தாமல், வதந்தியை செய்தியாக பத்திரிகைகள் வெளியிட்டுள்ளது, கண்டிக்கத்தக்கது. அதற்கு பின்னணியாக இருந்தாலும், அவர்களும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். மற்றபடி, உளவுத்துறை இதில் அத்தனை ஆர்வமெடுத்து செயல்பட்டிருக்குமா என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை...”

”அப்படியென்றால், உங்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?”

”நாங்கள் தலைமறைவாக இருக்கிறோம் என்று சொல்லி, தவறான செய்தி வெளியிட்ட பத்திரிகைகள் மீது, மான நஷ்ட வழக்கு தொடர்வது குறித்து, வழக்கறிஞருடன் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளோம்.

சட்டரீதியிலான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும். ஏனென்றால், யாரும் சொன்னார்கள் என்று சொல்லி தவறான செய்தியை வெளியிடுவதன் மூலம் குடும்பம் என்ன சிக்கலுக்கு ஆளாகும் என்பதை பத்திரிகையாளர்கள் உணர வேண்டும்”

”நீங்கள் தலைவராக இருந்த தமிழ்நாடு விடுதலைப் படை, இதற்கு முன்னர் பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளதே. இந்த சம்பவத்தில் நீங்கள் ஈடுபடவில்லை என்று சொன்னாலும், உங்கள் அமைப்பைச் சேர்ந்த வேறு யாராவது ஈடுபட்டிருக்கலாம் அல்லவா? அதன் பின்னணியில் நீங்கள் இருந்து செயல்பட்டிருக்கலாம் அல்லவா?”


”எங்கள் அமைப்புச் சேர்ந்தவர்கள் எந்தவொரு காரியத்தைச் செய்தாலும், அதனை நாங்கள் தான் செய்தோம் என்று சொல்லி, அதனை பகிரங்கமாக அறிவித்துவிடுவோம். அதுதான் எங்கள் பாணி. ஏற்கெனவே, நாங்கள் செய்த சில காரியங்களுக்கு ’தமிழ்நாடு விடுதலைப்படை’ பொறுப்பேற்கிறது என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறோம். அது தான் எங்களுடைய வழக்கம்.

எந்த வொரு செயலையும் செய்துவிட்டு அதற்கான பொறுப்பை இன்னொருத்தர் மேல் சுமத்த மாட்டோம். அதுமட்டுமல்ல, அப்பாவிகள் பாதிக்கும்படியாக ஒருபோதும் அசம்பாவித சம்பவங்களில் நாங்கள் ஈடுபட்டதில்லை. ஈடுபடவும் மாட்டோம்.

விழுப்புரம் ரயில் தண்டவாளம் பெயர்க்கும் படியாக வைக்கப்பட்ட வெடிகுண்டு சம்பவத்தால் ரயில் பாதிக்கப்பட்டிருந்தால், ரயிலில் பயணம் செய்த அப்பாவி பொதுமக்களும், பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அப்படியொரு காரியத்தை எங்கள் விடுதலைப்படை இயக்கம் ஒருபோதும் செய்யாது. இப்படிப்பட்ட காரியங்களில் எங்கள் இயக்கத்துக்கு ஒருபோதும் உடன்பாடு இருந்ததில்லை.

”தற்போது உங்களின் தமிழ்நாடு விடுதலைப்படையில் உறுப்பினராக உள்ள யாராவது இதை செய்திருக்க வாய்ப்பிருக்கிறதா?”

”2001-ம் ஆண்டு, தமிழ்நாடு விடுதலைப் படை இயக்கம் தடை செய்யப்பட்டது. இதையெதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நான் தொடுத்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இயக்கம் தடைசெய்யப்பட்ட பிறகு, இயக்கத்தின் நடவடிக்கைகள் முழுமையாக செயலிழந்து போனது. நானும் சிறையில் இருந்த காரணத்தால், இயக்கத்தின் செயல்பாடும் முற்றிலும் அற்றுப் போனது. இந்நிலையில், தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த யாராவது ஒருவர் செய்திருக்கக் கூடுமா என்ற கேள்விக்கே இடம் இல்லை.”

”தற்பொழுது சிறையில் இருந்து வெளியில் வந்திருக்கும் உங்களை, இதுபோன்ற பொய்ச் செய்திகளை வெளியிடுவதன் மூலம், மீண்டும் வன்முறைப் பாதையில் உங்களை திருப்புவதற்கான உத்தியா? நீங்கள் உங்கள் இயக்கத்தை புதுப்பிப்பதற்கான வேலைகள் எதிலும் இறங்கியுள்ளீர்களா?”

”பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அரசியல் பொருளாதார சூழல் இன்று இல்லை. புதிய பொருளாதாரக் கொள்கை வந்த பின்னால், சமூக பொருளாதார அரசியல் சூழல்கள் தலைகீழாக மாறியுள்ளன.

இந்த நிலையில், மீண்டும் வன்முறைப் பாதையை தேர்ந்தெடுப்பதோ, ஆயுதப் போராட்டத்தை கையிலெடுப்பது போன்ற எந்த உத்தேசமும் எங்களுக்கு இல்லை. மக்களுக்கான பிரச்னைகளை ஜனநாயக பூர்வமான வழியில் மக்களுடன் இணைந்து, தீர்வு காண்பது என்ற எண்ணத்தில் தான் நானும் எனது நண்பர்களும் இருக்கிறோம்.

அதனால் மீண்டும் வன்முறைப் பாதைக்குச் செல்வோம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஏதாவதொரு நெருக்கடி கொடுத்து, அரசோ, அல்லது விரும்பத்தகாத சக்திகளோ, எங்களை அவ்வாறு தள்ள முயற்சித்தாலும், நாங்கள் அதற்கு தயாராக இல்லை.”

”உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன? அடுத்து என்ன செய்வதாக உத்தேசித்துள்ளீர்கள்?”

”எங்கள் மீதான அனைத்து வழக்குகளையும் முடித்துக் கொள்வது மட்டுமே எங்களின் உடனடித் திட்டம். வழக்குகள் நிலுவையில் இருக்கும் வரை, வேறு எந்தத் திட்டமும் இல்லை. மக்கள் பிரச்னைகளை கையிலெடுத்து, மக்களுக்கான போராட்டங்கள் எதையும் நடத்தும் உத்தேசம் இருந்தாலும், அது ஒரு வெளிப்படையான ஜனநாயக ரீதியான இயக்கமாக இருக்குமே ஒழிய, நிச்சயமாக ஒரு தலைமறைவு இயக்கமாக இருக்காது.''

நன்றி: நம்தினமதி நாளேடு

சவுக்கு

Monday, June 21, 2010

இரு வழக்குகள்..


