Saturday, July 31, 2010

விக்கிலீக்கும், வின்னர் வடிவேலுவும்.



விக்கி லீக்குக்கும் வின்னர் வடிவேலுவுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா ? விக்கிலீக் இணைய தளம் வெளியிடும் ரகசிய ஆவணங்கள், சம்பந்தப் பட்ட நபர்களை “வேண்டாம்….. வலிக்குது… அப்புறம் அழுதுடுவேன். “ என்று சொல்ல வைக்கும் தன்மை படைத்தன.

விக்கிலீக் இணையதளம், சமீபத்தில் தனது இணைய தளத்தில் அப்கான் டைரிகள் என்ற அமெரிக்க ராணுவத்தின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டன. இந்த ஆவணங்கள், ஆப்கான் போரில் அமேரிக்க ராணுவம் சந்தித்த இழப்புகள் மட்டுமல்லாமல், அமெரிக்க ராணுவத்தினர், கண்மூடித்தனமாக எத்தனை அப்பாவிகளை சுட்டுக் கொன்றிருக்கின்றனர் என்ற உண்மைகளை பட்டவர்த்தனமாக வெளியிட்டிருக்கின்றன.

இந்த ஆவணங்கள் பற்றிய தனது கருத்தை தெரிவித்த அமெரிக்க அதிபர் ஓபாமா, இது ஒன்றும் புதிய விஷயமில்லை என்று கூறியிருக்கிறார். புதிய விஷயமில்லை என்றால் ஏற்கனவே வெளியிட்டிருக்க வேண்டியதுதானே ?

இந்த இணைய தளம் 2007ம் ஆண்டு முதல் செயல் பட்டு வருகிறது. இந்த இணைய தளம் உருவான வரலாறு தெரியுமா ? இணையத்தில் உலவும் பல்வேறு தன்னார்வர்கள் உலகின் வறுமைக்கும் பஞ்சத்திற்கும், மக்களின் துன்பத்திற்கும் காரணம் அரசுகளின் ஊழலே என்று முடிவெடுத்தனர். இந்த ஊழலை சரி செய்ய என்ன செய்யலாம் என்று யோசித்தபோது உருவானதுதான் விக்கிலீக்.

உலகெங்கும் மனசாட்சி உள்ளவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். (ஜாபர் சேட் கூடவே இருந்து, சவுக்குக்கு ஆவணங்களை தருவதில்லையா ? அதுபோலத்தான்) 1971ம் ஆண்டு அமெரிக்காவில் வியட்நாம் போர் தொடர்பாக டேனியல் எல்ஸ்பெர்க் என்ற அமெரிக்க வெளியுறவுத் துறையில் பணியாற்றிய ஒருவர் வியட்நாம் போர் தொடர்பான 7000 பக்க ஆவணங்களை நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ்களில் தொடராக வெளியிடக் காரணமாக இருந்தார்.

இந்த ஆவணங்களை வெளிவரக் காரணமாக இருந்த டேனியல் எல்ஸ்பெர்க் என்ற அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி இந்த ஆவணங்களை வெளியிட்டது குறித்து என்ன கூறினார் தெரியுமா ?

“ஒரு அமெரிக்க குடிமகனாக, இந்த தகவலை மறைப்பதில் இனியும் நான் பங்கு வகிக்க முடியும் என்று நான் கருதவில்லை. இந்தக் காரியத்தை (ஆவணங்களை வெளியிட்டது) எனக்கு ஆபத்து என்று அறிந்தே, இதற்கான விளைவுகளை சந்திக்க தயாராகவே இந்தக் காரியத்தை செய்கிறேன். “

இந்த ஆவணங்களை வெளியிடக் கூடாது என்று அமெரிக்க பகீரத பிரயத்தனம் செய்தது. நீதிமன்றத்தில் சென்று தடை உத்தரவு பெற்றது. இந்த ஆவணங்களை பதிப்பிக்க தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இந்த வழக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது.
அமெரிக்க உச்சநீதிமன்றம் 9க்கு 3 என்ற பெரும்பான்மை தீர்ப்பில் இந்த ஆவணங்களை வெளியிடலாம் என்று தீர்ப்பளித்து, அரசாங்கங்கள் செய்யும் தவறுகளை வெளியிடுவது பத்திரிக்கைகளின் கடமை என்று தெரிவித்தது.


உலகெங்கும் உள்ள அரசாங்கங்கள், மக்களுக்கு விரோதமாக செய்யும் நடவடிக்கைகளை மக்களிடமிருந்து மறைத்தே வந்துள்ளனர். இவ்வாறு மறைப்பதை தேசத்தின் பாதுகாப்பு என்ற காரணத்தைக் கூறி மழுப்புவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஆனால், எப்படியாகிலும், என்றாவது ஒரு நாள் உண்மை வந்துதானே தீரும் ?

தமிழகத்தை பொறுத்தவரை, அரசு அலுவலகங்களில் இது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகள் மற்றும் ஊழல்களின் ஆவணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், அரசு ஊழியர்களில் பெரும்பாலானோல், ஒன்று அந்த ஊழல்களின் பங்குதாரர்களாக உள்ளனர். அல்லது பணிப்பாதுகாப்பு காரணமாக பயப்படுகின்றனர்.

அரசு கேபிள் கார்ப்பரேஷன் என்ற ஒன்றை அமைத்து, அதற்கான மக்கள் வரிப்பணம் 700 கோடி ரூபாய் வீணாகிறதே என்று வருத்தப் பட்டு நடவடிக்கை எடுத்ததற்காகத் தானே உமாசங்கர் இன்று பணி இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளார் ?

சரி குடும்பம் ஒன்று சேர்ந்து விட்டது. இனி அரசு கேபிள் கார்ப்பரேஷனுக்கு மூடு விழா நடத்தலாம். 700 கோடி ரூபாய் வீணாகப் போனால் என்ன ? மக்கள் பணம்தானே என்று அலட்சியமாக இருந்தால், இன்று தலைமைச் செயலகத்தில், கருணாநிதியின் அலுவலகத்தில் கூட பணியாற்றிக் கொண்டிருந்திருப்பார்.

இது விழிப்புப் பணி இணை ஆணையராக பணியாற்றிக் கொண்டிருந்த போது உமாசங்கர் வெளிக் கொண்டு வந்ததுதான், சிஸ்கோ பங்குகளை சகாய விலைக்கு விற்ற ஊழல்.
இப்போது ஜாபர் சேட் சர்வ வல்லமை படைத்து கோலோச்சுவது போலவே 2001-2006 அதிமுக ஆட்சியில் கோலோச்சியவர் என்.நாராயணன். இவர் அதிமுகவின் இறுதி காலத்தில் தலைமைச் செயலாளராக இருந்தார். லட்சுமி ப்ரானேஷ் தலைமைச் செயலாளராக இருந்த போது நிதித் துறைச் செயலாளராக இருந்த நாராயணன், சர்வ வல்லமை படைத்தவராக இருந்தார்.

1996ல் உமா சங்கர் இணை ஆணையராக இருந்த போது அவரது பார்வைக்கு வந்த ஒரு கோப்பு சிஸ்கோ கப்பல் கட்டும் நிறுவனத்தின் (தமிழக அரசுக்கு சொந்தமான நிறுவனம்) பங்குகளை TIIC எனப்படும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம் வைத்திருந்தது. இந்தப் பங்குகளை ஸ்பிக் அதிபர் ஏ.சி.முத்தையாவுக்கு விற்பது என்று முடிவெடுக்கப் பட்டது.
என்ன விலைக்கு விற்பது.

இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 600 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தது. 600 ரூபாய்க்கு விற்கப் பட்ட ஒரு பங்கு ரூபாய் 2075 வரை விலை போனது. ஆனால் இந்தப் பங்கை 375 ரூபாய்க்கு விற்க ஏதுவாக, அப்போது நிதித் துறை செயலாளராக இருந்த என்.நாராயணன் ஒரு அரசாணையை வெளியிட்டார். இப்போது தகவல் ஆணையராக உள்ள எஸ்.ராமகிருஷ்ணன், நாராயணனுக்கு ஒத்து ஊதி, இந்தப் பங்குகளை 375 ரூபாய்க்கு ஸ்பிக் நிறுவனத்திற்கு விற்று விட்டனர்.

இந்த நேர்வில் 170 கோடி ரூபாய்க்கு மேல் (1996ல இது பெரிய அமவுண்ட் சார். ஸ்பெக்ட்ரம் ஊழல் வந்ததும், எல்லாமே சின்ன அமவுண்ட்டா ஆயிடுச்சு) அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உமாசங்கர் தெரிவித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு பரிந்துரை செய்கிறார்.

இவர் பரிந்துரையின் படி, ஒரு விரிவான விசாரணைக்கு உத்தரவிடப் படுகிறது. இந்த வழக்கை, இன்று லஞ்ச ஒழிப்புத் துறையில் எஸ்பி யாக உள்ள எம்.ஜெயபாலன் என்பவர் கையாள்கிறார். இந்நிலையில் நெல்லை ஜெபமணி என்பவர் இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார்.

இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த அரசு, விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், விரைவில் எப்ஐஆர் தாக்கல் செய்யப் படும் என்றும் தெரிவிக்கிறது.
இந்நிலையில், எப்ஐஆர் தாக்கல் செய்யும் அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்குள், அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்து விடுகிறது.

தன் மீது உள்ள எல்லா வழக்குகளையும் 2001 முதல் 2006 முதல் முடிவுக்கு கொண்டு வந்த நாராயணன், இந்த வழக்கை மட்டும் முடிக்க முடியவில்லை. நெல்லை ஜெபமணி தாக்கல் செய்திருந்த வழக்கு இன்னும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததே அதற்கு காரணம். எப்ஐஆர் தாக்கல் செய்யப் போகிறோம் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து விட்டு, வழக்கை எப்படி முடிப்பது என்று குழப்பத்தில் இருக்கிறார் நாராயணன்.
2006ம் வந்து விட்டது.

ஜனவரி மாதம் முதலே, மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு எழுகிறது. இந்நிலையில் தன் மீதுள்ள இந்த வழக்கை எப்படியாவது முடிக்க வேண்டும் என்று முயற்சி செய்யும் நாராயணன், அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்த நாஞ்சில் குமரனிடம் இது குறித்துப் பேசுகிறார். நாஞ்சில் குமரன், இந்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று ஒரு அறிக்கை அனுப்புவதாகவும், அதன் அடிப்படையில் வழக்கை முடித்து விடலாம் என்றும் ஆலோசனை கூறுகிறார்.



இதற்கு பலி கடாவாக, காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த கே.பாலன் என்ற டிஎஸ்பி யிடம் இது தொடர்பான அறிக்கை கேட்கப் படுகிறது. பாலன், அவ்வாறே அறிக்கை அனுப்புகிறார்.

இவ்வாறு அனுப்பப் பட்ட அறிக்கை அரசை அடைவதற்குள், தேர்தல் அறிவிக்கப் பட்டு விடுகிறது. தேர்தல் முடிந்து திமுக பதவியேற்ற இரண்டாவது நாள்.

நாஞ்சில் குமரன் செய்த முதல் காரியம், பச்சை நிறத்தில் இருந்த லஞ்ச ஒழிப்புத் துறையின் பெயர்ப் பலகையை இரவோடு இரவாக நீல நிறத்தில் மாற்றுகிறார். தனக்கு கீழ் பணியாற்றும் திமுக வோடு தொடர்பு இருக்கிறது என்று கருதப்படும் அதிகாரிகளை மீட்டிங் என்று அழைத்து, எங்கள் குடும்பமே திமுக குடும்பம் என்று புளுகுகிறார்.




நாஞ்சில் குமரன், ராதாகிருஷ்ணன் ஆகிய இருவருக்கும், திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளைப் பார்த்திருக்கிறோமே எப்படி இந்த ஆட்சியில் நல்ல பதவியை வாங்குவது என்று யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

நாஞ்சில் குமரன், லஞ்ச ஒழிப்புத் துறையில் உதவி மேலாளராக இருந்த ஜெயஸ்ரீ என்பவரை அழைக்கிறார். அவர் கையில் ஒரு அரசாணையை எடுத்துக் கொடுக்கிறார். அந்த அரசாணையில் சிஸ்கோ ஊழல் தொடர்பான வழக்கில், தலைமைச் செயலாளர் நாராயணன் மீதான குற்றச் சாட்டுகள் அனைத்தும் கைவிடப் பட்டன என்று உள்ளது.

இதை அந்த ஜெயஸ்ரீயிடம் அளித்து, இந்த கடிதம் இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்தது போலவும், இதன் நகலை புலனாய்வு அதிகாரிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே அனுப்பியது போலவும் கோப்பை தயாரித்து கொண்டு வருமாறு கூறுகிறார். அப்போது கூடுதல் டிஜிபி கே.ராதாகிருஷ்ணனும் உடன் இருக்கிறார்.


அந்த ஜெயஸ்ரீ உதவி மேலாளரல்லவா ? தனக்குக் கீழ் பணியாற்றும் உதவியாளரிடம் இது போல பழைய தேதியிட்டு கோப்பை தயாரித்து வருமாறு சொல்ல, அந்த உதவியாளர் “மேடம். இது சட்ட விரோதம். தப்பு. அதிகாரிங்க பேச்சக் கேட்டு தப்பு பண்ணாதீங்க“ என்று கூறுகிறார். அதற்கு ஜெயஸ்ரீ டைரக்டர் சொல்லும் போது கேட்டுத் தானே ஆகணும் என்று கூறுகிறார். “டைரக்டர் சொன்னா நீங்களே செய்யுங்க. நான் செய்ய மாட்டேன்“ என்று கூறுகிறார்.

இதைக் கேட்டவுடன், உதவியாளர் எழுதாமல் நாமே கோப்பை தயாரித்தால் சிக்கலாகுமே என்று தயங்குகிறார்.

இந்நிலையில் ராதாகிருஷ்ணனிடமிருந்து ஜெயஸ்ரீக்கு அழைப்பு வருகிறது. கோப்பு தயாராயிற்றா என்று கேட்கிறார். இவர் இல்லை என்றதும் உடனடியாக தயார் செய்யுங்கள் என்கிறார் ராதாகிருஷ்ணன். ஜெயஸ்ரீ நாளை தயார் செய்கிறேன் என்கிறார்.



இந்நிலையில், முன் தேதியிட்டு கோப்பை தயாரிக்க மாட்டேன் என்று மறுத்த அந்த ஊழியர், எப்படியோ, முதலமைச்சர் அலுவலகத்துக்கு இந்த கோப்பு விவகாரத்தை தெரிவிக்கிறா.
மறுநாள் காலை 6.00 மணிக்கு முதல்வர் அலுவலகத்திலிருந்து அழைப்பு.

சம்பந்தப் பட்ட கோப்போடு வரும்படி நாஞ்சில் குமரனுக்கும், ராதாகிருஷ்ணனுக்கும் முதல்வரின் செயலாளரிடமிருந்து அழைப்பு வருகிறது.

இரண்டு பேருக்கும் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. திருடனுக்கு தேள் கொட்டியது போல விழிக்கிறார்கள். (திருடர்கள் போல என்ன.. திருடர்கள் தானே) உடனடியாக 6.30 மணிக்கு ஜெயஸ்ரீயை அழைக்கிறார்கள். கோப்போடு மூவரும் முதல்வரின் செயலாளரை காணச் செல்கிறார்கள்.




கோப்பை திருத்த ஏன் முயற்சித்தீர்கள் என்று கடுமையான வசவு விழுகிறது. தொங்கிய முகத்தோடு வெளியில் வந்த இரு அதிகாரிகளும் அமைதியாக அலுவலகம் திரும்புகிறார்கள்.

காலை 11.30 மணிக்கு இது எப்படி முதல்வர் அலுவலகத்திற்கு தெரிந்தது என்று தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஜெயஸ்ரீயும் உடன் இருக்கிறார்.

யார் இதைப் பற்றிச் சொல்லியிருப்பார் என்று பேசிக் கொண்டிருக்கையில், ஜெயஸ்ரீ தனது உதவியாளரின் பெயரைச் சொல்லி “சார் அவர் கூட என்னை கையெழுத்து போட வேண்டாம்னு சொன்னார் சார். Don’t sail in a sinking ship ன்னு சொன்னார் சார் “ என்று கூறுகிறார்.

நீங்கள் போய் அந்த ஊழியரை வரச் சொல்லுங்கள் என்று கூறுகிறார் நாஞ்சில் குமரன்.

அந்த ஊழியர் இயக்குநர் அறைக்குள் செல்கிறார்.

“என்னய்யா நெனச்சுக்கிட்டு இருக்கே உன் மனசுலே ? “ “பெரிய இவன்னு நெனப்பா ? நாங்க சீனியர் ஆபீசர்ஸ் ஏதாவது ஒரு காரணத்தோட செய்வோம் (என்ன காரணம் குமரன் சார் ? நாராயணன் கிட்ட பெரிய அமவுன்ட்ட வாங்கிட்டீங்களா ?) கையெழுத்துப் போடாதீங்கன்னு மேனேஜரையே மெறட்ரியாமே ? தொலைச்சுப் புடுவேன் தொலைச்சு. ஜாக்ரதை என்று கூறுகிறார்.

ஒரு படத்தில் வடிவேலு, “இவன் அடிச்சது பத்தாதுன்னு, மச்சான் ப்ரீயா இருக்கியா .. ? ஒருத்தன் சிக்கிருக்கான். அனுப்பி வைக்கிறேன்“ என்று சொல்வாரே.. ? அது போலவே நாஞ்சில் குமரன் ஐஜி ராதாகிருஷ்ணனை போய் பார்க்கும் படி சொல்கிறார்.