இந்த இரு வழக்குகள், மீரட் சதி வழக்கோ அல்லது லாகூர் சதி வழக்கோ அல்ல. தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் இரு வழக்குகள். இந்த வழக்குகளில் சம்பந்தப் பட்டவர்கள் இரு பெண்கள். ஒருவர் கைம்பெண். ஒருவர் விவாகரத்து பெற்றவர். ஒருவர் அரசு அலுவலகத்தில் சாதாரண இளநிலை உதவியாளர். மற்றொருவர் ஐபிஎஸ் அதிகாரி. இருவருமே லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றியவர்கள்.

இந்த இரு பெண்களின் மீதான வழக்குகளின் தன்மையையும், இந்த வழக்குகளை அரசு எப்படி கையாண்டது என்பதுதான் இன்று மிக மிக வருத்தத்திற்குரிய விஷயம். அதிகாரம் மிக்க அரசு இயந்திரம் வேண்டியவர்களை ஒரு மாதிரியாகவும், வேண்டாதவர்களை ஒரு மாதிரியாகவும் நடத்தும் என்பதற்கு, பார்வதி அம்மாள் விமானத்தை விட்டு இறங்காமல் திருப்பி அனுப்பப் பட்டதும், தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தா, அரசு விருந்தினராக உபசரிக்கப் பட்டு நீதிமன்றத்தில் பொது நல வழக்கு நிலுவையில் இருக்கும் போதே பத்திரமாக திருப்பி அனுப்பப் பட்டதும் ஒரு சிறந்த உதாரணம். இது போல பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

இதைப் போலவே அப்பட்டமாக, அநியாயமாக இரு பெண்களில் ஒருவர் எப்படி பாரபட்சமான நடத்தப் படுகிறார், அரசு அதிகாரம் எப்படி வேண்டாதவர்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது என்பதை பார்ப்போம்.

இதில் கைம்பெண்ணாக இருப்பவரின் கணவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் கான்ஸ்டபிளாக வேலைப் பார்த்து வந்த போது, திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் கருணை அடிப்படையில் இவருக்கு லஞ்ச ஒழிப்புத் துறையில் இள நிலை உதவியாளர் பதவி வழங்கப் பட்டது. சென்னையில் ஒரு அரசு குடியிருப்பில் இருந்து கொண்டு தனது ஒரு மகளையும், மகனையும் படிக்க வைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தார்.

லஞ்ச ஒழிப்புத் துறையை தலைகீழாக புரட்டிப் போட்ட, “தொலைபேசி ஒட்டுக் கேட்பு“ விவகாரம், இவரையும் விட்டு வைக்க வில்லை. இவர் செய்த குற்றம், தொலைபேசி ஒட்டுக் கேட்பில் கைது செய்யப் பட்டிருந்த சங்கர் என்ற லஞ்ச ஒழிப்புத் துறை பணியாளருக்கு, தொலைபேசியில் ஆறுதல் சொன்னதுதான். அந்தப் பெண்ணின் கணவர் இறந்தவுடன், வேலை பெறுவதில் இருந்த சிக்கல்களை தீர்க்கவும், விரைவாக வேலை கிடைக்கவும், கைதான லஞ்ச ஒழிப்புத் துறை ஊழியர் செய்த உதவியை மறக்க முடியாமல் நன்றி உணர்ச்சியோடு அந்தப் பெண் இருந்தது மிகப் பெரிய குற்றம் அல்லவா ?

அந்த ஊழியர் கைது செய்யப் பட்டவுடன், 18 ஆண்டுகளாக அவர் பணியாற்றி லஞ்ச ஒழிப்புத் துறையின் அத்தனை நண்பர்களும் பேச மறுத்த நிலையில், அந்த ஊழியரால் பல்வேறு உதவிகளை பெற்றவர்கள், அந்த ஊழியரால் பல்வேறு ஆபத்துகளில் இருந்து காப்பாற்றப் பட்டவர்கள், இன்று அந்த ஊழியரோடு, தொலைபேசியில் பேசி, “எப்படி இருக்கிறாய்“ என்று கேட்க மறுத்த நிலையில் இந்தப் பெண், தொலைபேசியில் அந்த ஊழியரோடு பேசி “சார் நன்றாக இருக்கிறீர்களா..? உங்களுக்காக நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.

கண்டிப்பாக உங்கள் துன்பங்கள் யாவும், விரைவில் விலகிச் செல்லும்“ என்று, மாதத்திற்கு ஒரு முறையாவது ஆறுதல் சொல்லியது சாதாரண குற்றமா ?

இது சாதாரண குற்றம் இல்லை என்றுதான் அரசு பார்த்தது. ஆபீசில் அத்தனை பேரும் அவனோடு பேச அஞ்சிக் கொண்டிருக்கும் நிலையில் இவளுக்கென்ன அப்படி ஒரு திமிர் என்று கறுவியது அதிகார வர்க்கம்.

விளைவு, இரண்டு சிறிய பிள்ளைகளை வைத்துக் கொண்டு சென்னையில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த அந்தப் பெண், தூத்துக்குடிக்கு மாற்றப் பட்டார். மாற்றப் பட்டவுடன், அந்தப் பெண் நீதிமன்றத்தை அணுகி தடையாணை பெற்றார். நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கும் அளவுக்கு தமிழக அரசும், ஐபிஎஸ் அதிகாரிகளும் அவ்வளவு இளித்த வாயர்களா என்ன ? தடையாணை பெற்றால் என்ன, உன்னை வேறொரு அலுவலகத்திற்கு மாற்றுகிறேன் பார் என்று, சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையின் பிரிவுக்கு மாற்றம் செய்து ஆணையிடுகின்றனர். அத்துறையில் டிஎஸ்பியாக இருக்கும் சரஸ்வதி என்ற அதிகாரியிடம் சென்று பணியாற்ற வேண்டும் என்று உத்தரவு.


இந்தப் பெண்ணும் புதிய அலுவலகத்தில் சென்று பணியேற்கிறார். அந்த அலுவலகத்தில் இவருக்கு என்ன வேலை தெரியுமா ? அலுவலகத்தின் வாசலில் உள்ள ஒரு பென்ச்சில் உட்கார்ந்திருக்க வேண்டும். ஆமாம். வேறு ஒன்றுமே வேலையில்லை. அலுவலகத்தில் உள்ள ஒருவரும் இவருடன் பேசக் கூடாது என்று உத்தரவு. இந்த அலுவலகம், சென்னை நந்தனத்தின் மேல் அண்ணா சாலையிலேயே அமைந்துள்ளது. சாலையின் இடது புறமே இவ்வலுவலகம் இருப்பதால், மதியம் ஆனதும் வெயில் நேரடியாக ஜன்னல் வழியாக அடிக்கும். இவர் அமர்ந்திருக்கும் அந்த பென்ச்சில் வெயில் சுள்ளென்று அடிக்கும்.