ராதாகிருஷ்ணன் லண்டனுக்குப் போய் ராணி விருதெல்லாம் வாங்கியவர் அல்லவா ? அதனால் வசவு ஆங்கிலத்தில்.

What do you think in your mind ? You have the guts to threaten the manager ? I fill finish your career. Be careful. என்று கூறி விட்டு, அந்த ஊழியர் ஏதோ சொல்ல வந்ததும் “ஏய். உன்னால என்னை ஒன்னும் பண்ண முடியாது.. கெட் அவுட்“ என்றார்.

அந்த ஊழியர் எது நம்மை தாக்கியது என்று புரியாமல் அலுவலகம் திரும்பினார். அடுத்த அரை மணி நேரத்தில் நாஞ்சில் குமரனும், ராதாகிருஷ்ணனும் லஞ்ச ஒழிப்புத் துறையை விட்டு மாற்றம் என்ற தகவல் வருகிறது.



திமுக பதவியேற்ற பிறகு கூட, வழக்கு ஆவணங்களை திருத்த முயன்ற, நாஞ்சில் குமரனுக்கும், ராதாகிருஷ்ணனுக்கும் கருணாநிதி கொடுத்த தண்டனை என்ன தெரியுமா ? இருவருக்கும் சென்னை மாநகர காவல் ஆணையர் பதவி.

ஆற்காடு வீராச்சாமி மேல் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து வந்த ப்பி.வி.தாமஸ் என்ற டிஎஸ்பியை இந்த இருவரும் அணுகி, ஆற்காட்டாரிடம் சொல்லி நல்ல பதவி வழங்குமாறு கேட்டு நல்ல பதவியை பெற்றதாக காவல்துறை வட்டாரங்கள் சொல்கின்றன.
இந்த ஜெயஸ்ரீயைப் பற்றி மற்றொரு பிரசித்தமான கதை உண்டு.

2005ம் ஆண்டில் ஜுனியர் விகடன் இதழ், ஒரு ஸ்டிங் ஆபரேஷனை செய்தது. என்னவென்றால், ப்ரோக்கர்களிடம் காசு கொடுத்து, ஒரு உடல் ஊனமுற்றவர், அமைச்சர், ஒரு எம்எல்ஏ ஆகிய மூவர் பெயரில் போலியாக ஓட்டுனர் உரிமம் பெற்றது.

பணத்தை வாங்கிக் கொண்டு கச்சிதமாக யார் எவரேன்றெல்லாம் பார்க்காமல் மூன்று பேருக்கும் ஓட்டுநர் உரிமத்தை வழங்கியது ஆர்டிஓ அலுவலகம். இந்த போலி உரிமம் வழங்கிய ஆதாரங்களை எடுத்துக் கொண்டு, ஜுனியர் விகடன் குழு, லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் ஒன்றைத் தருகிறது.

விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்த அப்போதைய எஸ்பி மஞ்சுநாதா, உடனடியாக அரசுக்கு அனுப்ப அறிக்கை ஒன்றை தயார் செய்யுமாறு உதவி மேலாளர் ஜெயஸ்ரீக்கு உத்தரவிடுகிறார். அப்போது மணி 5.45.

அந்த வழக்கு ஆவணங்களை பெற்றுக் கொண்ட ஜெயஸ்ரீ “சார். மணியாகி விட்டது. நான் வீட்டுக்குச் சென்று அடித்து விட்டு நாளை காலையில் எடுத்து வருகிறேன் “ என்று கூறுகிறார். மஞ்சுநாதாவும், இயல்பாக சரி என்கிறார்.

ஜெயஸ்ரீயும் மஞ்சுநாதா கேட்டது போலவே அறிக்கையை தயார் செய்து அளிக்கிறார்.
இதன் நடுவே மறு நாள், அந்த போலி உரிமங்களில் கையெழுத்திட்ட அதிகாரிகள் தங்களை ஏமாற்றி போலியாக உரிமம் பெற்று விட்டதாக ஆதாரங்களுடன் சென்னை மாநகர காவல்துறையில் சென்று புகார் தெரிவிக்கின்றனர்.

போலி உரிமத்தில் கையெழுத்திட்டவர்களுள் ஒருவர் பெயர் ராணி. அவர் கண்காணிப்பாளராக ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். அவர்கள் புகார் கொடுக்கையில் அவர்களிடம், லஞ்ச ஒழிப்புத் துறை தயார் செய்த அறிக்கையின் நகல் இருந்தது.

அறிக்கை அரசுக்கு செல்லும் முன்பே, எப்படி குற்றவாளிகளின் கைக்குச் சென்றது என்று லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் தலையை பிய்த்துக் கொண்டனர்.
பிறகுதான் தெரிந்தது அந்த ராணி வேறு யாருமல்ல. லஞ்ச ஒழிப்புத் துறையின் உதவி மேலாளர் ஜெயஸ்ரீயின் சொந்த சகோதரி என்றும், ஜெயஸ்ரீயின் எதிர் வீட்டிலேயே ராணியும் குடியிருக்கிறார் என்பதும் தெரிய வந்தது.

சரி இப்போது இவர்கள் மூவரும் எங்கே இருக்கிறார்கள் ?

நாஞ்சில் குமரன் சென்னை மாநகர காவல் ஆணையாளராக இருந்து ஓய்வு பெற்று விட்டார். கே.ராதாகிருஷ்ணன், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருக்கிறார். (இப்போ லண்டன்ல இருக்கார்)

ஜெயஸ்ரீ லஞ்ச ஒழிப்புத் துறையின் ரகசியப் பிரிவின் தலைவர் பதவியான “ரகசியப் பிரிவு மேலாளராக“ இருக்கிறார்.

அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்து விட்டு, திமுக ஆட்சியில் அந்தர் பல்டி அடிக்கும் அதிகாரிகளை புரிந்து கொள்ளாமல், யார் யாரோ சொல்கிறார்கள் என்று அதிகாரத்தை கொடுத்து அழகு பார்க்கும் கருணாநிதியின் பலவீனமே இந்த அதிகாரிகள் தான்.

இந்த கே.ராதாகிருஷ்ணன், ஜெயலலிதா ஆட்சியில் அவர் மீதான வழக்கை மூடி விட்டு, மதிப்பெண் பெறாத தன் மகன் சந்தீப்புக்கு முதல்வர் கோட்டாவில் அவரிடமே அண்ணா பல்கலைகழகத்தில் இடம் பெறுகிறார். திமுக அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்த பின், ஆதாரங்களே இல்லை என்ற வழக்குகளில் கூட குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட ராதாகிருஷ்ணன், இன்று திமுகவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார்.


ஆட்சிக்கு ஆட்சி நிறம் மாறும் பச்சோந்திகளான இந்த அதிகாரிகளை இன்னும் புரிந்து கொள்ளாமல் கருணாநிதி இவர்களை நம்பி அடுத்த தேர்தலை சந்திக்கச் செல்கிறார்.


இது போன்ற திருட்டுத்தனங்களை செய்யும் அதிகாரிகளின் முகத்திரையை கிழிக்க தமிழகத்தில் பல விக்கிலீக்குகள் உருவானால் தான் இது போன்ற அதிகாரிகளை வின்னர் வடிவேலு போல ஆக்க முடியும்.

சவுக்கு

விக்கிலீக்கும், வின்னர் வடிவேலுவும்.



விக்கி லீக்குக்கும் வின்னர் வடிவேலுவுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா ? விக்கிலீக் இணைய தளம் வெளியிடும் ரகசிய ஆவணங்கள், சம்பந்தப் பட்ட நபர்களை “வேண்டாம்….. வலிக்குது… அப்புறம் அழுதுடுவேன். “ என்று சொல்ல வைக்கும் தன்மை படைத்தன.

விக்கிலீக் இணையதளம், சமீபத்தில் தனது இணைய தளத்தில் அப்கான் டைரிகள் என்ற அமெரிக்க ராணுவத்தின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டன. இந்த ஆவணங்கள், ஆப்கான் போரில் அமேரிக்க ராணுவம் சந்தித்த இழப்புகள் மட்டுமல்லாமல், அமெரிக்க ராணுவத்தினர், கண்மூடித்தனமாக எத்தனை அப்பாவிகளை சுட்டுக் கொன்றிருக்கின்றனர் என்ற உண்மைகளை பட்டவர்த்தனமாக வெளியிட்டிருக்கின்றன.

இந்த ஆவணங்கள் பற்றிய தனது கருத்தை தெரிவித்த அமெரிக்க அதிபர் ஓபாமா, இது ஒன்றும் புதிய விஷயமில்லை என்று கூறியிருக்கிறார். புதிய விஷயமில்லை என்றால் ஏற்கனவே வெளியிட்டிருக்க வேண்டியதுதானே ?

இந்த இணைய தளம் 2007ம் ஆண்டு முதல் செயல் பட்டு வருகிறது. இந்த இணைய தளம் உருவான வரலாறு தெரியுமா ? இணையத்தில் உலவும் பல்வேறு தன்னார்வர்கள் உலகின் வறுமைக்கும் பஞ்சத்திற்கும், மக்களின் துன்பத்திற்கும் காரணம் அரசுகளின் ஊழலே என்று முடிவெடுத்தனர். இந்த ஊழலை சரி செய்ய என்ன செய்யலாம் என்று யோசித்தபோது உருவானதுதான் விக்கிலீக்.

உலகெங்கும் மனசாட்சி உள்ளவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். (ஜாபர் சேட் கூடவே இருந்து, சவுக்குக்கு ஆவணங்களை தருவதில்லையா ? அதுபோலத்தான்) 1971ம் ஆண்டு அமெரிக்காவில் வியட்நாம் போர் தொடர்பாக டேனியல் எல்ஸ்பெர்க் என்ற அமெரிக்க வெளியுறவுத் துறையில் பணியாற்றிய ஒருவர் வியட்நாம் போர் தொடர்பான 7000 பக்க ஆவணங்களை நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ்களில் தொடராக வெளியிடக் காரணமாக இருந்தார்.

இந்த ஆவணங்களை வெளிவரக் காரணமாக இருந்த டேனியல் எல்ஸ்பெர்க் என்ற அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி இந்த ஆவணங்களை வெளியிட்டது குறித்து என்ன கூறினார் தெரியுமா ?

“ஒரு அமெரிக்க குடிமகனாக, இந்த தகவலை மறைப்பதில் இனியும் நான் பங்கு வகிக்க முடியும் என்று நான் கருதவில்லை. இந்தக் காரியத்தை (ஆவணங்களை வெளியிட்டது) எனக்கு ஆபத்து என்று அறிந்தே, இதற்கான விளைவுகளை சந்திக்க தயாராகவே இந்தக் காரியத்தை செய்கிறேன். “

இந்த ஆவணங்களை வெளியிடக் கூடாது என்று அமெரிக்க பகீரத பிரயத்தனம் செய்தது. நீதிமன்றத்தில் சென்று தடை உத்தரவு பெற்றது. இந்த ஆவணங்களை பதிப்பிக்க தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இந்த வழக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது.
அமெரிக்க உச்சநீதிமன்றம் 9க்கு 3 என்ற பெரும்பான்மை தீர்ப்பில் இந்த ஆவணங்களை வெளியிடலாம் என்று தீர்ப்பளித்து, அரசாங்கங்கள் செய்யும் தவறுகளை வெளியிடுவது பத்திரிக்கைகளின் கடமை என்று தெரிவித்தது.


உலகெங்கும் உள்ள அரசாங்கங்கள், மக்களுக்கு விரோதமாக செய்யும் நடவடிக்கைகளை மக்களிடமிருந்து மறைத்தே வந்துள்ளனர். இவ்வாறு மறைப்பதை தேசத்தின் பாதுகாப்பு என்ற காரணத்தைக் கூறி மழுப்புவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஆனால், எப்படியாகிலும், என்றாவது ஒரு நாள் உண்மை வந்துதானே தீரும் ?

தமிழகத்தை பொறுத்தவரை, அரசு அலுவலகங்களில் இது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகள் மற்றும் ஊழல்களின் ஆவணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், அரசு ஊழியர்களில் பெரும்பாலானோல், ஒன்று அந்த ஊழல்களின் பங்குதாரர்களாக உள்ளனர். அல்லது பணிப்பாதுகாப்பு காரணமாக பயப்படுகின்றனர்.

அரசு கேபிள் கார்ப்பரேஷன் என்ற ஒன்றை அமைத்து, அதற்கான மக்கள் வரிப்பணம் 700 கோடி ரூபாய் வீணாகிறதே என்று வருத்தப் பட்டு நடவடிக்கை எடுத்ததற்காகத் தானே உமாசங்கர் இன்று பணி இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளார் ?

சரி குடும்பம் ஒன்று சேர்ந்து விட்டது. இனி அரசு கேபிள் கார்ப்பரேஷனுக்கு மூடு விழா நடத்தலாம். 700 கோடி ரூபாய் வீணாகப் போனால் என்ன ? மக்கள் பணம்தானே என்று அலட்சியமாக இருந்தால், இன்று தலைமைச் செயலகத்தில், கருணாநிதியின் அலுவலகத்தில் கூட பணியாற்றிக் கொண்டிருந்திருப்பார்.

இது விழிப்புப் பணி இணை ஆணையராக பணியாற்றிக் கொண்டிருந்த போது உமாசங்கர் வெளிக் கொண்டு வந்ததுதான், சிஸ்கோ பங்குகளை சகாய விலைக்கு விற்ற ஊழல்.
இப்போது ஜாபர் சேட் சர்வ வல்லமை படைத்து கோலோச்சுவது போலவே 2001-2006 அதிமுக ஆட்சியில் கோலோச்சியவர் என்.நாராயணன். இவர் அதிமுகவின் இறுதி காலத்தில் தலைமைச் செயலாளராக இருந்தார். லட்சுமி ப்ரானேஷ் தலைமைச் செயலாளராக இருந்த போது நிதித் துறைச் செயலாளராக இருந்த நாராயணன், சர்வ வல்லமை படைத்தவராக இருந்தார்.

1996ல் உமா சங்கர் இணை ஆணையராக இருந்த போது அவரது பார்வைக்கு வந்த ஒரு கோப்பு சிஸ்கோ கப்பல் கட்டும் நிறுவனத்தின் (தமிழக அரசுக்கு சொந்தமான நிறுவனம்) பங்குகளை TIIC எனப்படும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம் வைத்திருந்தது. இந்தப் பங்குகளை ஸ்பிக் அதிபர் ஏ.சி.முத்தையாவுக்கு விற்பது என்று முடிவெடுக்கப் பட்டது.
என்ன விலைக்கு விற்பது.

இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 600 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தது. 600 ரூபாய்க்கு விற்கப் பட்ட ஒரு பங்கு ரூபாய் 2075 வரை விலை போனது. ஆனால் இந்தப் பங்கை 375 ரூபாய்க்கு விற்க ஏதுவாக, அப்போது நிதித் துறை செயலாளராக இருந்த என்.நாராயணன் ஒரு அரசாணையை வெளியிட்டார். இப்போது தகவல் ஆணையராக உள்ள எஸ்.ராமகிருஷ்ணன், நாராயணனுக்கு ஒத்து ஊதி, இந்தப் பங்குகளை 375 ரூபாய்க்கு ஸ்பிக் நிறுவனத்திற்கு விற்று விட்டனர்.

இந்த நேர்வில் 170 கோடி ரூபாய்க்கு மேல் (1996ல இது பெரிய அமவுண்ட் சார். ஸ்பெக்ட்ரம் ஊழல் வந்ததும், எல்லாமே சின்ன அமவுண்ட்டா ஆயிடுச்சு) அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உமாசங்கர் தெரிவித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு பரிந்துரை செய்கிறார்.

இவர் பரிந்துரையின் படி, ஒரு விரிவான விசாரணைக்கு உத்தரவிடப் படுகிறது. இந்த வழக்கை, இன்று லஞ்ச ஒழிப்புத் துறையில் எஸ்பி யாக உள்ள எம்.ஜெயபாலன் என்பவர் கையாள்கிறார். இந்நிலையில் நெல்லை ஜெபமணி என்பவர் இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார்.

இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த அரசு, விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், விரைவில் எப்ஐஆர் தாக்கல் செய்யப் படும் என்றும் தெரிவிக்கிறது.
இந்நிலையில், எப்ஐஆர் தாக்கல் செய்யும் அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்குள், அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்து விடுகிறது.

தன் மீது உள்ள எல்லா வழக்குகளையும் 2001 முதல் 2006 முதல் முடிவுக்கு கொண்டு வந்த நாராயணன், இந்த வழக்கை மட்டும் முடிக்க முடியவில்லை. நெல்லை ஜெபமணி தாக்கல் செய்திருந்த வழக்கு இன்னும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததே அதற்கு காரணம். எப்ஐஆர் தாக்கல் செய்யப் போகிறோம் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து விட்டு, வழக்கை எப்படி முடிப்பது என்று குழப்பத்தில் இருக்கிறார் நாராயணன்.
2006ம் வந்து விட்டது.

ஜனவரி மாதம் முதலே, மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு எழுகிறது. இந்நிலையில் தன் மீதுள்ள இந்த வழக்கை எப்படியாவது முடிக்க வேண்டும் என்று முயற்சி செய்யும் நாராயணன், அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்த நாஞ்சில் குமரனிடம் இது குறித்துப் பேசுகிறார். நாஞ்சில் குமரன், இந்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று ஒரு அறிக்கை அனுப்புவதாகவும், அதன் அடிப்படையில் வழக்கை முடித்து விடலாம் என்றும் ஆலோசனை கூறுகிறார்.



இதற்கு பலி கடாவாக, காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த கே.பாலன் என்ற டிஎஸ்பி யிடம் இது தொடர்பான அறிக்கை கேட்கப் படுகிறது. பாலன், அவ்வாறே அறிக்கை அனுப்புகிறார்.

இவ்வாறு அனுப்பப் பட்ட அறிக்கை அரசை அடைவதற்குள், தேர்தல் அறிவிக்கப் பட்டு விடுகிறது. தேர்தல் முடிந்து திமுக பதவியேற்ற இரண்டாவது நாள்.

நாஞ்சில் குமரன் செய்த முதல் காரியம், பச்சை நிறத்தில் இருந்த லஞ்ச ஒழிப்புத் துறையின் பெயர்ப் பலகையை இரவோடு இரவாக நீல நிறத்தில் மாற்றுகிறார். தனக்கு கீழ் பணியாற்றும் திமுக வோடு தொடர்பு இருக்கிறது என்று கருதப்படும் அதிகாரிகளை மீட்டிங் என்று அழைத்து, எங்கள் குடும்பமே திமுக குடும்பம் என்று புளுகுகிறார்.




நாஞ்சில் குமரன், ராதாகிருஷ்ணன் ஆகிய இருவருக்கும், திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளைப் பார்த்திருக்கிறோமே எப்படி இந்த ஆட்சியில் நல்ல பதவியை வாங்குவது என்று யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

நாஞ்சில் குமரன், லஞ்ச ஒழிப்புத் துறையில் உதவி மேலாளராக இருந்த ஜெயஸ்ரீ என்பவரை அழைக்கிறார். அவர் கையில் ஒரு அரசாணையை எடுத்துக் கொடுக்கிறார். அந்த அரசாணையில் சிஸ்கோ ஊழல் தொடர்பான வழக்கில், தலைமைச் செயலாளர் நாராயணன் மீதான குற்றச் சாட்டுகள் அனைத்தும் கைவிடப் பட்டன என்று உள்ளது.

இதை அந்த ஜெயஸ்ரீயிடம் அளித்து, இந்த கடிதம் இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்தது போலவும், இதன் நகலை புலனாய்வு அதிகாரிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே அனுப்பியது போலவும் கோப்பை தயாரித்து கொண்டு வருமாறு கூறுகிறார். அப்போது கூடுதல் டிஜிபி கே.ராதாகிருஷ்ணனும் உடன் இருக்கிறார்.


அந்த ஜெயஸ்ரீ உதவி மேலாளரல்லவா ? தனக்குக் கீழ் பணியாற்றும் உதவியாளரிடம் இது போல பழைய தேதியிட்டு கோப்பை தயாரித்து வருமாறு சொல்ல, அந்த உதவியாளர் “மேடம். இது சட்ட விரோதம். தப்பு. அதிகாரிங்க பேச்சக் கேட்டு தப்பு பண்ணாதீங்க“ என்று கூறுகிறார். அதற்கு ஜெயஸ்ரீ டைரக்டர் சொல்லும் போது கேட்டுத் தானே ஆகணும் என்று கூறுகிறார். “டைரக்டர் சொன்னா நீங்களே செய்யுங்க. நான் செய்ய மாட்டேன்“ என்று கூறுகிறார்.

இதைக் கேட்டவுடன், உதவியாளர் எழுதாமல் நாமே கோப்பை தயாரித்தால் சிக்கலாகுமே என்று தயங்குகிறார்.

இந்நிலையில் ராதாகிருஷ்ணனிடமிருந்து ஜெயஸ்ரீக்கு அழைப்பு வருகிறது. கோப்பு தயாராயிற்றா என்று கேட்கிறார். இவர் இல்லை என்றதும் உடனடியாக தயார் செய்யுங்கள் என்கிறார் ராதாகிருஷ்ணன். ஜெயஸ்ரீ நாளை தயார் செய்கிறேன் என்கிறார்.



இந்நிலையில், முன் தேதியிட்டு கோப்பை தயாரிக்க மாட்டேன் என்று மறுத்த அந்த ஊழியர், எப்படியோ, முதலமைச்சர் அலுவலகத்துக்கு இந்த கோப்பு விவகாரத்தை தெரிவிக்கிறா.
மறுநாள் காலை 6.00 மணிக்கு முதல்வர் அலுவலகத்திலிருந்து அழைப்பு.

சம்பந்தப் பட்ட கோப்போடு வரும்படி நாஞ்சில் குமரனுக்கும், ராதாகிருஷ்ணனுக்கும் முதல்வரின் செயலாளரிடமிருந்து அழைப்பு வருகிறது.

இரண்டு பேருக்கும் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. திருடனுக்கு தேள் கொட்டியது போல விழிக்கிறார்கள். (திருடர்கள் போல என்ன.. திருடர்கள் தானே) உடனடியாக 6.30 மணிக்கு ஜெயஸ்ரீயை அழைக்கிறார்கள். கோப்போடு மூவரும் முதல்வரின் செயலாளரை காணச் செல்கிறார்கள்.




கோப்பை திருத்த ஏன் முயற்சித்தீர்கள் என்று கடுமையான வசவு விழுகிறது. தொங்கிய முகத்தோடு வெளியில் வந்த இரு அதிகாரிகளும் அமைதியாக அலுவலகம் திரும்புகிறார்கள்.

காலை 11.30 மணிக்கு இது எப்படி முதல்வர் அலுவலகத்திற்கு தெரிந்தது என்று தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஜெயஸ்ரீயும் உடன் இருக்கிறார்.

யார் இதைப் பற்றிச் சொல்லியிருப்பார் என்று பேசிக் கொண்டிருக்கையில், ஜெயஸ்ரீ தனது உதவியாளரின் பெயரைச் சொல்லி “சார் அவர் கூட என்னை கையெழுத்து போட வேண்டாம்னு சொன்னார் சார். Don’t sail in a sinking ship ன்னு சொன்னார் சார் “ என்று கூறுகிறார்.

நீங்கள் போய் அந்த ஊழியரை வரச் சொல்லுங்கள் என்று கூறுகிறார் நாஞ்சில் குமரன்.

அந்த ஊழியர் இயக்குநர் அறைக்குள் செல்கிறார்.

“என்னய்யா நெனச்சுக்கிட்டு இருக்கே உன் மனசுலே ? “ “பெரிய இவன்னு நெனப்பா ? நாங்க சீனியர் ஆபீசர்ஸ் ஏதாவது ஒரு காரணத்தோட செய்வோம் (என்ன காரணம் குமரன் சார் ? நாராயணன் கிட்ட பெரிய அமவுன்ட்ட வாங்கிட்டீங்களா ?) கையெழுத்துப் போடாதீங்கன்னு மேனேஜரையே மெறட்ரியாமே ? தொலைச்சுப் புடுவேன் தொலைச்சு. ஜாக்ரதை என்று கூறுகிறார்.

ஒரு படத்தில் வடிவேலு, “இவன் அடிச்சது பத்தாதுன்னு, மச்சான் ப்ரீயா இருக்கியா .. ? ஒருத்தன் சிக்கிருக்கான். அனுப்பி வைக்கிறேன்“ என்று சொல்வாரே.. ? அது போலவே நாஞ்சில் குமரன் ஐஜி ராதாகிருஷ்ணனை போய் பார்க்கும் படி சொல்கிறார்.

ராதாகிருஷ்ணன் லண்டனுக்குப் போய் ராணி விருதெல்லாம் வாங்கியவர் அல்லவா ? அதனால் வசவு ஆங்கிலத்தில்.

What do you think in your mind ? You have the guts to threaten the manager ? I fill finish your career. Be careful. என்று கூறி விட்டு, அந்த ஊழியர் ஏதோ சொல்ல வந்ததும் “ஏய். உன்னால என்னை ஒன்னும் பண்ண முடியாது.. கெட் அவுட்“ என்றார்.

அந்த ஊழியர் எது நம்மை தாக்கியது என்று புரியாமல் அலுவலகம் திரும்பினார். அடுத்த அரை மணி நேரத்தில் நாஞ்சில் குமரனும், ராதாகிருஷ்ணனும் லஞ்ச ஒழிப்புத் துறையை விட்டு மாற்றம் என்ற தகவல் வருகிறது.



திமுக பதவியேற்ற பிறகு கூட, வழக்கு ஆவணங்களை திருத்த முயன்ற, நாஞ்சில் குமரனுக்கும், ராதாகிருஷ்ணனுக்கும் கருணாநிதி கொடுத்த தண்டனை என்ன தெரியுமா ? இருவருக்கும் சென்னை மாநகர காவல் ஆணையர் பதவி.

ஆற்காடு வீராச்சாமி மேல் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து வந்த ப்பி.வி.தாமஸ் என்ற டிஎஸ்பியை இந்த இருவரும் அணுகி, ஆற்காட்டாரிடம் சொல்லி நல்ல பதவி வழங்குமாறு கேட்டு நல்ல பதவியை பெற்றதாக காவல்துறை வட்டாரங்கள் சொல்கின்றன.
இந்த ஜெயஸ்ரீயைப் பற்றி மற்றொரு பிரசித்தமான கதை உண்டு.

2005ம் ஆண்டில் ஜுனியர் விகடன் இதழ், ஒரு ஸ்டிங் ஆபரேஷனை செய்தது. என்னவென்றால், ப்ரோக்கர்களிடம் காசு கொடுத்து, ஒரு உடல் ஊனமுற்றவர், அமைச்சர், ஒரு எம்எல்ஏ ஆகிய மூவர் பெயரில் போலியாக ஓட்டுனர் உரிமம் பெற்றது.

பணத்தை வாங்கிக் கொண்டு கச்சிதமாக யார் எவரேன்றெல்லாம் பார்க்காமல் மூன்று பேருக்கும் ஓட்டுநர் உரிமத்தை வழங்கியது ஆர்டிஓ அலுவலகம். இந்த போலி உரிமம் வழங்கிய ஆதாரங்களை எடுத்துக் கொண்டு, ஜுனியர் விகடன் குழு, லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் ஒன்றைத் தருகிறது.

விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்த அப்போதைய எஸ்பி மஞ்சுநாதா, உடனடியாக அரசுக்கு அனுப்ப அறிக்கை ஒன்றை தயார் செய்யுமாறு உதவி மேலாளர் ஜெயஸ்ரீக்கு உத்தரவிடுகிறார். அப்போது மணி 5.45.

அந்த வழக்கு ஆவணங்களை பெற்றுக் கொண்ட ஜெயஸ்ரீ “சார். மணியாகி விட்டது. நான் வீட்டுக்குச் சென்று அடித்து விட்டு நாளை காலையில் எடுத்து வருகிறேன் “ என்று கூறுகிறார். மஞ்சுநாதாவும், இயல்பாக சரி என்கிறார்.

ஜெயஸ்ரீயும் மஞ்சுநாதா கேட்டது போலவே அறிக்கையை தயார் செய்து அளிக்கிறார்.
இதன் நடுவே மறு நாள், அந்த போலி உரிமங்களில் கையெழுத்திட்ட அதிகாரிகள் தங்களை ஏமாற்றி போலியாக உரிமம் பெற்று விட்டதாக ஆதாரங்களுடன் சென்னை மாநகர காவல்துறையில் சென்று புகார் தெரிவிக்கின்றனர்.

போலி உரிமத்தில் கையெழுத்திட்டவர்களுள் ஒருவர் பெயர் ராணி. அவர் கண்காணிப்பாளராக ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். அவர்கள் புகார் கொடுக்கையில் அவர்களிடம், லஞ்ச ஒழிப்புத் துறை தயார் செய்த அறிக்கையின் நகல் இருந்தது.

அறிக்கை அரசுக்கு செல்லும் முன்பே, எப்படி குற்றவாளிகளின் கைக்குச் சென்றது என்று லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் தலையை பிய்த்துக் கொண்டனர்.
பிறகுதான் தெரிந்தது அந்த ராணி வேறு யாருமல்ல. லஞ்ச ஒழிப்புத் துறையின் உதவி மேலாளர் ஜெயஸ்ரீயின் சொந்த சகோதரி என்றும், ஜெயஸ்ரீயின் எதிர் வீட்டிலேயே ராணியும் குடியிருக்கிறார் என்பதும் தெரிய வந்தது.

சரி இப்போது இவர்கள் மூவரும் எங்கே இருக்கிறார்கள் ?

நாஞ்சில் குமரன் சென்னை மாநகர காவல் ஆணையாளராக இருந்து ஓய்வு பெற்று விட்டார். கே.ராதாகிருஷ்ணன், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருக்கிறார். (இப்போ லண்டன்ல இருக்கார்)

ஜெயஸ்ரீ லஞ்ச ஒழிப்புத் துறையின் ரகசியப் பிரிவின் தலைவர் பதவியான “ரகசியப் பிரிவு மேலாளராக“ இருக்கிறார்.

அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்து விட்டு, திமுக ஆட்சியில் அந்தர் பல்டி அடிக்கும் அதிகாரிகளை புரிந்து கொள்ளாமல், யார் யாரோ சொல்கிறார்கள் என்று அதிகாரத்தை கொடுத்து அழகு பார்க்கும் கருணாநிதியின் பலவீனமே இந்த அதிகாரிகள் தான்.

இந்த கே.ராதாகிருஷ்ணன், ஜெயலலிதா ஆட்சியில் அவர் மீதான வழக்கை மூடி விட்டு, மதிப்பெண் பெறாத தன் மகன் சந்தீப்புக்கு முதல்வர் கோட்டாவில் அவரிடமே அண்ணா பல்கலைகழகத்தில் இடம் பெறுகிறார். திமுக அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்த பின், ஆதாரங்களே இல்லை என்ற வழக்குகளில் கூட குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட ராதாகிருஷ்ணன், இன்று திமுகவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார்.


ஆட்சிக்கு ஆட்சி நிறம் மாறும் பச்சோந்திகளான இந்த அதிகாரிகளை இன்னும் புரிந்து கொள்ளாமல் கருணாநிதி இவர்களை நம்பி அடுத்த தேர்தலை சந்திக்கச் செல்கிறார்.


இது போன்ற திருட்டுத்தனங்களை செய்யும் அதிகாரிகளின் முகத்திரையை கிழிக்க தமிழகத்தில் பல விக்கிலீக்குகள் உருவானால் தான் இது போன்ற அதிகாரிகளை வின்னர் வடிவேலு போல ஆக்க முடியும்.

சவுக்கு

Wednesday, July 28, 2010

அன்பார்ந்த தமிழக முதல்வரே … …. ….



சவுக்கின் கைதுக்கு முன்பு, தங்களிடம் சவுக்கு எழுதிய செம்மொழிப் பாடல், பதிவும், மற்றொரு பதிவும் காண்பிக்கப் பட்டு, சவுக்கு ஒரு தேசத் துரோகியாக சித்தரிக்கப் பட்டதாக சவுக்கு அறிகிறது.

தாங்களும் ஒரு எழுத்தாளர் என்ற முறையில், அந்தப் பதிவுகளை ரசித்திருப்பீர்கள் என்றே சவுக்கு நம்புகிறது. இத்தனை காலமாய் தங்களை விமர்சித்து சவுக்கு எழுதும் போதெல்லாம் அமைதியாக இருந்த ஜாபர் சேட், இப்போது சவுக்கைப் பற்றி தங்களிடம் கூறக் காரணம் என்று யோசித்தீர்களா ?

ஜாபர் சேட்டின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் சவுக்கு ஏற்றியதால் தான்.
உங்களை விமர்சித்த பதிவை காட்டினாரே ? இவர் எத்தனை இடத்தில் சொத்து வாங்கியுள்ளார் என்ற பதிவை காட்டினாரா ? காட்டமாட்டார்.



அய்யா என்னா அழகா இருக்கார் பாருங்க. பெண் சிங்கம் 2ம் பார்ட்ல ஹீரோ ஆக்கிடுங்கய்யா


முதல்வர் அவர்களே.. உங்களை அரசியல் சாணக்கியர் என்று கூறுகிறார்கள். மிகத் திறமையாக எதிரிகளைக் கையாண்டு சாணக்கியத்தனத்தோடு செயல்படுவதில் தாங்கள் வல்லவர் என்று கூறுகிறார்கள்.

ஆனால் அப்படிப் பட்ட சாணக்கியரான நீங்கள், ஒரு சகுனியை கூடவே வைத்துக் கொண்டு, அந்த சகுனியை நம்பி ஏமாந்து கொண்டு இருப்பதுதான் மிகுந்த வேதனையாகவும், ஆச்சர்யமாகவும் உள்ளது. உங்கள் உடனிருப்பவர்கள், உங்களிடம் உண்மையைச் சொல்கிறார்களா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால், சாதுர்யம் மிக்க நீங்கள், இந்த ஜாபர் சேட் விஷயத்தில் ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறீர்கள் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.

இன்று உங்கள் கண்களாகவும், காதுகளாகவும் இருப்பது போல நடித்துக் கொண்டிருக்கும் இந்த ஜாபர் சேட் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

இவர் பணியில் சேர்ந்த நாள் முதலாகவே ஒழுக்கமாக இருந்தது கிடையாது முதல்வர் அவர்களே. முதல் போஸ்டிங்கில், ஏஎஸ்பி யாக, கோவையில் இவர் நியமிக்கப் பட்டார். அப்போதே, அங்கே இருந்த ஒரு பெண் காவலருடன் நெருக்கமாகப் பழகியதாகவும், அந்தப் பெண் காவலர், ஜாபரை திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்தியதாகவும், மறுத்தால் புகார் கூறப் போவதாகவும் கூறியதை அடுத்தே, ஜாபர் அவசர அவசரமாக திருமணம் செய்ததாக கோவை வட்டாரங்கள் கூறுகின்றன. பணியில் சேர்ந்த முதல் ஆண்டே தனது வேலையை காட்டத் தொடங்கியவர்தான் இந்த ஜாபர்.