அதற்காக இவரை கூப்பிட்டு ஆபிசின் உள்ளுக்குள் அமர வைக்கும் அளவுக்கு சாதாரண குற்றத்தையா புரிந்திருக்கிறார் இவர் ? ஒருவரோடும் பேசாமல், லைப்ரரியில் இருந்து எடுத்துச் சென்ற புத்தகங்களை படித்துக் கொண்டு அமைதியாக ஒரு மாதம் அந்த அலுவலகத்துக்கு சென்று வருகிறார் இவர்.

இந்த நேரத்தில் தான் உறவினர் வடிவில் இவருக்கு சிக்கல் வந்து சேர்கிறது. இவரின் சொந்த அக்காவின் லாரி, பேத்திக்குப்பம் வணிக வரி செக் போஸ்டில் நிறுத்தி வைக்கப் பட்டது. அந்த லாரியை விடுவிக்க, ரூபாய் 3000 லஞ்சம் கேட்கிறார்கள் என்று அவர் அக்கா போன் செய்து உதவி செய்யுமாறு கேட்கிறார்.

தன்னை சின்ன வயதிலிருந்து பார்த்துக் கொண்ட, தனக்கு தாய் போன்ற அக்கா கேட்கும் போது என்ன நெருக்கடி இருந்தாலும் உதவி செய்யாமல் மறுக்கும் அளவுக்கு இந்தப் பெண் அப்படி ஒரு கல் மனம் படைத்தவர் இல்லையே. அதனால் உடனடியாக அந்தப் பிரிவில் இருந்த மற்றொரு டிஎஸ்பியான அலிபாஷா என்பவரிடம் சென்று உதவி கேட்கிறார். அந்த அலி பாஷா வணிகவரி செக்போஸ்டின் தொலைபேசி எண் இல்லை என்ற காரணத்தால், எண் கிடைத்ததும் பேசுவதாக உறுதி கூறுகிறார்.


இந்தப் பெண், இவர் பணியாற்றும் டிஎஸ்பி சரஸ்வதி இல்லை என்பதால் அங்கே இருக்கும் ஜீவானந்தம் என்ற இன்ஸ்பெக்டரிடம் புகார் கூறுகிறார். அந்த ஜீவானந்தம் எனக்கு தெரியாது, டிஎஸ்பியிடம் கூறுங்கள் என்று கூறி விடுகிறார். டிஎஸ்பி சரஸ்வதி வந்ததும் “மேடம் இது போல லஞ்சம் கேட்டு லாரியை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்“ என்று புகார் கூறுகிறார்.

லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர் மேல் சட்டப் படி நடவடிக்கை எடுக்க கடமைப் பட்டவரான டிஎஸ்பி சரஸ்வதி, “இதுக்கு நாங்க ஒன்ணும் பண்ண முடியாது“ என்று பதில் கூறுகிறார். சரி வேறு என்ன செய்வது என்று தன் அக்காள் மகனை தொடர்பு கொண்ட பெண், இன்னும் இந்த லாரி விடுவிக்கப் படவில்லை என்று தெரிந்து கொண்டு வேறு வழியின்றி வீடு திரும்புகிறார்.


வீடு திரும்பியதும் அன்று இரவு, அக்காள் மீண்டும் தொடர்பு கொண்டு அந்த செக்போஸ்டில் உள்ள அலுவலரின் தொலைபேசி எண்ணை தருகிறார். இவர் உடனடியாக டிஎஸ்பி அலிபாஷாவை தொடர்பு கொண்டு இந்த எண்ணை தருவதற்கு முயற்சி செய்கிறார். இரவு 10.30 மணிக்கு, தன் மனைவியை விட்டு, போனை எடுக்க வைத்த அலி பாஷா, தான் வீட்டில் இல்லை என சொல்லச் சொல்கிறார்.


வேறு வழியின்றி இவரே அந்த செக்போஸ்ட் அலுவலரை தொடர்பு கொண்டு “சார் நான் இது போல இந்த அலுவலகத்தில் வேலை செய்கிறேன். என்ன சார் பிரச்சினை “ என்று கேட்கிறார். அந்த அலுவலர், ரூபாய் 3000 கட்டணமாக கட்ட வேண்டும் என்று சொல்கிறார். பேசும் போது அந்த அலுவலர் நல்ல போதையில் இருக்கிறார். “சார் கொஞ்சம் உதவி பண்ணுங்க சார் “ இவர் கேட்கவும், “மேடம், வண்டிய நிறுத்தி 24 மணி நேரத்துக்கு மேல ஆனதுனால, நான் வண்டிய விட முடியாது.

பணத்த கட்டிட்டு வண்டிய ரிலீஸ் பண்ணிட்டு போங்க“ என்று கூறுகிறார். வேறு வழியின்றி, பணத்தைக் கட்டி விட்டு வண்டி ரிலீஸ் செய்கிறார்கள். 3000 பணம் பெற்றுக் கொண்டு 1500 ரூபாய்க்கு ரசீது தருகிறார். இதுதான் சம்பவம்.


நான்கு நாட்கள் கழித்து, உறவினருக்காக வணிக வரித்துறை செக்போஸ்டில் உள்ள அலுவலருக்கு போன் செய்து மிரட்டி, அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்காக இந்தப் பெண் சஸ்பெண்ட் செய்யப் படுகிறார். இந்தப் பெண் உயர்நீதிமன்றத்தை அணுகிய போது, யாரை வேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானாலும் ஒருவரை சஸ்பெண்ட் செய்ய அரசுக்கு அதிகாரம் உண்டு என்று, இடது சாரி என்று கருதப் படும் ஒரு நீதிபதி தீர்ப்பு வழங்குகிறார்.


இந்தப் பெண் மீது துறை விசாரணை தொடங்குகிறது. ராஜேந்திரன் என்ற டிஎஸ்பி விசாரணை அதிகாரி. டிஎஸ்பி சரஸ்வதி முதல் சாட்சி. இந்தப் பெண் தன்னுடைய உறவினர் வண்டி செக்போஸ்டில் மாட்டிக் கொண்டது தொடர்பாக தன்னிடம் எப்போதுமே பேசியது இல்லை என்று கூறுகிறார். இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம், அன்று முழுவதும் தான் அலுவலகத்தில் இருந்ததாகவும் தன்னிடம் வந்து அந்தப் பெண் எந்த உதவியும் கேட்கவில்லை என்று கூறுகிறார்.