1996 முதல் 2000ம் ஆண்டு வரை, தாங்கள் முதல்வராக இருந்த பொழுது ஜாபர் சேட் தங்களது பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் என்பதை தாங்கள் அறிவீர்கள்.

அப்போதெல்லாம், இப்போது நடப்பது போன்று பல்வேறு விழாக்கள் தங்களுக்கு கிடையாது. காலையில் தலைமைச் செயலகம் வந்தால், மாலையில் அலுவலகம் முடியும் வரை அங்கேதான் இருப்பீர்கள். பாதுகாப்புப் பிரிவு எஸ்பி என்பதால், ஜாபருக்கு தாங்கள் எத்தனை மணிக்கு கிளம்புவீர்கள் என்ற விபரம் நன்கு தெரியும்.

அதனால், ஒரு ஜிப்ஸி ஜீப்பை எடுத்துக் கொண்டு, தானே அதை ஓட்டிச் சென்று, நேராக சென்னை விமான நிலையத்தின் சர்வதேச இறங்கு முனையின் விஐபி நுழைவாயிலுக்குச் செல்வார். அங்கே, இவரது நண்பர்கள் எடுத்து வரும் பொருட்களை கஸ்டம்ஸ் சோதனையின்றி, தன்னுடைய ஜீப்பிலேயே ஏற்றி அவர்கள் வீட்டுக்கு கொண்டு சேர்ப்பாராம். இதன் மூலமாக, சுங்க வரி ஏதும் செலுத்தாமல் இவர்களது பொருட்கள் வந்து சேரும்.


திருவான்மியூர் ப்ளாட் ஒரு சதுர அடி, 9000 ரூபா ஒரு தரம், ரெண்டு தரம்....



இதற்கான பிரதி பலனாக, இவருக்கு அரசு விருப்புரிமை கோட்டாவில் ஒதுக்கப் பட்ட, சென்னை முகபேர் ஏரித் திட்டத்தில் 10வது குறுக்குத் தெருவில் உள்ள மனையில், ஒரு பிரம்மாண்ட பங்களா கட்டினார் தெரியுமா ?

அந்த வீட்டை இவர் பொருள் எடுத்து வந்துக் கொடுத்த, செங்கல் சூளை முதலாளிகள் செங்கல் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் இலவசமாக கொடுத்து, அந்த வீட்டை கட்டிக் கொடுத்தனர் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

அவ்வாறு கட்டிய வீட்டில் ஒரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, அதை 70 லட்ச ரூபாய்க்கு விற்று விட்டது தங்களுக்குத் தெரியுமா ?

பாதுகாப்புப் பிரிவு எஸ்பியாகவே இருந்து இவர் எப்படி சம்பாதித்தார் என்று பல போலீஸ் அதிகாரிகளுக்கு இன்னும் புதிராகவே உள்ளது. இப்படித்தான் சம்பாதித்தார்.
தங்களின் நள்ளிரவு கைதில் இவர் வகித்த பங்கு என்ன என்று உங்களுக்குத் தெரியுமா ?

உங்களின் பாதுகாப்பு அதிகாரியாக நான்கு ஆண்டுகள் இருந்த அனுபவத்தால் இவரிடம் தான், எந்த இடத்துக்கு எந்த போலீஸ் அதிகாரியை அனுப்ப வேண்டும் என்ற பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது.

உங்களின் நள்ளிரவு கைதின் போது இவருக்கு ஒதுக்கப் பட்ட இடம், முர்ரேஸ் கேட் ரோடு முனை. ஆனால், அங்கே இவர் நிற்காமல், ஆபாஷ் குமாரை நிற்க வைத்து விட்டு மைலாப்பூர் காவல் நிலையத்தில் சென்று ஒளிந்து கொண்டார்.

பிறகு, அங்கே திமுகவினர் வரப் போகிறார்கள் என்ற செய்தி கிடைத்ததும், ஓமந்தூரார் மாளிகைக்கு சென்று விட்டார்.


இந்தப் புன்னகை என்ன விலை ? (ஒரு சதுர சென்டி மீட்டர் 10,000 ரூபா)



உங்கள் கைது பற்றி முன் கூட்டியே தகவலைச் சொன்னது தான்தான் என்று உங்களிடம் புளுகியிருப்பார். ஆனால் சரியான நபரிடம் விசாரியுங்கள், அந்தத் தகவலை உங்களிடம் சொன்னது ஜாபர் சேட் இல்லை. சவுக்கு அந்த நபரின் பெயரை வெளியிட விரும்பவில்லை.

நள்ளிரவுக் கைதுக்குப் பின் என்ன நடந்தது தெரியுமா ? ஜாபர் சேட்தான் அந்தத் தகவலை உங்களுக்கு முன் கூட்டியே சொல்லி விட்டார் என்று அன்றைய முதல்வர் ஜெயலலிதாவு தகவல் கூறப்பட்டது.

உடனடியாக, தீண்டாமை ஒழிப்புப் பிரிவு டிஐஜியாக திருச்சிக்கு நியமிக்கப் பட்டார் ஜாபர் சேட்.

ஜாபர் சேட்டின் மனைவி பர்வீனும், உங்கள் நள்ளிரவு கைதின் நாயகன் முத்துக்கருப்பனின் மனைவி மல்லிகாவும் இணைந்தே ப்யூரிட்டா மினரெல் வாட்டர், பால் பண்ணை தொழில்களில் ஈடுபட்டு வந்தார்கள். அதனால் இவர்கள் இருவருக்கும் மிகுந்த நட்பு உண்டு.

உங்களை நள்ளிரவில் கைது செய்த பின், முத்துக் கருப்பன், ஒரு சக்கரவர்த்தியைப் போல இருந்தார் தெரியுமா ? இவர் வந்தால் மட்டும் செல்வி.ஜெயலலிதா உடனடியாக அப்பாயின்ட்மென்ட் கொடுப்பார்.

இந்த நெருக்கத்தை பயன்படுத்தி சென்னைக்கே மாறுதல் வாங்க வேண்டும் என்று விரும்பிய ஜாபர் சேட் நேராக முத்துக் கருப்பன் வீட்டுக்குச் சென்று அவரிடம் மன்றாடியிருக்கிறார். முத்துக் கருப்பனிடம், என்னுடைய மகள் சென்னையில் படித்துக் கொண்டிருக்கிறாள், அவள் நலன் கருதியாவது எப்படியாவது சென்னைக்கு மாறுதல் வேண்டும் என்று மன்றாடியிருக்கிறார்.

மிகவும் தயங்கிய முத்துக் கருப்பன், ஜாபர் சேட்டும் அவரது மனைவியும் கெஞ்சிய கெஞ்சலைப் பார்த்து மிகவும் தயங்கிய படியே முதல்வரிடம் பேசுவதற்கு சம்மதித்திருக்கிறார்.
முத்துக்கருப்பனின் இந்த சிபாரிசைப் கேட்டு மிகவும் கோபம் அடைந்த ஜெயலலிதா, முடியவே முடியாது என்று மறுத்திருக்கிறார்.

உங்களின் நள்ளிரவு கைதுத் தகவலை முன் கூட்டியே சொன்னது ஜாபர் சேட்தான் என்று தனக்கு உறுதியான தகவல் வந்திருப்பதாகத் தெரிவிக்கிறார். இதை மறுத்த முத்துக் கருப்பன், தகவலை வெளியிட்டதாக ஒரு அதிகாரியின் பெயரை கூறுகிறார். இதைக் கேட்டு சந்தேகம் தெளிந்த ஜெயலலிதா, பழைய மாறுதல் ஆணையை ரத்து செய்து விட்டு, ஜாபர் சேட்டை சென்னையில் ஆயுதப் படை டிஐஜியாக நியமித்தார் என்ற விபரம் உங்களுக்குத் தெரியுமா முதல்வரே ?

இப்படியொரு உதவியை முத்துக்கருப்பனிடம் பெற்றுக் கொண்ட ஜாபர் சேட், இன்று முத்துக் கருப்பன் மீதான குற்றச் சாட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப் பட்டாலும், முத்துக் கருப்பனை விட பணியில் இளைவர்களான 13 பேர் கூடுதல் டிஜிபிக்களாக ஆகி விட்ட நிலையில், இவரின் பதவி உயர்வு தொடர்பான கோப்பு கையெழுத்து ஆகாமல் நிறுத்தி வைத்திருப்பது ஜாபர் சேட்தான் என்பது உங்களுக்கு தெரியுமா முதல்வர் அவர்களே ?



முந்தைய ஆட்சியில் ஒரு துணை முதல்வரைப் போல செயல்பட்டு, இன்று வரை எதிர்க்கட்சித் தலைவர் செல்வி ஜெயலலிதா உங்கள் அரசை மைனாரிட்டி அரசு என்று அழைப்பதற்கு காரணமான சிவனாண்டியையே மன்னித்து நல்ல பதவி கொடுத்து அழகு பார்க்கும் நீங்கள், முத்துக் கருப்பனுக்கு பதவி உயர்வு வழங்காததற்குக் காரணம், அவர் ஒரு தலித் என்பதால் என்று அதிகாரிகள் மட்டத்தில் இருக்கும் பரவலான பேச்சு உங்களுக்குத் தெரியுமா முதல்வர் அவர்களே ?

தலித் வீட்டில் பெண் எடுக்கும் அளவுக்கு பெரிய மனது கொண்ட நீங்கள், இப்படி ஒரு அவப்பெயருக்கு ஆளாகலாமா ?

2007ம் ஆண்டு முதல் பல்வேறு வேலைகள் காரணமாக 50 தடவைகளுக்கும் மேல் விமானத்தில், முதல் வகுப்பில் டெல்லி வந்திருக்கிறார் ஜாபர் சேட்.

ஒவ்வொரு முறை பயணத்திற்கும், உளவுத் துறையின் ரகசிய நிதியிலிருந்து பணம் கொடுக்கப் பட்டதை தாங்கள் அறிந்திருந்தாலும், இந்தத் தொகை இது வரை மீண்டும் ரகசிய நிதிக்கு வரவு வைக்கப் படவில்லை என்பதை தாங்கள் அறிவீர்களா முதல்வரே ? ஒரு முறை முதல் வகுப்பில் டெல்லி செல்வதற்கு ஏறக்குறைய 20,000 ஆகும் தெரியுமா முதல்வர் அவர்களே ?




மாதந்தோறும் இவர் தனது வீட்டு செலவுக்காக ரகசிய நிதியிலிருந்து எடுக்கும் ஒரு லட்ச ரூபாயையும், அறையை புதுப்பிப்பதற்காக கடந்த ஆண்டு எடுத்த ஐந்து லட்ச ரூபாயையும், இந்த ஆண்டு செலவிட்ட ஐந்து லட்ச ரூபாயையும் இவருக்கு வவுச்சர் போட்டு வாங்கிக் கொடுப்பது உளவுத் துறையின் நிர்வாகப் பிரிவில் பணியாற்றும் ராஜ்குமார் என்ற டிஎஸ்பி என்பது தங்களுக்குத் தெரியுமா முதல்வரே ?

இந்த ராஜ்குமார், ஜாபர் சேட் அடிக்கும் கொள்ளையில் தானும் ஒரு பங்கை எடுத்துக் கொள்கிறார் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா ?

முதலமைச்சராகிய நீங்கள் கையெழுத்து போட்டு ஒப்புதல் தராமலேயே, பல பொருட்களை ரகசிய நிதியிலிருந்து வாங்கியிருக்கிறார் ஜாபர் சேட் தெரியுமா முதல்வரே ?

சமீபத்தில் இவர் தனது அறையில் வாங்கிப் போட்டிருக்கும் மேசை மட்டும் ஒரு லட்ச ரூபாய். உளவு சேகரிப்பதற்காக ரகசிய நிதி கொடுத்தீர்களா அறையை சொகுசு படுத்துவதற்காகவா ?

ஒவ்வொரு முறை புதுதில்லி செல்லும் போதும், இவரை விமான நிலையத்திலிருந்து அழைத்துச் செல்ல பெரும் செல்வந்தர்களின் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கார்கள் வருகின்றன என்பதை அறிவீர்களா முதல்வரே ?



50 தடவைகளுக்கு மேல் புது தில்லி சென்றுள்ள ஜாபர் சேட், ஒரு முறை கூட நீங்களே தங்கும் தமிழ்நாடு இல்லத்தில் தங்குவது இல்லை. ஒவ்வொரு முறையும் நட்சத்திர ஓட்டலில்தான் தங்குவார் என்று கூறுகிறார்கள்.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகிய நீங்களே தமிழ்நாடு இல்லத்தில் தங்குகையில், உங்களிடம் ஊதியம் பெறும் ஒரு சாதாரண காவல்துறை அதிகாரி ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கும் அளவுக்கு இவருக்கு செலவு செய்யும் நபர்கள், இவரிடம் என்னென்ன சலுகைகளை எதிர்ப்பார்ப்பார்கள் என்பது நீங்கள் அறியாதது அல்ல.

இந்த சலுகைகளைப் பெறுவதற்காக இவர் உங்களைப் பற்றியே உளவு சொல்ல மாட்டார் என்பது என்ன நிச்சயம் ?

இவர் மனைவி பெயரில் திருவான்மியூரில் கட்டி வரும் நான்கடுக்கு மாளிகையைப் பற்றித் தாங்கள் அறிந்திருப்பீர்கள். ஏனென்றால் இது தாங்கள் வழங்கியது தானே ? ஆனால், ஈஞ்சம் பாக்கத்தில் இவர் 2.5 கிரவுண்ட் இடத்தை ஜெய்சங்கர் என்ற பினாமி பெயரில் வாங்கியதை தாங்கள் அறிவீர்களா ?

இந்த இடத்தை இவர் சென்னை தேவி தியேட்டர் அருகில், பால்ஸ் என்ற காபரே நடனம் நடத்தும் நபரிடம் இருந்து வாங்கியிருக்கிறார் என்பது உங்களுக்கு உபரித் தகவல்.

இது தவிர பழைய மகாபலிபுரம் சாலையில் க்ளாசிக் ஃபார்ம்ஸ் என்ற இடத்தில் மேலும் 2.5 க்ரவுண்ட் இடத்தை பினாமி பெயரில் வாங்கியிருக்கிறார் என்பதாவது தெரியுமா உங்களுக்கு ?
உங்கள் பார்வையில் இவரை நல்ல அதிகாரி என்று வைத்துக் கொண்டால் கூட, இவருக்கு இட்ட வேலை எதையாவது ஒழுங்காகச் செய்திருக்கிறாரா இது வரை ?

ஏற்கனவே உளவுத் துறைக்கு சிதம்பரசாமி என்ற ஒரு அதிகாரி இருக்கையில் இவரை தாங்கள் நியமித்ததே வைகுண்டராஜனை கைது செய்வதற்காகத் தானே ? செய்தாரா இது வரை ? கைது செய்யாமல் இருப்பதற்காக வைகுண்டராஜனிடம் ஒரு பெரும் தொகையை பெற்றுக் கொண்டு, உங்களிடம் சாக்கும் போக்கும் சொல்லிக் கொண்டிருக்கும் இப்படிப்பட்ட அதிகாரியை நீங்கள் எப்படி இன்னும் நம்புகிறீர்கள் ?


உங்கள் அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே இருக்கும் இவரை எப்படி நீங்கள் இந்தப் பதவியில் வைத்திருக்கிறீர்கள் ? உமாசங்கர் ஐஏஎஸை பணி இடை நீக்கம் செய்ய வேண்டும் என்று இவர் செய்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டீர்களே ?


தேர்தல் நடக்க இன்னும் ஒரு ஆண்டுக்கு குறைவாகவே உள்ள சூழ்நிலையில், தேவேந்திரக் குல வேளாளர் என்று அழைத்துக் கொள்ளும் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த உமாசங்கரை இடைநீக்கம் செய்து எதற்காக இப்படி அந்நியப் படுத்தினீர்கள் ? இது ஒரு சரியான அரசியல் முடிவுதானா என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

தினமும் நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உமாசங்கர் பணி இடைநீக்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்று வருவதை தாங்கள் அறிவீர்களா ? உமாசங்கருக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியதற்காக ஒரு ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்தால் இந்தப் பிரச்சினையை மூடி விடலாம் என்று நினைக்கிறார் ஜாபர் சேட். ஆனால் தலித்துகள் அன்னியப் படுத்தப் படுவதாக உணர்ந்தால், அதற்கான விளைவுகள் தேர்தலில் எதிரொலிக்கும்.

இந்த தேர்தல் ஆண்டில் உமாசங்கரின் இடைநீக்கம் ஒரு சரியான நடவடிக்கைதானா முதல்வர் அவர்களே. இந்த நெருக்கடியான சூழலுக்கு யார் காரணம் ? உங்களுடன் இருக்கும் சகுனிதானே ?

சவுக்கு வாசகர்களுக்கும், உங்களுக்கும் இருக்கும் ஒரு ஐயம், இந்த ஜாபர் சேட்டின் மேல் சவுக்குக்கு அப்படி என்ன கோபம் ? தனிப்பட்ட கோபம் இருக்கிறதா என்பது.

ஜாபர் சேட்டை சவுக்கு பார்த்தது கூட கிடையாது. ஜாபர் சேட்டின் எதிரிகள் சவுக்கை தூண்டி விடுகிறார்கள் என்று கூட ஜாபர் சேட் உங்களிடம் தகவல் சொல்லக் கூடும். தனிப்பட்ட முறையில் எதிரியாக கருதும் அளவுக்கு ஜாபர் சேட்டுக்கும், சவுக்குக்கும் அவருடைய தொழில் பங்குதாரர்கள் போல எவ்வித கொடுக்கல் வாங்கலும் இல்லை.