அந்த வணிகவரித்துறை அலுவலர் அடுத்த சாட்சி. தன்னிடம் போன் செய்து பேசியது உண்மை என்றும், ஆனால் மிரட்டவில்லை என்றும், உதவி செய்யுமாறு கேட்டதாகவும், தான் நடைமுறைகளை எடுத்துச் சொன்னதாகவும் கூறுகிறார். அடுத்து டிஎஸ்பி அலிபாஷா. இது தொடர்பாக தன்னிடம் அந்தப் பெண் பேசவேயில்லை என்றும், இது பற்றி தனக்கு எந்தத் தகவலும் தெரியாது என்றும் கூறுகிறார்.

இதைக் கேட்டதும் இந்தப் பெண் அழுது விடுகிறார். அழுததைக் கண்டதும், அலி பாஷா, இதை பதிவு செய்ய வேண்டாம் Off the record என்று விசாரணை அதிகாரியிடம் கூறி விட்டு, அந்தப் பெண் தன்னிடம் அன்று காலையிலேயே வந்து உதவி கேட்டது உண்மை என்றும் ஆனால் இதைப் பதிவு செய்ய வேண்டாம் என்றும் கூறுகிறார்.

இந்த அலிபாஷா, சமீபத்தில் தான் புனித ஹஜ் யாத்திரைக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குரானும், அல்லாவும், பொய் சொல்லவா அறிவுறுத்துகிறார்கள் ? கடவுள் என்பது மனதில் அல்லவா இருக்க வேண்டும். மனதுக்கு நேர்மையாக நடக்காத நபர், ஹஜ்ஜுக்கு சென்றால் புனிதப் பட்டுவிடுவாரா என்ன ?


இவர்கள் அத்தனை பேரும் பொய் சாட்சி சொல்லும் காரணம் என்ன ? இவர்கள் அத்தனை பேரும் கூட்டுக் கொள்ளையர்கள். பொய்யாக பயணப்படி பெற்று, அரசுப் பணத்தை கையாடல் செய்பவர்கள். அரசின் ரகசிய நிதியை மாதந்தோறும் பங்கு போட்டுக் கொள்பவர்கள். இவர்களின் இந்தப் பொய்ப் பயணப்பட்டியலில் கையொப்பமிடும், மாதந்தோறும் ரகசிய நிதி வழங்கும், “கட்டப் பஞ்சாயத்து“ புகாருக்கு உள்ளான மத்திய சரக எஸ்பி லட்சுமியின் உத்தரவின் பேரிலேயே இவர்கள் இது போல பொய் சாட்சி சொல்கிறார்கள். இந்த வழக்கின் விசாரணை அதிகாரி மட்டும் நேர்மையானவரா என்ன ? இவர், இந்தக் குற்றச் சாட்டுகள் அனைத்தும் உண்மை, தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப் பட்டுள்ளது என்றே அறிக்கை கொடுக்கப் போகிறார்.


அடுத்த வழக்கு ஐபிஎஸ் அதிகாரி பற்றியது. இது ஒன்றும் ஏற்கனவே சொன்னது போல மிக கடுமையான குற்றம் ஒன்றும் கிடையாது. மிகச் சாதாரணமானது தான்.
முதல் குற்றச் சாட்டு. தர்மபுரி மாவட்டத்தில் எஸ்பியாக இருந்தபோது, அரசு அம்பாசிடர் வாகனத்தில் இருந்த என்ஜினை எடுத்து, தன்னுடைய தகப்பனார் ஓட்டும் டூரிஸ்ட் காரில் பொருத்தியது ஒரு குற்றச் சாட்டு.

தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டதாக பயணப் பட்டியல் பெற்று விட்டு, அந்த நாளில் அலுவலகத்தில் இருந்ததால், அரசுப் பணத்தை கையாடியதான குற்றச் சாட்டு. மூன்றாவது குற்றச் சாட்டு மிகச் சாதாரணமானது. தன்னுடைய முதல் திருமணத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு, தான் இரண்டாவதாக தலித் சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்த பின், அந்த குழந்தைக்கு எஸ்.சி என்று சாதிச் சான்றிதழ் பெற்றது.

இதன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடக்கிறது. இறுதியில் விசாரணை அதிகாரி, கார் என்ஜினை மீண்டும் பொருத்தி விட்டதாலும், பயணப் பட்டியல் பெற்றாலும் அந்த நாட்களில் அவர் அலுவலகப் பணிதான் பார்த்துக் கொண்டிருந்தார் என்பதாலும், எஸ்சி என்று போலிச் சாதிச் சான்றிதழ் வாங்கியிருந்தாலும் அந்தச் சான்றிதழால் எந்தப் பயனும் அனுபவிக்கவில்லை என்பதாலும், குற்றச் சாட்டு நிரூபிக்கப் படவில்லை என்று கூறி குற்றச் சாட்டுகளை கைவிட்டார்.


இதே அதிகாரி மீது இரண்டாவது வழக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் டிஐஜியாக இருந்த போது ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டார் என்பதும், தனது மகன் சினிமா எடுக்க அதிகார துஷ்பியரேயோகம் செய்தார் என்பதும். இந்த குற்றச் சாட்டும் நிரூபிக்கப் பட்டாலும், இறுதியாக விசாரணை அதிகாரி போதுமான ஆதாரங்கள் இல்லை என்று வழக்கை மூடினார்.
இந்த அதிகாரி லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக நியமிக்கப் படுகிறார். (எப்படி இருக்கிறது கூத்து) “ஆடுற காலும், பாடுற வாயும் சும்மா இருக்குமா“ என்பது உண்மை என்று இந்த அதிகாரி நிரூபிக்க வேண்டாமா ?

சி.கே.காந்திராஜன் என்று ஒரு டிஐஜி இருந்தார். இவர் செங்கல்பட்டு டிஐஜியாக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக வழக்கு. (DE 13/2003/POL/HQ) இதை விசாரித்த அதிகாரி இவ்வழக்கில் எப்ஐஆர் போட போதுமான ஆதாரங்கள் உள்ளது என்று தெரிவித்தார். அந்த உயர் பெண் அதிகாரி காந்திராஜனிடம் இருந்து ஒரு கடிதத்தை பெறுகிறார். அந்தக் கடிதத்தில் காந்திராஜன், தன் மீது தொடரப்பட்ட வழக்கு பொய் வழக்கு என்று கூறுகிறார். இதை விசாரணை அதிகாரிக்கு அனுப்ப, அவர் அடுத்த நாளே, காந்திராஜன் உண்மையிலேயே காந்தி, குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப் படவில்லை என்று அறிக்கை தருகிறார்.


பாஸ்கரன் என்று ஒரு எஸ்பி. அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நிலுவையில் இருக்கிறது. இவருக்கு பதக்கம் வழங்குவதற்காக இவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளதா என்று டிஜிபி அலுவலகத்தில் இருந்து கேட்கப் படுகிறது. வழக்கு முடிக்கப் பட்டது, நிலுவையில் இல்லை என்று கடிதம் கொடுக்கிறார்.

லஞ்ச ஒழிப்புத் துறையில் இயக்குநராக இருந்து இருபது நாட்களுக்கு முன் டிஜிபியாக ஆன பி.பி.நெயில்வால், இந்த வழக்கைப் பற்றி அறிந்ததால், மீண்டும் பாஸ்கரன் மீது உள்ள வழக்கு பற்றிக் கேட்டு கடிதம் எழுதுகிறார். அந்தப் பெண் அதிகாரி மீண்டும் பாஸ்கரன் மீதான வழக்கு மூடப்பட்டது, நிலுவையில் ஏதும் இல்லை என்று கூறுகிறார்.
மேற்கூறிய இந்த இரண்டு நிகழ்வுகள் தவிர, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் இருந்த வி.ஏ.ரவிக்குமார் என்ற எஸ்பியிடம் இருந்து இரண்டு சூட்கேஸ்கள் நிறைய பட்டுப் புடவைகள் வாங்கியதும், தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அனைத்திலும் இவர் எழுதிய புத்தகங்களை கட்டாயமாக விற்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவிட்டதற்காகவும், இவர் மீது ரகசிய விசாரணை நடத்தப் பட்டு குற்றச் சாட்டுகள் உண்மை என்று நிரூபிக்கப் பட்டு துறை விசாரணைக்கு உத்தரவிடப் படுகிறது.

மீசை பெரிதாக வைத்துள்ள ஆர்.நட்ராஜ்தான் விசாரணை அதிகாரி. அந்தப் பெண் அதிகாரி அப்பழுக்கற்றவர் என்று இவர் அறிக்கை கொடுக்க, இப்போது இந்தப் பெண் அதிகாரிக்கு அடுத்த பதவி உயர்வு வழங்கப் படப் போகிறது.


சமீபத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியில் இந்தப் பெண் அதிகாரி, அம்ருதா பதிப்பகம் என்ற இரட்டை ஸ்டாலை நடத்தி, அந்த ஸ்டாலை கண்காட்சி நடந்த அத்தனை நாட்களிலும் பார்த்தக் கொள்ள, அரசு ஊதியம் பெறும் காவலர்களையும் தலைமைக் காவலர்களையும் நியமித்திருந்தார். இதுதான் இந்த அதிகாரியின் நேர்மை.


இப்போது இந்த இரண்டு வழக்குகளையும் ஒப்பிட்டு தீர்ப்பு சொல்லுங்கள். தன்னுடைய சொந்த அக்காவிற்கு உதவி செய்வதற்காக, ஒரு அரசு அலுவலரை போனில் அழைத்து, உதவி செய்யுங்கள் சார் என்று கேட்டதற்கு சஸ்பென்ஷன்.


போலி சாதிச் சான்றிதழ் பெற்று, அரசுப் பணத்தை கையாடல் செய்து, அரசு கார் என்ஜினை திருடி, லஞ்சமாக பட்டுப் புடவை பெற்று, அதிகார துஷ்பிரயோகம் செய்தவருக்கு பதவி உயர்வு.

என்ன இருந்தாலும் இவர் ஐபிஎஸ் அதிகாரி இல்லையா ? அவர் சாதாரண இள நிலை உதவியாளர் தானே ?


நன்றி: நம்தினமதி நாளேடு

சவுக்கு

இரு வழக்குகள்..


இந்த இரு வழக்குகள், மீரட் சதி வழக்கோ அல்லது லாகூர் சதி வழக்கோ அல்ல. தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் இரு வழக்குகள். இந்த வழக்குகளில் சம்பந்தப் பட்டவர்கள் இரு பெண்கள். ஒருவர் கைம்பெண். ஒருவர் விவாகரத்து பெற்றவர். ஒருவர் அரசு அலுவலகத்தில் சாதாரண இளநிலை உதவியாளர். மற்றொருவர் ஐபிஎஸ் அதிகாரி. இருவருமே லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றியவர்கள்.

இந்த இரு பெண்களின் மீதான வழக்குகளின் தன்மையையும், இந்த வழக்குகளை அரசு எப்படி கையாண்டது என்பதுதான் இன்று மிக மிக வருத்தத்திற்குரிய விஷயம். அதிகாரம் மிக்க அரசு இயந்திரம் வேண்டியவர்களை ஒரு மாதிரியாகவும், வேண்டாதவர்களை ஒரு மாதிரியாகவும் நடத்தும் என்பதற்கு, பார்வதி அம்மாள் விமானத்தை விட்டு இறங்காமல் திருப்பி அனுப்பப் பட்டதும், தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தா, அரசு விருந்தினராக உபசரிக்கப் பட்டு நீதிமன்றத்தில் பொது நல வழக்கு நிலுவையில் இருக்கும் போதே பத்திரமாக திருப்பி அனுப்பப் பட்டதும் ஒரு சிறந்த உதாரணம். இது போல பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

இதைப் போலவே அப்பட்டமாக, அநியாயமாக இரு பெண்களில் ஒருவர் எப்படி பாரபட்சமான நடத்தப் படுகிறார், அரசு அதிகாரம் எப்படி வேண்டாதவர்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது என்பதை பார்ப்போம்.

இதில் கைம்பெண்ணாக இருப்பவரின் கணவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் கான்ஸ்டபிளாக வேலைப் பார்த்து வந்த போது, திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் கருணை அடிப்படையில் இவருக்கு லஞ்ச ஒழிப்புத் துறையில் இள நிலை உதவியாளர் பதவி வழங்கப் பட்டது. சென்னையில் ஒரு அரசு குடியிருப்பில் இருந்து கொண்டு தனது ஒரு மகளையும், மகனையும் படிக்க வைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தார்.

லஞ்ச ஒழிப்புத் துறையை தலைகீழாக புரட்டிப் போட்ட, “தொலைபேசி ஒட்டுக் கேட்பு“ விவகாரம், இவரையும் விட்டு வைக்க வில்லை. இவர் செய்த குற்றம், தொலைபேசி ஒட்டுக் கேட்பில் கைது செய்யப் பட்டிருந்த சங்கர் என்ற லஞ்ச ஒழிப்புத் துறை பணியாளருக்கு, தொலைபேசியில் ஆறுதல் சொன்னதுதான். அந்தப் பெண்ணின் கணவர் இறந்தவுடன், வேலை பெறுவதில் இருந்த சிக்கல்களை தீர்க்கவும், விரைவாக வேலை கிடைக்கவும், கைதான லஞ்ச ஒழிப்புத் துறை ஊழியர் செய்த உதவியை மறக்க முடியாமல் நன்றி உணர்ச்சியோடு அந்தப் பெண் இருந்தது மிகப் பெரிய குற்றம் அல்லவா ?