தனிப்பட்ட விருப்பு வெறுப்பும் இல்லை. ஆனால் ஜாபர் சேட் மீது கடும் கோபம், மாறாத ஆத்திரம் உண்டு. ஏன் தெரியுமா ?

அக்டோபர் 2008 முதல் ஈழத்தில் போர் உக்கிரமாக இருந்த போது, தமிழகம் வழியா இலங்கைக்கு உயிர் காக்கும் மருந்துகள் கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன என்பதை தாங்கள் அறிவீர்களா என்பது சவுக்குக்கு தெரியாது. இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.
ஏராளமான மருந்துகள் கடத்தப் பட்டன.

பேண்டேஜுகள், உயிர்காக்கும் மருந்துகள், சலைன்கள், இதயத்தை இயங்க வைக்கக் கூடிய ஸ்டீராய்டுகள் போன்றவையே அவை.

நீங்கள் ஈழத் தமிழர்களுக்காக தங்கள் உடலை வருத்தி, அனைத்துக் கட்சிக் கூட்டங்களும், கொட்டும் மழையில் மனிதச் சங்கிலிப் போராட்டமும், தள்ளாத வயதில் உண்ணாத விரதமும் நடத்திக் கொண்டிருக்கையில் உங்கள் ஜாபர் சேட் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா ?

இது போல மருந்து கடத்திச் செல்ல முயன்ற ஈழத் தமிழர்களையும், இந்தியத் தமிழர்களையும் இலங்கைக்கு சாட்டிலைட் போன்கள் கடத்த முயன்றார்கள், லேப்டாப்புகளை கடத்த முயன்றார்கள் என்று வழக்கு போட்டு சகட்டு மேனிக்கு உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார்.

இந்திய இறையாண்மையை காக்கும் பொறுப்பு உங்களுக்கு, சோனியாவை விட அதிகம் உள்ளது என்றாலும், இந்த மருந்துகள் இலங்கையை சென்று அடைந்திருந்தால் சில ஆயிரம் உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும் தானே ?

சவுக்கு ஆயுதம் கடத்துபவர்களுக்கு வக்காலத்து வாங்கவில்லை. மருந்து கடத்துபவர்களை, அது சட்ட விரோதமாக இருந்தாலும் சில ஆயிரம் உயிர்களை காக்க பயன்படுகிறது என்ற போது கண்டும் காணாமல் இருந்திருந்தால்தான் என்ன ?

புலிகள் இயக்கத்துக்கு பணமும், ஆயுதமும் பயிற்சியும் வழங்கியது இதே தமிழ்நாடு தானே ? உங்களை விட இந்திய இறையாண்மையில் நம்பிக்கை உள்ள, உங்களால் தியாகத் திருவிளக்கு என்று அன்போடு அழைக்கப் படும், சோனியாவின் மாமியார் செய்யாததையா நீங்கள் செய்து விடப் போகிறீர்கள் ?

வழக்கு போடுவதிலாவது நேர்மையாக இருந்தாரா ஜாபர் சேட். கைப்பற்றப் பட்டவை மருந்துகளாக இருந்தாலும், அவற்றையெல்லாம் கணக்கில் காட்டாமல், வெறும் சாட்டிலைட் போனை மட்டும் வைத்து வழக்கு போடப்பட்டது தெரியுமா ?


இது போன்று வழக்கு போட்டு தள்ளிய நேர்வுகளிள் ஒன்று இதயத்தை உறையச் செய்யக் கூடியது. புலம் பெயர்ந்த தமிழர்கள் தாங்கள் உழைத்துச் சேர்த்த பணத்தில் இறுதி யுத்தத்தின் போது வாங்கிக் கொடுத்து அனுப்பிய 250 ரத்த உறைகளை கொடுத்து அனுப்புகிறார்கள்.

இந்த 250 ரத்த உறைகளும், குண்டுக் காயம் பட்டு, குற்றுயிரும் குலையிருமாக ஈழத்து வீதிகளில் கிடக்கும் தமிழ் உயிர்களைக் காப்பதற்காக கொடுத்து அனுப்பப் பட்டவை. தமிழகம் வந்தால் பிடிபடும் அபாயம் உண்டு என்பதை அறிந்தும், ரத்த உறைகள் இந்த நெருக்கடியான நேரத்தில் அனுப்பப் படும் என்பதை நம்பி அனுப்பப் பட்டன.


ஜாபர் சேட் பொறுப்பாக உள்ள க்யூ பிரிவு காவல்துறையினர், இந்த 250 ரத்த உறைகள் எடுத்து வந்த நபரை இடைமறித்து, அவர் சாட்டிலைட் போனை ஈழத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றதாக கைது செய்து, ரத்த உறைகளை கணக்கில் காட்டாமல் குப்பையில் கொட்டி அழித்த செய்தியை தாங்கள் அறிவீர்களா ?

இந்த வழக்கு தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றம் வந்த க்யூ பிரிவு காவலர் ஒருவர், மனசாட்சி கேட்காமல் ஜாபர்சேட்டை காது கூசும் கெட்ட வார்த்தைகளால் திட்டி விட்டு சொன்ன தகவல் இது.

இது மட்டும் அல்ல… … …. இந்த ரத்த உறைகளை எடுத்து வந்த நபரிடமிருந்து 60 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப் பட்டதே, அது ஏன் வழக்கு ஆவணங்களில் பதிவு செய்யப் படவில்லை என்பதை உங்கள் ஜாபர் சேட்டிடம் கேளுங்கள் அய்யா … …. இந்த வழக்கு பற்றிய ஒரு தனிப் பதிவு விரைவில் வரும்.

அரசாங்கப் பணத்தை திருடுவது பத்தாது என்பதால், புலம் பெயர்ந்த தமிழர்களின் வியர்வையில் வந்த பணத்தையும் திருடி விட்டார் இந்த விஷக் கிருமி. இப்படியெல்லாம் திருடினால்தானே, திருவான்மியூரிலும், ஈஞ்சம்பாக்கத்திலும் வீட்டு மனைகள் வாங்க முடியும்.



நீங்கள் ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருப்பீர்கள். உங்கள் கீழ் பணியாற்றும் அதிகாரி ஈழத் தமிழர்களுக்கான ரத்த உறைகளை குப்பையில் கொட்டி அழிப்பார் ? என்ன கொடுமை அய்யா இது ? நம்மை தமிழர் என்று நாம் சொல்லிக் கொள்ளும் தகுதி இருக்கிறதா நமக்கு ?

இந்த ரத்த உறைகளை எடுத்து வந்து க்யூ பிரிவு காவல்துறையில் பிடிபட்ட நபர், இன்னும் தமிழக சிறைகளில்தான் இருக்கிறார். முதல்வராகிய தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை வைத்து, இன்றே அந்த நபரை நேரடியாக சந்தித்து தாங்கள் விசாரித்து உண்மையை அறிய முடியும்.

இப்படிப்பட்ட நபரை நீங்கள் எப்படி இன்னும் நம்பி தமிழகத்தின் முக்கியப் பொறுப்பை கொடுத்து இருக்கிறீர்கள் அய்யா ? 1996 முதல் 2001ம் ஆண்டு வரை உளவுத் துறையில் பணியாற்றிய அதிகாரிகள், உளவுத் துறை சொல்லும் தகவல்களை, தாங்கள் கட்சிக் காரர்களை வைத்து தனியே விசாரித்து உளவுத் துறை அதிகாரிகள் சொல்லும் தகவல்களின் உண்மைத் தன்மையை சரி பார்ப்பீர்கள்.

உளவுத் துறை கொடுத்த தகவல்கள் சரியில்லாமல் இருந்தால், வறுத்து எடுத்து விடுவீர்கள் என்று கூறுகிறார்கள்.

அப்படிப் பட்ட நிர்வாகத் திறமை வாய்ந்த நீங்களா இந்த சகுனியை மடியில் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள் ?

இந்த ஊழல் பேர்விழி மீது நடவடிக்கை எடுக்க ஏதுவாக, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக புகார் மனு நேற்று அனுப்பப் பட்டது.

உள்துறைச் செயலருக்கும், தலைமைச் செயலருக்கும் மத்திய அரசுக்கும் அனுப்பப் பட்ட அந்த புகார் மனு, தங்கள் பார்வைக்கு வைக்கப் படுமா என்பது சவுக்குக்கு தெரியாது.



















அதனால், அந்த புகார் மனுக்கள் தங்கள் பார்வைக்காக இங்கேயே வழங்கப் படுகின்றன.
இந்தப் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தை உயர்நீதிமன்றம் செல்லும் சூழலுக்கு தள்ள மாட்டீர்கள் என்றே சவுக்கு நம்புகிறது.

வாழ்த்துக்கள் அய்யா.

வணக்கம்.

சவுக்கு

அன்பார்ந்த தமிழக முதல்வரே … …. ….



சவுக்கின் கைதுக்கு முன்பு, தங்களிடம் சவுக்கு எழுதிய செம்மொழிப் பாடல், பதிவும், மற்றொரு பதிவும் காண்பிக்கப் பட்டு, சவுக்கு ஒரு தேசத் துரோகியாக சித்தரிக்கப் பட்டதாக சவுக்கு அறிகிறது.

தாங்களும் ஒரு எழுத்தாளர் என்ற முறையில், அந்தப் பதிவுகளை ரசித்திருப்பீர்கள் என்றே சவுக்கு நம்புகிறது. இத்தனை காலமாய் தங்களை விமர்சித்து சவுக்கு எழுதும் போதெல்லாம் அமைதியாக இருந்த ஜாபர் சேட், இப்போது சவுக்கைப் பற்றி தங்களிடம் கூறக் காரணம் என்று யோசித்தீர்களா ?

ஜாபர் சேட்டின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் சவுக்கு ஏற்றியதால் தான்.
உங்களை விமர்சித்த பதிவை காட்டினாரே ? இவர் எத்தனை இடத்தில் சொத்து வாங்கியுள்ளார் என்ற பதிவை காட்டினாரா ? காட்டமாட்டார்.



அய்யா என்னா அழகா இருக்கார் பாருங்க. பெண் சிங்கம் 2ம் பார்ட்ல ஹீரோ ஆக்கிடுங்கய்யா


முதல்வர் அவர்களே.. உங்களை அரசியல் சாணக்கியர் என்று கூறுகிறார்கள். மிகத் திறமையாக எதிரிகளைக் கையாண்டு சாணக்கியத்தனத்தோடு செயல்படுவதில் தாங்கள் வல்லவர் என்று கூறுகிறார்கள்.

ஆனால் அப்படிப் பட்ட சாணக்கியரான நீங்கள், ஒரு சகுனியை கூடவே வைத்துக் கொண்டு, அந்த சகுனியை நம்பி ஏமாந்து கொண்டு இருப்பதுதான் மிகுந்த வேதனையாகவும், ஆச்சர்யமாகவும் உள்ளது. உங்கள் உடனிருப்பவர்கள், உங்களிடம் உண்மையைச் சொல்கிறார்களா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால், சாதுர்யம் மிக்க நீங்கள், இந்த ஜாபர் சேட் விஷயத்தில் ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறீர்கள் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.

இன்று உங்கள் கண்களாகவும், காதுகளாகவும் இருப்பது போல நடித்துக் கொண்டிருக்கும் இந்த ஜாபர் சேட் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

இவர் பணியில் சேர்ந்த நாள் முதலாகவே ஒழுக்கமாக இருந்தது கிடையாது முதல்வர் அவர்களே. முதல் போஸ்டிங்கில், ஏஎஸ்பி யாக, கோவையில் இவர் நியமிக்கப் பட்டார். அப்போதே, அங்கே இருந்த ஒரு பெண் காவலருடன் நெருக்கமாகப் பழகியதாகவும், அந்தப் பெண் காவலர், ஜாபரை திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்தியதாகவும், மறுத்தால் புகார் கூறப் போவதாகவும் கூறியதை அடுத்தே, ஜாபர் அவசர அவசரமாக திருமணம் செய்ததாக கோவை வட்டாரங்கள் கூறுகின்றன. பணியில் சேர்ந்த முதல் ஆண்டே தனது வேலையை காட்டத் தொடங்கியவர்தான் இந்த ஜாபர்.

1996 முதல் 2000ம் ஆண்டு வரை, தாங்கள் முதல்வராக இருந்த பொழுது ஜாபர் சேட் தங்களது பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் என்பதை தாங்கள் அறிவீர்கள்.

அப்போதெல்லாம், இப்போது நடப்பது போன்று பல்வேறு விழாக்கள் தங்களுக்கு கிடையாது. காலையில் தலைமைச் செயலகம் வந்தால், மாலையில் அலுவலகம் முடியும் வரை அங்கேதான் இருப்பீர்கள். பாதுகாப்புப் பிரிவு எஸ்பி என்பதால், ஜாபருக்கு தாங்கள் எத்தனை மணிக்கு கிளம்புவீர்கள் என்ற விபரம் நன்கு தெரியும்.

அதனால், ஒரு ஜிப்ஸி ஜீப்பை எடுத்துக் கொண்டு, தானே அதை ஓட்டிச் சென்று, நேராக சென்னை விமான நிலையத்தின் சர்வதேச இறங்கு முனையின் விஐபி நுழைவாயிலுக்குச் செல்வார். அங்கே, இவரது நண்பர்கள் எடுத்து வரும் பொருட்களை கஸ்டம்ஸ் சோதனையின்றி, தன்னுடைய ஜீப்பிலேயே ஏற்றி அவர்கள் வீட்டுக்கு கொண்டு சேர்ப்பாராம். இதன் மூலமாக, சுங்க வரி ஏதும் செலுத்தாமல் இவர்களது பொருட்கள் வந்து சேரும்.


திருவான்மியூர் ப்ளாட் ஒரு சதுர அடி, 9000 ரூபா ஒரு தரம், ரெண்டு தரம்....



இதற்கான பிரதி பலனாக, இவருக்கு அரசு விருப்புரிமை கோட்டாவில் ஒதுக்கப் பட்ட, சென்னை முகபேர் ஏரித் திட்டத்தில் 10வது குறுக்குத் தெருவில் உள்ள மனையில், ஒரு பிரம்மாண்ட பங்களா கட்டினார் தெரியுமா ?

அந்த வீட்டை இவர் பொருள் எடுத்து வந்துக் கொடுத்த, செங்கல் சூளை முதலாளிகள் செங்கல் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் இலவசமாக கொடுத்து, அந்த வீட்டை கட்டிக் கொடுத்தனர் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

அவ்வாறு கட்டிய வீட்டில் ஒரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, அதை 70 லட்ச ரூபாய்க்கு விற்று விட்டது தங்களுக்குத் தெரியுமா ?

பாதுகாப்புப் பிரிவு எஸ்பியாகவே இருந்து இவர் எப்படி சம்பாதித்தார் என்று பல போலீஸ் அதிகாரிகளுக்கு இன்னும் புதிராகவே உள்ளது. இப்படித்தான் சம்பாதித்தார்.
தங்களின் நள்ளிரவு கைதில் இவர் வகித்த பங்கு என்ன என்று உங்களுக்குத் தெரியுமா ?

உங்களின் பாதுகாப்பு அதிகாரியாக நான்கு ஆண்டுகள் இருந்த அனுபவத்தால் இவரிடம் தான், எந்த இடத்துக்கு எந்த போலீஸ் அதிகாரியை அனுப்ப வேண்டும் என்ற பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது.

உங்களின் நள்ளிரவு கைதின் போது இவருக்கு ஒதுக்கப் பட்ட இடம், முர்ரேஸ் கேட் ரோடு முனை. ஆனால், அங்கே இவர் நிற்காமல், ஆபாஷ் குமாரை நிற்க வைத்து விட்டு மைலாப்பூர் காவல் நிலையத்தில் சென்று ஒளிந்து கொண்டார்.

பிறகு, அங்கே திமுகவினர் வரப் போகிறார்கள் என்ற செய்தி கிடைத்ததும், ஓமந்தூரார் மாளிகைக்கு சென்று விட்டார்.


இந்தப் புன்னகை என்ன விலை ? (ஒரு சதுர சென்டி மீட்டர் 10,000 ரூபா)



உங்கள் கைது பற்றி முன் கூட்டியே தகவலைச் சொன்னது தான்தான் என்று உங்களிடம் புளுகியிருப்பார். ஆனால் சரியான நபரிடம் விசாரியுங்கள், அந்தத் தகவலை உங்களிடம் சொன்னது ஜாபர் சேட் இல்லை. சவுக்கு அந்த நபரின் பெயரை வெளியிட விரும்பவில்லை.

நள்ளிரவுக் கைதுக்குப் பின் என்ன நடந்தது தெரியுமா ? ஜாபர் சேட்தான் அந்தத் தகவலை உங்களுக்கு முன் கூட்டியே சொல்லி விட்டார் என்று அன்றைய முதல்வர் ஜெயலலிதாவு தகவல் கூறப்பட்டது.

உடனடியாக, தீண்டாமை ஒழிப்புப் பிரிவு டிஐஜியாக திருச்சிக்கு நியமிக்கப் பட்டார் ஜாபர் சேட்.

ஜாபர் சேட்டின் மனைவி பர்வீனும், உங்கள் நள்ளிரவு கைதின் நாயகன் முத்துக்கருப்பனின் மனைவி மல்லிகாவும் இணைந்தே ப்யூரிட்டா மினரெல் வாட்டர், பால் பண்ணை தொழில்களில் ஈடுபட்டு வந்தார்கள். அதனால் இவர்கள் இருவருக்கும் மிகுந்த நட்பு உண்டு.

உங்களை நள்ளிரவில் கைது செய்த பின், முத்துக் கருப்பன், ஒரு சக்கரவர்த்தியைப் போல இருந்தார் தெரியுமா ? இவர் வந்தால் மட்டும் செல்வி.ஜெயலலிதா உடனடியாக அப்பாயின்ட்மென்ட் கொடுப்பார்.

இந்த நெருக்கத்தை பயன்படுத்தி சென்னைக்கே மாறுதல் வாங்க வேண்டும் என்று விரும்பிய ஜாபர் சேட் நேராக முத்துக் கருப்பன் வீட்டுக்குச் சென்று அவரிடம் மன்றாடியிருக்கிறார். முத்துக் கருப்பனிடம், என்னுடைய மகள் சென்னையில் படித்துக் கொண்டிருக்கிறாள், அவள் நலன் கருதியாவது எப்படியாவது சென்னைக்கு மாறுதல் வேண்டும் என்று மன்றாடியிருக்கிறார்.

மிகவும் தயங்கிய முத்துக் கருப்பன், ஜாபர் சேட்டும் அவரது மனைவியும் கெஞ்சிய கெஞ்சலைப் பார்த்து மிகவும் தயங்கிய படியே முதல்வரிடம் பேசுவதற்கு சம்மதித்திருக்கிறார்.
முத்துக்கருப்பனின் இந்த சிபாரிசைப் கேட்டு மிகவும் கோபம் அடைந்த ஜெயலலிதா, முடியவே முடியாது என்று மறுத்திருக்கிறார்.

உங்களின் நள்ளிரவு கைதுத் தகவலை முன் கூட்டியே சொன்னது ஜாபர் சேட்தான் என்று தனக்கு உறுதியான தகவல் வந்திருப்பதாகத் தெரிவிக்கிறார். இதை மறுத்த முத்துக் கருப்பன், தகவலை வெளியிட்டதாக ஒரு அதிகாரியின் பெயரை கூறுகிறார். இதைக் கேட்டு சந்தேகம் தெளிந்த ஜெயலலிதா, பழைய மாறுதல் ஆணையை ரத்து செய்து விட்டு, ஜாபர் சேட்டை சென்னையில் ஆயுதப் படை டிஐஜியாக நியமித்தார் என்ற விபரம் உங்களுக்குத் தெரியுமா முதல்வரே ?

இப்படியொரு உதவியை முத்துக்கருப்பனிடம் பெற்றுக் கொண்ட ஜாபர் சேட், இன்று முத்துக் கருப்பன் மீதான குற்றச் சாட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப் பட்டாலும், முத்துக் கருப்பனை விட பணியில் இளைவர்களான 13 பேர் கூடுதல் டிஜிபிக்களாக ஆகி விட்ட நிலையில், இவரின் பதவி உயர்வு தொடர்பான கோப்பு கையெழுத்து ஆகாமல் நிறுத்தி வைத்திருப்பது ஜாபர் சேட்தான் என்பது உங்களுக்கு தெரியுமா முதல்வர் அவர்களே ?



முந்தைய ஆட்சியில் ஒரு துணை முதல்வரைப் போல செயல்பட்டு, இன்று வரை எதிர்க்கட்சித் தலைவர் செல்வி ஜெயலலிதா உங்கள் அரசை மைனாரிட்டி அரசு என்று அழைப்பதற்கு காரணமான சிவனாண்டியையே மன்னித்து நல்ல பதவி கொடுத்து அழகு பார்க்கும் நீங்கள், முத்துக் கருப்பனுக்கு பதவி உயர்வு வழங்காததற்குக் காரணம், அவர் ஒரு தலித் என்பதால் என்று அதிகாரிகள் மட்டத்தில் இருக்கும் பரவலான பேச்சு உங்களுக்குத் தெரியுமா முதல்வர் அவர்களே ?

தலித் வீட்டில் பெண் எடுக்கும் அளவுக்கு பெரிய மனது கொண்ட நீங்கள், இப்படி ஒரு அவப்பெயருக்கு ஆளாகலாமா ?

2007ம் ஆண்டு முதல் பல்வேறு வேலைகள் காரணமாக 50 தடவைகளுக்கும் மேல் விமானத்தில், முதல் வகுப்பில் டெல்லி வந்திருக்கிறார் ஜாபர் சேட்.

ஒவ்வொரு முறை பயணத்திற்கும், உளவுத் துறையின் ரகசிய நிதியிலிருந்து பணம் கொடுக்கப் பட்டதை தாங்கள் அறிந்திருந்தாலும், இந்தத் தொகை இது வரை மீண்டும் ரகசிய நிதிக்கு வரவு வைக்கப் படவில்லை என்பதை தாங்கள் அறிவீர்களா முதல்வரே ? ஒரு முறை முதல் வகுப்பில் டெல்லி செல்வதற்கு ஏறக்குறைய 20,000 ஆகும் தெரியுமா முதல்வர் அவர்களே ?




மாதந்தோறும் இவர் தனது வீட்டு செலவுக்காக ரகசிய நிதியிலிருந்து எடுக்கும் ஒரு லட்ச ரூபாயையும், அறையை புதுப்பிப்பதற்காக கடந்த ஆண்டு எடுத்த ஐந்து லட்ச ரூபாயையும், இந்த ஆண்டு செலவிட்ட ஐந்து லட்ச ரூபாயையும் இவருக்கு வவுச்சர் போட்டு வாங்கிக் கொடுப்பது உளவுத் துறையின் நிர்வாகப் பிரிவில் பணியாற்றும் ராஜ்குமார் என்ற டிஎஸ்பி என்பது தங்களுக்குத் தெரியுமா முதல்வரே ?

இந்த ராஜ்குமார், ஜாபர் சேட் அடிக்கும் கொள்ளையில் தானும் ஒரு பங்கை எடுத்துக் கொள்கிறார் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா ?

முதலமைச்சராகிய நீங்கள் கையெழுத்து போட்டு ஒப்புதல் தராமலேயே, பல பொருட்களை ரகசிய நிதியிலிருந்து வாங்கியிருக்கிறார் ஜாபர் சேட் தெரியுமா முதல்வரே ?

சமீபத்தில் இவர் தனது அறையில் வாங்கிப் போட்டிருக்கும் மேசை மட்டும் ஒரு லட்ச ரூபாய். உளவு சேகரிப்பதற்காக ரகசிய நிதி கொடுத்தீர்களா அறையை சொகுசு படுத்துவதற்காகவா ?

ஒவ்வொரு முறை புதுதில்லி செல்லும் போதும், இவரை விமான நிலையத்திலிருந்து அழைத்துச் செல்ல பெரும் செல்வந்தர்களின் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கார்கள் வருகின்றன என்பதை அறிவீர்களா முதல்வரே ?



50 தடவைகளுக்கு மேல் புது தில்லி சென்றுள்ள ஜாபர் சேட், ஒரு முறை கூட நீங்களே தங்கும் தமிழ்நாடு இல்லத்தில் தங்குவது இல்லை. ஒவ்வொரு முறையும் நட்சத்திர ஓட்டலில்தான் தங்குவார் என்று கூறுகிறார்கள்.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகிய நீங்களே தமிழ்நாடு இல்லத்தில் தங்குகையில், உங்களிடம் ஊதியம் பெறும் ஒரு சாதாரண காவல்துறை அதிகாரி ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கும் அளவுக்கு இவருக்கு செலவு செய்யும் நபர்கள், இவரிடம் என்னென்ன சலுகைகளை எதிர்ப்பார்ப்பார்கள் என்பது நீங்கள் அறியாதது அல்ல.

இந்த சலுகைகளைப் பெறுவதற்காக இவர் உங்களைப் பற்றியே உளவு சொல்ல மாட்டார் என்பது என்ன நிச்சயம் ?

இவர் மனைவி பெயரில் திருவான்மியூரில் கட்டி வரும் நான்கடுக்கு மாளிகையைப் பற்றித் தாங்கள் அறிந்திருப்பீர்கள். ஏனென்றால் இது தாங்கள் வழங்கியது தானே ? ஆனால், ஈஞ்சம் பாக்கத்தில் இவர் 2.5 கிரவுண்ட் இடத்தை ஜெய்சங்கர் என்ற பினாமி பெயரில் வாங்கியதை தாங்கள் அறிவீர்களா ?

இந்த இடத்தை இவர் சென்னை தேவி தியேட்டர் அருகில், பால்ஸ் என்ற காபரே நடனம் நடத்தும் நபரிடம் இருந்து வாங்கியிருக்கிறார் என்பது உங்களுக்கு உபரித் தகவல்.

இது தவிர பழைய மகாபலிபுரம் சாலையில் க்ளாசிக் ஃபார்ம்ஸ் என்ற இடத்தில் மேலும் 2.5 க்ரவுண்ட் இடத்தை பினாமி பெயரில் வாங்கியிருக்கிறார் என்பதாவது தெரியுமா உங்களுக்கு ?
உங்கள் பார்வையில் இவரை நல்ல அதிகாரி என்று வைத்துக் கொண்டால் கூட, இவருக்கு இட்ட வேலை எதையாவது ஒழுங்காகச் செய்திருக்கிறாரா இது வரை ?

ஏற்கனவே உளவுத் துறைக்கு சிதம்பரசாமி என்ற ஒரு அதிகாரி இருக்கையில் இவரை தாங்கள் நியமித்ததே வைகுண்டராஜனை கைது செய்வதற்காகத் தானே ? செய்தாரா இது வரை ? கைது செய்யாமல் இருப்பதற்காக வைகுண்டராஜனிடம் ஒரு பெரும் தொகையை பெற்றுக் கொண்டு, உங்களிடம் சாக்கும் போக்கும் சொல்லிக் கொண்டிருக்கும் இப்படிப்பட்ட அதிகாரியை நீங்கள் எப்படி இன்னும் நம்புகிறீர்கள் ?


உங்கள் அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே இருக்கும் இவரை எப்படி நீங்கள் இந்தப் பதவியில் வைத்திருக்கிறீர்கள் ? உமாசங்கர் ஐஏஎஸை பணி இடை நீக்கம் செய்ய வேண்டும் என்று இவர் செய்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டீர்களே ?


தேர்தல் நடக்க இன்னும் ஒரு ஆண்டுக்கு குறைவாகவே உள்ள சூழ்நிலையில், தேவேந்திரக் குல வேளாளர் என்று அழைத்துக் கொள்ளும் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த உமாசங்கரை இடைநீக்கம் செய்து எதற்காக இப்படி அந்நியப் படுத்தினீர்கள் ? இது ஒரு சரியான அரசியல் முடிவுதானா என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

தினமும் நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உமாசங்கர் பணி இடைநீக்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்று வருவதை தாங்கள் அறிவீர்களா ? உமாசங்கருக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியதற்காக ஒரு ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்தால் இந்தப் பிரச்சினையை மூடி விடலாம் என்று நினைக்கிறார் ஜாபர் சேட். ஆனால் தலித்துகள் அன்னியப் படுத்தப் படுவதாக உணர்ந்தால், அதற்கான விளைவுகள் தேர்தலில் எதிரொலிக்கும்.

இந்த தேர்தல் ஆண்டில் உமாசங்கரின் இடைநீக்கம் ஒரு சரியான நடவடிக்கைதானா முதல்வர் அவர்களே. இந்த நெருக்கடியான சூழலுக்கு யார் காரணம் ? உங்களுடன் இருக்கும் சகுனிதானே ?

சவுக்கு வாசகர்களுக்கும், உங்களுக்கும் இருக்கும் ஒரு ஐயம், இந்த ஜாபர் சேட்டின் மேல் சவுக்குக்கு அப்படி என்ன கோபம் ? தனிப்பட்ட கோபம் இருக்கிறதா என்பது.

ஜாபர் சேட்டை சவுக்கு பார்த்தது கூட கிடையாது. ஜாபர் சேட்டின் எதிரிகள் சவுக்கை தூண்டி விடுகிறார்கள் என்று கூட ஜாபர் சேட் உங்களிடம் தகவல் சொல்லக் கூடும். தனிப்பட்ட முறையில் எதிரியாக கருதும் அளவுக்கு ஜாபர் சேட்டுக்கும், சவுக்குக்கும் அவருடைய தொழில் பங்குதாரர்கள் போல எவ்வித கொடுக்கல் வாங்கலும் இல்லை.

தனிப்பட்ட விருப்பு வெறுப்பும் இல்லை. ஆனால் ஜாபர் சேட் மீது கடும் கோபம், மாறாத ஆத்திரம் உண்டு. ஏன் தெரியுமா ?

அக்டோபர் 2008 முதல் ஈழத்தில் போர் உக்கிரமாக இருந்த போது, தமிழகம் வழியா இலங்கைக்கு உயிர் காக்கும் மருந்துகள் கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன என்பதை தாங்கள் அறிவீர்களா என்பது சவுக்குக்கு தெரியாது. இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.
ஏராளமான மருந்துகள் கடத்தப் பட்டன.

பேண்டேஜுகள், உயிர்காக்கும் மருந்துகள், சலைன்கள், இதயத்தை இயங்க வைக்கக் கூடிய ஸ்டீராய்டுகள் போன்றவையே அவை.

நீங்கள் ஈழத் தமிழர்களுக்காக தங்கள் உடலை வருத்தி, அனைத்துக் கட்சிக் கூட்டங்களும், கொட்டும் மழையில் மனிதச் சங்கிலிப் போராட்டமும், தள்ளாத வயதில் உண்ணாத விரதமும் நடத்திக் கொண்டிருக்கையில் உங்கள் ஜாபர் சேட் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா ?

இது போல மருந்து கடத்திச் செல்ல முயன்ற ஈழத் தமிழர்களையும், இந்தியத் தமிழர்களையும் இலங்கைக்கு சாட்டிலைட் போன்கள் கடத்த முயன்றார்கள், லேப்டாப்புகளை கடத்த முயன்றார்கள் என்று வழக்கு போட்டு சகட்டு மேனிக்கு உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார்.

இந்திய இறையாண்மையை காக்கும் பொறுப்பு உங்களுக்கு, சோனியாவை விட அதிகம் உள்ளது என்றாலும், இந்த மருந்துகள் இலங்கையை சென்று அடைந்திருந்தால் சில ஆயிரம் உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும் தானே ?

சவுக்கு ஆயுதம் கடத்துபவர்களுக்கு வக்காலத்து வாங்கவில்லை. மருந்து கடத்துபவர்களை, அது சட்ட விரோதமாக இருந்தாலும் சில ஆயிரம் உயிர்களை காக்க பயன்படுகிறது என்ற போது கண்டும் காணாமல் இருந்திருந்தால்தான் என்ன ?

புலிகள் இயக்கத்துக்கு பணமும், ஆயுதமும் பயிற்சியும் வழங்கியது இதே தமிழ்நாடு தானே ? உங்களை விட இந்திய இறையாண்மையில் நம்பிக்கை உள்ள, உங்களால் தியாகத் திருவிளக்கு என்று அன்போடு அழைக்கப் படும், சோனியாவின் மாமியார் செய்யாததையா நீங்கள் செய்து விடப் போகிறீர்கள் ?

வழக்கு போடுவதிலாவது நேர்மையாக இருந்தாரா ஜாபர் சேட். கைப்பற்றப் பட்டவை மருந்துகளாக இருந்தாலும், அவற்றையெல்லாம் கணக்கில் காட்டாமல், வெறும் சாட்டிலைட் போனை மட்டும் வைத்து வழக்கு போடப்பட்டது தெரியுமா ?


இது போன்று வழக்கு போட்டு தள்ளிய நேர்வுகளிள் ஒன்று இதயத்தை உறையச் செய்யக் கூடியது. புலம் பெயர்ந்த தமிழர்கள் தாங்கள் உழைத்துச் சேர்த்த பணத்தில் இறுதி யுத்தத்தின் போது வாங்கிக் கொடுத்து அனுப்பிய 250 ரத்த உறைகளை கொடுத்து அனுப்புகிறார்கள்.

இந்த 250 ரத்த உறைகளும், குண்டுக் காயம் பட்டு, குற்றுயிரும் குலையிருமாக ஈழத்து வீதிகளில் கிடக்கும் தமிழ் உயிர்களைக் காப்பதற்காக கொடுத்து அனுப்பப் பட்டவை. தமிழகம் வந்தால் பிடிபடும் அபாயம் உண்டு என்பதை அறிந்தும், ரத்த உறைகள் இந்த நெருக்கடியான நேரத்தில் அனுப்பப் படும் என்பதை நம்பி அனுப்பப் பட்டன.


ஜாபர் சேட் பொறுப்பாக உள்ள க்யூ பிரிவு காவல்துறையினர், இந்த 250 ரத்த உறைகள் எடுத்து வந்த நபரை இடைமறித்து, அவர் சாட்டிலைட் போனை ஈழத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றதாக கைது செய்து, ரத்த உறைகளை கணக்கில் காட்டாமல் குப்பையில் கொட்டி அழித்த செய்தியை தாங்கள் அறிவீர்களா ?

இந்த வழக்கு தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றம் வந்த க்யூ பிரிவு காவலர் ஒருவர், மனசாட்சி கேட்காமல் ஜாபர்சேட்டை காது கூசும் கெட்ட வார்த்தைகளால் திட்டி விட்டு சொன்ன தகவல் இது.

இது மட்டும் அல்ல… … …. இந்த ரத்த உறைகளை எடுத்து வந்த நபரிடமிருந்து 60 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப் பட்டதே, அது ஏன் வழக்கு ஆவணங்களில் பதிவு செய்யப் படவில்லை என்பதை உங்கள் ஜாபர் சேட்டிடம் கேளுங்கள் அய்யா … …. இந்த வழக்கு பற்றிய ஒரு தனிப் பதிவு விரைவில் வரும்.

அரசாங்கப் பணத்தை திருடுவது பத்தாது என்பதால், புலம் பெயர்ந்த தமிழர்களின் வியர்வையில் வந்த பணத்தையும் திருடி விட்டார் இந்த விஷக் கிருமி. இப்படியெல்லாம் திருடினால்தானே, திருவான்மியூரிலும், ஈஞ்சம்பாக்கத்திலும் வீட்டு மனைகள் வாங்க முடியும்.