அந்த ஊழியர் கைது செய்யப் பட்டவுடன், 18 ஆண்டுகளாக அவர் பணியாற்றி லஞ்ச ஒழிப்புத் துறையின் அத்தனை நண்பர்களும் பேச மறுத்த நிலையில், அந்த ஊழியரால் பல்வேறு உதவிகளை பெற்றவர்கள், அந்த ஊழியரால் பல்வேறு ஆபத்துகளில் இருந்து காப்பாற்றப் பட்டவர்கள், இன்று அந்த ஊழியரோடு, தொலைபேசியில் பேசி, “எப்படி இருக்கிறாய்“ என்று கேட்க மறுத்த நிலையில் இந்தப் பெண், தொலைபேசியில் அந்த ஊழியரோடு பேசி “சார் நன்றாக இருக்கிறீர்களா..? உங்களுக்காக நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.

கண்டிப்பாக உங்கள் துன்பங்கள் யாவும், விரைவில் விலகிச் செல்லும்“ என்று, மாதத்திற்கு ஒரு முறையாவது ஆறுதல் சொல்லியது சாதாரண குற்றமா ?

இது சாதாரண குற்றம் இல்லை என்றுதான் அரசு பார்த்தது. ஆபீசில் அத்தனை பேரும் அவனோடு பேச அஞ்சிக் கொண்டிருக்கும் நிலையில் இவளுக்கென்ன அப்படி ஒரு திமிர் என்று கறுவியது அதிகார வர்க்கம்.

விளைவு, இரண்டு சிறிய பிள்ளைகளை வைத்துக் கொண்டு சென்னையில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த அந்தப் பெண், தூத்துக்குடிக்கு மாற்றப் பட்டார். மாற்றப் பட்டவுடன், அந்தப் பெண் நீதிமன்றத்தை அணுகி தடையாணை பெற்றார். நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கும் அளவுக்கு தமிழக அரசும், ஐபிஎஸ் அதிகாரிகளும் அவ்வளவு இளித்த வாயர்களா என்ன ? தடையாணை பெற்றால் என்ன, உன்னை வேறொரு அலுவலகத்திற்கு மாற்றுகிறேன் பார் என்று, சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையின் பிரிவுக்கு மாற்றம் செய்து ஆணையிடுகின்றனர். அத்துறையில் டிஎஸ்பியாக இருக்கும் சரஸ்வதி என்ற அதிகாரியிடம் சென்று பணியாற்ற வேண்டும் என்று உத்தரவு.


இந்தப் பெண்ணும் புதிய அலுவலகத்தில் சென்று பணியேற்கிறார். அந்த அலுவலகத்தில் இவருக்கு என்ன வேலை தெரியுமா ? அலுவலகத்தின் வாசலில் உள்ள ஒரு பென்ச்சில் உட்கார்ந்திருக்க வேண்டும். ஆமாம். வேறு ஒன்றுமே வேலையில்லை. அலுவலகத்தில் உள்ள ஒருவரும் இவருடன் பேசக் கூடாது என்று உத்தரவு. இந்த அலுவலகம், சென்னை நந்தனத்தின் மேல் அண்ணா சாலையிலேயே அமைந்துள்ளது. சாலையின் இடது புறமே இவ்வலுவலகம் இருப்பதால், மதியம் ஆனதும் வெயில் நேரடியாக ஜன்னல் வழியாக அடிக்கும். இவர் அமர்ந்திருக்கும் அந்த பென்ச்சில் வெயில் சுள்ளென்று அடிக்கும்.

அதற்காக இவரை கூப்பிட்டு ஆபிசின் உள்ளுக்குள் அமர வைக்கும் அளவுக்கு சாதாரண குற்றத்தையா புரிந்திருக்கிறார் இவர் ? ஒருவரோடும் பேசாமல், லைப்ரரியில் இருந்து எடுத்துச் சென்ற புத்தகங்களை படித்துக் கொண்டு அமைதியாக ஒரு மாதம் அந்த அலுவலகத்துக்கு சென்று வருகிறார் இவர்.

இந்த நேரத்தில் தான் உறவினர் வடிவில் இவருக்கு சிக்கல் வந்து சேர்கிறது. இவரின் சொந்த அக்காவின் லாரி, பேத்திக்குப்பம் வணிக வரி செக் போஸ்டில் நிறுத்தி வைக்கப் பட்டது. அந்த லாரியை விடுவிக்க, ரூபாய் 3000 லஞ்சம் கேட்கிறார்கள் என்று அவர் அக்கா போன் செய்து உதவி செய்யுமாறு கேட்கிறார்.

தன்னை சின்ன வயதிலிருந்து பார்த்துக் கொண்ட, தனக்கு தாய் போன்ற அக்கா கேட்கும் போது என்ன நெருக்கடி இருந்தாலும் உதவி செய்யாமல் மறுக்கும் அளவுக்கு இந்தப் பெண் அப்படி ஒரு கல் மனம் படைத்தவர் இல்லையே. அதனால் உடனடியாக அந்தப் பிரிவில் இருந்த மற்றொரு டிஎஸ்பியான அலிபாஷா என்பவரிடம் சென்று உதவி கேட்கிறார். அந்த அலி பாஷா வணிகவரி செக்போஸ்டின் தொலைபேசி எண் இல்லை என்ற காரணத்தால், எண் கிடைத்ததும் பேசுவதாக உறுதி கூறுகிறார்.


இந்தப் பெண், இவர் பணியாற்றும் டிஎஸ்பி சரஸ்வதி இல்லை என்பதால் அங்கே இருக்கும் ஜீவானந்தம் என்ற இன்ஸ்பெக்டரிடம் புகார் கூறுகிறார். அந்த ஜீவானந்தம் எனக்கு தெரியாது, டிஎஸ்பியிடம் கூறுங்கள் என்று கூறி விடுகிறார். டிஎஸ்பி சரஸ்வதி வந்ததும் “மேடம் இது போல லஞ்சம் கேட்டு லாரியை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்“ என்று புகார் கூறுகிறார்.

லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர் மேல் சட்டப் படி நடவடிக்கை எடுக்க கடமைப் பட்டவரான டிஎஸ்பி சரஸ்வதி, “இதுக்கு நாங்க ஒன்ணும் பண்ண முடியாது“ என்று பதில் கூறுகிறார். சரி வேறு என்ன செய்வது என்று தன் அக்காள் மகனை தொடர்பு கொண்ட பெண், இன்னும் இந்த லாரி விடுவிக்கப் படவில்லை என்று தெரிந்து கொண்டு வேறு வழியின்றி வீடு திரும்புகிறார்.