நீங்கள் ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருப்பீர்கள். உங்கள் கீழ் பணியாற்றும் அதிகாரி ஈழத் தமிழர்களுக்கான ரத்த உறைகளை குப்பையில் கொட்டி அழிப்பார் ? என்ன கொடுமை அய்யா இது ? நம்மை தமிழர் என்று நாம் சொல்லிக் கொள்ளும் தகுதி இருக்கிறதா நமக்கு ?

இந்த ரத்த உறைகளை எடுத்து வந்து க்யூ பிரிவு காவல்துறையில் பிடிபட்ட நபர், இன்னும் தமிழக சிறைகளில்தான் இருக்கிறார். முதல்வராகிய தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை வைத்து, இன்றே அந்த நபரை நேரடியாக சந்தித்து தாங்கள் விசாரித்து உண்மையை அறிய முடியும்.

இப்படிப்பட்ட நபரை நீங்கள் எப்படி இன்னும் நம்பி தமிழகத்தின் முக்கியப் பொறுப்பை கொடுத்து இருக்கிறீர்கள் அய்யா ? 1996 முதல் 2001ம் ஆண்டு வரை உளவுத் துறையில் பணியாற்றிய அதிகாரிகள், உளவுத் துறை சொல்லும் தகவல்களை, தாங்கள் கட்சிக் காரர்களை வைத்து தனியே விசாரித்து உளவுத் துறை அதிகாரிகள் சொல்லும் தகவல்களின் உண்மைத் தன்மையை சரி பார்ப்பீர்கள்.

உளவுத் துறை கொடுத்த தகவல்கள் சரியில்லாமல் இருந்தால், வறுத்து எடுத்து விடுவீர்கள் என்று கூறுகிறார்கள்.

அப்படிப் பட்ட நிர்வாகத் திறமை வாய்ந்த நீங்களா இந்த சகுனியை மடியில் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள் ?

இந்த ஊழல் பேர்விழி மீது நடவடிக்கை எடுக்க ஏதுவாக, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக புகார் மனு நேற்று அனுப்பப் பட்டது.

உள்துறைச் செயலருக்கும், தலைமைச் செயலருக்கும் மத்திய அரசுக்கும் அனுப்பப் பட்ட அந்த புகார் மனு, தங்கள் பார்வைக்கு வைக்கப் படுமா என்பது சவுக்குக்கு தெரியாது.



















அதனால், அந்த புகார் மனுக்கள் தங்கள் பார்வைக்காக இங்கேயே வழங்கப் படுகின்றன.
இந்தப் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தை உயர்நீதிமன்றம் செல்லும் சூழலுக்கு தள்ள மாட்டீர்கள் என்றே சவுக்கு நம்புகிறது.

வாழ்த்துக்கள் அய்யா.

வணக்கம்.

சவுக்கு

Sunday, July 25, 2010

சிறையில் சவுக்கு… ….



ல்லாப் பொழுதுகளைப் போலவேதான் அந்த புதனும் விடிந்தது. சவுக்கு வழக்கம் போல நீதிமன்றத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்த காலை வேளையில் தான் அந்த அழைப்பு மணி அடித்தது.

வுக்கின் கைதில் உண்மையில் நடந்தது என்ன, காவல்துறையினர் கூறிய சம்பவங்கள் உண்மையா, பதிவுக்காகத்தான் இந்தக் கைதா என பல்வேறு கேள்விகள் பலர் மனதில் நிழலாடுவது உண்மை. அதனால் நடந்ததை அப்படியே, சவுக்கு வாசகர்கள் முன்னிலையில் தெரியப் படுத்தவது, சவுக்கின் கடமை.

ஏற்கனவே, சவுக்கை முடக்கு… அதிரடி திட்டம் என்ற பதிவில் குறிப்பிட்டுருந்தது போல, ஒரு மகிழ்ச்சி, ஒரு சோகம் பதிவு வெளியிடப் பட்ட பின், இது போன்ற ஒரு நடவடிக்கையை சவுக்கு எதிர்ப்பார்த்தே இருந்தது. ஏனெனில், சவுக்கு வைக்கும் குற்றச் சாட்டுகள் முகத்தில் அறையும் உண்மைகளாக இருந்தன. இந்தக் குற்றச் சாட்டுகள், சட்ட ரீதியாக ஜாபர் சேட் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சிக்கலை உண்டு பண்ணும் தன்மை படைத்தவை. இவர்களின் அதிகார பீடத்தை ஆடச் செய்யும் வலிமை படைத்தவை. அதனாலேயே, சவுக்கை முடக்கி விட்டால், இது போன்ற தொல்லைகள் இருக்காது என்று, டர்ட்டி பாய்ஸ் வகுத்த திட்டத்தின் வெளிப்பாடே இந்த கைது நடவடிக்கை.

சவுக்குக்கு, இந்த ஜாபர் சேட் உள்ளிட்ட அதிகாரிகளின் மீதோ, கர்ம வீரர் மீதோ, தனிப்பட்ட வெறுப்போ, காழ்ப்புணர்வோ, எப்போதும் இருந்ததில்லை. தங்களிடம் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, மக்கள் பணத்தை கொள்ளையடித்து, சுகபோகங்களை அனுபவிக்கும் இவர்களின் போக்கையே சவுக்கு சுட்டிக் காட்டுகிறது, சாடுகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் எதிரில் உள்ள தெருக்களில், தங்கள் வாழ்க்கையை நடத்தும் எத்தனையோ குடும்பங்களை இன்றும் காணலாம்.

அந்த சாலையிலேயே சமைத்து, அங்கே உண்டு, அங்கேயே உடுத்தி, அங்கேயே உடலுறவு கொண்டு, வாழ்வின் மீதுள்ள பிடிப்போடு போராட்டத்தோடு வாழ்க்கையை நடத்தும் அந்த உயர்ந்த மனிதர்களோடு நம்ப டர்ட்டீ பாய்ஸை ஒப்பிட்டு பாருங்கள். இயல்பாக கோபம் வரும். அந்தக் கோபம்தான் சவுக்குக்கு. வேறு என்ன இவர்களிடம் காழ்ப்புணர்வு இருக்க முடியும் ?

பாரிமுனையின் நடைபாதைகளில் கடை வைத்திருக்கும் அப்படி ஒரு குடும்பத் தலைவி, சவுக்கை பார்த்தவுடன் “சார் வணக்கம் சார். பையனுக்கு இஸ்கூல் பீஸ் கட்டணும் சார். யூனிபாரம் வாங்கணும் சார்“ என்று ஐநூறு ரூபாய் கூட இல்லாமல் கேட்கும் சூழலில் வாழும் நிலையில், ஒரே மாதத்தில் 1.28 கோடி ரூபாய்களை அனாயசமாக தூக்கி எறிந்து, அதில் 18 கோடி ரூபாய்களை லாபம் ஈட்டும் ஊழல் பேர்விழிகளை எப்படி மன்னிப்பீர்கள் ?

இந்த டர்ட்டீ பாய்ஸின் மீதான புகார்கள் தொடர்பான ஆதாரங்களை, சவுக்கு போன்றதோர் சாதாரண நபர் பெற முடிகிறதென்றால், தமிழகத்தில் இருக்கும் பெரிய ஜாம்பவான்களான பத்திரிக்கைகளால் பெற முடிந்திருக்காதா என்ன ? அவைகளை வெளியிட்டிருக்க முடியாதா என்ன ?

ஆனால், அதற்கான முயற்சிகள் ஏதும் இந்தப் பத்திரிக்கைகள் எடுக்க வில்லை. இந்த ஆதாரங்களை வெகுஜன ஊடகங்களில் வெளிக் கொணர சவுக்கு எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை. அதனாலேயே, சவுக்கு தளத்தில் இது வெளியிடப் பட்டது.

எங்கே வெளியிட்டாலும் ஆதாரம் ஆதாரம்தானே… ? அதனால்தான், டர்ட்டீ பாய்ஸை சவுக்கின் பதிவுகள் வெகுவாக பாதித்திருக்கிறது.


காலை 8.30 மணிக்கு அழைப்பு மணி அடித்ததும், கதவைத் திறந்த சவுக்கின் தாயார், சவுக்கை அழைத்தார். இரும்பு க்ரில் கேட்டுக்கு வெளியே இருந்த சப் இன்ஸ்பெக்டரும், இரண்டு காவலர்களும், “சார் உங்க மேல கம்ப்ளேய்ன்ட் வந்திருக்கு. இன்ஸ்பெக்டர் வரச் சொல்றார்“ என்றார்கள்.

சவுக்கு ஒன்றுமே பேசவில்லை. எதிர்ப்பார்த்தது நடந்தது என்ற உணர்வே வந்தது. உடனடியாக ஆடை உடுத்திய சவுக்கு, கவனமாக, பர்ஸ், மொபைல் போன், போன்ற முக்கிய பொருட்களை வீட்டிலேயே ஒப்படைத்து விட்டு, வழக்கறிஞருக்கு போன் செய்து, தகவலை தெரிவித்து விட்டு கிளம்பியது. பர்ஸ் போன் போன்றவற்றை ஒப்படைத்து விட்டு செல்லும் காரணம், திருடர்களின் கட்டுப் பாட்டில் செல்கிறோம் என்ற ஜாக்ரதை உணர்வு தான். 2008ல் சிபி.சிஐடி போலீசாரால் கைது செய்யப் பட்ட போது, சவுக்கின் பர்ஸில் இருந்து 5000 ரூபாய் எப்படி மாயமானது என்றே தெரியவில்லை.

சைபர் க்ரைம் டிஎஸ்பி யாக அப்போது இருந்த, இப்போது சிவகங்கையில் கூடுதல் எஸ்பியாக இருக்கும், சவுக்கை இரவு முழுவதும் நிர்வாணப் படுத்தி கடும் சித்திரவதை செய்த பாலுவை பின்னொரு நாளில் சவுக்கு பார்க்கும் போது, இதைப் பற்றி கேட்கையில், இதையெல்லாம் பெரிது படுத்த வேண்டாம் என்ற அட்வைஸ் கிடைத்தது. அதனால், அனைத்துப் பொருட்களையும் வீட்டில் வைத்து விட்டு, வண்டி சாவியை கையில் எடுத்துக் கொண்டு, வந்திருந்த காவல்துறையினரோடு கிளம்பிய சவுக்கிடம், அந்தக் காவலர்களில் ஒருவர், “சார், போலீஸ் ஜீப்பில வர்றதுக்கு சங்கடமா இருந்தா, என் கூட பைக்கிலே வாங்க“ என்றார்.

போலீஸ் ஜீப்பில் வருவதற்கு எந்த சங்கடமும் இல்லை என்று தெரிவித்து, சவுக்கு ஜீப்பில் ஏறியது. காவல் நிலையம் சென்ற ஜீப்பில் இருந்து இறங்கி, சவுக்கு நேராக காவல் ஆய்வாளர் தமிழ்வாணன் அறைக்கு அழைத்துச் செல்லப் பட்டது.


“சார் என் மேல ஏதோ கம்ப்ளேயின்ட் இருக்காமே “ என்று கேட்டதற்கு, ஒரு 10 நிமிஷம் உட்காருங்க, கூப்பிட்றேன் என்றார் தமிழ்வாணன்.

அந்த 10 நிமிடங்கள் 60 நிமிடங்கள் ஆனதும், மீண்டும் தமிழ்வாணனிடம் சென்று என்ன சார் விஷயம் என்று கேட்டதும், மனுஷன் நாக்கு சுத்தம் சார். அப்போ சொன்னதயே திருப்பிச் சொன்னார். “ஒரு பத்து நிமிஷம் உட்காருங்க“ என்று. அந்த தமிழ்வாணனின் அறையில் எங்கு பார்த்தாலும் கடவுள் படங்கள்.

அவர் வேறு நெற்றியில் ஒரு பெரிய திருநீரு அணிந்திருந்தார். திருட்டுத்தனம் செய்யும் நபர்களுக்கு பக்தியைப் பார்த்தீர்களா ?

இந்த காவல் நிலையத்தில் அமர்ந்திருப்பதில் என்ன சிரமம் தெரியுமா ? வர்றவன் போறவனெல்லாம், பெரிய அப்பா டக்கரு மாதிரி கேள்வி கேப்பான். புதிதாக ட்யூட்டிக்கு வரும் காவலர்கள், நேராக புதிதாக உட்கார்ந்திருக்கும் நபரைப் பார்த்து, “என்னடா கேசு“ என்று கேட்பார்கள்.

நீங்கள் உடுத்திருக்கும் உடையைப் பொறுத்து, இந்தத் தொனி மாறும். இது போலவே, வருபவர் போகிறவர் எல்லாம் சவுக்கிடம் என்ன கேசு, எதற்கு வந்திருக்கிறாய் என்று கேட்ட வண்ணம் இருந்தனர். ஒரு இரண்டு நபர்களிடம் கதை சொல்லி முடித்ததும், கேட்கும் ஒவ்வொரு நபரிடமும், ஒவ்வொரு கதையை சொல்லத் தொடங்கியது சவுக்கு. கதையை கேட்டு விட்டு, அவர்கள் பங்குக்கு ஒவ்வொருவரும், இலவச அட்வைஸ் கொடுப்பார்கள். இவர்கள் ஒவ்வொருவர் மனதிலும், தங்களை சாக்ரட்டீஸ், ப்ளேட்டோ ரேஞ்சுக்கு நினைத்துக் கொள்கிறாகள்.

இதற்கு நடுவே, ஆய்வாளர் தமிர்வாணன், எழுந்து நின்ற படி, யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் விசாரித்ததில் அந்த அழைப்பு ஜாபர் சேட்டிடமிருந்து என்று அறியப் பட்டது.

11.30 மணிக்கு ஆய்வாளர் தமிழ்வாணன் அறையை விட்டு வெளியே வந்தார். அவர் கையில் ஒரு டைரி இருந்தது. அந்த டைரியில் ஒரு பேப்பர் இருந்தது. அந்த பேப்பரில், விடுநர் முகவரி காலியாக இருந்தது. பெறுநர் முகவரியில், ஆய்வாளர், மதுரவாயல் காவல் நிலையம் என்று இருந்தது.

அதன் கீழே, சவுக்கு அவசரத்தில் படித்த பொழுது, பார்த்த வாசகங்கள், “நான் சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த 30 வயது மதிக்கத் தக்க நபர், கத்தியை காட்டி மிரட்டி, பாக்கெட்டில் இருந்த பணத்தை எட்றா என்று மிரட்டினார் என்று இருந்தது. சவுக்குக்கு இது உடனடியாக நம் மீது போட உத்தேசித்திருக்கும் எப்ஐஆர் என்று புரிந்தது.
11.45 மணிக்கு வழக்கறிஞர் பார்க்க வந்தார். ஆய்வாளரிடம் என்ன புகார் என்று கேட்கச் சென்றதற்கு, அவர் இன்னும் அரை மணி நேரம் கழித்து வாருங்கள். இப்போது பிசியாக இருக்கிறேன் என்று கூறினார்.


அதாவது 12.30 மணி வரை சவுக்கின் மேல் என்ன வழக்கு போடுவதென்றே அந்தப் பண்ணாடைகள் முடிவு செய்ய வில்லை. சவுக்குக்கு வந்த தகவல்களின் படி, Non-Bailable செக்ஷன்களில் வழக்கு போட வேண்டும் என்று ஜாபர் சேட் உத்தரவிட்டாலும், பொய் கேஸ் போடுகையில் கொலைக் கேசா போட முடியும் ? அதனால்தான் ஒரு மணி வரை முழித்துக் கொண்டிருந்தனர் மங்குணிப் பாண்டியர்கள்.


1245 மணிக்கு, ஒரு காவலர், கைதுக் குறிப்பாணையில் கையொப்பம் பெற வந்தார். அந்தப் படிவம் எதுவும் எழுதப் படாமல் காலியாக இருந்தது. முழுமையாக நிரப்பப் படாமல் கையொப்பம் இட இயலாது என்று சவுக்கு மறுத்ததை அடுத்து, அந்தக் காவலர் திரும்பிச் சென்றார்.

இதற்கிடையில் ஐந்து வழக்கறிஞர்கள் சவுக்கைப் பார்க்க காவல் நிலையம் வந்தனர். அவர்களை பார்க்க விடாமல் நெடு நேரம் காக்க வைத்து விட்டு, பார்க்க அனுமதித்ததும், சி.ஜே.ஸ்டாலின் என்ற உதவி ஆய்வாளர், வானம் இடிந்து விழுந்து விட்டது போல குதித்தார். திருப்பி வழக்கறிஞர்கள் சத்தம் போட்டதும் அடங்கினார்.

சவுக்கை சந்தித்த வழக்கறிஞர்கள், சுதாகர் என்ற நபரிடம் சாலையில் சண்டையிட்டு அவரை அடித்து சட்டையை கிழித்து, செங்கலை எடுத்து கொன்று விடுவேன் என்று மிரட்டியதாக வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறினர். அந்த சுதாகர், சவுக்கு காவல்நிலையத்தை விட்டு செல்லும் வரை, காவல் நிலையத்துக்கே வர வில்லை என்பது குறிப்பிடத் தக்கது (தமிழ்வாணன் சார், சுதாகர் கையெழுத்த நீங்க போட்டீங்களா, ஸ்டாலின் போட்டாரா ?)