வீடு திரும்பியதும் அன்று இரவு, அக்காள் மீண்டும் தொடர்பு கொண்டு அந்த செக்போஸ்டில் உள்ள அலுவலரின் தொலைபேசி எண்ணை தருகிறார். இவர் உடனடியாக டிஎஸ்பி அலிபாஷாவை தொடர்பு கொண்டு இந்த எண்ணை தருவதற்கு முயற்சி செய்கிறார். இரவு 10.30 மணிக்கு, தன் மனைவியை விட்டு, போனை எடுக்க வைத்த அலி பாஷா, தான் வீட்டில் இல்லை என சொல்லச் சொல்கிறார்.


வேறு வழியின்றி இவரே அந்த செக்போஸ்ட் அலுவலரை தொடர்பு கொண்டு “சார் நான் இது போல இந்த அலுவலகத்தில் வேலை செய்கிறேன். என்ன சார் பிரச்சினை “ என்று கேட்கிறார். அந்த அலுவலர், ரூபாய் 3000 கட்டணமாக கட்ட வேண்டும் என்று சொல்கிறார். பேசும் போது அந்த அலுவலர் நல்ல போதையில் இருக்கிறார். “சார் கொஞ்சம் உதவி பண்ணுங்க சார் “ இவர் கேட்கவும், “மேடம், வண்டிய நிறுத்தி 24 மணி நேரத்துக்கு மேல ஆனதுனால, நான் வண்டிய விட முடியாது.

பணத்த கட்டிட்டு வண்டிய ரிலீஸ் பண்ணிட்டு போங்க“ என்று கூறுகிறார். வேறு வழியின்றி, பணத்தைக் கட்டி விட்டு வண்டி ரிலீஸ் செய்கிறார்கள். 3000 பணம் பெற்றுக் கொண்டு 1500 ரூபாய்க்கு ரசீது தருகிறார். இதுதான் சம்பவம்.


நான்கு நாட்கள் கழித்து, உறவினருக்காக வணிக வரித்துறை செக்போஸ்டில் உள்ள அலுவலருக்கு போன் செய்து மிரட்டி, அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்காக இந்தப் பெண் சஸ்பெண்ட் செய்யப் படுகிறார். இந்தப் பெண் உயர்நீதிமன்றத்தை அணுகிய போது, யாரை வேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானாலும் ஒருவரை சஸ்பெண்ட் செய்ய அரசுக்கு அதிகாரம் உண்டு என்று, இடது சாரி என்று கருதப் படும் ஒரு நீதிபதி தீர்ப்பு வழங்குகிறார்.


இந்தப் பெண் மீது துறை விசாரணை தொடங்குகிறது. ராஜேந்திரன் என்ற டிஎஸ்பி விசாரணை அதிகாரி. டிஎஸ்பி சரஸ்வதி முதல் சாட்சி. இந்தப் பெண் தன்னுடைய உறவினர் வண்டி செக்போஸ்டில் மாட்டிக் கொண்டது தொடர்பாக தன்னிடம் எப்போதுமே பேசியது இல்லை என்று கூறுகிறார். இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம், அன்று முழுவதும் தான் அலுவலகத்தில் இருந்ததாகவும் தன்னிடம் வந்து அந்தப் பெண் எந்த உதவியும் கேட்கவில்லை என்று கூறுகிறார்.

அந்த வணிகவரித்துறை அலுவலர் அடுத்த சாட்சி. தன்னிடம் போன் செய்து பேசியது உண்மை என்றும், ஆனால் மிரட்டவில்லை என்றும், உதவி செய்யுமாறு கேட்டதாகவும், தான் நடைமுறைகளை எடுத்துச் சொன்னதாகவும் கூறுகிறார். அடுத்து டிஎஸ்பி அலிபாஷா. இது தொடர்பாக தன்னிடம் அந்தப் பெண் பேசவேயில்லை என்றும், இது பற்றி தனக்கு எந்தத் தகவலும் தெரியாது என்றும் கூறுகிறார்.

இதைக் கேட்டதும் இந்தப் பெண் அழுது விடுகிறார். அழுததைக் கண்டதும், அலி பாஷா, இதை பதிவு செய்ய வேண்டாம் Off the record என்று விசாரணை அதிகாரியிடம் கூறி விட்டு, அந்தப் பெண் தன்னிடம் அன்று காலையிலேயே வந்து உதவி கேட்டது உண்மை என்றும் ஆனால் இதைப் பதிவு செய்ய வேண்டாம் என்றும் கூறுகிறார்.

இந்த அலிபாஷா, சமீபத்தில் தான் புனித ஹஜ் யாத்திரைக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குரானும், அல்லாவும், பொய் சொல்லவா அறிவுறுத்துகிறார்கள் ? கடவுள் என்பது மனதில் அல்லவா இருக்க வேண்டும். மனதுக்கு நேர்மையாக நடக்காத நபர், ஹஜ்ஜுக்கு சென்றால் புனிதப் பட்டுவிடுவாரா என்ன ?


இவர்கள் அத்தனை பேரும் பொய் சாட்சி சொல்லும் காரணம் என்ன ? இவர்கள் அத்தனை பேரும் கூட்டுக் கொள்ளையர்கள். பொய்யாக பயணப்படி பெற்று, அரசுப் பணத்தை கையாடல் செய்பவர்கள். அரசின் ரகசிய நிதியை மாதந்தோறும் பங்கு போட்டுக் கொள்பவர்கள். இவர்களின் இந்தப் பொய்ப் பயணப்பட்டியலில் கையொப்பமிடும், மாதந்தோறும் ரகசிய நிதி வழங்கும், “கட்டப் பஞ்சாயத்து“ புகாருக்கு உள்ளான மத்திய சரக எஸ்பி லட்சுமியின் உத்தரவின் பேரிலேயே இவர்கள் இது போல பொய் சாட்சி சொல்கிறார்கள். இந்த வழக்கின் விசாரணை அதிகாரி மட்டும் நேர்மையானவரா என்ன ? இவர், இந்தக் குற்றச் சாட்டுகள் அனைத்தும் உண்மை, தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப் பட்டுள்ளது என்றே அறிக்கை கொடுக்கப் போகிறார்.


அடுத்த வழக்கு ஐபிஎஸ் அதிகாரி பற்றியது. இது ஒன்றும் ஏற்கனவே சொன்னது போல மிக கடுமையான குற்றம் ஒன்றும் கிடையாது. மிகச் சாதாரணமானது தான்.
முதல் குற்றச் சாட்டு. தர்மபுரி மாவட்டத்தில் எஸ்பியாக இருந்தபோது, அரசு அம்பாசிடர் வாகனத்தில் இருந்த என்ஜினை எடுத்து, தன்னுடைய தகப்பனார் ஓட்டும் டூரிஸ்ட் காரில் பொருத்தியது ஒரு குற்றச் சாட்டு.

தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டதாக பயணப் பட்டியல் பெற்று விட்டு, அந்த நாளில் அலுவலகத்தில் இருந்ததால், அரசுப் பணத்தை கையாடியதான குற்றச் சாட்டு. மூன்றாவது குற்றச் சாட்டு மிகச் சாதாரணமானது. தன்னுடைய முதல் திருமணத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு, தான் இரண்டாவதாக தலித் சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்த பின், அந்த குழந்தைக்கு எஸ்.சி என்று சாதிச் சான்றிதழ் பெற்றது.

இதன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடக்கிறது. இறுதியில் விசாரணை அதிகாரி, கார் என்ஜினை மீண்டும் பொருத்தி விட்டதாலும், பயணப் பட்டியல் பெற்றாலும் அந்த நாட்களில் அவர் அலுவலகப் பணிதான் பார்த்துக் கொண்டிருந்தார் என்பதாலும், எஸ்சி என்று போலிச் சாதிச் சான்றிதழ் வாங்கியிருந்தாலும் அந்தச் சான்றிதழால் எந்தப் பயனும் அனுபவிக்கவில்லை என்பதாலும், குற்றச் சாட்டு நிரூபிக்கப் படவில்லை என்று கூறி குற்றச் சாட்டுகளை கைவிட்டார்.


இதே அதிகாரி மீது இரண்டாவது வழக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் டிஐஜியாக இருந்த போது ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டார் என்பதும், தனது மகன் சினிமா எடுக்க அதிகார துஷ்பியரேயோகம் செய்தார் என்பதும். இந்த குற்றச் சாட்டும் நிரூபிக்கப் பட்டாலும், இறுதியாக விசாரணை அதிகாரி போதுமான ஆதாரங்கள் இல்லை என்று வழக்கை மூடினார்.
இந்த அதிகாரி லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக நியமிக்கப் படுகிறார். (எப்படி இருக்கிறது கூத்து) “ஆடுற காலும், பாடுற வாயும் சும்மா இருக்குமா“ என்பது உண்மை என்று இந்த அதிகாரி நிரூபிக்க வேண்டாமா ?

சி.கே.காந்திராஜன் என்று ஒரு டிஐஜி இருந்தார். இவர் செங்கல்பட்டு டிஐஜியாக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக வழக்கு. (DE 13/2003/POL/HQ) இதை விசாரித்த அதிகாரி இவ்வழக்கில் எப்ஐஆர் போட போதுமான ஆதாரங்கள் உள்ளது என்று தெரிவித்தார். அந்த உயர் பெண் அதிகாரி காந்திராஜனிடம் இருந்து ஒரு கடிதத்தை பெறுகிறார். அந்தக் கடிதத்தில் காந்திராஜன், தன் மீது தொடரப்பட்ட வழக்கு பொய் வழக்கு என்று கூறுகிறார். இதை விசாரணை அதிகாரிக்கு அனுப்ப, அவர் அடுத்த நாளே, காந்திராஜன் உண்மையிலேயே காந்தி, குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப் படவில்லை என்று அறிக்கை தருகிறார்.


பாஸ்கரன் என்று ஒரு எஸ்பி. அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நிலுவையில் இருக்கிறது. இவருக்கு பதக்கம் வழங்குவதற்காக இவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளதா என்று டிஜிபி அலுவலகத்தில் இருந்து கேட்கப் படுகிறது. வழக்கு முடிக்கப் பட்டது, நிலுவையில் இல்லை என்று கடிதம் கொடுக்கிறார்.

லஞ்ச ஒழிப்புத் துறையில் இயக்குநராக இருந்து இருபது நாட்களுக்கு முன் டிஜிபியாக ஆன பி.பி.நெயில்வால், இந்த வழக்கைப் பற்றி அறிந்ததால், மீண்டும் பாஸ்கரன் மீது உள்ள வழக்கு பற்றிக் கேட்டு கடிதம் எழுதுகிறார். அந்தப் பெண் அதிகாரி மீண்டும் பாஸ்கரன் மீதான வழக்கு மூடப்பட்டது, நிலுவையில் ஏதும் இல்லை என்று கூறுகிறார்.
மேற்கூறிய இந்த இரண்டு நிகழ்வுகள் தவிர, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் இருந்த வி.ஏ.ரவிக்குமார் என்ற எஸ்பியிடம் இருந்து இரண்டு சூட்கேஸ்கள் நிறைய பட்டுப் புடவைகள் வாங்கியதும், தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அனைத்திலும் இவர் எழுதிய புத்தகங்களை கட்டாயமாக விற்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவிட்டதற்காகவும், இவர் மீது ரகசிய விசாரணை நடத்தப் பட்டு குற்றச் சாட்டுகள் உண்மை என்று நிரூபிக்கப் பட்டு துறை விசாரணைக்கு உத்தரவிடப் படுகிறது.

மீசை பெரிதாக வைத்துள்ள ஆர்.நட்ராஜ்தான் விசாரணை அதிகாரி. அந்தப் பெண் அதிகாரி அப்பழுக்கற்றவர் என்று இவர் அறிக்கை கொடுக்க, இப்போது இந்தப் பெண் அதிகாரிக்கு அடுத்த பதவி உயர்வு வழங்கப் படப் போகிறது.


சமீபத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியில் இந்தப் பெண் அதிகாரி, அம்ருதா பதிப்பகம் என்ற இரட்டை ஸ்டாலை நடத்தி, அந்த ஸ்டாலை கண்காட்சி நடந்த அத்தனை நாட்களிலும் பார்த்தக் கொள்ள, அரசு ஊதியம் பெறும் காவலர்களையும் தலைமைக் காவலர்களையும் நியமித்திருந்தார். இதுதான் இந்த அதிகாரியின் நேர்மை.


இப்போது இந்த இரண்டு வழக்குகளையும் ஒப்பிட்டு தீர்ப்பு சொல்லுங்கள். தன்னுடைய சொந்த அக்காவிற்கு உதவி செய்வதற்காக, ஒரு அரசு அலுவலரை போனில் அழைத்து, உதவி செய்யுங்கள் சார் என்று கேட்டதற்கு சஸ்பென்ஷன்.


போலி சாதிச் சான்றிதழ் பெற்று, அரசுப் பணத்தை கையாடல் செய்து, அரசு கார் என்ஜினை திருடி, லஞ்சமாக பட்டுப் புடவை பெற்று, அதிகார துஷ்பிரயோகம் செய்தவருக்கு பதவி உயர்வு.

என்ன இருந்தாலும் இவர் ஐபிஎஸ் அதிகாரி இல்லையா ? அவர் சாதாரண இள நிலை உதவியாளர் தானே ?


நன்றி: நம்தினமதி நாளேடு

சவுக்கு