ஒரு வழியாக 2.45 மணிக்கு வழக்கு ஆவணங்கள் தயார் செய்யப் பட்டு, சவுக்கை நீதிபதி முன் ஆஜர் படுத்துவதற்கான ஏற்பாடுகள் முடிந்தன. தமிழ்வாணனின் அலுவலக ஜீப் வாசலிலேயே நின்று கொண்டிருந்தும், இரண்டு காவலர்களை அனுப்பி கால்நடையாக சவுக்கை நீதிமன்றத்திற்கு அனுப்பினர். அந்தக் காவலர்கள் “சார் ஆட்டோ வைக்கிறீங்களா, டாக்சி வைக்கிறீங்களா.

இல்லேன்னா உங்கள பஸ்லதான் கூட்டிட்டுப் போவோம்“ என்று அவர்களை கையில் இருந்த கைவிலங்கை காட்டி மிரட்டினர். ஆட்டோவெல்லாம் வைக்க முடியாது. பஸ்சில் போவோம் என்று கூறியதும் வேறு வழியின்றி, சவுக்கை அழைத்தக் கொண்டு பூந்தமல்லி சென்றனர். வரும் வழியில் அந்த இரண்டு காவலர்களில் ஒருவர் “என்னா சார் கேசு“ என்று ஆரம்பித்தார். சவுக்கு, இது வரை சொல்லாத ஒரு புதுக் கதையை அவரிடம் சொல்ல ஆரம்பித்தது.

அந்தக் காவலர், ரொம்ப சுவாரசியமாக அந்தக் கதையை உண்மை என்று நம்பி நெடு நேரம் கேட்டுக் கொண்டிருந்தார். இது போன்ற காவலர்களிடம், நான் இணையத்தில் எழுதினேன், ஜாபர் சேட் சொத்து வாங்கியிருக்கிறார், அதனால் உங்கள் இன்ஸ்பெக்டர், ஜாபர் சேட் பேச்சைக் கேட்டு ஆடுகிறார் என்று சொல்லியிருந்தால், அவருக்கு புரிய வைப்பதற்குள் விடிந்து விடும். அதனால் அந்தக் காவலருக்கு புரிவது போல, எளிமையான கதையை சவுக்கு சொல்லியது.


பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கறிஞர்கள் காத்திருந்தனர். நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தப் பட்டதும், நீதிபதி, “நீங்கள் அவதூறாகப் பேசி தாக்கியிருக்கிறீர்கள். உங்களை ஆகஸ்ட் 4 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடுகிறேன்“ என்று கூறினார்.
வெளியில் வந்ததும், இந்த வழக்கின் எப்ஐஆரை பதிவு செய்த உதவி ஆய்வாளர் ஸ்டாலின் பைக்கில் நின்று கொண்டிருந்தார்.
சவுக்கை பார்த்ததும் “சார் நான் கூட உங்க ஊருக்கு பக்கத்து ஊருதான். கடைசில நம்ப ரெண்டு பேரும் ஒரே ஊராயிட்டோம்“ என்று சொல்லி சிரித்தார். சவுக்கு ஒப்புக்கு அவரிடம் சிரித்து விட்டு, நீ இருடி. உனக்கு இருக்கு என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டது.
வெளியே வந்ததும் அந்த இரண்டு காவலர்களும், “சார் இப்போவாவது ஆட்டோ வைக்கறீங்களா ? “ என்று கேட்டனர். அப்போதும் முடியாது என்று கூறியதும, வேறு வழியின்றி, புழலுக்கு பஸ் ஏறினோம்.


புழல் வந்ததும், தொடக்கதில் நடக்கும் சம்பிரதாயங்கள் முடிந்ததும், குற்றவாளியை பெற்றுக் கொண்டோம் என்று ஒப்புகை பெற்றதும், அந்தக் காவலர்கள் இருவரும் விடை பெற்றனர்.
புழல் சிறையின் வெளியே இருக்கும் அந்தப் பெரிய கதவுக்குள் நுழைந்ததும், வரிசையாக கைதிகள் நிற்க வைக்கப் படுவார்கள். முதலில் அனைத்து ஆடைகளையும் களைந்து ஜட்டியோடு நிற்க வேண்டும்.

கழற்ற மறுத்தால் அங்கேயே அடி விழும். அன்றைக்கு என்று பார்த்து சவுக்கு போட்டிருந்த ஜட்டியில் 13 ஓட்டைகள். முழுக்க நனைஞ்சாச்சு. இதெல்லாம் பார்த்தா முடியுமா ?

அங்கே கைதிகளைப் சரி பார்த்துக் கொண்டிருந்த உதவி ஜெயிலர், என்ன வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்டார். லஞ்ச ஒழிப்புத் துறை என்று கூறியதும், உடனடியாக ஜெயிலர், கூடுதல் சிறைக் கண்காணிப்பாளர், சிறைக் கண்காணிப்பாளர் அனைவருக்கும் தகவல் போனது.

ஜெயிலர் இளவரசன் உடனடியாக அழைத்தார். என்ன கேசு என்று விசாரித்தார். ஏன் சண்டை போட்டீர்கள் என்று கேட்டார். சார் போடவில்லை பொய் வழக்கு என்றதும், நம்பிக்கை இல்லாத ஒரு அலட்சியப் பார்வை பார்த்தார்.

கண்காணிப்பாளரிடம் இருந்து இன்டர்காம் அழைப்பு வந்தது. “ஆமா சார். அவருகிட்டதான் சார் பேசிக்கிட்டு இருந்தேன். ஆமா சார், தண்ணியப் போட்டுட்டு தகராறு பண்ணிருக்கார் போல சார்“ என்றார். (இவரு பெரிய ஸ்கிரிப்ட் ரைட்டரா இருப்பார் போலருக்கே)


“எழுத்து வேலைகள் முடிந்ததும் “க்வாரைண்டைன் ப்ளாக்“ என்று அழைக்கப் படும பிணி நீக்கப் பிரிவில், சவுக்கு அடைக்கப் பட்டது. முதல் நாள் கைதிகள் அனைவரும் இந்தப் பிரிவில்தான் அடைக்கப் படுவர். மறு நாள் தர வாரியாக வேறு வேறு தொகுதிகளுக்கு மாற்றப் படுவர்.


அந்தப் பிரிவில் ஒரு அறையில் ஒரு 40 பேருடன் சவுக்கு அடைக்கப் பட்டு, உறங்கத் தொடங்கி 30 நிமிடங்கள் கழித்து, சவுக்கு எழுப்பப் பட்டு, நீங்கள் முதல் வகுப்புக்குச் செல்லுங்கள் என்று கூறப்பட்டு, ஒரு காவலரோடு அனுப்பப் பட்டது.

அந்தசிறைக் காவலர், தன்னை ஸ்காட்லான்ட் யார்ட் போலீஸ் என்று நினைத்துக் கொண்டார். “உங்களுக்கு எந்த ஊர் சொந்த ஊர்“ என்று கேட்டார்.

“தஞ்சாவூர்“

“நீங்க மாவோயிஸ்ட்டா ? “

“இல்ல சார்“

“நீங்க மாவேயிஸ்ட்டுன்னு எனக்கு உறுதியா தகவல் கிடைச்சுருக்கு“

“உறுதியா நான் மாவோயிஸ்ட் இல்ல சார்“

“தஞ்சாவூர் பூரா ஹில் ஏரியா தானே ? அங்க மாவோயிஸ்ட் நிறைய இருக்காங்களே “ (எப்பூடி…. ….. ….தஞ்சாவூர் ஹில் ஏரியாவாம். திருக்குவளைக் காரர் கேட்டிருந்தால் கொதித்திருப்பார்.)

“இங்க உங்க இயக்கத்துக்காரங்கள சந்திக்கத் தான் நீங்க ஜெயிலுக்கு வந்திருக்கீங்களாமே “
“அதெல்லாம் இல்ல சார்“

“உங்கள மாதிரி ஆட்களெல்லாம், ஹ்யூமன் ரைட்ஸ், அது இதுன்னு பேசி நாட்டையே குட்டிச்சுவர் பண்றீங்க“

“உங்களோட ஹ்யூமன் ரைட்ஸுக்கும் சேத்துதான் சார் பேசுறோம்“

அதற்குள் எதிரில் ஒரு சிறைக் காவலர் வந்தார். அவரிடம் இந்த ஸ்காட்லேன்ட் யார்டு காவலர் இவரை முதல் வகுப்பில் அடைக்க வேண்டும் என்று கூறியதும், அந்தக் சிறைக் காவலர் ஜெயிலரை கெட்ட வார்த்தையில் திட்டி விட்டு, சவுக்கை பார்த்து, “இவனுக்கு என்ன கேடு. பர்ஸ்ட் க்ளாஸ்லதான் படுப்பாரோ“ என்று ஒரு முறை கத்தி விட்டு, சென்று விட்டார்.

சவுக்கு முதல் வகுப்பில் இருவர் இருக்கக் கூடிய ஒரு அறையில் அடைக்கப் பட்டது. அந்த அறைகுள்ளே, 23 வயது இளைஞன். அவனுக்கு இப்போதுதான் மீசை அரும்ப ஆரம்பித்திருக்கிறது.

அவன் மாவேயிஸ்டாக இருப்பானோ என்ற சந்தேகம் வந்தது.
அவன் சவுக்கைப் பார்த்து “என்ன கேசுன்னா ? “ என்று கேட்டான்.

“சண்டை கேசு“ என்று சொன்னதும் அமைதியாகி விட்டான்

ஜெயில் மொழியில் வழக்குகள் ஐந்து வகையாக பிரிக்கப் படும். முதலில் பவுடர் கேசு. (போதைப் பொருள் வழக்கு) மட்டை கேசு (கொலை வழக்கு) சண்டை கேசு (சாதாரண அடிதடி. சவுக்கு வழக்கைப் போல) கஞ்சா கேசு (கஞ்சா கடத்திய வழக்கு) ராபரி கேசு (திருட்டு வழக்கு) என்று பிரிக்கப் படும்.

“சாப்டியாண்ணா ? “

“சாப்டேன் பிரதர்“

அவன் அதற்குப் பிறகு தனது வழக்கு ஆவணங்களில் மூழ்கி விட்டான்.
மறு நாள் காலையில் சிறிது நட்பாகினான். “அண்ணே. சிங்கமுத்து இந்த செல்லுலதான்னே இருந்தாரு“ என்றான்.

அவனுக்கு சவுக்கைப் பார்த்ததும் என்ன தோன்றியதோ தெரியவில்லை. அவனுக்கு வந்திருந்த திண்பண்டங்களை உண்ணும் படி வற்புறுத்தினான்.

சவுக்கு அவனுடன் இருந்த இரண்டு நாட்களிலும் மிகுந்த அன்பாக கவனித்துக் கொண்டான்.
முதல் வகுப்பு தொகுதியில் முதல் 8 அறைகள் மனநிலை பாதிக்கப் பட்டவர்களுக்காக ஒதுக்கப் பட்டிருந்தது.

அதில் முதல் அறையில் இருந்த சார்லஸ் என்பவன், எப்போது பார்த்தாலும் அறைக் குள்ளேயே நடந்து கொண்டே இருப்பான். அவனுடைய அறை உணவு வழங்குவதற்காக திறக்கப் படுவதைத் தவிர வேறு எதற்காகவும் திறக்கப் படுவதே இல்லை.
அவன் மீது என்ன வழக்கு என்றால், 75 கேஸ் என்று அழைக்கப் படும் சாதாரண தகறாறு வழக்கு.

இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப் பட்டால் என்ன தண்டனை தெரியுமா ? வெறும் அபராதம். ஆனால் அவனுக்கு உறவினர்கள் யாரும் இல்லாததாலும், பெற்றோர் அவனைக் கைவிட்டதாலும், அந்த அறைக்குள்ளேயே நடந்து நடந்து தன் வாழ்க்கையை ஓட்டுகிறான்.
அடுத்தடுத்த அறைகளில் இருப்பவர்கள் அவ்வளவு மோசமில்லை. அவர்கள் அறை காலையில் திறக்கப் படுகிறது. வெளியில் வருகிறார்கள். யாரோடும் பேசாமல் அமர்ந்திருக்கிறார்கள்.

மாலை 6 மணிக்கு அடைக்கப் படும் அறைக் கதவுகள், காலை 6 மணிக்கு மீண்டும் திறக்கப் படுகின்றன.

இரவு உணவை மாலை 5 மணிக்கே வாங்கி வைத்து விட வேண்டும். 15 அடி உயர அறை. மின் விசிறி உண்டு. முதல் வகுப்பு என்பதால் கட்டில் உண்டு.
24 மணி நேரமும் அறைக்குள்ளேயே வரும் நல்ல குடிநீர். காலையில் நடைப் பயிற்சியில் ஈடுபட விசாலமான இடம்.

சிறையில் கிடைத்த இரண்டு நாட்களில், சிறைக்குள் உயர் பாதுகாப்புப் பிரிவில் இருந்த நண்பர்கள் வைத்திருந்த “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்“ படிக்க முடிந்தது.

வழக்கமாக 1 அல்லது 2 மணிக்கு உறங்கச் செல்லும் சவுக்கு, இரவு 10 மணிக்கே உறங்கச் சென்றது.

பகல் பொழுதில் வேறு வேலைகள் இல்லாததால், பகலிலும் உறக்கம்.
வேகமாக நகர்ந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, வெள்ளியன்று மாலை பிணை கிடைத்து விட்டது என்ற தகவல் பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு சென்றிருந்த மற்றொரு கைதி மூலமாக கிடைத்தது.

அறையில் இருந்த அந்த இளைஞனிடம் வெளியில் வந்ததும் தொடர்பு கொள்ளும் படியும், என்ன உதவி வேண்டுமானாலும் கேட்கும் படியும் கேட்டுக் கொண்டு, சவுக்கு விடை பெற்றது.
சவுக்கு கைது செய்யப் பட்டதும் வழக்கறிஞர் புகழேந்தியும், அவரது நண்பர்களும் ஆற்றிய உதவி என்றைக்கும் மறக்க முடியாதது.

உயர்நீதிமன்றத்தில் ப்ராக்டீஸ் செய்யும் மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், சவுக்கின் பிணைக்காக, பூந்தமல்லியில் உள்ள மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ஆஜராகி வாதாடியதும், உயர்நீதிமன்றத்தில் சட்ட விரோத கைது என்று ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததும், மறக்க முடியாதது.

வழக்கறிஞர்கள் சுந்தர்ராஜன், வெற்றிச் செல்வன், இளவரசன், கல்யாணி, ஜெய்நுல்லாபுதீன், சிவபெருமாள், ஆகியோரின் உதவிகள் என்றென்றைக்கும் நினைவில் கொள்ளத் தக்கன.

எவனோ ஒரு பேரு தெரியாத ஒருத்தன், தன்னோட ப்ளாகில, கண்டபடி எழுதிகிட்டு இருக்கான் என்று நினைக்காமல், பதிவுலகினர் காட்டிய ஆதரவும் அன்பும் சவுக்கை நெகிழச் செய்கின்றன.

குறிப்பாக, நண்பர்கள் உண்மைத் தமிழன், வினவு, ஆகியோர் அளித்த ஆதரவு மறக்க முடியாதது.

இந்தக் கைதைப் பற்றி செய்தி வெளியிட்டு, கருணாநிதியையும் மீறி, உண்மையை எழுத முடியும் என்று நிரூபித்த தினமணி, டெக்கான் க்ரானிக்கிள், டைம்ஸ் ஆப் இந்தியா, தினமதி, நாளேடுகளின் செய்தியாளர்களுக்கும், மற்றும் ஜுனியர் விகடன் வாரமிருமுறை இதழின் செய்தியாளருக்கும், ஆசிரியருக்கும் சவுக்கின் நெஞ்சார்ந்த நன்றிகள்.


இவை எல்லாவற்றுக்கும் மேல், சவுக்கின் மீது தங்கள் அன்பைப் பொழிந்த பத்திரிக்கையாளர் நண்பர்களுக்கு சவுக்கு என்றென்றும் கடமைப் பட்டுள்ளது. அவர்கள் பெயர்களைப் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்காது என்பதால் குறிப்பிடவில்லை. ஆனால், இவர்கள் ஆற்றிய பணியும், காட்டிய அன்பும், நேசமும், சவுக்கின் மூச்சு உள்ளவரை செழுமையோடு நினைக்கப் படும்.

இந்தக் கைதால் விளைந்த பலன் என்ன ? ஜாபர் சேட் ஒரு கடைந்தெடுத்த ஊழல் அதிகாரி என்ற நாலு பேருக்கு தெரிந்த விஷயம், நாலாயிரம் பேருக்கு தெரிந்தது.

சவுக்கு கைதான அன்று காலை ஒரு லட்சமாக இருந்த ஹிட்டுகளின் எண்ணிக்கை 1,33,822.
கைது காரணமாக சந்தனக் காடு தொடர் எழுத முடியவில்லை. வரும் வியாழன் அன்று இரவு உறுதியாக தொடர் பதிவேற்றப் படும்.


சவுக்கின் வாழ்விலும், தாழ்விலும், கூடவே நின்று எத்தனை அடக்கு முறைகள் வந்தாலும், சவுக்கை விட உறுதியாக அந்த அடக்கு முறைகளை சந்திக்கும் சவுக்கின் தாய்க்கு, இந்தப் பதிவுகள் அனைத்தும் அர்ப்பணம்.

இந்தக் கைது பற்றி, ஜாபர் சேட்டுக்கு சவுக்கு எந்தப் பதிலும் சொல்ல விரும்பவில்லை. சவுக்குக்கு பதிலாகத் தானே பாரதி சொல்லியிருக்கிறான்.


தேடிச் சோறு நிதந்தின்று-பல

சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்

வாடித் துன்பமிக உழன்று-பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து- நரை

கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்

கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல

வேடிக்கை மனிதரைப் போலே-நான்

வீழ்வேனென்று நினைத்தாயோ ?

சவுக்கு